Sunday 20 April 2014

காதல்

ஏதோ ஒரு புள்ளியில்
துவங்கிய நம் காதல்
இழை ஓடி
பிழை களைந்து
குணம் நாடி
குலம் காத்து
குற்றால அருவி போல
குருதியில் கலந்து
கற்கண்டாய் இனித்து
காலனுக்கும் கை அசைத்து 
வழியனுப்பி
விதியை திருத்தி
விண்ணில் உலா வருவோமோ

சசிகலாதனசேகரன்

0 comments:

Post a Comment