Saturday 24 May 2014

கவலை

நான் உன்னை 
மறந்தாலும்
நீ என்னை விட்டு 
பிரிய மனமில்லையோ..

வாடகை இல்லாமல்
குடிகொண்டு மனதில்
செல்லாய் அறிக்கிறாய்...

கண்ணில் படாமல்
கண்ணாபூச்சி காட்டுகிறாய்..

உன்னை தொலைத்து
விட தொலை தூர
பயணம் செய்தாலும்
தொடர்கிறாய் நிழலாக...

உன் நினைவோட
இரவில் தூக்கமும் இல்லை..
விடியலில் விழிப்பதும் இல்லை..

தொலைந்து போ..
மன துயரமே...

தூண்டில் மீனாய்
சிக்கி தவிக்கிறேன்..
உனது பாரம் தாங்காமல்
கரைந்து போ
கண்ணீரிலாவது (கவலையே)..

0 comments:

Post a Comment