Thursday 12 June 2014

மனமே

மனமே நீ ஜனித்த காரணம் மறந்தாயோ
இடறிவிழும் போதையில் விழிந்தாயோ
காலங்கள் கடந்தன.கடமைகள் சுட்டன
கண்ணிமைக்கும் நேரத்தில்
வருடங்கள் உருண்டோடின..
வந்த வேலை முடியாமல் 
பிறவி பயனடையாமல் பதராய்
போவாயோ மனமே..
சிவனை நினைத்து ஜீவனை
தூண்டிவிட்டாயோ 
மனமே விழித்து விடு..
விடியா விடியலில்
புதைந்து போகாதே..
உன்னில் விடியலை தேடு
ஜீவனில் சிவனை நிறுத்தி
சிந்தையை மெறுகேற்று மனமே.

0 comments:

Post a Comment