Wednesday 11 June 2014

இந்தகவிதையும் பாக்யா வந்தன

துயிலும் போது
உன் விரல்
பிடித்த நினைவு
மறக்க முடியாமல்
தவிக்கிறதே அம்மா..

கடைவீதி சென்றால்
தேன் மிட்டாய்
பிடிக்கும் என
வாங்கி தந்த
சுவை இன்னும்
நாவில் இனிக்கிறதே
அம்மா..

நீ கற்று தந்த
பாடங்களை
பிழை இன்றி
பயிலும் போது
நீ தந்த பாராட்டு
உச்சி முகர்ந்து
தந்த முத்தம்
இன்னும் சிலிர்க்க
வைக்கிறதே அம்மா..

அழகான ஓவியங்கள்
சுவற்றில் கிறுக்கிய
பின் அவையே
வண்ண கோலங்களால
நான் வரைந்து பரிசு
பெற்ற போது
மண் வலையல்
பரிசு தந்தாயே
அதன் ஓசை
மனதில் ரீங்காரமாய்
ஒலிக்கிறதே அம்மா...

சுவையாக சமையல்
கற்க எளிமையாக
குறிப்பு தந்து
மனதின் ஆழமாக
பதிந்த்தே அம்மா..

அன் அன்பால்
என்னை வென்றாய்
அம்மா ...

ஒருநாளும் உன்
கரம் என்னை
அடித்ததே இல்லை..
அனைத்தே என்னை
அன்பால் உயர்த்தினாயே
அம்மா...

0 comments:

Post a Comment