Wednesday 11 June 2014

பாக்யா புக்ல என்கவிதை வெளிவந்தன

அம்மாவும் அப்பாவும் 
உருவத்தில் வேறானாலும்
குழந்தைகளிடம்
அன்பு பாராட்டுவதில் 
சலித்தவர்கள் அல்ல..

அம்மா நிலவை
காட்டி சோறு ஊட்டுவாள்..
அப்பா நிஜங்களை காட்டி
புத்தி உரைப்பார்

அம்மா அன்பின்
பெட்டகம்..

அப்பா அறிவின்
பெட்டகம்...

அம்மா சொந்தங்களை
சுகங்களை சொல்லி
தருவாள்..

அப்பா சோகங்களை
களைய கற்று தருவார் ..

அப்பாவும் அம்மாவும்
இரயில் தண்டவாளங்கள்
போல நாம் வாழ்க்கையில்
வரும் இன்ப துன்பங்களை
கடந்து இனிய பயணம் 
சிறக்க வழிகாட்டிகள்...

0 comments:

Post a Comment