Wednesday 24 September 2014

அனாதை

வானவில்லை வலைத்து
ஊஞ்சல் விளையாடலாமா.!
மழையைக் கயிராக திரித்து
புன்னகை பட்டம் விடலாமா.!
மலர்களைக் கோர்த்து
மாளிகை கட்டலாமா.!
கடல் அலையில்
கோலம் வரையலாமா..!
விண்மீன்களில் அழகாக
வளையல் செய்யலாமா.!
நீலவானில் நீந்தலாமா
தோணி கொண்டு.!
நீங்கா துயர்கொண்டு
வளம் வரும் "அனாதை" எனும்
மழலைகளோட கரம் கோர்த்து

0 comments:

Post a Comment