Saturday 28 February 2015

சிவனே

எங்கெங்குமே நின்னையே
 காண்கிறேனடா சர்வேசா...
 வெற்றிலும் நீ
தோல்விலும் நீ.
காதலும் நீ
காவியமும் நீ
கவிதையும் நீ 
காற்றும் நீ
அருவி ஊற்றும் நீ
அனலும் நீஅதன் தனலும் நீ
அன்பும் நீ
வம்பும் நீ
மண்ணும் நீ
மழையும் நீ
மலரும் நீ
இன்பமும் நீ
துன்பமும் நீ
அகமும் நீ
புறமும் நீ
வேதமும் நீ
அனேகனும் நீ
அண்டங்களும் உன்னுள்ளே 

அடங்கிவிடும் பாழாய்
 போகும் இந்த பிறவப்
 பயனாக நின்பொற்பாதம்
 தொழுகிறேன் 
திஅருணாசலனே 
அடைக்கலம் தாராயோ.!!!

0 comments:

Post a Comment