tag:blogger.com,1999:blog-28502773810221752632024-03-14T08:35:07.501+05:30சசி கவிதைகள்SASIKALA DHANASEKARANhttp://www.blogger.com/profile/11716959431566964164noreply@blogger.comBlogger322125tag:blogger.com,1999:blog-2850277381022175263.post-86603029143369972582020-06-27T19:27:00.002+05:302020-06-27T19:27:58.257+05:30கண்திருஷ்டி<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
கண்திருஷ்டி விலக ரகசிய அபூர்வ பரிகாரங்கள் !!!<br />
<br />
share<br />
<br />
நன்றாக படிக்கும் குழந்தைகள் திடீர் என்று படிப்பில் ஆர்வம் குறையும். அதேபோல பெரியோர்களுக்குகடன் தொல்லை போன்றவை இருந்தால், விநாயகரின் ஆலயத்தில் அவர்களின் பெயரில் அர்ச்சனை செய்து, தேங்காய் எண்ணையையும், தன் குலத்தை காக்கும் குலதெய்வத்திற்கு பிடித்தமான விளக்கெண்னையும்ஒன்றாக கலந்து, அர்ச்சனை செய்த தேங்காயில் ஊற்றி தீபம் ஏற்றினால் பிரச்சனைகள் விலகும்.<br />
<br />
நம்முடைய முன்னேற்றம் தேங்காமல் விருத்தியாகும்.காத்து கருப்பைவிரட்டும் கருப்புநிறம் வீட்டில் கருப்பு மீன், கருப்பு நாய், கருப்ப மாடு போன்றவற்றில் ஒன்றை தங்கள் வசதிக்கேற்ப வளர்த்து, தங்கள் கையாலேயே உணவு கொடுத்து வளர்த்து வந்தால், காத்து கருப்புஎனும் துஷ்ட சக்திகள் நம்முடைய உடலில் தோஷங்களாக நுழைவதை தடுத்திடும். பரிகாரமாக கருப்பு ஜீவ ராசிகளை சில நாட்களோ அல்லது சில மாதங்களோ வளர்த்து, அந்த ஜீவராசிகளை யாருக்காவது தானமாக கொடுத்தால் நம்முடை தோஷம் போகும் என்கிறது சாஸ்திரம்.அதனால்தான் சில கிராமத்தில் கருப்பு ஆடு, கருப்பு கோழியை வளர்த்து கோவிலுக்கு கொடுக்கும் வழக்கம் இன்றும் இருக்கிறது.<br />
<br />
கண்திருஷ்டியை விரட்டும் கண்ணாடி<br />
<br />
சாப்பிடும் போது எங்கோ யாரோ நினைத்தால் புரை ஏறும். அதேபோல் யாரே நம்மை திட்டினாலும் நாக்கை கடித்து கொள்வொம். அதுபோல்தான் நமக்கு தெரியாமலே கண் திருஷ்டி நமக்கு பாதிப்பை உண்டாக்கும். வீட்டுக்குள் வாசலுக்கு நேராக முகம் பார்க்கும் கண்ணாடி வைத்தால் பாதிப்பு வராது. அமாவாசை, தீபாவளி நோம்பு போன்ற நாட்களில் முகம் பார்க்கும் கண்ணாடியை ஒரு தெய்வமாக மதித்து வழிப்படுவோம். காரணம் நம்முடைய முன்னோர்களின் புகைப்படம், குலதெய்வத்தின் புகைப்படம் நம்மிடத்தில் இருக்காது. அச்சமயங்களில் அவர்களை வழிப்படும்போது அவர்களின் ஆத்மா முகம் பார்க்கும் கண்ணாடியில் மறைமுகமாக தோன்றி, தங்கள் முகத்தை கண்ணாடியில் பார்த்ததும் வணங்குகிறார்கள்என்று மகிழ்வார்கள். இதனால் அவர்களின் ஆசி நமக்கு பரிபூரணமாக கிடைக்கும். கண்ணாடி வைக்காமல் வணங்கினால் என்னத்தான் அவர்களுக்கு பிடித்த திண்பண்டங்களை வைத்து வணங்கினாலும் அவர்களை மகிழ்விக்க முடியாது என்கிறது சாஸ்திரம். அதுபோல,வெளியில்இருந்த வீட்டுக்குள் வருபவர்களின் முகம் நேரடியாக தெரியும்படி முகம் பார்க்கும் கண்ணாடி வைத்தால், அவர்களால் உண்டாகும் கண்திருஷ்டி அந்த இல்லத்தை பாதிக்காது.<br />
<br />
உப்பு தண்ணீரின் மகிமை<br />
<br />
சிறு வேலை செய்தாலும் உடல் சோர்வு ஏற்படும். அதற்கு இரண்டு காரணங்கள்தான் உள்ளது. முதல் காரணம் உடல் பலவீனம், இரண்டாவது கண்திருஷ்டி . நம் உடலில் ஏழு சக்கரங்கள் உள்ளது. அந்த சக்கரங்கள்நல்ல விதத்தில் இயங்கி கொண்டு இருந்தால் உடல்நிலை பாதிப்பு வர வாய்ப்பு இருக்காது. குழாயில் அடைப்பு இல்லை என்றால் தண்ணீர் தடைஇல்லாமல் வருவது போல, நம் உடலில் இருக்கும் சக்கரங்கள் பலமாக இருந்தால் உடலுக்கு நம்மை ஏற்படும். மூங்கில் மரத்தின் வேரில் நெல்லை போட்டால் அந்த மரமே பட்டுபோகும். அதுபோல அதிக திருஷ்டிபட்டால்உடலில் இருக்கும் சக்கரங்கள் சரியாக இயங்காமல் வழுவிழந்து பலவீனமாக இருக்கும்.இதற்கு பரிகாரம் கடல் தண்ணீர். கடல் தண்ணிரில் குளித்தால் உடலில்இருக்கும் அந்த ஏழு சக்கரங்களும் பலம் பெறும். எப்படி தணணீர் வானத்தி்ற்கு சென்று மழையாக திரும்பி வருகிறதோ அதுபோல, கடல் தண்ணீர் உடலை நனைத்து நம்முடைய உடலில் உள்ள சப்த சக்கரங்களை பலப்படுத்தும்..<br />
<br />
அதேபோல, ஒரு வீட்டிற்கு அதிக தோஷம் இருந்தால், அந்த வீட்டில் துர்வாடை வீசும். என்னதான் சென்டு போன்ற நறுமண பொருட்களை உபயோகித்தாலும் அந்த வாடை போகாது. தோஷம் நீங்கினால்தான் துர்வாடை போகும்.<br />
<br />
அதனால் கடல் தண்ணீரை சிறிது எடுத்து, ஒரு பக்கெட் தண்ணீரில் ஊற்றி வீட்டை கழுவி விட்டாலோ அல்லது துடைத்து விட்டாலோ தோஷங்கள் போகும். கடலில் குளிக்க தெரியாதவர்கள், கடல் நீரை கொஞ்சம் வீட்டிற்கு கொண்டு வந்தும் குளிக்கலாம். அப்படி இல்லையென்றால் குளிக்கும் போது ஒரு பக்கெட்டில் கைபிடி அளவு கல் உப்பை எடுத்து தண்ணீரில் கரைத்து குளித்தாலும் உடலில் இருக்கும் ஏழு சக்கரங்களும் பலப்படும். ஸ்ரீராமர் பார்த்திப லிங்கத்தை, தானே உருவாக்கி, அந்த லிங்கத்திற்கு கடல் நீரால் அபிஷேகம் செய்தார். “ஏன் கடல் நீரில் அபிஷேகம் செய்கிறீர்கள்.?என்று வானர வீரர்கள் கேட்டதற்கு, கடல் நீரே விசேஷமானது“ என்றார் ஸ்ரீராம பிரபு.<br />
<br />
செப்பு காசின் மகிமை<br />
<br />
குழந்தைகளின் உடல் மெலிந்து கொண்டே இருந்தாலும் அல்லது பயத்தில்அவ்வப்போது அழுது கொண்டு இருந்தாலும், செப்பு காசை கையில் கட்டினால் துஷ்ட சக்திகளும், பொறாமைக்காரர்களின் கண்திருஷ்டியும்அண்டாது. சில குழந்தைக்கு கையில் செப்பு காசு கட்டினால் அலர்ஜி ஏற்படலாம். அதற்கு குழந்தைகளின் கையில் காசை கட்டும் முன், வெள்ளை துணியை மஞ்சள் கரைத்த தண்ணீரில் நனைத்து அந்த மஞ்சள் துணியில் செம்பு காசை சுற்றி பிறகு குழந்தையின் கையில் கட்டினால் அலர்ஜி ஆகாது. இப்படி செய்வதினால் சக்திதேவியின் ஆசியால் இன்னும் அந்த செம்பு காசுக்கு சக்தி கூடுமே தவிர குறையாது.<br />
<br />
செங்கல்லின் மகிமை<br />
<br />
குழந்தைகள் அடிகடி கீழே விழுந்துக் கொண்டே இருந்தால், செங்கலால் திருஷ்டி சுற்றி, பிறகு அந்த திருஷ்டி கழித்த செங்கல்லை போட்டு உடைத்து அந்த மண்ணை பூமிதாயை மனதில் நினைத்து கொண்டு, செங்கல் மண்ணை குழந்தையின் நெற்றியில் வைத்தால் அந்த குந்தைகளுக்கு திருஷ்டியால் உண்டாகும் பாதிப்பு குறையும்.<br />
<br />
தண்ணீருக்கும் சக்தி யாராவது உங்கள் இல்லத்திற்கு வந்தால் காபி கொடுக்கும் முன் தண்ணீரை குடிக்க கொடுக்க வேண்டும். அவர்கள் காபிஅருந்தவில்லை என்றாலும் தண்ணீராவது குடிக்க கொடுத்த பிறகே அவர்களை வழியனுப்ப வேண்டும். இப்படி செய்வதால் அவர்களின் மனநிலை எதுவாக இருந்தாலும் சரி, அவர்களின் எண்ணங்கள் எதுவாக இருந்தாலும் சரி, அதன் தாக்கம் அந்த இல்லத்தை பாதிக்காது.<br />
<br />
பன்னீருக்கு இருக்கும் சக்தி வெறும் தண்ணீருக்கும் இருக்கிறது“ என்றார் சூதவா முனிவர். மரணத்திற்கு பின்னர் மேல் லோகத்திற்கு செல்லும் போது நாம் பூமியில் வாழ்ந்த காலங்களில் சில பாவங்கள் செய்து இருப்போம். அந்த பாவங்களுக்கு தண்டனை நிச்சயம் உண்டு. ஆகவே இறைவனுக்கு வெறும் தண்ணீரில் அபிசேகம் செய்தாலே ஆடி தள்ளுபடி போல, செய்த பாவங்களுக்கு தண்டனை குறையும் என்கிறது சிவபுராணம். நாம் செய்த பாவங்களை இறைவன் பார்த்து கொண்டே இருக்கிறாரா? என்றால் நிச்சயமாக பார்க்கிறார். கோவில் திருவிழாவில் தீ மிதிப்பார்கள். அந்த தீ மிதிக்கும் முன் ஒரு நிமிடமாவது மழை தூறல் வரும். இதை பலர் அனுபவத்தில் பார்த்து இருப்பார்கள். இதில் இருந்து என்ன தெரிகிறது என்றால் நாம் செய்கின்ற ஒவ்வொரு செயலும் இறைவன் பார்த்து கொண்டேதான் இருக்கிறார்.<br />
<br />
திருஷ்டியை போக்கும் “மை”<br />
<br />
சில பெண்களின் முகத்தை பார்த்து யாராவது, “எவ்வளவு அழகாக இருக்கிறாள்” என்று கூறினாலே அது கண்திருஷ்டியாக மாறும். முகத்திற்குதான்அதிக கண்ணடிப்படும். அதனாலேயே சிலருக்கு முகப்பரு, கரும்புள்ளி போன்றவை அதிகம் முகத்தில் உருவாகும். அதற்கு பல கிரிமை முகத்தில் தடவியும், மருந்து மாத்திரைகளை சாப்பிட்டாலும் நீங்கவில்லை என்றால் அதற்கு எளிய வழி, வேப்பமரத்திற்குஅவர்கள் கையால் தண்ணீர் ஊற்றினால் அதை அபிஷேகமாக கருதி செய்து, அந்த மரத்திற்கு மஞ்சல் குங்குமத்தை செவ்வாய். வெள்ளி தோறும் வைத்து பூஜித்தால், அவர்களுக்குள் இருக்கும் கண்திருஷ்டியை அந்த வேப்பமரம் போக்கும். ஏன் என்றால் வேப்பமரம் முத்துமாரியம்மனாகவும், ரேணுகாதேவியாகவும் போற்றபடுகிறது. அத்துடன். உங்கள் கண்களுக்கு தினமும் மை வைத்து வந்தாலும் கண்திருஷ்டி அண்டாது.<br />
<br />
தோஷங்களை நீக்கும் பரிகாரம்<br />
<br />
பச்சரிசி-தேங்காய் துருவல் – வாழைப்பழம் இந்த மூன்றையும் ஒன்றாக சேர்த்து பிசைந்து புற்றுபோல செய்து, கோவிலில் நாகத்தம்மன் சிலை முன்போ அல்லது புற்றின் முன்பாகவோ வைத்து பச்சரிசி, தேங்காய் துருவல் மற்றும் வாழைப்பழத்தால் செய்த புற்றுக்கு சந்தனம், மஞ்சள், குங்குமத்தால் பொட்டுவைத்து வணங்கினால் கிரக தோஷங்கள், கண்திருஷ்டியால்தடைப்படும் காரியங்கள் எல்லாம் தடையில்லாமல் நடக்கும். தோஷங்கள் விலகினால்தான் சந்தோஷம் தேடிவரும்.<br />
<br />
எண்ணை தானம்<br />
<br />
உடல் மெலிந்தோ,சுறுசுறுப்பு குறைந்தோ, அல்லது ஏதாவது வியாதி மாறிமாறி வந்துக் கொண்டுடே இருந்தால் அது ஒருவகை தோஷத்தால்தான் என்று சொல்லாம். மணி – மந்திர ஔஷதம். அதாவது மருந்தும் சாப்பிடவேண்டும், பூஜை பரிகாரங்களும் செய்ய வேண்டும் என்கிறது சாஸ்திரம். உடல் பாதிப்புகள் நீங்கவும், தோஷங்களும் திருஷ்டியும் போக்க நல்லெண்ணையை உங்கள் சக்திக்கேற்ப சிறு பாத்திரத்திலோ அல்லது பெரிய பாத்திரத்திலோ ஊற்றி, பாதிப்புக்கு உண்டானவர்கள் தங்கள் முகத்தை அந்த எண்ணை பாத்திரத்தில் நன்றாக பார்த்து, மூன்று முறை தங்களின் பெயரை உச்சரித்து பிறகு யாருக்காவது அந்த பாத்திரத்தோடு எண்ணையை தானம் செய்துவிடுங்கள். பாத்திரத்தோடு தானமா? என்று பணத்தை கணக்கு பார்த்தால், அந்த பணத்தை விட மருத்துவ செலவை கணக்கு போடும்போது இந்த தானசெலவே குறைவாகத்தான் இருக்கும். மாத்திரைகளை எப்படி நம்பிக்கையோடு சாப்பிடுகிறீர்களோ, அதுபோல் பரிகாரத்தையும் நம்பிக்கையோடு செய்தால்தான் பலன் கிடைக்கும்.<br />
<br />
குழந்தைகளை தாக்கும் தோஷம் ஒருவயது கூட நிறைவடையாத குழந்தையை வெளியாட்களிடம் கொடுக்க கூடாது. ஜலதோஷம் இருப்பவர்களுடன்இருந்தால் எப்படி நமக்கும் ஜலதோஷம் பிடித்து கொள்கிறதோ அதுபோல, கண்திருஷ்டி சட்டேன்று குழந்தைகளுக்கு பாதிப்பை கொடுத்துவிடுகிறது. பெற்ற தாயாக இருந்தாலும் அவர்களின் கண் திருஷ்டியும் குழந்தையை பாதிக்கும். அதற்காக குழந்தையை கண்ணே மணியே என்று கொஞ்சாமல் இருக்க முடியுமா? அல்லது ஆசையாக சுற்றத்தார்கள் கேட்கும் போது கொடுக்காமல்தான்இருக்க முடியுமா? ஆகவே குழந்தையின் நெற்றியிலும், இடது கன்னத்திலும் கருப்பு மையால் பொட்டு வைத்தால் திருஷ்டி அந்த குழந்தைக்கு அண்டாது.<br />
<br />
அதனால்தான் இன்றுவரை வீதி உலா வரும் இறைவனுக்கும் – இறைவிக்கும்கன்னத்தில் திருஷ்ட போக</div>
SASIKALA DHANASEKARANhttp://www.blogger.com/profile/11716959431566964164noreply@blogger.com1tag:blogger.com,1999:blog-2850277381022175263.post-1643147097228016622020-06-05T06:28:00.001+05:302020-06-05T06:28:53.876+05:30 ஒரு துளி..<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
நாம் அதிகம் கேட்டிராத மகாபாரத நிகழ்வு!!!!<br />
<br />
மகாபாரதத்தில் நடந்த ஒரு நிகழ்வு இதுவரை நாம் அதிகம் கேட்டிராதது.!<br />
பாண்டவர்களும் திரௌபதியும் எல்லோரையும் பந்தியில் உபசரித்து உணவு பரிமாறினார்கள். துரியோதனன், துச்சாதனன், கர்ணன், சகுனி முதலானோர் வரிசையாக அமர்ந்திருந்தனர்.<br />
திரௌபதி பரிமாறிக் கொண்டே துரியோதனன் இலைக்கு அருகில் வந்தாள். அவளை அவமானப்படுத்த எண்ணிய துரியோதனன், ஐவரின் பத்தினியே... இன்று யாருடைய முறை?'' என்று கேட்டான்.<br />
திரௌபதிக்குத் தூக்கி வாரிப்போட்டது. நாடி நரம்புகளெல்லாம் தளர்ந்தன. அவளால் அந்தக் கேள்வியை ஏற்க முடியவில்லை. செய்வதறியாது, பரிமாறுவதை நிறுத்திவிட்டு உள்ளே ஓடினாள். கண் கலங்கினாள் அதேநேரம் அங்கு தோன்றினார் பகவான் ஸ்ரீகிருஷ்ணர்.<br />
<br />
கலங்காதே திரௌபதி! நடந்ததை நானும் கவனித்தேன்,எல்லோர் முன்னிலையிலும் உன்னை அவமானப்படுத்தி அழவைக்க நினைத்திருக்கிறான் துரியோதனன், அவனுக்கு பாடம் கற்பிக்கலாம். நான் சொல்வது போல் செய்.<br />
நீ மீண்டும் உணவு பரிமாறப் போ! துரியோதனன் மீண்டும் உன்னிடம் அதே கேள்வியைக் கேட்டு, 'ஏன் பதில் கூறவில்லை?’ என்பான்.<br />
உடனே நீ, 'தக்ஷகன் முறை’ என்று சொல், அதன் பிறகு துரியோதனன் அந்த இடத்திலேயே இருக்கமாட்டான்'' என்றார் பகவான் ஸ்ரீ கிருஷ்ணர்.<br />
கிருஷ்ணனின் வார்த்தையைத் தட்டமுடியாமல் விருந்து மண்டபத்துக்குச் சென்றாள் திரௌபதி, துரியோதனன் இலை அருகில் அவள் வந்ததும், விஷமத்துடன் அதே கேள்வியை மீண்டும் கேட்டான். 'எனக்குப் பதில் கூறவில்லையே... இன்று யாருடைய முறை?'<br />
ஸ்ரீகிருஷ்ணன் சொல்லியனுப்பியது போலவே, இன்று "தக்ஷகன் முறை" என்று பளிச்சென பதில் தந்தாள் திரௌபதி. அதைக் கேட்டு விஷ நாகம் தீண்டியது போன்று அதிர்ந்தான் துரியோதனன். சட்டென எழுந்து அங்கிருந்து வெளியேறினான்.<br />
<br />
திரௌபதிக்கு ஆச்சரியம். கண்ணனிடம் ஓடோடி வந்தாள். ''கண்ணா! இதென்ன மாயம்? யாரந்த தக்ஷகன்? அவன் பெயரைக் கேட்டதும் துரியோதனன் ஏன் இப்படிப் பேயறைந்தாற்போல் பதறி, பயந்து ஓடுகிறான்?'' என்று கேட்டாள்.<br />
கண்ணன் அதற்கான காரணத்தையும் கதையையும் சொன்னான்.<br />
துரியோதனனின் மனைவி பானுமதி மகா பதிவிரதை. கணவனையே தெய்வமாகக் கருதும் உத்தமி. ஆனால், துரியோதனனோ பாண்டவர்களின் ராஜ்ஜியத்தை அடைவதில் குறியாக இருந்தான். மனைவியிடம் அன்புடன் பேசக்கூட அவனுக்கு நேரம் இல்லை.<br />
திருமணமாகி மாதங்கள் பல கடந்தும், மண வாழ்க்கையின் பயனை அடையும் பாக்கியம் பானுமதிக்குக் கிட்டவில்லை. அவனது அன்புக்காக ஏங்கினாள். தெய்வங்களை வேண்டினாள். அவள் தவம் பலிக்கும் வேளை வந்தது.<br />
ஒருமுறை, முனிவர் ஒருவர் பானுமதியின் துயர் நீக்கும் வழி ஒன்றைக் கூறினார். மகிமை மிக்க மூலிகை வேர் ஒன்றை மந்திரித்து அவளிடம் கொடுத்து, அதைப் பாலில் இட்டு கணவனுக்குக் கொடுக்கும்படி கூறினார் முனிவர்.<br />
<br />
பானுமதியும் அதன்படியே பால் காய்ச்சி, அதில் இனிப்பும் இன்சுவையும் சேர்த்து, முனிவர் தந்த வேரையும் அதில் இட்டு, கணவனின் வருகைக்காகக் காத்திருந்தாள்.<br />
அன்று பௌர்ணமி. இரவின் இரண்டாம் யாமத்தில் அந்தப்புரம் வந்தான் துரியோதனன்,<br />
அப்போது அவன் மது அருந்தியிருந்தான் பால் அருந்தும் மனோநிலையில் அவன் இல்லை. ஆசையுடன் மனைவி நீட்டிய<br />
கை தவறிய கிண்ணத்தில் இருந்த பால் தரையில் சிந்தியது. அப்போது அங்கே சென்றுகொண்டிருந்த 'தக்ஷகன்’ எனும் நாகம் அந்தப் பாலைச் சுவைத்தது.<br />
தக்ஷகன் சர்ப்பங்களின் ராஜன். பாலைப் பருகியதும் அதிலிருந்த வேரின் வசிய சக்தியால், அவனுக்குப் பானுமதி மீது ஆசையும் நேசமும் பிறந்தது.<br />
உடனே அவன் மனித உருவில் அவள் முன் தோன்றித் தன் ஆவலை வெளியிட்டான். தன்னை வருந்தி அழைத்தது அவள்தான் என்றும் வாதாடினான். பதிவிரதையான பானுமதி பதறினாள் துடிதுடித்தாள்.<br />
<br />
துரியோதனனுக்குத் தன் மனைவியின் உயர்ந்த கற்பு நெறி பற்றி நன்கு தெரியும். தான் அவளது அன்பையும் பிரேமையையும் புரிந்து நடக்காததால் விளைந்த விபரீதத்தை எண்ணித் தவித்தான்.<br />
தக்ஷகன் கால்களில் விழுந்து தன் மனைவியின் கற்பைக் காக்க வேண்டினான். தக்ஷகன் பாம்பு எனினும் பண்பு மிக்கவன். பாலில் கலந்திருந்த வேரின் சக்தியால் உந்தப் பெற்றதால்தான், அவன் உள்ளம் பானுமதியை விரும்பியது. எனினும், அவளுக்குக் களங்கம் விளைவிக்க அவன் விரும்பவில்லை.<br />
அதே நேரம், அவளின் வசியம் செய்த பாலை குடித்ததனால் பானுமதியின் அன்பை இழக்கவும் தயாராக இல்லை. எனவே ஒரு நிபந்தனை விதித்தான். 'அந்தப்புரத்தில் அமைந்துள்ள அரச விருட்சத்தின் அடியில் உள்ள புற்றுக்கு, பௌர்ணமிதோறும் பானுமதியைக் காண வருவேன். பானுமதி புற்றில் பால் ஊற்றி என்னை உபசரித்து, வணங்கி அனுப்ப வேண்டும். அப்போது அவள் கற்புக்குக் களங்கம் இல்லை என்பதற்குச் சாட்சியாக அவளின் கணவனான துரியோதனனும் என்னை வணங்க வேண்டும்’ என்று கூறிவிட்டு மறைந்தான் தக்ஷகன்.<br />
<br />
அன்று முதல் இன்றுவரை பௌர்ணமி தோறும் பாம்புக்குப் பாலூற்றி வருகிறாள் பானுமதி. துரியோதனனும் பயபக்தி யோடு பங்குகொள்கிறான்.<br />
இந்தச் சம்பவம் துரியோதனனுக்கும் பானுமதிக்கும் தக்ஷகனுக்கும் மட்டுமே தெரியும். 'இதனை வெளியே யாரிடமும் சொல்வதில்லை’ என்பது அவர்களுக்குள் செய்து கொண்ட ஒப்பந்தம். இதை நீ கூறியதுதான் துரியோதனனின் அதிர்ச்சிக்குக் காரணம்'' என்றார் ஸ்ரீகிருஷ்ணர்.<br />
துரியோதனனால் தனக்கு நேர்ந்த அவமானத்தைத் துடைத்து ஆறுதல் கூறிய கண்ணனுக்கு நன்றி கூறினாள் திரௌபதி.<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhT5vBww2NxJJB70_DF50ZOO2bVo71O9hlEzfxgJiYf631LpouHnRJ-nr_NRtuTd_Nwxe48J7utPtzZfugj32h89z5LopQ_QbW5TfHlyTewqAiEZ7ZxLf9uDwGgwyF-H4lF4ARu_WFggvn3/s1600/FB_IMG_1591318539832.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="450" data-original-width="600" height="240" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhT5vBww2NxJJB70_DF50ZOO2bVo71O9hlEzfxgJiYf631LpouHnRJ-nr_NRtuTd_Nwxe48J7utPtzZfugj32h89z5LopQ_QbW5TfHlyTewqAiEZ7ZxLf9uDwGgwyF-H4lF4ARu_WFggvn3/s320/FB_IMG_1591318539832.jpg" width="320" /></a></div>
</div>
SASIKALA DHANASEKARANhttp://www.blogger.com/profile/11716959431566964164noreply@blogger.com1tag:blogger.com,1999:blog-2850277381022175263.post-46156343326939217242020-05-31T12:48:00.000+05:302020-05-31T12:48:07.366+05:30காசி யாத்திரை 3<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhQ9ATuiWdY3Yk5cTAEOLgx8esaYrjVdPkL7ktM719YtdEpS_evH7U2DECFuVYu0jPaWrTTSuqygXBZu7PmV60ImY-NeUlo_cRZ0QSNQcyEgtqp-ei7XqTN5hAs6-420NTg7RSsxEEyCrJB/s1600/FB_IMG_1590909275076.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="960" data-original-width="720" height="320" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhQ9ATuiWdY3Yk5cTAEOLgx8esaYrjVdPkL7ktM719YtdEpS_evH7U2DECFuVYu0jPaWrTTSuqygXBZu7PmV60ImY-NeUlo_cRZ0QSNQcyEgtqp-ei7XqTN5hAs6-420NTg7RSsxEEyCrJB/s320/FB_IMG_1590909275076.jpg" width="240" /></a></div>
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgFB384lLGqT59qnxmFaR3yn_UTcSoF-WPf3f70ipqQqHUfEaCOuX3Mv4OjTDMeTYZTYnA-pxtjyyiYh3Ymy5-nvgjOW-WqWLvDyn5VugJcGk_3siGzfoY2q5nbvmlwi5i7goOu105kJSQl/s1600/FB_IMG_1590909268707.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="571" data-original-width="960" height="190" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgFB384lLGqT59qnxmFaR3yn_UTcSoF-WPf3f70ipqQqHUfEaCOuX3Mv4OjTDMeTYZTYnA-pxtjyyiYh3Ymy5-nvgjOW-WqWLvDyn5VugJcGk_3siGzfoY2q5nbvmlwi5i7goOu105kJSQl/s320/FB_IMG_1590909268707.jpg" width="320" /></a></div>
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjLUXIzNbTtx2ABchVlqqjWmC7o45I5iKTzl2D3lhJzPNXAyoejx5gdvym3NB0irvDNqC7pVFUhJ2KKud9jMgWrbvJuqfGBplZzE0UK6ZS91VFrPWGUfu9acWfEQOCKebxiPd6_DYqH1zB4/s1600/FB_IMG_1590909263819.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="1152" data-original-width="560" height="320" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjLUXIzNbTtx2ABchVlqqjWmC7o45I5iKTzl2D3lhJzPNXAyoejx5gdvym3NB0irvDNqC7pVFUhJ2KKud9jMgWrbvJuqfGBplZzE0UK6ZS91VFrPWGUfu9acWfEQOCKebxiPd6_DYqH1zB4/s320/FB_IMG_1590909263819.jpg" width="155" /></a></div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
<br /></div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
#காசியாத்திரை3 காசியின் பெருமைகள்:</div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
<br /></div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
முதலில் காசியில் மூன்று கண் கொண்ட சாட்சி விநாயகர் இருக்கிறார். அவரே நம் பாவ புண்ணியத்தை பற்றி சாட்சி சொல்லும் மூன்றாம் கண் திறந்து சொர்க்கம் கிடைக்க. வழி வகுப்பாராம். அவரை வணங்கும் போது நல்லது நடக்குமாம்.</div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
<br /></div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
காசி இந்துக்களின் புனிதத் தலம். மிகப் புராதனமான நகரம். ஆதிசங்கரர், ராமானுஜர், குமரகுருபரர், மகாகவி சுப்ரமண்ய பாரதியார் என பலரது வருகையால் பொலிவுற்ற புண்ணிய பூமி. கிறித்துவர்களின் ஜெருசலேம் யாத்திரை, இஸ்லாமியர்களின் மெக்கா யாத்திரை போன்று இந்துக்களுக்கு மிக முக்கியமான யாத்திரையாகக் கருதப்படுவது காசி யாத்திரை. காசி நகரத்தின் வடக்கிலிருந்து வாரண் நதியும், தெற்கில் அஸ்ஸி நதியும் க்ங்கை நதியில் கலக்கின்ற காரணத்தால் வாரணாசி என்ற பெயரும் இந்த நகருக்கு உண்டு.</div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
காசி விஸ்வநாதர் ஆலயம்</div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
<br /></div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
முத்தித் தரும் தலங்கள் ஏழனுள் காசியும் ஒன்று. இந்தியாவின் முதன்மையான ஜோதிர்லிங்கத் தலம். இங்குள்ள விஸ்வநாதர் ஆலயத்தின் கோபுரம் 51 அடி உயரமுள்ளது. முஸ்லிம் மன்னர்களின் படையெடுப்பால் தொன்மையாக கோயில் அழிக்கப்பட்டது. தற்போது உள்ள ஆலயத்தை 1785ல் மகாராணி அகல்யா பாய் கட்டினார். கோவிலின் உள்ளே நேபாள அரசரால் வழங்கப்பட்ட ஒரு பெரிய மணி உள்ளது. இந்த மணியின் நாதம் வெகு தொலைவிற்கு ஒலிக்கும் என்பது இதன் சிறப்பம்சம். ஆலயத்தின் உள்ளே உள்ள கிணற்றில் பழமையான லிங்கம் வைக்கப்பட்டிருப்பதாய் ஐதீகம். காலை 3.00 மணி முதல் இரவு 11.00 மணி வரை திறந்திருக்கும் இவ்வாலயத்தின் வழிபாடு சிறப்புமிக்கது. குறிப்பாக இரவில் நடக்கும் சப்தரிஷி பூஜை மிகமுக்கியமானது. வழிபாட்டிற்கான பூசை பொருட்கள் காசி நகரத்தார் சத்திரத்திலிருந்து எடுத்துச் செல்லப்படுகின்றன. இவ்வாலயத்தில் தனிச்சன்னதியில் அகில உலகத்தும் உணவளிக்கும் அன்னை அன்னை ஸ்ரீ அன்னபூரணி எழுந்தருளியுள்ளாள். காசி விஸ்வநாதரை நம் கையால் தொட்டு வணங்கலாம் என்பதும், அபிஷேகம் செய்யலாம் என்பது மற்றொரு சிறப்பு.</div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
அன்னபூரணி ஆலயம்</div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
<br /></div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
காசியில் அவசியம் தரிசக்க வேண்டிய முக்கியமான ஆலயம் இது. இவ்வாலயம் வட இந்தியச் சிற்பக் கலை பாணியில் கட்டப்பட்டது. பேஷ்வாக்களின் ஆட்சிக் காலத்தில் சர்தார் சந்திரசூட் அவர்களால் இவ்வாலயம் நிர்மாணிக்கப்பட்டது.</div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
<br /></div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
நித்யானந்தகரீ வரஅபயகரீ ஸௌந்தர்ய ரத்னாகரீ|</div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
<br /></div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
நிர்தூதாகிலகோர பாபநிகரீ ப்ரத்யக்ஷ மாஹேஸ்வரீ|</div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
<br /></div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
ப்ராலேய அசலவம்ச பாவனகரீ காசீ புராதீச்வரீ|</div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
<br /></div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
பிக்ஷாம்தேஹி க்ருபாவலம்பநகரீ மாதா அன்னபூர்ணேச்வரீ</div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
<br /></div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
என்று ஸ்ரீ ஆதி சங்கரர் அன்னபூரணியைத் துதித்துள்ளார். உலக உயிர்களுக்கு வற்றாத உணவளிப்பவள் ஸ்ரீ அன்னபூரணி. ஈசனுக்கே உணவளிக்கும் அன்னை. உலகின் பசி போக்குபவள். வெறும் வயிற்றுப் பசியை அல்ல; ஒவ்வொரு மனிதரின் ஞானப் பசியையும் போக்க இங்கே எழுந்தருளியிருக்கிறாள். கொள்ளை அழகு மிக்க அன்னையின் கருணை உருவத்தைப் பார்த்துக் கொண்டே இருக்கலாம்.</div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
<br /></div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
காசி விசாலாட்சி ஆலயம்</div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
<br /></div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
காசி விசாலாட்சி ஆலயம், காசி விஸ்வநாதர் ஆலயத்திற்குப் பின்புறம் வேறு பகுதியில் உள்ளது. தனிச் சன்னதியில் அன்னை விசாலாட்சி நின்ற திருக்கோலத்தில் எழுந்தருளியிருக்கிறாள். காசி நகர் முழுதும் இந்த அன்னையின் ஆட்சிதான். இக்கோயில் நகரத்தாரின் பொறுப்பில் உள்ளது. அர்த்தஜாம வழிபாடும் அவர்களாலேயே நடத்தப்பெறுகின்றது. இது அன்னையின் 52 சக்தி பீடங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது.</div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
<br /></div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
கால பைரவர் ஆலயம்</div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
<br /></div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
காசியின் மிக முக்கியமான தெய்வம் கால பைரவர். இவர் காசி திருத்தலத்தின் முக்கியமான தெய்வம் மட்டுமல்ல; க்ஷேத்திர பாலகரும், நகரத்தின் காவலரும் இவரே. இவரை தரிசனம் செய்யாமல் காசி யாத்திரை பூர்த்தி ஆகாது. விரிந்த கண்களுடனும், கரிய பெரிய மீசையுடனும் ஆஜானுபாகுவாகக் காட்சி அளிக்கிறார் கால பைரவர். இவரைப் புகழ்ந்து ’கால பைரவாஷ்டகம்’ என்னும் பாடலை இயற்றியுள்ளார் ஆதிசங்கரர். அதில்</div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
<br /></div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
தேவராஜஸேவ்யமானபாவனாம்க்ரிபங்கஜம்</div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
<br /></div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
வ்யாலயக்யஸுஉத்ரமின்துஷேகரம் க்ருபாகரம் .</div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
<br /></div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
நாரதாதியோகிவ்ருந்தவந்திதம் திகம்பரம்</div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
<br /></div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
காஷிகாபுராதினாதகாலபைரவம் பஜே</div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
<br /></div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
என்றெல்லாம் பலவாறாகப் புகழ்ந்துரைத்துள்ளார்.</div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
<br /></div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
கங்கை</div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
<br /></div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
கங்கை நதி இமயத்தில் துவங்கி ரிஷிகேஷ், ஹரித்துவார் வழியாகப் பயணித்து காசி வந்து பிறகு கல்கத்தாவில் கடலில் கலக்குகிறது. கங்கை பயணிக்கும் வழியில் பல புனிதத் தலங்கள் இருந்தாலும் காசியில் மட்டும் கங்கை பல்வேறு அருள்சக்திகளுடன் பயணிக்கிறது. அதனாலேயே கங்கையில் குளிப்பதும், கர்ம காரியங்கள் செய்வதும், இறந்தோரின் சாம்பல்கள் கரைப்பதும் மிகப் புனிதமாகக் கருதப்படுகிறது. இங்கு சிந்தா காட், தசாஸ்வமேத காட், பஞ்சகங்கா காட், ஹனுமான் காட், சிவாலா காட், அஸ்ஸீ கார், வர்ணா காட், அனுசூயா காட் என 80க்கும் மேற்பட்ட படித்துறைகள் உள்ளன. இவற்றில் குளிப்பது புனிதமானதாகக் கருதப்படுகிறது. இவற்றின் கரையில் ஒவ்வொரு நாள் மாலையிலும் நடக்கும் ”கங்கா ஆரத்தி” மிகச் சிறப்பானது. இந்தியாவில் ஓடும் நதிகளிலேயே மிகப் புனிதமான நதி கங்கை.</div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
<br /></div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
”காசம்” என்றால் ஒளி. பிரகாசம் என்றால் மங்காத ஒளி என்பது பொருள். அதுபோல ”காசி” என்பதற்கு ஒளி, மங்காத ஞானம் என்பது பொருள். காசிக்கு வந்து செல்வது வாழ்வில் ஏதேனும் ஒருவிதத்தில் திருப்புமுனையைத் தரும் என்பதற்கு குமரகுருபரர், சுப்ரமண்ய பாரதியார் தொடங்கி எத்தனை எத்தனையோ உதாரணங்கள் உள்ளன. </div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
<br /></div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
ஆத்திகரோ, நாத்திகரோ அவசியம் வந்து செல்ல வேண்டிய இடம் காசி</div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
<br /></div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
கங்கை மிக புனிதமானது </div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
எவ்ளோ பேர் அதில் இறந்து மிதந்தாலும்</div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
அந்த தண்ணீரை நாசாவில் ஆராய்சி செய்த பொழுது சுத்தமாக இருந்ததாக சொல்வார்கள் </div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
<br /></div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
தற்கொலை செய்யவேண்டும் என்று கங்கைக்கு சென்று அதில் விழுந்தால் கூட அவர்களை அப்படியே தூக்கி வெளியே வீசிவிடுவாள் கங்கை தாய்</div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
<br /></div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
64 காட் எனும் கோயில்கள் கங்கை கரையில் உள்ளது</div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
<br /></div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
அதில் இன்னும் ஒரு சிறப்பு என்னவென்றால் </div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
இன்றும்கூட நாரதர் காட் என்னும் கோவிலில் இரண்டு பேர் ஒன்றாக குளிக்க சென்றால் அவர்களை அறியாமல் சண்டை போட்டு கொள்ளுவார்கள்</div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
<br /></div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
அதன் பிறகு அருகில் இருக்கும் விநாயகர் காட்டில் போய் குளித்தால் சண்டை சரியாகும் என்பார்கள் </div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
<br /></div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
ஒரு முறை அனுமன் சிவன் சிலையை எடுத்துவர காசிக்கு சென்றார் </div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
அனுமன் காசியின் காவல் தெய்வமாம் பைரவரிடம் அனுமதி பெறாமல் லிங்கத்தை எடுத்து வந்ததால் அனுமனை சொதித்து லிங்கத்தை சிறுவன் வடிவில் வந்து பிடிங்கி கொண்டார் அந்த கோவில் தான் பிச்சாட்டூர் சிவன் கோயில்</div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
அந்த லிங்கத்தை அனுமனுக்கு காட்டி கொடுத்தது ஒரு கருடன்</div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
அதனால் கருடனுக்கு சாபமிட்டார் பைரவர்</div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
அன்று முதல் இன்று வரை காசியில் எந்த இடத்தில் கருடன் பறக்காது </div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
ஊரை சுற்றி நாய்கள் இருந்தாலும் அவைகள் குறைக்காது.</div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
<br /></div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
அப்படி போவது என்றால் </div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
முதலில் இராமஸ்வரம் சென்று அங்கிருந்து மண் எடுத்து கங்கையில் கரைத்து மீண்டும் கங்கையில் இருந்து மண் எடுத்து வந்து இராமஸ்வரத்தில் கலக்க வேண்டும்</div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
இது தான் காசி யாத்திரை என்பார்கள் </div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
<br /></div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
முக்தி தரும் காசி:</div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
<br /></div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
இந்தியாவில் பழமையான நகரங்களில் ஒன்று காசி நகரம். ராமாயணம், மகாபாரதம் காலங்களுக்கு முன்பிருந்தே காசி நகரம், புகழ்பெற்று விளங்கியதாக கூறப்படுகிறது. இதன் புராதனப் பெயர் ‘ஆனந்த வனம்’ என்பதாகும். சிவபெருமான் மகிழ்ச்சியுடன் தங்கியிருக்கும் இடம் என்பதால் இப்பெயர் பெற்றது.</div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
<br /></div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
இங்கு இறப்பவர்களுக்கு சிவபெருமானே, ராம நாமம் ஓதி முக்தியை வழங்குவதாக ஐதீகம். முக்தியை தரவல்ல தலம் என்பதால் இந்த நகரத்தை ‘அவிமுக்தம்’ என்றும் அழைக்கிறார்கள். வாராண், அஸ்ஸி என்ற இரண்டு நதிகள், இந்தப் பகுதியில் கங்கையுடன் கலப்பதால் இத்தலத்திற்கு ‘வாரணாசி’ என்ற பெயரும் உண்டு. காசியின் சிறப்புகள்.</div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
<br /></div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
அன்னபூரணி ஆட்சி :</div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
<br /></div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
காசி நகரத்தின் முக்கியமான சக்தி, அன்னபூரணி. காசி முழுவதும் இந்த அன்னையின் அருளாட்சிதான். விஸ்வநாதர் ஆலயத்தில் தனிச்சன்னிதியில் அன்னபூரணி அருள்பாலிக்கிறார். இந்த அம்பாளை சிறிய சாளரத்தின் வழியாக மட்டுமே தரிசனம் செய்ய இயலும். இடது கரத்தில் தங்கக் கிண்ணமும், வலது கரத்தில் தங்கக் கரண்டியும் ஏந்தி பிட்சாண்டவருக்கு அன்னம் அளிக்கும் கோலத்தில் இந்த அன்னை காட்சி தருகிறார். அன்னையின் இருபுறமும் ஸ்ரீ தேவியும், பூதேவியும் வீற்றிருக்கின்றனர். இந்த அன்னபூரணியை தீபாவளியன்று தரிசிப்பது வெகு விசேஷமானதாகக் கருதப்படுகிறது.</div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
<br /></div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
கங்கா ஆரத்தி :</div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
<br /></div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
காசிக்குச் செல்பவர்கள் தவற விடக்கூடாத ஒன்று ‘கங்கா ஆரத்தி.’ தசாஸ்வமேத காட்டில் தினசரி நடக்கும் நிகழ்வு இது. மாலை 6.30 மணிக்கு தொடங்கி இரவு 7.30 மணிக்கு இந்த வழிபாடு முடிவடையும். இளம் வயதுள்ள ஏழு ஆண்கள் கங்கை நதிக்குச் செய்யும் பூஜையே ‘கங்கா ஆரத்தி’ என்று அழைக்கப்படுகிறது. முதலில் புனிதமான சங்கை ஊதி, மணியை அடித்து பூஜையை தொடங்குகின்றனர். அடுத்தடுத்து ஊதுபத்தி, சாம்பிராணி, மலர்கள் என ஒவ்வொன்றின் மூலமும் ஆரத்தி காட்டப்படுகிறது.</div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
<br /></div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
விஸ்வநாதர் ஆலயம் :</div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
<br /></div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
காசி நகரத்தின் சிறப்புக்குரியது விஸ்வநாதர் ஆலயம். இந்தக் கோவில் ‘விஸ்வேசம்’ என்று குறிப்பிடப்படுகிறது. ஜோதிர்லிங்கத் தலங்களில் முதன்மையானது இது. தொடர் படையெடுப்பால் தொன்மையான ஆலயம் அழிக்கப்பட்டது. தற்போது உள்ள ஆலயத்தை 1785-ல் மகாராணி அகல்யா பாய் என்பவர் கட்டியதாக கூறப்படுகிறது. ஆலயத்தின் உள்ளே நேபாள அரசரால் வழங்கப்பட்ட பெரிய மணி ஒன்று உள்ளது. இந்த மணியின் நாதம் வெகு தொலைவிற்கு ஒலிக்கும் என்பது இதன் சிறப்பம்சம். ஆலயத்தின் உள்ளே உள்ள கிணற்றில் பழமையான லிங்கம் வைக்கப்பட்டிருப்பதாக சொல்லப்படுகிறது.</div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
<br /></div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
அதிகாலை 3 மணி முதல் இரவு 11 மணி வரை திறந்திருக்கும் இந்த ஆலயத்தில், பக்தர்களே தங்கள் கையால் லிங்கத்திற்கு அபிஷேகம் செய்யலாம். தொட்டு வணங்கலாம். முன்பு..</div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
இப்போது கம்பி போட்டதால் அபிஷேகம் மட்டுமே செய்யலாம் தொட்டு வணங்க. கை எட்டாது. இங்கு இரவில் நடக்கும் சப்தரிஷி பூஜை முக்கியமானது.</div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
<br /></div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
புண்ணிய தீர்த்தம் :</div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
<br /></div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
காசி நகரத்தில் உள்ள மணிகர்ணிகா தீர்த்தம், மிகப் புனிதமானது. இங்குள்ள மயானம் மிகப் புனிதமானதாகப் போற்றப்படுகிறது. இங்கு தகனம் செய்வது மோட்சத்தைத் தரும் என்பது நம்பிக்கை. இங்கு நீராடி மணிகர்ணிகேஸ்வரரை தரிசித்த பின்தான், காசியின் பிற தெய்வங்களை வணங்கச் செல்ல வேண்டும் என்ற நியதியும் உள்ளது.</div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
<br /></div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
காசியில் மரிப்போரின் காதுகளில் ஈசன் குனிந்து ராம நாமத்தை ஓதும் போது, அவர் காதுகளில் அணிந்துள்ள குண்டலங்கள் தரையில் படுவதால் இறைவனுக்கு இப்பெயர் (மணி - குண்டலம்; கர்ணிகா -காது).</div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
<br /></div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
‘மணிகர்ணிகையில் குளித்து மணிகர்ணிகேஸ்வரரைத் தியானிப்பவர்களுக்கு, மீண்டும் பிறவி இல்லை. இந்தத் தீர்த்தத்தில் ஒருமுறை மூழ்கி எழுந்தால் அது அனைத்துப் புண்ணிய நதிகளிலும் நீராடிய பலனைத் தரும். மணிகர்ணிகைக்குச் சமமான தீர்த்தம் எந்த லோகத்திலும் இல்லை’ என்கிறது கந்த புராணம்.</div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
<br /></div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
காசியின் காவல்தெய்வம் :</div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
<br /></div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
காசி நகரத்தை தன் கட்டுப்பாட்டில் வைத்து, காவல் காத்து வருபவர் அங்குள்ள கால பைரவர். இவர் கண்ணசைவின்றி காசியில் எதுவும் நடக்காது என்பது ஐதீகம். இவரைத் தரிசிக்காமல் காசி யாத்திரை பூர்த்தி ஆவதில்லை. உருண்டையான முகம், பெரிய கண்கள், அடர்ந்த மீசை என கம்பீரமாக காட்சி தருபவர் கால பைரவர். உள்ளே நுழைந்து பைரவரை வணங்கியதும், ஆலயத்தில் உள்ள மயிற்பீலியால் நம் முதுகில் தட்டுவார்கள். அதனைத் தொடர்ந்து தண்டம் என்ற நீண்ட கோல் கொண்டு, பக்தர்களின் தலையில் ஆசீர்வதிப்பார்கள். கால பைரவரின் ஆலய வாசலில் தான் ‘காசிக்கயிறு’ என்னும் கறுப்புக் கயிறு விற்பனை செய்யப்படும்.</div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
<br /></div>
<br /></div>
SASIKALA DHANASEKARANhttp://www.blogger.com/profile/11716959431566964164noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-2850277381022175263.post-12231365609103543472020-05-29T10:00:00.000+05:302020-05-29T10:00:18.700+05:30காசி யாத்திரை 2<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div>
ஒரு டூரில் நம்ம சொந்தபந்தம் அண்ணன் அண்ணி சம்மந்தி நட்பு என்று உறவினரோடு அளவளாவிய 20 நபர் பயணத்தில் மற்ற சில முகம் தெரியாதவர் பயணத்தில் பயம் தரும் சில பயணமும் உள்ளது. </div>
<div>
<br /></div>
<div>
என்னுடைய இந்தகாசி யாத்திரை வயதான பெரியவர்களை தொலைதூர பயணத்தில் பணம் மட்டுமே போதாது. குடும்ப உறுப்பினரோடு பயணிக்க முயற்சி செய்வது நல்லது. பிறர் பயணத்ததிற்கு தொந்தரவு தரக் கூடாது.</div>
<div>
<br /></div>
<div>
முதல் நாள் காலை ஏழுமணிக்கு எக்மோரில் இரயில் ஏறி இனிதே சென்றது. </div>
<div>
<br /></div>
<div>
ஆனால்.....</div>
<div>
<br /></div>
<div>
வருத்தமான இரண்டாவது நாள் காசி பயணமே மறந்தாலும் என் ஆயுள் உள்ள வரை மறக்க முடியாத சில நிமிடம்..</div>
<div>
<br /></div>
<div>
ஆம் ஒரு வயதான பாட்டி மூன்று முறை காசிக்கு வந்தேன் இப்போது என் தோழி மூன்றாவது வீட்டில் இருக்கிறார் என்று அழைத்து வந்தார்.. </div>
<div>
<br /></div>
<div>
நான் என் அம்மாவிற்கு போன் பேச பக்கத்து இருக்கையில் வந்து போனில் பேசிய போது அந்த பாட்டி பற்றிதோழி பாட்டி சொன்னது.. அவருக்கு காலை முதல் மிகவும் மயக்கமாக படுத்தே இருந்தார். மிகவும் சோர்ந்த நிலையில் பாதி இட்லி சாப்பிட்டதாகவும் லோ சுகர் மாத்திரை போட்டார். சிறுநீர் பத்துமுறைக்கு மேல போனார் பதினோறாவது முறை போகும் போது எழுந்து நடக்க முடியல நானே கைதாங்கலாக அழைத்து வந்து படுக்க வைத்தேன் என்று சொன்ன போதே முடியாத படுத்திருந்த அந்த பாட்டியின் தீர்க்கமான பார்வை என்னை ஏதோ செய்தது. (அப்போது தெரியவில்லை நானே அவருக்கு .. )டூர் ஏஜன்ட் அழைத்து சொல்லி மருத்துவரை அழைக்க சொல்லிருந்தோம் இரயிலில் எந்த மருத்துவரும் இல்லை மொல்ஸ்ராய் போனாலே மருத்துவர் வருவார் ஆம்லன்ஸ்ல அழைத்து போகலாம் என்றனர்..</div>
<div>
<br /></div>
<div>
அருகே ஒரு நர்ஸ் சற்று சக்கரை தண்ணி தாங்க என்றனர். நானும் என் கணவரும் இரண்டூ மூன்று பெட்டி தேடி ஐம்பது மில்லி தண்ணில 2ஸ்பூண் சக்கரை கலந்து இரண்டு முனறு நானே தந்தேன் எல்லாருமே அருகே செல்ல பயந்தனர்.. என் தோழி அக்குபஞ்சர் பிராணிக் ஈலர் அவரிடம் போனில் கேட்டேன் என்ன செய்ய என்று அவரும் லோ சுகர் என்றால் மாம்பழ ஜீஸ் தரலாம் என்றார் அவசர பாய்ன்ட் அக்குபிரஷைர் தர போட்டோ தந்தார் இவைகளை பேசிட்டு வரும் முன்னே அந்த பாட்டி ஒரே ஒரு மிடர் சக்கரை தண்ணி நான் ஊற்றும் போதே தலை திரும்பியது.. என்னையும் அந்த பக்கம் போங்க மருத்துவர் வரட்டும் என்று அனுப்பிட்டார் தோழியின் பாட்டி .. பிறகு நான்கு மணிநேரம் கழித்து மொகல்ஸ்ராய் வந்ததும் மருத்துவர் வந்து அந்த பாட்டி இறந்து பல மணிநேரம் ஆகிடுச்சி என்றதும் தூக்கி வாரிப்போட்டது நெஞ்சடைத்து போனது.. </div>
<div>
<br /></div>
<div>
அந்த பாட்டி மகனுக்கு சொல்லி அந்த இரயில் நிலையத்திலே அவரை காவல்நிலையத்தில் ஒப்படைத்து போஸ்மாடம் செய்யாமல் எல்லா உதவியும் ஒரு பீகார் இந்திகார தம்பி ஏற்பாடு செய்துஇப்போது வரை போனில் தொடர்ப்பு கொண்டார் நலமாகா என்று அந்த பாட்டியின் மகனோ தாயின் உடலை வீடியோ எடுக்க சொல்லி இதை வீடீயோ எடுப்பது எத்தனை மன வலியோடு என் கணவர் எடுத்து அனுப்பி இறைவா நம்ம எதிரிக்கும் இது போல வர வேண்டாம்... இன்னும் தொடரும்..#காசியாத்திரை2</div>
</div>
SASIKALA DHANASEKARANhttp://www.blogger.com/profile/11716959431566964164noreply@blogger.com2tag:blogger.com,1999:blog-2850277381022175263.post-56222772252450210612020-05-29T09:50:00.000+05:302020-05-29T09:50:14.478+05:30மன உளச்சல்<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
உடல்நலனை பாதிக்கும் மனஉளைச்சல்<br />
<br />
<br />
உடல் நலத்தினை வெகுவாய் பாதிக்கும் கவலை, மனஉளைச்சல் போன்றவற்றிலிருந்து எப்படி வெளியில் வருவது என்பதை பற்றி விரிவாக அறிந்து கொள்ளலாம்.<br />
<br />
அடிக்கடி மருத்துவத்தில் கூறப்படுவது கவலை, மனஉளைச்சல் போன்றவை உடல் நலத்தினை வெகுவாய் பாதிக்கும் என்பதுதான்.<br />
<br />
அநேகர் கூறும் சில வார்த்தைகள் என்ன தெரியுமா?<br />
<br />
குறைந்தது 10 வருடம் முன்னாடி இதெல்லாம் நான் செய்திருந்தால் எனக்கு இன்று மனநலம், உடல் நலம் இரண்டும் நன்றாக இருந்திருக்கும் என்பதாகும். நாமும் அவ்வாறு சொல்லாதிருக்க கீழ்கண்ட வழி முறைகளை இன்றிலிருந்தே கடைபிடிப்போம்.<br />
<br />
* வாழ்வின் இளமை காலத்தில் ‘என்னால் இவ்வளவு உழைக்க முடியாது. போராட முடியாது’ என்று சொல்லி மெத்தனமாக இருந்து விட்டால் அதுவே பிற்காலத்தில் மிகுந்த மனஉளைச்சலை ஒருவருக்குத் தந்துவிடும். எனவே தன்னால் முடிந்தவரை ‘சவாலை ஏற்று செயலாற்றுவது’ நிறைந்த மனநிறைவினை ஒருவருக்கு அளிக்கும்.<br />
<br />
* சிலருக்கு மற்றவர்களைப் பற்றிய குறை, குற்றங்களை கூறிக் கொண்டே இருக்க வேண்டும். இது அவர்களின் குணம். ஆனால் இந்த குணம் பிற்காலத்தில் அவர்களை மனஉளைச்சல் உடையவராக மாற்றி விடும். எனவே இந்த தரக்குறைவான குணத்தினை இன்றே மாற்றிக் கொள்ள வேண்டும்.<br />
<br />
* தனக்கு மட்டுமே வேலை அதிகம் என்று சொல்லிக் கொண்டு சிலர் வீட்டில் உள்ளவர்களுடன் நேரம் செலவழிக்க மாட்டார்கள். மனைவி, குழந்தைகள் எல்லாம் இவர் வீட்டில் இவருக்கு சம்பந்தம் இல்லாதவர்களாக இருப்பார்கள். வீட்டிற்கு வரும் விருந்தினர்களிடம் ஒரு வார்த்தை கூட சிரித்து பேச மாட்டார்கள். இத்தகையோர் விரைவிலேயே மனஉளைச்சலுக்கு ஆளாவதால் பல நோய் தாக்குதல்கள் இவர்களுக்கு ஏற்படுவதாக ஆய்வுகள் கூறுகின்றன. பூமி நம் தலைமீது சுற்றுவதில்லை. சூரியனும், சந்திரனும் நம்மை கேட்டு உதிப்பதில்லை. அப்படியிருக்க ஏன் நாமே தான் எல்லாம் செய்கின்றோம் என்ற நினைப்பு இருக்க வேண்டும். குடும்பம், ஓய்வு இவற்றுக்கு கண்டிப்பாய் சிறிது நேரம் ஒதுக்குங்கள். இது நம் ஆரோக்கியத்தினைக் கூட்டும்.<br />
<br />
* உடற்பயிற்சிக்கு நேரமே இல்லை என்று கூறுபவர்களை அவர்களது உடலே நோயை கொடுத்து தண்டித்து விடுகின்றது. 30 நிமிட துரித நடைபயிற்சி அநேக நன்மைகளை அள்ளித் தரும்.<br />
<br />
* நன்றி சொல்ல பழகுங்கள். காலை வெயிலுக்கு, மலரும் பூவுக்கு, மற்றவர்களின் சிறிய உதவிக்கும் நன்றி சொல்ல பழகுங்கள்.<br />
<br />
* எதிலும் ‘பயம்’ என முடங்காதீர்கள். தவறுகளுக்கு மட்டுமே அஞ்ச வேண்டும். முயற்சிகளுக்கு அஞ்சுவது ஒருவரை வெகுவாய் பலவீனப்படுத்தி விடும்.<br />
<br />
* பிறருக்கு உதவாவிட்டாலும் பரவாயில்லை. பிறரை வேதனைப்படுத்தாது இருங்கள். காரணம் கோபப்படுபவர்களே அதிக அசிடிடி, உயர் ரத்த அழுத்தம் போன்ற நோய்களுக்கு ஆளாகின்றனர்.<br />
<br />
* மிகவும் சோர்ந்த பிறகு ஓய்வு எடுப்பது தவறு. குறிப்பிட்ட நேரம் வேலை செய்தபின் நாமே சிறிது நேரம் ஓய்வு எடுத்துக் கொள்ள வேண்டும்.<br />
<br />
* தன்னைப் பற்றி மட்டுமே நினைத்துக் கொண்டிருப்பவர்கள் எப்பொழுதும் படபடப்புடனேயே இருப்பார்கள். ஆகவே பிறரைப் பற்றியும் சிந்தியுங்கள். இதனால் உங்கள் சிந்தனை, பேச்சு இரண்டும் தெளிவாகும்.<br />
<br />
* சிறு நன்மைகள், நற்செயல்களை கண்டு மனதில் மகிழ்ச்சி அடையுங்கள். புன் முறுவல் செய்யுங்கள். சிரியுங்கள். இது இறைவன் தந்த உடல் நல, மனநல மருந்து.<br />
<br />
* உங்களை மிகவும் பலவீனமானவராகவும், பரிதாபத்திற்குரியவராகவும் நினைக்காதீர்கள். சுய பரிதாபம் வேண்டாம். இது ஒருவரை நிரந்தர நோயாளி ஆக்கி விடும்.<br />
<br />
மேற் கூறப்பட்டவைகள் பொதுவில் கூறப்படும் அறிவுரைகள் அல்ல. உடல் நலனுக்காக செய்யப்பட்ட சில ஆய்வுகளின் முடிவுகள் ஆகும். இனியாவது இவைகளை கடை பிடிப்போமாக.</div>
SASIKALA DHANASEKARANhttp://www.blogger.com/profile/11716959431566964164noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-2850277381022175263.post-33502470950404570722020-05-28T12:54:00.001+05:302020-05-28T12:54:11.815+05:30காசி யாத்திரை<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
#காசியாத்தைரை1 அவங்க அவங்க டூர் போனால் ஜாலியா லோக்கேஷன் முதல் போட்டோவரை போட்டு கலக்குறாங்க.. என்னதான் டிக்கட் புக் செய்து போனாலும் இந்த இந்திகார பிள்ளைகள் ஆக்கிரமிப்பு தாங்க முடியல..நாமும் போட்டோ போடலாம் என்றால் இந்த இரயில் சார்ச் போட இடமும் இல்ல நிக்க கூட முடியல கழிவறை வரை லைன் போகுது 21முதல் இந்த நாள் வரை பயணம் புனித யாத்திரை காசி காயா அலகாபாத் ஆனந்த பயணம் இருபது பேரும் குடும்ப உறுப்பினர்களே. அன்பும் பரிவு அதிகரித்து இன்னும் புரிதலும் விட்டுதருதலும் வளர்ந்து அன்பு அன்பு பெருகி மகிழ்ச்சி பன்மடங்கு வளரவே இது போன்ற டூர் மிக அவசியம் தேவையாகிறது.இன்னும் நிறைய கதை சுவாரசியம் சோகம் பிறகு பகிர்கிறேன் நன்றி.<br />
<br />
கயா, திருவேணிசங்கம், காசி பயணக் கட்டுரை.<br />
<br />
எங்களது 8 நாட்கள் பயணம்<br />
21. முதல் 28. வரை.<br />
<br />
முதல் நாள் காலை கயா விரைவு ரயிலில் , சென்னை எக்மோரிலிருந்து கயாவிற்கு திருவண்ணாமலை பயணம் 49 நபர்களுடன் பயணம் இனிதே துவங்கியது.<br />
<br />
22.ரயில் பயணம் இரவு.<br />
<br />
23.அதிகாலை ரயில் நிலையத்திலிருந்து பஸ் மூலம் சென்று புத்த கயாவில் உள்ள விடுதியில் தங்கல்.<br />
<br />
23.காலை பஸ் மூலம் 10 கி.மீ வந்து<br />
கயா லக்ஷ்மி நாராயண விஷ்ணு பாத கோயிலில் தர்ப்பணம்,<br />
சாட்சி ஆலமரம்.<br />
புத்த கயாவில் உள்ள புத்தர் கோயில்கள் மற்றும் போதி மரம் தரிசனம்.<br />
<br />
23.இரவு கயாவிலிருந்து அலகாபாத் ரயில் பயணம்.<br />
<br />
24 அலகாபாத் வந்து விடுதியில் தங்கல்.<br />
ஸ்ரீசங்கர மடத்தின், வடக்கு நோக்கிய பிள்ளையார், காமாட்சி, துர்கை , பெருமாள், சகஸ்ரலிங்கம் தரிசனம்.<br />
<br />
திருவேணி சங்கம் காலை யமுனை நதியில் படகில் சென்று கங்கை நதியில் நீராடல். திரும்பி படகில் வரும்போது யமுனை நதியில் தீர்த்தம் எடுத்தல்.<br />
நான்கு யுகம் முன் தோன்றிய ஆலமர விழுது.<br />
மாலை. நேரு வீடு, ஆனந்த பவனம், இந்திரா காந்தி இல்லம் ஸ்வராஜ்பவனம் , பார்வையிடுதல்.<br />
<br />
24.இரவு அலகாபாத்திலிருந்து பஸ் மூலம் வாரனாசி வந்து சோனாபூர் கௌரியா விடுதியில் வந்து தங்கல்.<br />
<br />
25.காலை கௌரியா விடுதியிலிருந்து ஆஞ்சனேயா காட் வழியாக படகு மூலம் நபருக்கு ரூ.100/ வீதம்49பேர் கிளம்பி விதிவசத்தால் ஒருவர் இறைவனடி சேர்ந்து 48 பேர் ஒரே படகில் சென்று ஹரிச்சந்திர காட் ( காட் என்றால் மயானம்) , முதல் மணிகர்ணிகா காட் வரை உள்ள 48 கட்டிடங்கள் படித்துறையில் படகில் இருந்து பார்த்தல்.<br />
பின்னர் அக்கறை சென்று 5 அடி ஆழமுள்ள வாரனாசி கங்கை நதியில் நீராடல்.<br />
காசி விஸ்வநாதர், அன்னபூரனி, பார்வதி, ஆதி காசி விசாலாட்சி ஸ்ரீநரசிம்மர் தரிசனம்.<br />
<br />
மீண்டும் மாலை படகில் சென்று கங்கா ஆரத்தி 6-8 மணி வரை தரிசனம்.<br />
<br />
26.சோழி மாதா, பாதாள ஆஞ்சனேயர், கிருஷ்ணன் கோயில், ஆஞ்சனேயர் கோயில்.<br />
பைரவர் கோயில்,<br />
காளி கோயில்.<br />
தீர்த்தம் பொருட்கள் வாங்கல்.<br />
26.இரவு ரயில் பயணம்<br />
27.ரயில் பயணம்.<br />
சென்னை வந்து சேர்ந்தது.<br />
(குறிப்பு. டூர் ஏஜன்ட் வராத நேரத்தில் இரண்டு நாள் திரு. தனசேகரன் வழி நடத்தினார் என்பது குறிப்பிடதக்கது.<br />
திருவண்ணாமலை டூர் ஏஜென்ட் ஒவ்வொரு இடத்திலும் உள்ள கடவுள், கோயில் தளங்களில் ஐதீகம் மற்றும் வரலாறு பற்றி உடனிருந்து அழகாக விவரித்ததும் உணவு வழங்கியதும் மிகவும் சிறப்பு.)<br />
சசிகலா தனசேகரன்<br />
திருவண்ணாமலை.<br />
28.5.2019.<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEg5UXi3_y-OHHgUG4IpORto-dOHmmQ9nAEXDYgZfx8x7_FeOEG6t937_wV4OwcZjxddZ2UDaqYiB3qICFUuvy2hgLEdNwV5PfJWVw_kwg6gv9poTa7q1cedD7sQgCdY_FfkhSuhN50xw47f/s1600/IMG-20200528-WA0006.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="560" data-original-width="1152" height="155" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEg5UXi3_y-OHHgUG4IpORto-dOHmmQ9nAEXDYgZfx8x7_FeOEG6t937_wV4OwcZjxddZ2UDaqYiB3qICFUuvy2hgLEdNwV5PfJWVw_kwg6gv9poTa7q1cedD7sQgCdY_FfkhSuhN50xw47f/s320/IMG-20200528-WA0006.jpg" width="320" /></a></div>
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEg5OFBp245sxjQv236qwTvHajxGJ2JSCxv-hporRezzSesIrCb7w4ZGktnCZ9g8yLlElpZuaqEwCUI-QBjWXCJiamjVz6qAUl3RyUmhl58AssAFWqUTQUgTbCkEpAMpOZQj6DOzXljEj-UL/s1600/IMG-20200528-WA0007.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="960" data-original-width="1280" height="240" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEg5OFBp245sxjQv236qwTvHajxGJ2JSCxv-hporRezzSesIrCb7w4ZGktnCZ9g8yLlElpZuaqEwCUI-QBjWXCJiamjVz6qAUl3RyUmhl58AssAFWqUTQUgTbCkEpAMpOZQj6DOzXljEj-UL/s320/IMG-20200528-WA0007.jpg" width="320" /></a></div>
</div>
SASIKALA DHANASEKARANhttp://www.blogger.com/profile/11716959431566964164noreply@blogger.com2tag:blogger.com,1999:blog-2850277381022175263.post-76296206341884748412020-05-26T10:44:00.000+05:302020-05-26T10:44:31.430+05:30கருணை குணமே காப்பாகும் <div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
தெரியாமல்_செய்த_பாவங்களுக்கு_கூட_விமோசனம்_கிடைக்கும். <br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjpYWuWb98w0Bel_2dhQTVsDKVnOhCeiaTHWh6sw7QK0jkiMPktVfQUKBIw8yH_0epbvrlfFuvj7me4z2emAOpmJwOMXw3Gji2WRuV9KzB4MRs4KZLCeIzg-21PkCbP8dvBYHNl25mfp80F/s1600/FB_IMG_1590469875989.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="327" data-original-width="450" height="232" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjpYWuWb98w0Bel_2dhQTVsDKVnOhCeiaTHWh6sw7QK0jkiMPktVfQUKBIw8yH_0epbvrlfFuvj7me4z2emAOpmJwOMXw3Gji2WRuV9KzB4MRs4KZLCeIzg-21PkCbP8dvBYHNl25mfp80F/s320/FB_IMG_1590469875989.jpg" width="320" /></a></div>
இவர்களுக்கு_தானம்_செய்தால்!<br />
<br />
நாம் அறிந்தோ அறியாமலோ செய்த பாவத்திற்கு புண்ணியம் தேடுவதற்கான சிறந்த வழி, தானம். இது நாம் எல்லோரும் அறிந்த ஒன்றுதான். பொதுவாகவே பசுமாடு, ஈ, எறும்பு, வைரவர், காகம், இவைகளுக்கு உணவு அளித்தால் நாம் செய்த பாவங்கள் நீங்கும் என்று சொல்கிறது சாஸ்திரம். ஆனால், இவைகளுக்கு நாம் செய்யும் தானத்தை முறையாகத்தான் செய்கின்றோமா! என்ற சந்தேகத்தை இந்த பதிவின் மூலம் தீர்த்துக் கொள்ளலாம்.<br />
<br />
எல்லா ஜீவராசிகளுக்கும் எப்படி வேண்டும் என்றாலும், எந்த நேரத்தில் வேண்டும் என்றாலும் தானம் செய்வதால் தவறு இல்லை. இருப்பினும், குறிப்பிட்ட இந்த ஜீவராசிகளுக்கு, இந்த முறைப்படி தொடர்ந்து தானம் செய்து வந்தால், நாம் செய்த பாவங்கள் மட்டும் அல்ல, நம் முன்னோர்கள் செய்த பாவங்களால், நாம் அனுபவித்து வரும் கஷ்டத்திற்கு விமோசனம் கிடைக்கும் என்பதில் எந்த ஒரு சந்தேகமும் இல்லை. அது என்ன தானம்? இந்த ஜீவராசிகளுக்கு எப்படி செய்ய வேண்டும்? என்பதை பற்றி பின்வருமாறு தெரிந்து கொள்ளலாம்.<br />
<br />
முதலில் பசுமாட்டிற்கு வாழைப்பழம் தந்தால் நல்லது என்பது நாம் எல்லோரும் அறிந்த ஒன்றுதான். ஆனால் நாட்டு வாழைப்பழம் 6 என்ற எண்ணிக்கையில் வாங்கி, வாரம் ஒரு முறை அந்தப் பசு மாட்டிற்கு தானம் அளிப்பது மேலும் சிறப்பு என்று சொல்கிறது சாஸ்திரம்.<br />
<br />
எறும்புகளுக்கு உணவளிக்க வேண்டும் என்பதற்காகத்தான் காலையில் அரிசி மாவில் கோலமிட வேண்டும் என்று சாஸ்திரத்தில் சொல்லப்பட்டுள்ளது. அதே அரிசி மாவில், ஒரு சிட்டிகை மஞ்சள் தூளை கலந்து வாசலில் கோலமிடுவது பலமடங்கு புண்ணியத்தை தேடித்தரும் என்றும் சாஸ்திரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.<br />
<br />
பைரவரின் வாகனமான நாய்க்கு உணவளித்தால் நல்லது. அதுவும் தேய்பிறை அஷ்டமியில் நாய்க்கு உணவளிப்பது நமக்கு நல்ல பலனை பெற்றுத்தரும். இது நாம் எல்லோரும் அறிந்த தாக இருந்தாலும், தினம்தோறும் சாதத்தில் சிறிதளவு வெல்லம் கலந்து, இரவு நேரத்தில் ஒரு நாய்க்கு உணவளிப்பது நாம் செய்த பாவங்கள் அனைத்தையும் போக்கும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த வரிசையில் உங்களது வீட்டு நாய் இல்லை. வீட்டில் இருக்கும் நாய் அல்லாமல், தெருக்களில் இருக்கும் நாய்களுக்கு உணவளிப்பது சிறந்தது.<br />
<br />
தினம் தோறும் நாம் காகத்திற்கு வைக்கப்படும் சாப்பாட்டில் ஒரு சொட்டு தயிரும், சிறிது எள்ளும் கலந்து வைத்தால் நம் முன்னோர்களின் ஆத்மாவானது சாந்தி அடைந்தது, அவர்களின் ஆசீர்வாதத்தை முழுமையாகப் பெற்று, பாவம் இல்லாத வாழ்க்கையை வாழ முடியும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. ஆகவே நீங்கள் மேற்குறிப்பிட்டுள்ள ஜீவராசிகளுக்கு, இதுநாள்வரை எப்படி உணவு வைத்திருந்தாலும், இனிமேல் இந்த முறையில் உணவு வைத்து பாருங்கள்! வாழ்க்கையில் சில முன்னேற்றங்கள் விரைவாக உண்டாவதை உங்களால் நிச்சயம் உணர முடியும்.</div>
SASIKALA DHANASEKARANhttp://www.blogger.com/profile/11716959431566964164noreply@blogger.com3tag:blogger.com,1999:blog-2850277381022175263.post-33300542685455708622020-05-25T15:17:00.000+05:302020-05-25T15:17:00.405+05:30அறிய தகவல்<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
தெரியாத கதை..<br />
<br />
பாரதப் போர் பதினெட்டு நாள் நடந்தது.<br />
<br />
பகல் முழுவதும் பார்த்தனுக்குத் தேரோட்டு வான் பரந்தாமன். அந்நாளில் இரவில் போர் செய்யும் வழக்கமில்லை. இரு பிரிவினரும் இரவில் ஒய்வெடுத்துக் கொள்வர். பகல் எல்லாம் போரிட்ட களைப்பால் அர்ச்சுனன் பாசறையில் படுத்து நன்கு உறங்குவான்.<br />
<br />
ஆனால் பகல் எல்லாம் தேர் ஒட்டிக் களைத்தி ருந்தாலும் கண்ணன் மட்டும் இரவில் ஒய்வு கொள்வதில்லை. தேரை இழுத்து ஓடிக்களை த்த குதிரைகள் மேல் கவனம் செலுத்துவான் கண்ணன். வெந்நீர் வைத்துக் குதிரைகளை நன்கு தேய்த்துக் குளிப்பாட்டி விடுவான்.<br />
<br />
குதிரைகளுக்கு இதமாயிருக்கும் பொருட்டு உடல் முழுவதும் பிடித்துவிடுவான். பச்சை அறுகு வெட்டி வந்து கட்டுக்கட்டாகக் குதிரைக ளுக்கு ஊட்டிவிடுவான்.<br />
<br />
அடுப்பு மூட்டிக் கொள்ளை வேக வைத்து, வெந்த கொள்ளைத் தன் பட்டு உத்தரீயத்தில் எடுத்து ஒவ்வொரு குதிரைக்கும் முன் நின்று அவை உண்பதைக் கண்டு மகிழ்வான்.<br />
<br />
குதிரைகள் கொள்ளை வயிறார உண்டு முடித்த பிறகு சற்று ஓய்வு எடுத்து கொள்ளும்.<br />
அவை ஒய்வு கொள்ளும் போது, கண்ணன் குதிரைக் கொட்டில் முழுவதையும் சுத்தம் செய்வான். அதற்குள் விடிய தொடங்கிவிடும்.<br />
<br />
உடனே குதிரைகளைப் பூட்டித் தேரினைப் போருக்குச் செல்லத் தயாராக்கி விடுவான்.<br />
ஒவ்வொரு நாளும் இப்படியே தொடர்ந்து நடக்கும். ஒருநாள் அர்ச்சுனனுக்கு நள்ளிரவி ல் விழிப்பு வந்துவிட்டது.<br />
<br />
எழுந்து கண்ணன் தங்கிய பாசறைக்குச் சென்றான். அங்குக் கண்ணன் இல்லை. இந்நேரம் களைத்துத் தூங்காமல் கண்ணன் எங்கே போயிருப்பான் தேடினான். இறுதியில் கண்ணன் குதிரைக் கொட்டிலில், குதிரைகளு க்குப் பணிவிடைகள் செய்து கொண்டிருப்ப தைக் கண்டான்.<br />
<br />
உடனே ஒடிச் சென்று கண்ணன் கைகளைப் பற்றிக் கொண்டான். “கண்ணா குதிரைகளு க்கு நீதான் பணிவிடை செய்ய வேண்டுமா? வேறு யாரும் செய்யமாட்டார்களா?”<br />
<br />
“உன் அடிமையாகிய நான் ஒய்வாக உறங்கு கையில் நீ உறங்காமல் பணி செய்து கொண் டிருப்பதா என்ன அபசாரம் இன்று முதல் இப்பணி நீ செய்யாதே!” என்று அர்ச்சுனன் வேண்டிக் கொண்டான்.<br />
<br />
“அர்ச்சுனா குதிரைகளை நன்கு பராமரிக்கா விட்டால் தேர் விரைந்து ஓடுமா? பகைவரை வெல்ல முடியுமா? வேறு யாரையாவது பராம ரிக்கச் சொன்னால் அவர்கள் அக்கறையாகக் கவனிப்பார்களா?”<br />
<br />
“அது மட்டுமல்ல! இப்போது நடக்கும் போர் முடியும் வரை நாம் மைத்துனன்மார் அல்ல. நீ எஜமானன். நான் நின் ஏவல் கேட்கும் சாரதி. ஆதலால், உன் கடமை போர் செய்வது. என்கடமை தேர் ஒட்டுவது”.<br />
<br />
“குதிரைகளைப் பராமரிப்பது சாரதிக்குரிய தொழில். மறுநாள் போருக்காக நன்கு ஒய்வு எடுத்துக்கொள்வது எஜமானன் தொழில். நம் இருவரின் தொழில் வேறுவேறாக இருந்தா லும், நம் தொழில் போர்த்தொழில் தான்.."<br />
<br />
" ஆதலால் நாம் செய்யும் தொழிலில் ஏற்றத் தாழ்வு ஏது உனக்கு உரிய தொழில் மறுநாள் போரிடுவதற்கு ஒய்வெடுப்பது. எனக்கு உரிய தொழில் மறுநாள் தேரில் பூட்டக் குதிரைகளை பராமரிப்பது..."<br />
<br />
" இருவகைத் தொழிலும் செம்மையாக நடை பெற்றால் தான் போரில் வெற்றிகிட்டும். ஆதலால் நீ சென்று ஓய்வெடுத்துக் கொள் நான் என் கடமையைச் செய்ய இயலாமல் குறுக்கீடு செய்யாதே” என்றான் கண்ணன்.<br />
<br />
கீதை உபதேசம் கேட்ட அன்றினும் இன்று. கண்ணன் செயலாலும் சொல்லாலும் காட்டிய உபதேசம் அர்ச்சுனன் நெஞ்சை நெகிழச் செய்தது. மறுநாள் முதல் தன் போர்க் கடமை யைச் சோர்வின்றிச் செம்மையாகச் செய்து வெற்றியைக் குவித்தான்.<br />
<br /></div>
SASIKALA DHANASEKARANhttp://www.blogger.com/profile/11716959431566964164noreply@blogger.com4tag:blogger.com,1999:blog-2850277381022175263.post-65416998560502707682020-05-19T23:22:00.001+05:302020-05-19T23:22:02.650+05:30அண்டம் ரகசியம் <div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
"அண்ட பிண்ட ரகசியம்<br />
<br />
அண்ட பிண்ட ரகசியத்தை சித்தர்கள் எப்படி<br />
கண்டறிந்தனர்?<br />
இப்படிப்பட்ட இன்பமும், துன்பமும்,<br />
ஏற்படுகின்ற இந்த வாழ்க்கைக்கு வழியே<br />
இல்லையா? நிரந்தரமான மகிழ்ச்சி<br />
கிடைக்காதா? என்ற கேள்வி எழ ஆரம்பித்தது.<br />
அந்தக் கேள்விக்கு மனிதன் கண்டெடுத்த<br />
முத்துகளாகிய பிரபஞ்ச அண்ட பிண்டத்<br />
தத்துவம்.இன்னும் ஆழமாகப் புரிய<br />
ஆரம்பித்தது. அதன் முடிவு எங்கு<br />
தோற்றமோ? அங்கேதான் முடியும் ? என்பதை<br />
புரிந்து கொண்டான். ஆராய முற்பட்டான்.<br />
அதன் விளைவு வெட்டவெளி தோன்றியது.<br />
அதிலிருந்து தோன்றிய ஜோதி அவன் கண்முன்<br />
தோன்றின.அதிலே முளைத்து எழுந்த<br />
அணுவே நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம்<br />
ஆகி ஓரறிவு ஐந்தறிவு பிராணி ஆறறிவு<br />
மனித ஜீவன் வரையுள்ள பரிணாமத்தைக்<br />
கண்டான்.<br />
கடைசியாகத் தன்னைத்தானே ஆராய<br />
முற்பட்டான். அதன் விளைவு தன்னுடைய<br />
இடத்திலே இருக்கும் மூல ஆற்றலை<br />
உணர்ந்தான்.<br />
எங்கோ தொடங்கிய மூல ஆற்றல்<br />
அண்டங்களாக பேரண்டங்களாக வியாபித்துள்ள<br />
பூரனமாய் நிறைந்துள்ள அந்த ஆற்றலை<br />
கண்டான்.<br />
பிரபஞ்சத்தின் சிறிய அணுவான மனிதன் மூல<br />
சக்தி என்கிற கயிற்றின் நுனியைப் பிடித்து<br />
கொஞ்சம் கொஞ்சமாக பிரபஞ்ச பேராற்றலின்<br />
பரமாணுவை அடைந்து அதோடு ஐக்கியமாக<br />
முடியும் என்று கண்டுபிடித்தான்.<br />
கண்டுபிடித்து அடைந்தவன் சித்தன்.<br />
வெட்டவெளியில் ஜோதியாக இருபவனும்<br />
சித்தனே. வெட்டவெளியில் ஜோதியாக<br />
இருபவனும் சித்தனே. அதுவே<br />
பிரம்மரகசியம் ! அதை அறிந்தவனே<br />
பிரம்மரிஷி.<br />
பரமாணுவில் தொடங்கி அணுக்கள் கூட்டம்<br />
கூட்டமாக பல்வேறுபட்ட இயக்கங்களை<br />
அண்டங்களாக, பிண்டங்களாக நடந்து<br />
கொண்டு இருக்கின்ற பேரியக்க மண்டலமே<br />
(Universe) அதனுடைய முதல் நிலை ஆகாயம்<br />
எனப்படும்.<br />
அதன் அடுத்த நிலையே காற்று எனப்படும்.<br />
இவை இரண்டும் மோதிக் கொள்வதால்<br />
ஏற்படும்போது உண்டான ‘வெப்ப நிகழ்ச்சியே<br />
நெருப்பாகும்.<br />
நீரகவாயு, பிராணவாயு என்ற இருவகையான<br />
வாயுக்கள் குறிப்பிட்ட அளவில் சேருகின்ற<br />
போது நீர் ஆகிறது. நீரின் இறுகிய நிலையே<br />
மண்.இவ்வைந்து நிலைகளும் ஐந்து பௌதிகப்<br />
பிரிவுகள் ஆனபடியால் அவற்றை<br />
பஞ்சபூதங்கள் என்கிறோம்.<br />
மேற்கண்ட பூதங்கள் பேரியக்க மண்டலத்தில்<br />
ஆகாயம், காற்று, நெருப்பு, நீர்,மண் என்று<br />
முறையே தோன்றியது . இதே வரிசைக்<br />
கிராமமாகத்தான் தாயின் வயிற்றில் பிண்டமான<br />
குழந்தையும் வளரும்.<br />
அண்டம் : -------- பிண்டம் : ---------------<br />
குழந்தை : .ஆகாயம் ---> தலைபாகம் (ஆகாயம்)---><br />
# ஆக்ஞை<br />
# காற்று -----> கழுத்து (காற்று)---><br />
# விசுத்தி<br />
# நெருப்பு --------> இருதயம் (நெருப்பு) ---><br />
# அநாதகன்<br />
# நீர் --------------> தொப்புள் (நீர்) -----><br />
# மணிபூரகம்<br />
# மண் ------------>வயற்றில் (சுக்கில<br />
சுரோணித இடம்)---> # சுவாதிஷ்டானம்<br />
மேற்கண்ட விளக்கத்தின் மூலம் அண்டத்தின்<br />
செயல்பாடு முறைக்கு ஏற்ப பிண்டத்திலும்<br />
செயல்படுகிறது என்பதை ஏளிதாக<br />
அறியலாம்.<br />
பரமானுவிலிருந்து தொடங்கி கூட்டம்<br />
கூட்டமாக இயங்குகின்ற நிகழ்ச்சிகளின்<br />
குணங்களை ஐந்து வகையாகப் பிரிகின்றோம்.<br />
உணர்வு, ஒலி, ஒளி, சுவை, மணம். இந்த<br />
ஐந்து குணங்களும் எப்படித் தோன்றின?<br />
என்பதை காணும்போது கவர்ச்சியாக உள்ள<br />
அழுத்த இயக்கம் நடைபெறும் இடம் ஆகாயம்<br />
என்றும்,ஒலி உண்டாகும் இடத்தை காற்று<br />
என்றும், ஒளி உண்டாகும் இடத்தை நெருப்பு<br />
என்றும்,சுவை உண்டாகும் இடத்தை நீர்<br />
என்றும், மணம் உண்டாகும் இடத்தை மண்<br />
என்றும் அறிந்து கொள்ள வேண்டும்.<br />
இன்றைய விஞ்ஞானிகள் கூறும் 92 வகையான<br />
மூலக்கூறு(Elements)களும் இவ்வைந்து<br />
பூதங்களில் அடங்கியுள்ளன.<br />
எழுவகை பிறப்பு எப்படி உண்டாயிற்று?<br />
பூமி என்பது ஐந்து பூதங்களின் ஈர்ப்புச் சக்தி<br />
கொண்ட கோள்.அது ஐந்துவிதமான<br />
அணுக்கூட்டத்தின் தொகுப்பு.இந்த அணு<br />
தொகுப்பு பூமி அதிலுள்ள அணுக்களுக்குத்<br />
தானே முளைக்கின்ற செயல்படுகின்ற ஆற்றல்<br />
இல்லை.<br />
இது செயல்படுவதற்க்கு சூரியனின் ஒளிசக்தி<br />
ஆற்றல் தேவைப்படுகிறது.சூரியகதிர்களின்<br />
வீச்சில் பூமியில் ஜீவராசிகள் உண்டாயின.<br />
எழுவகை பிறப்பு உண்டான<br />
விபரமானது.ஜடப்பொருளான பஞ்சபூதம்<br />
ஐந்தும் அதோடு சூரியன்,சந்திரன் என்கிற<br />
இரண்டும் சேர்ந்து ஏழு ஆற்றல்களும்<br />
ஏழுவகையான பிறப்பை உண்டாக்கின.<br />
இந்த ஏழுவகைப் பிறப்பு ஒரே மாதிரியாகப்<br />
பிறக்காமல் ஏன் மனிதன், தேவர்,<br />
தாவரம்,விலங்கு,ஊர்வன,பறப்பன,நீர்வாழ்வன<br />
என்ற வேறுபாடோடு தோன்றியது எப்படி?<br />
என்று ஆய்வு செய்கின்ற போது<br />
சூரியனானது தன்னுடைய சூரியக்<br />
குடும்பத்தில் உள்ள ஏழு ஆற்றல்களை<br />
கிரகித்தது பூமிக்கு அனுப்புவதால் அந்த<br />
ஒளிக்கதிர்கள் பூமியில் படும்போது<br />
பூமியில் உள்ள பஞ்சபூதத் தத்துவ<br />
அணுக்களின் ஈர்ப்பு தன்மைகேற்ப<br />
ஏழுவகையான பிறப்பாக தோன்றியது.<br />
இந்த ஏழுவகை பிறப்பானது பஞ்சபூத<br />
ஆற்றலும்,சூரியக் குடும்பங்களின் ஆற்றலும்<br />
ஒருங்கிணைந்து அந்த அணுக்களின் ஈர்ப்பு<br />
தன்மையால் உண்டான தன்மைக்கு ஏற்ப<br />
பிறப்பு பேதங்கள் உண்டாயின.<br />
பிறப்பு பேதங்கள் எனப்படுவதுமனிதன்,<br />
தேவர், தாவரம்,விலங்கு,ஊர்வன,பறப்பன,நீ<br />
ர்வாழ்வன என்ற பேதம் உண்டாயின.<br />
பிண்டத்தில் உடலின் இயக்கம் எப்படி<br />
செயல்படுகிறது?<br />
பூமியில் எப்படி நீர், நிலம், நெருப்பு, காற்று,<br />
ஆகாயம் ஆகிய ஐந்து சக்திகள் ஒன்றை ஒன்று<br />
ஈர்த்து பூமியாகி செயல்படுகிறதோ அதே<br />
போல் இந்த உடலில் கீழ்கண்டவாறு பஞ்சபூத<br />
சக்திகள் செயல்படுகின்றன.<br />
1) ஆகாயம் – காமம், குரோதம், மோகம், மதம்<br />
, மாச்சர்யம்<br />
2) காற்று – இருத்தல், நடத்தல், படுத்தல்,<br />
எழுதல் , ஓடல்<br />
3) நெருப்பு – பயம், சோம்பல் , பசி , உறக்கம்,<br />
புணர்ச்சி<br />
4) நீர் – உதிரம், மூளை , உமிழ்நீர், கொழுப்பு,<br />
சுக்கிலம்5) மண் – மயிர், தோல், நரம்பு , எலும்பு,<br />
தசை<br />
பூமியின் இயக்கத்திற்கு இரவு,பகல் மாறி<br />
மாறி சூரிய சந்திரர்கள் செயல்படுவதால்<br />
பூமியின் செயலும், ஜீவராசிகளும்<br />
வாழ்கின்றன .<br />
அதே போல மனித உடலான பிண்டத்திலும்<br />
இடகலை என்கிற சூரியகலையும், பிங்கலை<br />
என்கிற சந்திர கலையும் மாறி மாறி சுவாசம்<br />
நடைபெறுவதால் மனித பிண்டம்<br />
இயங்குகிறது.<br />
பூமியில் 12 மணி நேரத்திற்கு ஒருமுறை<br />
இரவும் பகலும் மாறி மாறி<br />
செயல்படுவதுபோல் இந்த மனித உடலில்<br />
சூரியகலை, சந்திரகலை, சுவாசம், இரண்டு<br />
மணி நேரத்திற்கு ஒரு முறை மாறி மாறி<br />
செயல்படும்.<br />
ஆகவே மேற்கண்ட விளக்கத்தின் மூலம் எந்த<br />
சூரிய, சந்திரன் ஆற்றல் பூமியை<br />
இயக்குகிறதோஅதே ஆற்றல்தான் இந்த மனித<br />
உடலையும் இயக்குகிறது என்பதைப் புரிந்து<br />
கொள்ளலாம்.<br />
பிண்டத்தில் (உடலில் ) நவகிரக செயல்பாடு<br />
:-<br />
பூமி என்பது பிண்டம். பூமிக்கு அண்டம்<br />
சூரியக் குடும்பம் என்கிற நவகோட்கள்.<br />
அதேபோல் மனித உடலில் தலைக்கு<br />
கீழ்ப்பகுதி பிண்டம் தலைப்பகுதி<br />
அண்டமாகிறது.<br />
அண்டத்தில் எழு கிரகம் செயல்படுகின்றன.<br />
அதேபோல் பிண்டத்தில் அதாவது தலைப்<br />
பகுதியில் ஏழு துவாரமும் செயல்படுகிறது.<br />
கிரகம் என்றால் என்ன ?<br />
கிரகம் என்றால் கிரக்கின்ற பொருள்<br />
என்பதாகும். நமது மனித உடலில்<br />
தலைப்பகுதியில் உள்ள கண் -2 , காது -2 ,<br />
மூக்கு துவாரம் -2, வாய் -1 ஆக இந்த ஏழு<br />
துவாரங்களும் கிரகிக்கின்ற தன்மையுள்ளவை.<br />
கண் காட்சியை கிரகிக்கிறது. வாய் சுவையை<br />
கிரகிக்கிறது. கிரகிக்கின்ற தன்மை அண்டத்தில்<br />
உள்ளது போல் பிண்டத்திலும் நடைபெறுவது<br />
நமக்குத் தெளிவாகப் புரிகிறது.<br />
அடுத்த நிழல் கிரகம் என்று ஏன் ? ராகு , கேது<br />
என்று இரண்டு கிரகத்தை வைத்தார்கள் ?<br />
ஆய்வு செய்யும்போது பொது நியதிப் படி<br />
ஒரு பொருளை கிரகிக்கின்றபோது மற்றொரு<br />
புறம் வெளியே தள்ளுகின்ற செயலும்<br />
நடைபெற வேண்டும் என்பது விதி.<br />
அந்த அடிபடையிலே தலைப்பகுதியில்<br />
கிரகித்து அனுபவித்த அத்தனையும், சுக்கிலம்<br />
, மலம் , மூலமாக மனித உடல்<br />
வெளியேறுகிறது.<br />
எதற்காக ராகு என்றால் விஷம் என்று பாம்பின்<br />
தலையும் , கேது என்றால் பாம்பின் உடலும்<br />
வைத்தார்கள் ? என்ற கேள்வி எழுவது<br />
இயல்பு.<br />
பாம்பின் தலை என்றால் விஷத்தைக்<br />
குறிப்பிடுகிறது. மனித உடலில் விஷத்தை<br />
என்பது மலத்தை என்பது பொருள். மலத்தை<br />
தள்ளும் இடமே விஷமாகும்.<br />
அதைதான் மனித உடலில் எருவாயை ராகு<br />
என்றனர். அதேபோல் கேது என்பது பாம்பின்<br />
உடலைக் குறிப்பிட்டர்கள். உடல் என்பது<br />
படைப்புக்கு உரியது.<br />
படைப்புக்கு காரணமாவது சுக்கிலம்<br />
என்பதால் சுக்கில துவாரத்தை மனித உடலில்<br />
கேது பாகம் என்றனர். தவிர படைப்பதற்க்கு<br />
உரியவையாக இருப்பதால் ஞானகாரகன்<br />
என்றும் கூறினர்.<br />
மேற்சொன்ன சூரியக் குடும்பமாகிய ஏழு<br />
கிரகங்களும் வானவில் காட்சியில் ஏழு<br />
நிறங்களாகக் காட்சி தந்த அந்த ஏழு நிறங்களே<br />
நமது மனித உடலில் ஏழு ஆதார பீடத்திலும்<br />
காட்சியளிகிறது.<br />
அதேபோல் ஏழு ஆற்றல்களே ஏழு ஆதாரமாக<br />
செயல்படுகிறது. இந்த ஏழு சக்திகளும் நமது<br />
உடலிலே சப்த தாதுக்களாகச்<br />
செயல்படுகின்றன.<br />
இப்படி ஒவ்வொரு செயலும் எப்படி<br />
நடைபெறுகின்றன ?<br />
என்பதை துல்லியமாக கனகிட்டோமானால்<br />
அண்டத்தில் இல்லாதது பிண்டத்தில் இல்லை.<br />
பிண்டத்தில் இல்லாதது அண்டத்தில் இல்லை<br />
என்றே தெளிவாக உணரலாம்.<br />
கர்மவினை என்பது உண்மையா?<br />
விஞ்ஞானிகள் பிரபஞ்சத்தின் மூலத்தை,<br />
மூலசக்தியை ஆராய எத்தனை எத்தனைக்<br />
குழப்பங்கள், கணிப்பு, கருவிகள் என்று<br />
தேடுகிறான், தேடுகிறான் தேடிக் கொண்டே<br />
இருக்கிறான். ஆனால் சித்தன் அதைக்<br />
கண்டுபிடித்து சொல்லி உள்ளான். அதை ஏன்<br />
ஏற்க யோசிக்கிறார்கள் விஞ்ஞானிகள்?<br />
சுப்பிரமணியர் ஞானம் என்ற நூலில்<br />
“ ஆதியிலே பராபரத்திற் பிறந்த சத்தம் ”<br />
என்று இந்த பிரபஞ்சம் முதன் முதலில்<br />
(ஜோதி) கனலில் இருந்து கொப்பளித்து வந்த<br />
கனலே. குளிரும்போது அது அணுவாக மாறி<br />
இப்பிரபஞ்சம் உண்டாவதற்கு காரணமானது<br />
என்று அன்றே கூறியுள்ளார்கள்.<br />
ஆக முதலிலே பிறந்தது “சத்தம்”. சத்தம்<br />
என்றால் ஒலி என்று பொருள்.<br />
ஒலி உண்டாகும் இடத்திலே ஒளியும்<br />
உண்டாகும். இது இயற்கை.<br />
இப்பிரபஞ்சத் தொடக்கதிற்கு அடிப்படையான<br />
முதல் காரணமாக இருப்பது ஒளியும்,<br />
ஒலியும் தான்.<br />
அந்த அடிப்படையில் பஞ்சபூத பூமியின்<br />
இயக்கத்திற்கு காரணமாக இருப்பது சந்திரன்,<br />
சூரியன் என்கிற ஒளியும், ஒலியும் தான்.<br />
மனிதனுக்கும் சூரியகலை, சந்திரகலை<br />
இயங்குகிறது.<br />
அவ்வளவு ஏன் ? இன்றைய விஞ்ஞானத்தால்<br />
கண்டுபிடிக்கப்பட்ட இயந்திரங்கள்,<br />
ஜடப்பொருள்கள் இயங்குவதற்கு ஒலி, ஒளி<br />
இல்லை என்றால் நடைபெறுமா? நிச்சயமாக<br />
நடைபெறாது.<br />
எரிபொருளால் ஒலி, ஒளி உண்டாக்கத்தானே<br />
இயந்திரங்கள் இயங்குகின்றன. ஆக ஒலி, ஒளி,<br />
அதன் அதிர்வு இம்மூன்றும் சேர்ந்ததுதான்<br />
மூலசக்தி. அதைத்தான் சித்தர்கள் அ, உ, ம<br />
“ஓம்” என்று பெயர் வைத்து, எல்லா<br />
இயக்கங்களுக்கும் ஓம் என்ற மூல சக்திதான்<br />
காரணம் என்றனர்.<br />
இது விஞ்ஞானமில்லையா? இது என்ன<br />
மூடத்தனமான கொள்கையா ? சிந்தியுங்கள்<br />
அன்பர்களே…<br />
சிலை வடிப்பவன் எவனொருவன் சிலை<br />
முழுவதும் வடித்து சின்னஞ்சிறு உளிகளால்<br />
நெளிவு சுளிவு அனைத்தையும் வைத்து<br />
சிலை முடிகின்றானோ, அவனால்தான் அந்த<br />
சிலையின் அத்தனை ஆற்றலையும் உணர<br />
முடியும், கூறமுடியும்.<br />
அதே போல இந்த பிரபஞ்சக் கணக்கீட்டை<br />
கண்டுபிடித்து பிரபஞ்சத்திற்கும்,<br />
மனிதனுக்கும், ஜீவராசிகள், தாவரங்கள்<br />
அத்தனைக்கும் உரிய ஒப்பீடு தத்துவங்களை<br />
அறிந்து, இந்த பிரபஞ்சம் இதனை யுகங்களில்<br />
அழியும் என்று எவன் சொல்கிறானோ?<br />
அவனே அந்தக் கொள்கையில் முழு<br />
உண்மையை அறிந்தவனாவான்.<br />
ஆகவே பிரபஞ்சத்தை கணக்கிட்டு ஆயுள்<br />
நிர்ணயம் செய்து பிரபஞ்சம் அழிவதையும்,<br />
கணக்கிட்டவன் சித்தன். சித்தர்கள் சொன்ன<br />
எந்த உண்மையும் காலத்தால் அழிக்க<br />
முடியாதது.<br />
சமீபத்தில் கிடைத்த செய்தி. மூளையின்<br />
பதிவுகளை கண்டுபிடித்த கருவியானது,<br />
மூளையில் இன்னொரு அதிர்வலைகள்<br />
இருக்கின்றன என்பதை கருவி காட்டியது, அது<br />
என்ன? என்ற கேள்விக்கு, விஞ்ஞானிகள்<br />
கூறுவது கர்மவினை அதிர்வு கோடு<br />
(Intronce) என்றார்களாம்.<br />
ஆகவே கர்மவினை என்பதை என்றைக்கு<br />
ஒத்துக் கொண்டானோ! அப்போதே சித்தர்கள்<br />
சொல்லியதை ஒத்துக் கொண்டாக வேண்டும்!<br />
முன்பிறப்பு, அடுத்த பிறப்பு உண்டு என்பதை<br />
ஒத்துக் கொண்டாக வேண்டும்.<br />
கர்மவினை என்பதே முற்பிறப்பின் தொடர்<br />
என்பதையும் புரிந்து கொள்ள வேண்டும்.<br />
“ஓம்” என்ற மூலசக்தியே இந்த பிரபஞ்ச<br />
இயக்கப் பேரியக்க மண்டலத்தின் மூலசக்தி<br />
என்பதை கோரக்கர் முதல் கொங்கணர்,<br />
அகத்தியர், ஏன் அனைத்து சித்தர்களும் ஒத்துக்<br />
கொள்கிறார்கள்.<br />
“ஓம்” தான் மூலசக்தி என்பதில் எந்த<br />
சித்தருக்கும், ஞானிகளுக்கும் வேறுபாடு<br />
இல்லை. ஏனென்றால் அவர்கள் அத்தனை<br />
பேரும் உண்மையை கண்டவர்கள்.<br />
ஆனால் இன்றைய விஞ்ஞானிகள் மத்தியில்<br />
ஏன் இத்தனை கருத்து வேறுபாடு? ஆய்வு,<br />
ஆய்வுப் பொருள் எல்லாம் என்ற கேள்விக்கு<br />
விஞ்ஞான மனிதனுடைய அறிவுக்கு<br />
எட்டியவை, அவ்வளவுதான்.<br />
எத்தனைத்தான் கருவி கரணாதிகள் வைத்துச்<br />
செய்தாலும், இவன் அறிவின் எல்லைக்<br />
கோட்டின் அளவின் அடிப்படையிலேதான்<br />
அந்த கருவிகள் நிர்மாணிக்கப்படும்.<br />
மனித அறிவுக்கு உண்டான கருவி<br />
அதற்கேற்றாற் போல் அந்த அளவிலேயே<br />
நமக்கு பதில் சொல்லும். ஆகவே விஞ்ஞானம்<br />
முழுமைநிலை பெறவில்லை என்பதே நமக்கு<br />
கிடைக்கும் பதில்.<br />
பிண்டம் பற்றிய சிந்தனை இது:<br />
.......................................அண்டத்தில் உள்ளது பிண்டத்தில் உள்ளது‘<br />
இவ்வாக்கியத்தின் பொருள் உலகத்தில் எது<br />
இருக்கின்றதோ, அது நமது உடலிலும்<br />
இருக்கின்றது என்பதே.<br />
அண்டம் -- உலகம்<br />
பிண்டம் -- உடல்<br />
இறை நம்பிக்கையாளர்களின் கூற்றின் படி<br />
இறைவன், உலகை பஞ்ச பூதங்களைக்<br />
கொண்டு உருவாக்கினான். அறிவியலாளர்களின்<br />
கூற்றின் படி, உலகம் பஞ்ச பூதங்களால்<br />
உருவாகி இருக்கின்றது.<br />
பஞ்ச பூதங்களைக் கொண்டு உலகம்<br />
இருக்கின்றது என்பதில் அவர்களுக்கு மாற்றுக்<br />
கருத்துக்கள் இல்லை.<br />
அப்பஞ்ச பூதங்கள் எனப்படுபவை,<br />
நீர்<br />
நெருப்பு<br />
காற்று<br />
நிலம்<br />
ஆகாயம்<br />
ஆகிய ஐந்தாகும்.<br />
இப்பொழுது அண்டத்தில் உள்ளது பிண்டத்தில்<br />
உள்ளது என்கின்றார்களே அது சரியா?<br />
நெருப்பு - நம்முடைய உடல் ஒரு குறிப்பிட்ட<br />
அளவு சூட்டுடனேயே இருக்க வேண்டி<br />
இருக்கின்றது. வெப்பம் கூடினாலோ<br />
குறைந்தாலோ (காய்ச்சல் அல்லது நோய்கள்)<br />
உடலுக்கு தீங்கு வந்து விடுகின்றது.<br />
வெப்பமே இல்லாத உடல் சடலமாக மாறி<br />
விடுகின்றது. எனவே உடல் இயங்க வெப்பம்<br />
தேவைப் படுகின்றது. அதாவது நெருப்பு. அது<br />
உடலில் இருக்கின்றது.<br />
நீர் - திரவங்கள் நமது உடலில் இருக்கின்றன.<br />
அவைகள் இல்லாது போனால் உடலின்<br />
இயக்கம் நின்று விடும்.உடல் பழுதடைந்து<br />
அழிந்து விடும். எனவே நீரும் உடலின்<br />
இயக்கத்திற்கு இன்றியமையாது இருக்கின்றது.<br />
காற்று - உடல் இயங்க காற்று மிக<br />
முக்கியமானதொன்றாகும். காற்று<br />
இல்லையெனில் சுவாசிக்க முடியாது.<br />
சுவாசிக்காது உடலால் இயங்க முடியாது.<br />
ஆகாயம் - வெற்றிடம். உடலினுள்<br />
வெற்றிடங்கள் இருக்கின்றன...சுவாசப் பைகள்<br />
போன்றவைகள் உதாரணத்திற்கு.<br />
வெற்றிடங்களும் உடலின் இயக்கத்திற்கும்<br />
அமைப்பிற்கும் இன்றியமையாது இருக்கின்றன.<br />
நிலம் - உலகம் நிலத்தால் அமைந்து<br />
இருப்பதனைப் போல மனித உடலும்<br />
நிலத்தைப் போலவே அமைந்து இருக்கின்றது.<br />
உயிர் இருக்கும் வரை இயங்கிக் கொண்டு<br />
இருக்கும் உடல், உயிர் பிரிந்தப் பின்னர் சில<br />
நாட்களுக்குள் மண்ணோடு மண்ணாகி<br />
விடுகின்றது. அதாவது நிலம் நிலத்தைச்<br />
சேர்ந்து விடுகின்றது.<br />
இதன் மூலம் உலகம் எதனைக் கொண்டு<br />
வடிவமைக்கப்பட்டு இருக்கின்றதோ அவற்றை<br />
வைத்தே தான் உடலும் வடிவமைக்கப்பட்ட<br />
ு இருக்கின்றது என்பது தெரிகின்றது.<br />
அதாவது,<br />
உலகம் - பேருடல் - பெரிய உடல்<br />
மனித உடல் - சிற்றுடல் - சிறிய உடல்<br />
அண்டத்தில் உள்ள உலகங்கள் எல்லாம்<br />
பிண்டத்தில் இருக்கிறது என்று அபிதான<br />
சிந்தாமணி பட்டியலிட்டிருக்கிறது அவை :<br />
....................................................................<br />
அண்டத்தில் உள்ளவை எல்லாம் பிண்டத்தில்<br />
உண்டு என்பது புராண உண்மைகளுள் ஒன்று.<br />
எவ்வகையெனின்; உள்ளங்கால்- அதலம்,<br />
கணைக்கால்- விதலம், முழந்தாள் -சுதலம்,<br />
அதற்கு மேல் -நிதலம், ஊருதலாதலம்,<br />
குஹ்யம்- ரசாதலம், இடை -பாதாளம், நாபி -<br />
பூலோகம், வயிறு -புவர் லோகம், இருதயம்-<br />
சுவர்க்கம், தோள் -மகாலோகம், முகம்-<br />
ஜனலோகம், நெற்றி-போலோகம், சிரம் -<br />
சத்தியலோகம், திரிகோணம் -மேரு,<br />
கீழ்க்கோணம் -மந்தரம், அக்கோணத்துக்கு<br />
வலப்பக்கம்- கைலை, இடப்பக்கம் -இமயம்,<br />
மேற்பக்கம் -நிஷதம், தென்பக்கம் -கந்தமாதனம்,<br />
இடக்கையின் உள்ளங்கைகளில் உள்ள ரேகைகள்<br />
-வருண பருவதம், எலும்பு -நாவலந் தீவு,<br />
மேஷத் -சாகத்தீவு, தசை- குசத்தீவு, நரம்பு-<br />
கிரௌஞ்சத் தீவு, தொக்குச் -சான்மலித் தீவு,<br />
மயிர்த்திரள் -பிலக்ஷத்தீவு, உகிர்<br />
புஷ்கரத்தீவு, மூத்திரம்- உப்புக்கடல், நீர்-<br />
பாற்கடல், கபம் -சுராக்கடல், மச்சை -<br />
நெய்க்கடல், வாய் நீர்- கருப்பங்கடல், இரத்தம் -<br />
தயிர்க்கடல், வாயில் உண்டாம் மதுரப்புனல் -<br />
சுத்தோதகம், சரீரத்தில் இரண்டு சக்கரங்கள்<br />
உள்ளன. அவற்றில் நாதசக்கரத்தில்-<br />
சூரியனும், பிந்து சக்கரத்தில்- சந்திரனும்<br />
நேத்திரங்களும் -அங்காரகனும், இருதயத்தில் -<br />
புதனும், வாக்கில் -குருவும், சுக்கிலத்தில் -<br />
சுக்கிரனும், நாபியில் -சனியும், முகத்தில் -<br />
ராகுவும், காலில் -கேதுவும் இருக்கின்றனர் -<br />
என்கிறது அபிதான சிந்தாமணி.<br />
............................................................<br />
..................................திருமூலர் கருத்து:<br />
வாயுவு மேலே மருவிற்று ஆகாசம்<br />
காயுமோர் அண்டத்தில் கண்டகுறிப்பிது<br />
பாயுமோர் ஆயிரத் தெட்டுக்கும் இப்படி<br />
பாயுமோர் பிண்டம் பரிந்துநீ பார்த்திடே.<br />
திருமூலர் – 476<br />
இவ்வண்டத்தின் மேல் பூமியும்<br />
பூமியின்மேல் நீரும், நீரின்மேல்<br />
அக்கினியும்,அக்கினியின்மேல்<br />
வாயுவும்,வாயுவின் மேல் ஆகாசமும்<br />
நிற்கிறது. இது ஒரு அண்டத்தை<br />
பற்றியதாகும். இதுபோல் ஆயிரத்தெட்டு<br />
அண்டங்கள் உள்ளன என்று கூறுகிறார். இனி<br />
பிண்ட உற்பத்தியை கேள் என்று<br />
பார்த்திடு மாங்கிக்ஷம் பரித்த பிருதிவி<br />
வார்த்திடு ரத்தம் வழலையில் நீராச்சு<br />
தோற்றிடு வாய்வு சுழண்டேறிப் புக்கிற்று<br />
காற்றோடு தீயுங் கலந்தே விரும்பிற்றே.<br />
திருமூலர் – 477<br />
இவ்வுடலில் உள்ள மாமிசங்கள் பூமியின்<br />
தத்துவமாகும், சளி,ரத்தம் நீரின்<br />
தத்துவமாகும், உடலை சூடு உண்டாக்குவது<br />
அக்கினியின் தத்துவமாகும்,<br />
நாம் விடும் மூச்சு வாயுவின் தத்துவமாகும்.<br />
நம் உடலில் அக்கினியானது வாயுவுடன்<br />
கூடியே உள்ளே செல்கிறது.<br />
கலந்தே செவிக்குள்ளே கண்டு துவாதச<br />
மலந்தே இடையின் ரண்டாச்சு வாரிதி<br />
குலந்தே சுழிமுனை கூடிற்று மேருவாய்த்<br />
தலந்தே பிண்டத்தில் சார்ந்த முறையாச்சே.<br />
திருமூலர் – 478<br />
அதாவது அண்டமான வெளிமண்டலங்கள்<br />
பிண்டமான நம் உடலிலும் உள்ளது என்பதை<br />
கூறுகிறார்.<br />
பூமி – மாமிசமாகவும்<br />
நீர் – இரத்தமாகவும்<br />
நெருப்பு – நம் உடல் சூடாகவும்.<br />
ஆகாயம் – கேட்டுக்கும் சக்தியாகவும்.<br />
கடல் – வியர்வையாகவும், சிறுநீராகவும்<br />
மாகாமேரு (பூமியின் மேற்ப்பக்கம்) -<br />
கழுமுனையாகவும்<br />
..................................................<br />
வள்ளலார் கருத்து:<br />
அண்டமும் பிண்டமும் கடவுளும் !<br />
அண்டம் எல்லாம் பிண்டம் எல்லாம் உயிர்கள்<br />
எல்லாம் பொருள்கள்<br />
ஆன வெலாம் இடங்கள் எல்லாம் நீக்கமற<br />
நிறைந்தே<br />
கொண்டவெலாங் கொண்ட வெலாங் கொண்டு<br />
கொண்டு மேலும்<br />
கொள்வதற்கே இடங் கொடுத்துக் கொண்டு<br />
சலிப்பின்றிக்<br />
கண்டமெலாங் கடந்து நின்றே அகண்டமதாய்<br />
அதுவுங்<br />
கடந்த வெளியாய் அதுவும் கடந்த தனி<br />
வெளியாம்<br />
ஒண்டகு சிற்றம்பலத்தே யெல்லாம்<br />
வல்லவராய்<br />
ஓங்குகின்ற தனிக்கடவுள் ஒருவர் உண்டே<br />
கண்டீர் !<br />
கிளக்கின்ற மறை அளவை ஆகமப் பேரளவைக்<br />
கிளத்திடு மெய்ச் சாதனமாம் அளவை அறிவு<br />
அளவை<br />
விளக்கும் இந்த அளவைகளைக் கொண்டு<br />
நெடுங்காலம்<br />
மேலவர்கள் அளந்து அளந்து மெலிகின்றார்<br />
ஆங்கே<br />
அளக்கின்ற கருவிகள் எல்லாம் தேய்ந்திடக்<br />
கண்டாரேல்<br />
அன்றி ஒருவாறேனும் அளவு கண்டார்<br />
இலையே<br />
துளக்கமுறு சிற்றறிவால் ஒருவாறு என்று<br />
உரைத்தேன்<br />
சொன்ன வெளிவரை யேனும் துணித்து<br />
அளக்கப் படுமோ !<br />
நாம் வாழும் அண்டம் போல் பல கோடி<br />
அண்டங்கள் உள்ளன .அதில் உயிர்கள், உயிர்கள்<br />
வாழும் உடம்புகள்,அதற்கு தேவையான<br />
பொருள்கள்,அதற்கு உண்டான<br />
இடங்கள்,எல்லாம் இடைவெளி இல்லாமல்<br />
நிறைந்து கொண்டும் மேலும் மேலும் விரிந்து<br />
கொண்டும்,இடம் கொடுத்துக் கொண்டும்<br />
சலிப்பு இல்லாமல் கடந்து நின்றே செயல்<br />
பட்டுக் கொண்டே இருக்கும் ஒரு மெய்ப்<br />
பொருள் உண்டு.அது பலகோடி<br />
அண்டங்களிலும் பலகோடி வெளிகளில் உள்ள<br />
எல்லா அணுக்களிலும், உள் இருந்து செயல்<br />
பட்டுக் கொண்டு இருக்கின்றது.அது இயங்கும்<br />
இயக்கம் இடமானது அருள் பெரு<br />
வெளியில்,எல்லா அண்டங்களையும் தன்னுள்<br />
அடக்கிக் கொண்டு செயல்படும் சிற்றம்பலம்<br />
என்னும் இடத்தில் எல்லாம் வல்லவராய் ,ஓங்கி<br />
இடைவிடாது செயலாற்றிக் கொண்டு<br />
இருக்கும் தனிக் கடவுள் ஒருவரே !<br />
அருட்பெருஞ் ஜோதி ஆண்டவர் என்னும் ஒளிக்<br />
கடவுளாகும் என்கிறார் வள்ளலார்.👁👃</div>
SASIKALA DHANASEKARANhttp://www.blogger.com/profile/11716959431566964164noreply@blogger.com2tag:blogger.com,1999:blog-2850277381022175263.post-61038609478830367012020-05-19T00:02:00.000+05:302020-05-19T00:02:52.727+05:30அம்மா<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<span style="background-color: white; color: #37404e; font-family: "helvetica" , "arial" , "lucida grande" , "tahoma" , "verdana" , "arial" , sans-serif; font-size: 14px; line-height: 20px;">அம்மாவின் அன்புகலந்த </span><br />
<span style="background-color: white; color: #37404e; font-family: "helvetica" , "arial" , "lucida grande" , "tahoma" , "verdana" , "arial" , sans-serif; font-size: 14px; line-height: 20px;">உருண்டை சோறு </span><br />
<span style="background-color: white; color: #37404e; font-family: "helvetica" , "arial" , "lucida grande" , "tahoma" , "verdana" , "arial" , sans-serif; font-size: 14px; line-height: 20px;">உப்பில்லாமல் இருந்தாலும் </span><br />
<span style="background-color: white; color: #37404e; font-family: "helvetica" , "arial" , "lucida grande" , "tahoma" , "verdana" , "arial" , sans-serif; font-size: 14px; line-height: 20px;">உணர்வு கலந்து இருக்கும் </span><br />
<span style="background-color: white; color: #37404e; font-family: "helvetica" , "arial" , "lucida grande" , "tahoma" , "verdana" , "arial" , sans-serif; font-size: 14px; line-height: 20px;">சுவை இல்லாமல் இருந்தாலும் </span><br />
<span style="background-color: white; color: #37404e; font-family: "helvetica" , "arial" , "lucida grande" , "tahoma" , "verdana" , "arial" , sans-serif; font-size: 14px; line-height: 20px;">நினைவு நீங்காமல் இருக்கும் அம்மாவின் </span><br />
<span style="background-color: white; color: #37404e; font-family: "helvetica" , "arial" , "lucida grande" , "tahoma" , "verdana" , "arial" , sans-serif; font-size: 14px; line-height: 20px;">உருட்டி தரும் சோறு ....<span id="goog_1100280104"></span><span id="goog_1100280105"></span></span></div>
SASIKALA DHANASEKARANhttp://www.blogger.com/profile/11716959431566964164noreply@blogger.com4tag:blogger.com,1999:blog-2850277381022175263.post-74910976670452305202020-05-18T13:43:00.001+05:302020-05-18T13:43:20.600+05:30பர்வதமலை <div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjWoA1RO7pMHcU-G2cYoyeR1Ct6ZsaqhJMUbl0ZY5aVR8ACVx4tYFZ6UcDX0eC8L9Jrju31B4u0ejAZ_Zt45BdT-MwD5C25yy3p2ddit5F6ERDjbQpMJ0iaKIaFQCPWV1dDm7C9RWjEi1PY/s1600/1589789587884640-0.png" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;">
<img border="0" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjWoA1RO7pMHcU-G2cYoyeR1Ct6ZsaqhJMUbl0ZY5aVR8ACVx4tYFZ6UcDX0eC8L9Jrju31B4u0ejAZ_Zt45BdT-MwD5C25yy3p2ddit5F6ERDjbQpMJ0iaKIaFQCPWV1dDm7C9RWjEi1PY/s1600/1589789587884640-0.png" width="400">
</a>
</div><div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEj60uSPNTRnZlNVjB293Ro2Cb9JpKrgq1XNLcXvmjgo7K_S0zSAZtick1kCUEWAkyOOsl_iJ0Am0w_xnhjqTMirewuhMAhxGgt2pl5j-vZAKKvfTHRsDl_xrL-sabKEHOu0aRbeiA6EpIEK/s1600/1589789575419218-1.png" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;">
<img border="0" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEj60uSPNTRnZlNVjB293Ro2Cb9JpKrgq1XNLcXvmjgo7K_S0zSAZtick1kCUEWAkyOOsl_iJ0Am0w_xnhjqTMirewuhMAhxGgt2pl5j-vZAKKvfTHRsDl_xrL-sabKEHOu0aRbeiA6EpIEK/s1600/1589789575419218-1.png" width="400">
</a>
</div><div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgWpjED93b7bGnrjy6c79AOzfBxN0CCyFI_qjai47Oecon1-L-5Cp-HKBewV11f1EiYeTNB7Es51QHLRcyq_eZ-ZIXn80ynMruUOZpDHKx3sRzoUjXhnLaHvF1wn8JKDXNGFOD0QGkYJ6By/s1600/1589789567021918-2.png" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;">
<img border="0" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgWpjED93b7bGnrjy6c79AOzfBxN0CCyFI_qjai47Oecon1-L-5Cp-HKBewV11f1EiYeTNB7Es51QHLRcyq_eZ-ZIXn80ynMruUOZpDHKx3sRzoUjXhnLaHvF1wn8JKDXNGFOD0QGkYJ6By/s1600/1589789567021918-2.png" width="400">
</a>
</div><div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhX9jcVfdezb5eS7lWfWl3Qz_5NK_QCu7uougqkqC_-S0SWe9FMXnXsAtfw5cyoMkBQM-0P6WtiPw16HLn5k6O3YpoSEc5yZiT7q0ZsWC7emEPH2hmB-nzLkdYTeAr97ulh81CHrGFXRVUk/s1600/1589789559839520-3.png" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;">
<img border="0" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhX9jcVfdezb5eS7lWfWl3Qz_5NK_QCu7uougqkqC_-S0SWe9FMXnXsAtfw5cyoMkBQM-0P6WtiPw16HLn5k6O3YpoSEc5yZiT7q0ZsWC7emEPH2hmB-nzLkdYTeAr97ulh81CHrGFXRVUk/s1600/1589789559839520-3.png" width="400">
</a>
</div><div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjYx0SvQo-RaTFE8yQ-dbk3mQ5kSAr6DaAFecY10FZ4H6rt8kfrIUSOoFzZ6ArpO7weQRDWw5NYb4IWsDqYRTyAuT_eLpcCR5-AQ72uan4vabF34eCFOIwbOr8WVpeOcAZAPJYXbkKQl0rq/s1600/1589789546694423-4.png" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;">
<img border="0" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjYx0SvQo-RaTFE8yQ-dbk3mQ5kSAr6DaAFecY10FZ4H6rt8kfrIUSOoFzZ6ArpO7weQRDWw5NYb4IWsDqYRTyAuT_eLpcCR5-AQ72uan4vabF34eCFOIwbOr8WVpeOcAZAPJYXbkKQl0rq/s1600/1589789546694423-4.png" width="400">
</a>
</div><div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjEU12nSoGtBepOJe3uL8FOQLl-dnHCTl-QmxfteeBt3H4LINw71u1Ex7Al-p-xDCfbM7bjBWEuJ-ycDwFIxTN1YqgvNPVaU84-n9rmvcM5DlsGl0omUKyLUu8I9XODaZARXG0IyqFFZKBX/s1600/1589789504888437-5.png" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;">
<img border="0" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjEU12nSoGtBepOJe3uL8FOQLl-dnHCTl-QmxfteeBt3H4LINw71u1Ex7Al-p-xDCfbM7bjBWEuJ-ycDwFIxTN1YqgvNPVaU84-n9rmvcM5DlsGl0omUKyLUu8I9XODaZARXG0IyqFFZKBX/s1600/1589789504888437-5.png" width="400">
</a>
</div><div><div>அதிசயத்தின் அடிப்படையில், இரவு அம்மன் கன்னத்தில் ஜோதி ஒளியைக் காணலாம்.</div><div>அம்மன் கருவறையிலிருந்து பின்நோக்கி செல்ல அம்மன் உயரமாக காட்சி தந்து நேரில்</div><div>வருவதுபோல் இருக்கும். சிவ பெருமானுக்கு கற்பூரம் ஏற்றி வெளியே நின்று கற்பூர</div><div>ஜோதியை நோக்கினால் ஜோதியில் நாகம், சூலம், உடுக்கை போன்ற பிம்பங்கள்</div><div>தோன்றுவதைக்காணலாம்</div><div><br></div><div>பர்வதமலை::</div><div><br></div><div>திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள இந்த மலையில் தான், ஈஸ்வரன் இமயத்தில் இருந்து</div><div>தென்பகுதியான தழிழகத்திற்கு வந்தபோது முதன் முதலாக காலடி வைத்த மலை</div><div>என்கிறார்கள்.</div><div><br></div><div>அமாவாசையிலும் கூட மலையின் கீழ்ப்பகுதி முதல் உச்சி வரை இரவில் இறைவனுடைய ஒளி</div><div>வழி காட்டுவது இங்கு மட்டும்தான். சித்தர்கள் வாழும் மலையான இதில் பல பேருக்கு</div><div>சித்தர்கள் காட்சி கொடுத்துள்ளார்கள்.</div><div><br></div><div>வட மாநிலங்களில் செய்வதுபோல இங்கும் அவரவரே இறைவனுக்கு அபிஷேகம் செய்வது பெரிய</div><div>பாக்கியம் ஆகும். இந்த பர்வதமலையை ஒரு முறை தரிசித்தால் பூமியிலுள்ள அனைத்து</div><div>சிவாலயங்களையும் தரிசித்த பலன் உண்டு என்கிறது தல புராணம்.</div><div><br></div><div>சிறப்புகள்:::</div><div><br></div><div>பருவத மலையில் தீபம் ஏற்றி ஒரு நாள் அபிஷேகம் செய்தால் 365 நாட்கள் பூஜை செய்த</div><div>பலன் கிடைக்கும். ஆஞ்சநேயர் இமயத்திலிருந்து சஞ்சீவிமலையைத் தூக்கி வரும்போது</div><div>விழுந்த ஒரு துளி தான் இந்த மலை என்றும் கூறுவதுண்டு.</div><div><br></div><div>இந்த மலை மொத்தம் ஏழு சடைப்பரிவுகளைக் கொண்டது. 3 ஆயிரம் அடி உயரமுள்ள</div><div>செங்குத்தான கடற்பாறைப்படி, தண்டவாளப்படி, ஏணிப்படி, ஆகாயப்படிகளைக் கொண்ட</div><div>அதிசய மலையான இதில் எப்போதும் மூலிகைக் காற்று வீசி தீராத நோயும் தீர்க்கும்.</div><div><br></div><div>இம்மலையில் நூற்றுக்கணக்கான குகைகளில் சித்தர்கள் இன்றும் வாழ்ந்து</div><div>வருகிறார்கள் என்று வரலாறு கூறுகிறது.. இத்தலத்திலுள்ள சிவனின்</div><div>கருவறையிலிருந்து கோயிலைச் சுற்றி நறுமண மலர்களின் வாசனையை நுகரலாம். அம்மன்</div><div>அழகு வேறெங்கும் காணமுடியாத பேரழகு.</div><div><br></div><div>இரவு அம்மன் கன்னத்தில் ஜோதி ஒளியைக் காணலாம். அம்மன் கருவறையிலிருந்து</div><div>பின்நோக்கி செல்ல அம்மன் உயரமாக காட்சி தந்து நேரில் வருவதுபோல் இருக்கும்.</div><div>மலை உச்சியில் ராட்சத திரிசூலம் உள்ளது. தலைக்கு மேலே மேகம் தவழ்ந்து போவதைக்</div><div>காணலாம்.</div><div><br></div><div>சித்தர்கள் கழுகாகத் திகழும் திருக்கழுக்குன்றம் போல் இங்கும் மூன்று கழுகுகள்</div><div>இந்தமலையை சுற்றிய வண்ணம் உள்ளதைக் காணலாம். பவுர்ணமி பூஜை இங்கு சிறப்பாக</div><div>நடக்கும் இத்தலத்திற்கு தமிழகத்தின் பல பகுதிகளில் இருந்தும் பக்தர்கள்</div><div>வருகின்றனர். மனித உடலில் 6 ஆதாரங்களைக் கடந்து குண்டலினி சக்தி உச்சியில்</div><div>உள்ள சதாசிவத்துடன் சேர்கிறது.</div><div><br></div><div>அது போல் நாமும் கடலாடி மெத்தகமலை, குமரி நெட்டுமலை, கடப்பாறை மலை, கணகச்சி</div><div>ஓடை மலை, புற்று மலை, கோவில் உள்ள மலை ஆகிய 6 மலைகளையும் கடந்து இங்குள்ள சிவ</div><div>சக்தியினை தரிசித்தால் ஞானம் பெறலாம். 48 பவுர்ணமி, அமாவாசை தொடர்ந்து இந்த</div><div>மலையில் உள்ள சிவ பார்வதியை தரிசித்தால் கைலாயத்தை தரிசித்த பலன் கிடைக்கும்</div><div>என்கிறது தல புராணம்.</div><div><br></div><div>சகல நோயும் தீர்க்கும் பாதாளச் சுனைத் தீர்த்தம் இங்கு உண்டு. 26 கி.மீ.,</div><div>சுற்றளவுள்ள இந்த மலையை பவுர்ணமி தினத்தில் ஒரு முறை கிரிவலம் வந்தால்</div><div>கைலாயத்தையே சுற்றி வந்த பலன் கிடைக்கும் என்பது ஐதீகம். கன்னியாகுமரி போன்று</div><div>இங்கும் சூரிய உதயம், அஸ்தமனம் காண கண்கொள்ளாக் காட்சியாக இருக்கும்.</div><div><br></div><div>அமாவாசையிலும் கூட மலையின் கீழ்ப்பகுதி முதல் உச்சி வரை இரவில் இறைவனுடைய ஒளி</div><div>வழி காட்டுவது இங்கு மட்டும்தான். இத்தலத்திலுள்ள சிவனின் கருவறையிலிருந்து</div><div>கோயிலைச் சுற்றி நறுமண மலர்களின் வாசனையை நுகரலாம். அம்மன் அழகு வேறெங்கும்</div><div>காணமுடியாத பேரழகு. இரவு அம்மன் கன்னத்தில் ஜோதி ஒளியைக் காணலாம்.</div><div><br></div><div>பின் குறிப்பு:</div><div><br></div><div>மலைக்கு வருபவர்கள் உணவு, தண்ணீர், போர்வை, டார்ச் லைட், தீபம் ஏற்றுவதற்கு</div><div>விளக்கு எண்ணெய், பூஜைப் பொருட்கள் வாங்கி வருவது முக்கியம். வாழ்வில் ஒரு</div><div>முறையேனும் மலைக்கு வந்து செல்வது பூர்வ ஜென்ம புண்ணியம். மலையிலுள்ள</div><div>சாதுக்களின் தரிசனம் பாப விமோசனம்.</div></div>SASIKALA DHANASEKARANhttp://www.blogger.com/profile/11716959431566964164noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-2850277381022175263.post-11755329902135921362020-05-18T09:53:00.001+05:302020-05-18T09:53:25.185+05:30இன்பத்தின் வகைகள்<div>*சிற்றின்பத்திற்கும் பேரின்பத்திற்கும் என்ன சாமி வித்தியாசம் ?</div><div><br></div><div>*சிற்றின்பம் - இது நிலையற்றது*</div><div><br></div><div>*பேரின்பம் - இது நிலையானது*</div><div><br></div><div>இந்த இரண்டிற்கும் உள்ள வேறுபாடுகள் பற்றிப் பார்ப்போம்</div><div><br></div><div> படைப்பினால் ஈர்க்கப் பட்டால் சிற்றின்பம். </div><div>படைத்தவனால் ஈர்க்கப் பட்டால் பேரின்பம்.</div><div><br></div><div>படைப்புகளை அனுபவித்தால் சிற்றின்பம். </div><div>படைப்புகளை ஆராதித்தால் பேரின்பம்.</div><div><br></div><div>படைப்புகளை படைப்புகளாய் கண்டால் சிற்றின்பம்.</div><div>படைப்புகளில் படைத்தவனைக் கண்டால் பேரின்பம்.</div><div><br></div><div>என்னால் தான் இந்த வாழ்க்கை எனில் சிற்றின்பம்.</div><div>இறைவனால் தான் இந்த வாழ்க்கை எனில் பேரின்பம்.</div><div><br></div><div> நான் இந்த உடல் என எண்ணினால் சிற்றின்பம்.</div><div>நான் இந்த உயிர் என எண்ணினால் பேரின்பம்.</div><div><br></div><div>அமைதி ஆனந்தம் சிறிதே பெற்று பின் இழந்தால் சிற்றின்பம்.</div><div>அமைதி ஆனந்தத்தை நித்தியமாகப் பெற்றால் பேரின்பம்.</div><div><br></div><div>செய்வதெல்லாம் தனக்காக என்றால் சிற்றின்பம்.</div><div>செய்வதெல்லாம் இறைவனுக்காக என்றால் பேரின்பம்.</div><div><br></div><div> செய்வது நான் என எண்ணினால் சிற்றின்பம்.</div><div>செய்வது இறைவன் என எண்ணினால் பேரின்பம்.</div><div><br></div><div>புறப் பொருட்களில் நிகழ்வில் சுகமுறுவது சிற்றின்பம்.</div><div>அகத்திலேயே நித்திய சுகம் பெறுவது பேரின்பம்.</div><div><br></div><div> இன்பத்தை அடைந்தாலும் மீண்டும் வேண்டுவது திருப்திஅடையாதது சிற்றின்பம்.</div><div>வேறு எதனையும் விரும்பாதது பூரணமானது பேரின்பம்.</div><div><br></div><div> நிரந்தர பேரின்பத்தை மறைப்பது சிற்றின்பம்.<br></div><div>நிலையற்ற சிற்றின்பத்திற்கு அப்பாற்பட்டது பேரின்பம்.</div><div><br></div><div>உடலோடு மனதை தொடர்புப் படுத்துவது சிற்றின்பம்.</div><div>உயிரோடு மனதை இணைப்பது பேரின்பம்.</div><div><br></div><div> இன்பம் என்கிற வடிவிலிருக்கும் துன்பமே சிற்றின்பம்.</div><div>துன்பம் போல் அறியப்பட்டு இன்பமாவது பேரின்பம்.</div><div><br></div><div>எங்கோ இருக்கிறான் இறைவன் எனில் சிற்றின்பம்.<br></div><div>எங்கும் இருக்கிறான் இறைவன் எனில் பேரின்பம்.</div><div><br></div><div> பலவீனம், நோய், துன்பம், மரணம் தருவது சிற்றின்பம்.</div><div>மரணமிலாப் பெருவாழ்வைத் தருவது பேரின்பம்.</div><div><br></div><div>பயம், சஞ்சலம், சந்தேகம், குற்ற உணர்வு தருவது சிற்றின்பம்.</div><div>பயமறியாதது, ஸ்திரமானது, தூய்மையானது பேரின்பம்.</div><div><br></div><div> சிறு உணர்ச்சிகளில் இன்பம் அடைவது சிற்றின்பம்.</div><div>எல்லையற்ற பிரம்மத்தில் கலப்பது பேரின்பம்.</div><div><br></div><div> பிறரை தனக்காக பயன்படுத்துவது சிற்றின்பம்.</div><div>தன்னை பிறருக்காக அர்ப்பணிப்பது பேரின்பம்.</div><div><br></div><div> அளவுடையது, முடிவுடையது சிற்றின்பம்.</div><div>அளவற்றது, முடிவிலாதது பேரின்பம்.</div><div><br></div><div>அறிவை மழுங்கடிப்பது சிற்றின்பம்.</div><div>அறிவைப் பிரகாசிக்கச் செய்வது பேரின்பம்.</div><div><br></div><div> அழகை மட்டும் ஆராதித்தால் சிற்றின்பம்.</div><div>அழகற்றதும் அழகும் ஒன்றானால் பேரின்பம்.</div><div><br></div><div> பயன் கருதி செயல் புரிந்தால் சிற்றின்பம்.</div><div>பயன் கருதாது செயல் புரிந்தால் பேரின்பம்.</div><div><br></div><div> முதலில் இனித்து பின் கசப்பது சிற்றின்பம்.</div><div>முதலில் கசந்து பின் என்றும் இனிப்பது பேரின்பம்.</div><div><br></div><div>இரக்கமற்றது, ஒழுக்கமற்றது சிற்றின்பம்.</div><div>கருணையுடையது, தர்மமானது பேரின்பம்.</div><div><br></div><div> உடலாய் அனைத்தையும் கண்டால் சிற்றின்பம்.</div><div>உயிராய் அனைத்தையும் கண்டால் பேரின்பம்.</div><div><br></div><div> புலன்களில் இன்பம் துய்ப்பது சிற்றின்பம்.</div><div>புலன்களுக்கு அப்பால் சென்றால் பேரின்பம்.</div><div><br></div><div>மனம் உலகில் அலைந்தால் சிற்றின்பம்.</div><div>மனம் இறைவனில் ஒடுங்கினால் பேரின்பம்.</div><div><br></div><div> மரண பயம் ஏற்படுத்துவது சிற்றின்பம்.</div><div>மரணத்தையும் வெல்வது பேரின்பம்.</div><div><br></div><div>மனமாய் இருந்தால் சிற்றின்பம்.</div><div>மனதைக் கடந்தால் பேரின்பம்.</div><div><br></div><div> வேறு வேறாய்க் கண்டால் சிற்றின்பம்.</div><div>எல்லாம் ஒன்றெனக் கண்டால் பேரின்பம்.</div><div><br></div><div>பகுதியாய்க் கண்டால் சிற்றின்பம்.</div><div>மொத்தமாய் கண்டால் பேரின்பம்.</div><div><br></div><div>அகங்காரம் கொண்டால் சிற்றின்பம்.</div><div>அகங்காரம் துறந்தால் பேரின்பம்.</div><div><br></div><div>தசையில் சுகம் பெறுவது சிற்றின்பம்.</div><div>அன்பில் தன்னை இழப்பது பேரின்பம்.</div><div><br></div><div> ஆண் பெண்ணில் இன்புறுவது சிற்றின்பம்.</div><div>ஆண் பெண்ணை வணங்குவது பேரின்பம்.</div><div><br></div><div> துய்க்கும் நேரத்தில் மட்டும் இருப்பது சிற்றின்பம்</div><div>துய்த்து விட்டால் நீங்காதது பேரின்பம்.</div><div><br></div><div>ஜீவராசிகளால் தர முடிந்தது சிற்றின்பம்.</div><div>இறைவனால் தரப் படுவது பேரின்பம்.</div><div><br></div><div>உலகைப் பற்றினால் சிற்றின்பம்.</div><div>இறைவனைப் பற்றினால் பேரின்பம்.</div><div><br></div><div> பிறர் நலனைக் காணாதது சிற்றின்பம்.</div><div>தன் நலம் கொள்ளாதது பேரின்பம்.</div><div><br></div><div>.இன்பம் இல்லாத இன்பம் சிற்றின்பம்.</div><div>இன்பமான இன்பமே பேரின்பம்.</div><div><br></div><div>அஞ்ஞானம் விரும்புவது சிற்றின்பம்.</div><div>ஞானம் விரும்புவது பேரின்பம்</div><div><br></div><div> பெற்று மகிழ்வது சிற்றின்பம்.<br></div><div>கொடுத்து மகிழ்வது பேரின்பம்.</div><div><br></div><div>சக்தியை இழப்பது சிற்றின்பம்.</div><div>சக்தியாய் மாறுவது பேரின்பம்.</div><div><br></div><div> பற்றுக் கொள்வது சிற்றின்பம். </div><div>பற்றற்று இருப்பது பேரின்பம்.</div><div><br></div><div> மாறுவது, தாவுவது சிற்றின்பம். </div><div>மாறாதது நிலைத்தது பேரின்பம்.</div><div><br></div><div>நிலையற்றது சிற்றின்பம். </div><div>நிரந்தரமானது பேரின்பம்.</div><div><br></div><div>.உலக வாழ்க்கை வாழ்வது நிலையற்ற சிற்றின்பம் </div><div>இறைவன் திருவடியை அடைவது நிலையான பேரின்பம்</div><div><br></div><div>இல்லற வாழ்க்கை வாழ்வது சிற்றின்பம்</div><div>இல்லறத்தில் இருந்து கொண்டு பரம் பொருளை நினைத்து வாழ்வது பேரின்பம்.</div><div><div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhSt6zCAjHMqlNBWQZSGqyDnyIvt0ehSy-2oBjQcMy9upJdIbKo9_7PxEpzmz9N2xbzwLTkTDqK1yi643PPSpPWoNKw4iwNqYL4wE3DlNUpRKZd8nVIeTm1IH5CgBd0whc-9rI-IAwjha1C/s1600/1589775783875420-0.png" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;">
<img border="0" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhSt6zCAjHMqlNBWQZSGqyDnyIvt0ehSy-2oBjQcMy9upJdIbKo9_7PxEpzmz9N2xbzwLTkTDqK1yi643PPSpPWoNKw4iwNqYL4wE3DlNUpRKZd8nVIeTm1IH5CgBd0whc-9rI-IAwjha1C/s1600/1589775783875420-0.png" width="400">
</a>
</div><br></div><div>பரமன் ஆனந்தமயமானவன். அவனை தெரிந்து கொண்டால் துன்ப கலப்புடன் அவ்வப்பொழுது நாம் அனுபவிக்கும் சிற்றின்பங்களை வாழ்வு முழுதும் நீடிக்கும் பேரின்பமாக மாற்றிக்கொள்ள முடியும்.</div>SASIKALA DHANASEKARANhttp://www.blogger.com/profile/11716959431566964164noreply@blogger.com1tag:blogger.com,1999:blog-2850277381022175263.post-72753196989114801702020-05-16T22:46:00.001+05:302020-05-16T22:46:01.632+05:30சூட்சமமானவன் இறைவன்<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEi7PpxQpyMMV68a2d4DhZUKdmCf6-wvDPunFjVJg4tMRZFdT5ScC67CJ2_EiXFx04spYz1OQHd8XO0J2q5mXAjAeXykQgoYSbKcXL1ZVaRZIBjY-bPBySqLHIlZp70zAXplHHA0LFKzEonL/s1600/1589649347175215-0.png" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;">
<img border="0" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEi7PpxQpyMMV68a2d4DhZUKdmCf6-wvDPunFjVJg4tMRZFdT5ScC67CJ2_EiXFx04spYz1OQHd8XO0J2q5mXAjAeXykQgoYSbKcXL1ZVaRZIBjY-bPBySqLHIlZp70zAXplHHA0LFKzEonL/s1600/1589649347175215-0.png" width="400">
</a>
</div><div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgVlPRnWJP2zVJotYTDGYvnCKiGsGYXlc3vmSJi_USKtn1msbZZ8sSxIj5XMCikeEZ2ZypZXF7p9hivPBUz6SRcqRCV_VD0UMeJ3BdUprj7pwTC0rYDOYjMSgXSIBpWORnXuo7yfGuHUvkF/s1600/1589649307702098-1.png" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;">
<img border="0" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgVlPRnWJP2zVJotYTDGYvnCKiGsGYXlc3vmSJi_USKtn1msbZZ8sSxIj5XMCikeEZ2ZypZXF7p9hivPBUz6SRcqRCV_VD0UMeJ3BdUprj7pwTC0rYDOYjMSgXSIBpWORnXuo7yfGuHUvkF/s1600/1589649307702098-1.png" width="400">
</a>
</div><div><div>‘’#நாம் படைக்கும் நைவேத்யத்தை இறைவன் #அருந்துகிறார் என்பதை #எப்படி #அறிவது ? </div><div><br></div><div>சிஷ்யன் ஒருவன் தன் குருவிடம் ஒரு கேள்வி கேட்டான்.</div><div><br></div><div>‘’குருவே, நாம் படைக்கும் நைவேத்யத்தை இறைவன் அருந்துகிறார் என்பதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.</div><div><br></div><div>இறைவன் சாப்பிட்டால் நாம் பிறருக்கு எப்படி பிரசாதமாக வழங்க முடியும்?</div><div><br></div><div>குருவுடம் சிஷ்யன் .,</div><div>கடவுள் படையலை சாப்பிடுவாரா’’? என்று கேட்டான்.</div><div><br></div><div>குரு எதுவும் சொல்லாமல்,</div><div>அவனை ஊடுருவி பார்த்துவிட்டு ‘’நமது வேதாந்த வகுப்புக்கு நேரமாகி விட்டது. வகுப்பறையை தயார் செய். சிறிது நேரத்தில் நானும் வருகிறேன்” என்றார்.</div><div><br></div><div>பாடம் ஆரம்பித்த குரு,</div><div>அனைத்தும் பூர்ணமான வஸ்துவிலிருத்தே தோன்றியது என பொருள் கொண்ட “பூர்ணமிதம்” எனும் ஈஷாவாசிய உபநிஷத்தில் வரும் மந்திரத்தை விளக்கினார் குரு.</div><div><br></div><div>அனைத்து மாணவர்களும் மந்திரத்தை மனதில் உரு போட துவங்கினர்.</div><div><br></div><div>சிறிது நேரத்திற்கு பிறகு கேள்வி கேட்ட சிஷ்யனை சைகையால் அழைத்தார் குரு.</div><div><br></div><div>குருவின் முன் பணிவுடன் வந்து வணங்கி நின்றான்.</div><div>சிஷ்யன் .,</div><div><br></div><div>“எனதருமை சிஷ்யனே, மந்திரத்தை மனதில் ஏற்றி கொண்டாயா? ,” என்றார்.</div><div><br></div><div>“முழுமையாக உள்வாங்கி கொண்டேன் குருவே”.</div><div>“எங்கே ஒரு முறை சொல் பார்ப்போம்”</div><div><br></div><div>கண்கள் மூடி மனதை ஒருநிலைப்படுத்தி கணீர் குரலில் கூற துவங்கினான்..</div><div><br></div><div>” பூர்ண மித பூர்ண மிதம் …” என கூறி முடித்தான்.</div><div>மெல்ல புன்சிரிப்புடன் குரு தொடர்ந்தார்..</div><div>“நீ சரியாக மனதில் உள் நிறுத்தியதாக தெரியவில்லையே.. எங்கே உனது புத்தகத்தை காட்டு”</div><div>பதட்டம் அடைந்த சிஷ்யன், புத்தகத்தை காண்பித்து கூறினான்</div><div><br></div><div>“ குருவே தவறு இருந்தால் மன்னியுங்கள்.</div><div>ஆனால் நான் கூறியது அனைத்தும் இதில் இருப்பதை போலவே கூறினேன்…”</div><div><br></div><div>“இந்த புத்தகத்திலிருந்து படித்துதான் மனதில் உள்வாங்கினாயா?</div><div><br></div><div>இதிலிருந்து உள்வாங்கினாய் என்றால் மந்திரம் இதில் இருக்கிறதே?</div><div><br></div><div>நீ உன் மூளையில் மந்திரத்தை ஏற்றி கொண்டால் புத்தகத்தில் இருக்க கூடாதல்லவா?”</div><div><br></div><div>சிஷ்யன் குழப்பமாக பார்த்தான்.</div><div>குரு தொடர்ந்தார்,</div><div><br></div><div>‘’உனது நினைவில் நின்ற மந்திரம் சூட்சம நிலையில் இருக்கிறது.</div><div><br></div><div>புத்தகத்தில் இருக்கும் மந்திரம் ஸ்தூல வடிவம்.</div><div>இறைவன் சூட்சம நிலையில் இருப்பவன்.</div><div><br></div><div>இறைவனுக்கு படைக்கப்படுவது ஸ்தூல வடிவில் இருந்தாலும் அவன் சூட்சமமாகவே உட்கொள்கிறான்.</div><div><br></div><div>நீ உள்வாங்கிய பின் புத்தகத்தில் மந்திரம் அளவில் குறைந்துவிட்டதா?</div><div><br></div><div>அது போலதான் இறைவன் உட்கொண்ட பிரசாதம் அளவில் குறையாமல் நாம் எல்லோரும் உண்கிறோம்.</div><div>ஸ்தூலமாக இருக்கும் நாம் ஸ்தூலமாகவும், </div><div><br></div><div>சூட்சுமமாக இருக்கும் இறைவன் சூட்சுமமாகவும் நைவேத்யத்தை உட்கொள்கிறோம். ”</div><div><br></div><div>தனது பக்தியற்ற தர்க்கம் செய்த அறியாமையை குருவிற்கு நைவேத்யம் செய்து முழுமையடைந்தான் சிஷ்யன்.</div></div>SASIKALA DHANASEKARANhttp://www.blogger.com/profile/11716959431566964164noreply@blogger.com6tag:blogger.com,1999:blog-2850277381022175263.post-59097847223658027382020-05-16T15:36:00.001+05:302020-05-16T15:36:51.669+05:30கோயிலுக்கு செல்வதால் கிடைக்கும் அறிவியல் சார்ந்த பலன்<div>கோயிலுக்கு செல்வதால் கிடைக்கும் சக்திகள் குறித்த தகவல்கள் </div><div><br></div><div>இறை என்று சொன்னால் கேட்கவில்லை என்றால் அறிவியலை கூறுங்கள்</div><div><br></div><div>பூமியின் காந்த அலைகள் அதிகம் வீசப்படும் இடங்களில்தான் கோயில்கள் இருக்கும்.</div><div><br></div><div>சக்தியும், பாஸிட்டிவ் எனர்ஜியும் அதிகம் கொண்டிருக்கும், இது நார்த் போல் சவுத் போல் திரஸ்ட் வகை ஆகும்.</div><div><br></div><div>கர்ப்பகிரகம் அல்லது மூலஸ்தானம் என்று அழைக்கப்படும் மூலவர் சிலைதான் இந்த மையப்பகுதியில் வீற்றீருக்கும்.</div><div><br></div><div>இந்த இடம்தான் அந்த சுற்று வட்டாரத்திலேயே காந்த மற்றும் பாஸிட்டிவ் எனர்ஜி அதிகம் காணப்படும் இடம் ஆகும்.</div><div><br></div><div>இந்த மெயின் கர்ப்பகிரகத்தின் கீழே சில செப்பு தகடுகள் பதிக்கபட்டிருக்கும் அது தான் கீழே இருக்கும் அந்த எனர்ஜியை அப்படி பன்மடங்காக்கி வெளிக் கொணரும்.</div><div><br></div><div>அதுபோக எல்லா மூலஸ்தானமும் மூன்று சைடு மூடி வாசல் மட்டும் தான் திறந்து இருக்கும் அளவுக்கு கதவுகள் இருக்கும். இது அந்த எனர்ஜியை லீக் செய்யாமல் ஒரு வழியாக அதுவும் வாசலில் இடது மற்றும் வலது புறத்தில் இருந்து இறைவனை வணங்கும் ஆட்களுக்கு இந்த எனர்ஜி கிடைக்க செய்யப்பட்டது ஆகும் ..</div><div><br></div><div>கோயிலின் பிரகாரத்தை இடமிருந்து வலமாய் சுற்றி வர காரணம் எனர்ஜியின் சுற்று பாதை இது தான் அதனால் தான் மூலஸ்தானத்தை சுற்றும் போது அப்படியே எனர்ஜி சுற்றுபாதை கூட நாமும் சேர்ந்து சுற்ற அந்த எனர்ஜி அப்படியே உங்கள் உடம்பில் வந்து சேரும்.</div><div><br></div><div>இந்த எனர்ஜி நமது உடம்புக்கும், மனதிற்கும், மூளைக்கும் தேவையான ஒரு பாஸிட்டிவ் காஸ்மிக் எனர்ஜி.</div><div><br></div><div>மூலஸ்தானத்தில் ஒரு விளக்கு கண்டிப்பாய் தொடர்ந்து எரிந்து கொண்டிருக்கும் அது போக அந்த விக்கிரகத்திற்க்கு பின் ஒரு விளக்கு இருக்கும்.அதை சுற்றி கண்ணாடி ஒன்று இருக்கும்.</div><div><br></div><div>அது அந்த எனர்ஜியை அப்படி பவுன்ஸ் செய்யும் ஒரு டெக்னிக்கல் செயல்தான்.</div><div><br></div><div>அது போக மந்திரம் சொல்லும் போதும், மணியடிக்கும் போதும் அங்கே செய்யபடும் அபிஷேகம் அந்த எனர்ஜியை மென்மேலும் கூட்டி ஒரு கலவையாய் கொண்டு வரும் ஒரு அபரிதமான எனர்ஜி ஃபேக்டரிதான் மூலஸ்தானம் என்பது..</div><div><br></div><div>பூக்கள், கர்ப்பூரம் (பென்ஸாயின் கெமிக்கல்), துளசி (புனித பேஸில்), குங்குமப்பூ (சேஃப்ரான்),கிராம்பு (கிளவ்) இதை சேர்த்து அங்கு காப்பர் செம்பில் வைக்கபட்டு கொடுக்கும் தீர்த்தம் ஒரு ஆன்டிபயாட்டிக்.</div><div><br></div><div>இதை மூன்று தடவை கொடுக்கும் காரணம் ஒன்று உங்கள் தலையில் தெளித்து இந்த உடம்பை புண்ணியமாக்க, மீதி இரண்டு சொட்டு உங்கள் உடம்பை பரிசுத்தமாக்க.</div><div><br></div><div>இந்த தீர்த்தம் வாய் நாற்றம், பல் சுத்தம் மற்றும் இரத்ததை சுத்த படுத்தும் ஒரு அபரிதமான கலவை. கோயிலுக்கு முன்பெல்லாம் தினமும் சென்று வந்த மானிடர்களுக்கு எந்த வித நோயும் அண்டியது இல்லை என்பதற்கு இதுதான் காரணம்.</div><div><br></div><div>கோயிலுக்கு மேல் சட்டை அணிந்து வர வேண்டாம் என சில கோயில்களில் கூறுவதற்கும் இது தான் முக்கிய காரணம் அந்த எனர்ஜி, அப்படியே மார்பு கூட்டின் வழியே புகுந்து உங்கள் உடம்பில் சேரும் என்பது ஐதீகம்.</div><div><br></div><div>பெண்களுக்கு தாலி அணியும் காரணமும் இது தான்.</div><div><br></div><div>நிறைய பெண்களுக்கு ஆண்களை போன்று இதய நோய் வராமல் இருக்கும் காரணம் இந்த தங்க மெட்டல் இதயத்தின் வெளியே நல்ல பாஸிட்டிவ் எனர்ஜியை வாங்கி உள்ளே உள்ள கொழுப்பை கூட கரைக்கும் சக்தி இருப்பதாக ஒரு கூடுதல் தகவல்.</div><div><br></div><div>பல மைல் தூரத்தில் இருந்து பயணம் செய்திருப்பினும், மூலவரின் தரிசனம் கிட்டும்போது, அந்த சில நொடிகளில் அந்த உடம்பில் ஏற்படும் ஒரு மென்மையான சிலிர்ப்பும், ஒரு வித நிம்மதியும் ஏற்படுகிறது என்றால் அதற்க்கு காரணம், கோயிலின் மூலஸ்தானம் மற்றும் அதில் உள்ள எனர்ஜி.</div><div><br></div><div>கோயிலின் கொடி மரத்திற்க்கும் மூலஸ்தானதிர்க்கும் ஒரு நேரடி வயர்லெஸ் தொடர்பு உண்டு. கோயில் மேல் இருக்கும் கலசம் சில சமயம் இரிடியமாக மாற இது தான் காரணம். கீழ் இருந்து கிளம்பும் மேக்னெட்டிக் வேவ்ஸ் மற்றும் இடியின் தாக்கம் தான் ஒரு சாதாரண கலசத்தையும் இரிடியமாக மாற்றும் திறன் படைத்தது.</div><div><br></div><div>அது போக பெரும்பாலும் கோயில் இடி தாக்கும் அபாயம் இல்லாமல் போன காரணம் கோயில் கோபுரத்தில் உள்ள இந்த கலசங்கள் ஒரு சிறந்த மின் கடத்தி ஆகும் ..</div><div><br></div><div>நல்ல மானிடர் இருவேளை கோயிலுக்கு சென்று வந்தால் மனிதனின் உடல் மட்டுமல்ல அவனின் மனதும் மூளையும் சுத்தமாகும்.</div><div><br></div><div>இவ்வளவு புனிதத்துவம் வாய்ந்த கோயில்களுக்கு குடும்பத்துடன் சென்று வர பழகுவோம் ..குழந்தைகளையும் பழக்குவோம் …அது அறிவியல் ஆகட்டும் ..எதுவாகட்டும் ….இறை சக்தி நம்மை காக்கட்டும்</div><div><div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiftq1PTtMNwEFsyB6dsrBMfwjgNqJlGDRJMp8MIXEj2Z7LtJ_8VLlwyBHs-5UqmRgmtO3G6nBUgEXfB4TUQPDl___YjKVjTMZ1b7oU_01LsZIbiNkdPI-LecJrghBB1Jysp5z1jrtzp8e7/s1600/1589623576855462-0.png" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;">
<img border="0" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiftq1PTtMNwEFsyB6dsrBMfwjgNqJlGDRJMp8MIXEj2Z7LtJ_8VLlwyBHs-5UqmRgmtO3G6nBUgEXfB4TUQPDl___YjKVjTMZ1b7oU_01LsZIbiNkdPI-LecJrghBB1Jysp5z1jrtzp8e7/s1600/1589623576855462-0.png" width="400">
</a>
</div><div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEj6o1dqmNqDzokVLWnxBZB9Rm20HWOsYHwGr37l2tJmltQ7I7BEZT4t3HqKrl9zRVKwttVcjoFUqzanoOAI84EFarpKLUXmVV5BMOa-g-3TNDHV_ENGB_3-sazZrnx0iUbJjfKWQ_gMOSHj/s1600/1589623568595799-1.png" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;">
<img border="0" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEj6o1dqmNqDzokVLWnxBZB9Rm20HWOsYHwGr37l2tJmltQ7I7BEZT4t3HqKrl9zRVKwttVcjoFUqzanoOAI84EFarpKLUXmVV5BMOa-g-3TNDHV_ENGB_3-sazZrnx0iUbJjfKWQ_gMOSHj/s1600/1589623568595799-1.png" width="400">
</a>
</div><div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgz6VXrqdSHy7EbshXr5B6EFTTuCWwVw3qpp9wbqte8KFlyPtJco69S_h_Gm6D499Wlt6wi5UmGoi55383L8nXEIVBAl9NtzbllU2oJqCZctF6zTEovD7VFUtQjDVK37orwOgPM5iK2HA6j/s1600/1589623550556235-2.png" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;">
<img border="0" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgz6VXrqdSHy7EbshXr5B6EFTTuCWwVw3qpp9wbqte8KFlyPtJco69S_h_Gm6D499Wlt6wi5UmGoi55383L8nXEIVBAl9NtzbllU2oJqCZctF6zTEovD7VFUtQjDVK37orwOgPM5iK2HA6j/s1600/1589623550556235-2.png" width="400">
</a>
</div><br></div>SASIKALA DHANASEKARANhttp://www.blogger.com/profile/11716959431566964164noreply@blogger.com2tag:blogger.com,1999:blog-2850277381022175263.post-30796498713067012802020-05-16T15:28:00.001+05:302020-05-16T15:28:33.275+05:30தமிழ்நாட்டின் சிவாலயங்கள்<div>#ஆலயதரிசனம்.. ..</div><div><br></div><div>தமிழ்நாட்டின் புகழ்பெற்ற 28 சிவன் கோயில்கள்...</div><div><br></div><div>இந்தியாவில் இருக்கும் சிவன் கோயில்களில் பாதிக்கு மேற்பட்ட கோயில்கள் தமிழ்நாட்டில்தான் உள்ளன. அதாவது தமிழ்நாட்டில் மட்டும் 2500-க்கும் அதிகமான சிவாலயங்கள் கட்டப்பட்டுள்ளன.</div><div><br></div><div>இவற்றில் பெரும்பாலான வரலாற்றுச் சிறப்பு மிக்க கோயில்கள் சோழர்கள் காலத்தில் கட்டப்பட்டவையாகும். அதேபோல மற்ற பேரரசுகளின் காலத்திலும் கணிசமான அளவு சிவன் கோயில்கள் தமிழ்நாட்டில் எழுப்பப்பட்டுள்ளன. இப்படியாக கட்டப்பட்ட சிவன் கோயில்களில் சில சிவன் கோயில்கள் வரலாற்று மற்றும் ஆன்மிக முக்கியத்துவம் வாய்ந்தவை.</div><div><br></div><div>அதாவது சைவ சமயத்தில் கூறப்படும் 28 ஆகமங்களின் அடிப்படையில் முக்கியமான 28 சிவன் கோயில்களைப் பற்றி இங்கே காண்போம்.</div><div><br></div><div>1 திருவதிகை வீரட்டானேசுவரர் கோயில்</div><div><br></div><div>கடலூர் மாவட்டத்தில் பண்ருட்டியிலிருந்து 2 கிமீ தொலைவில் திருவதிகை வீரட்டானேசுவரர் கோயில் அமைந்துள்ளது. இந்தக் கோயில் தமிழ்நாட்டில் உள்ள எட்டு வீர சைவக் கோவில்களுள் ஒன்றாகும். இத்திருக்கோயிலின் கர்ப்பகிரக விமானத்தை பார்த்து இராஜ இராஜ சோழன் பிற்காலத்தில் தஞ்சையில் பெரிய கோயிலைக் கட்டியதாக வரலாற்று ஆசிரியர்கள் கூறுகிறார்கள். அதேபோல பெரிய கோயில் விமான நிழல் கீழே விழாது என்ற நம்பிக்கை இருப்பது போல், திருவதிகை கோயிலின் நிழலும் தரையில் விழாதபடி கணித சாஸ்திர முறையுடன் பல்லவர்களால் இதை கட்டியதாக சொல்லப்படுகிறது.</div><div><br></div><div>2 நெல்லையப்பர் ஆலயம், திருநெல்வேலி</div><div><br></div><div>திருநெல்வேலியிலுள்ள நெல்லையப்பர் ஆலயமானது, தமிழகத்திலேயே மிகப்பெரிய சிவாலயமாகும். இது பாண்டிய மன்னர்களால் கி.பி. 700 ஆம் ஆண்டில் கட்டப்பட்டது. சிவபெருமானுக்கும், பார்வதி தேவிக்கும் தனித்தனியே கட்டப்பட்ட இரண்டு கோயில்களை உள்ளடக்கிய பிரம்மாண்டமான கோயில் இது. இரண்டு கோயில்களும், 17-ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட சங்கிலி மண்டபம் என்னும் மண்டபத்தால் இணைக்கப்பட்டுள்ளன. இக்கோவிலின் கோபுரங்களும் 17-ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டவையாகும்.</div><div><br></div><div>3 தியாகராஜர் கோயில், திருவொற்றியூர்</div><div><br></div><div>சென்னையிலிருந்து 16 கி.மீ தொலைவில் உள்ள திருவொற்றியூரில் தியாகராஜர் கோயில் அமைந்துள்ளது. இந்தக் கோயில் பல்லவ மன்னர்களால் 7-ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டதாக நம்பப்படுகிறது. எனினும் அதற்கு பிறகு 11-ஆம் நூற்றாண்டில் சோழர்களால் பெரிதாக புதுப்பித்து கட்டப்பட்டுள்ளது. இங்கு பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ள சிவபெருமானின் விக்கிரகமும், திருவாரூர் தியாகராஜசுவாமி திருகோயிலில் உள்ள சிவன் சிலையும் ஓரே மாதிரியான தோற்றத்தை கொண்டவை.</div><div><br></div><div>4 ஸ்ரீ மாயூரநாதசுவாமி கோவில், மயிலாடுதுறை</div><div><br></div><div>மயிலாடுதுறையின் மிகபெரிய கோயிலாக ஸ்ரீ மாயூரநாத சுவாமி கோவில் திகழ்கிறது. இந்தக் கோயில் சுவர்களிலுள்ள மிகப் பழமையான பதிவுகளாக குலோத்துங்க சோழரின் பதிவுகள் உள்ளன. அதன் ஆரம்ப கட்டுமானத்திற்கு பிறகு, சற்றே புனரமைக்கப்பட்ட இந்த கோயில் சோழர்களின் கட்டிடக்கலைக்கு சான்றாக இன்னமும் விளங்குகிறது. இக்கோயிலின் நடராஜ பெருமானுக்காக ஒவ்வொரு ஆண்டும் நடத்தப்படும் மாயூரா நாட்டியாஞ்சலி நிகழ்ச்சி எண்ணற்றவர்களை இக்கோவிலை நோக்கி ஈர்த்துவிடும். இந்த திருவிழாவை, சிதம்பரம் நாட்டியாஞ்சலி திருவிழா நடக்கும் வேளைகளில் மகா சிவராத்திரியையொட்டி சப்தஸ்வரங்கள் டிரஸ்ட் என்ற அமைப்பு நடத்தி வருகிறது.</div><div><br></div><div>5 ஜம்புகேசுவரர் கோயில், திருவானைக்காவல்</div><div><br></div><div>திருவானைக்காவல் கோயிலின் மூலவரான ஜம்புகேஸ்வரர் 5-ஆம் உள் பிரகாரத்தில் சுயம்புவான அப்புலிங்கமாக எழுந்தருளியுள்ளார். அதாவது வடமொழியில் 'அப்பு' என்பதன் பொருள் நீர் என்பதாகும். இந்த லிங்கம் இருக்குமிடம் தரைமட்டத்திற்க்குக் கீழே இருப்பதால் எப்போதும் தண்ணீர் கசிவு இருந்துகொண்டே இருக்கும். முற்றிய கோடையில், காவேரி வறண்டிருக்கும் நேரங்களிலும், இந்நீர்க்கசிவு வற்றுவதில்லை என்று சொல்லப்படுகிறது. 18 ஏக்கர் பரப்பளவை கொண்ட இந்த கோயில் ஆரம்ப கால சோழ மன்னர்களில் ஒருவரான கோச்செங்க சோழநாள் கட்டப்பட்டதாகும். இங்கு அம்மன் அகிலாண்டேஸ்வரியின் தனி சன்னதி நான்காம் பிரகாரத்தில் உள்ளது.</div><div><br></div><div>6 பிரகதீஸ்வரர் கோயில், தஞ்சாவூர்</div><div><br></div><div>தமிழ்நாட்டில் ஆயிரம் ஆண்டுகளுக்கு கட்டப்பட்ட கோயில்கள் எத்தனை இருந்தாலும் தஞ்சை பெரிய கோயிலுக்கு ஈடு இணை ஏதுமில்லை. வட நாடெங்கும் பயணித்து பல வெற்றிகளை சுமந்து வந்த ராஜராஜ சோழன் தான் வழியில் கண்ட பல்வேறு சிற்பக்கலை மரபுகளைச் சேர்ந்த கோயில்களின் தோற்றத்தில் கவரப்பட்டு அவற்றினும் சிறந்த ஒரு உன்னத கலைப்படைப்பை தனது ராஜ்ஜியத்தில் நிர்மாணிக்க விரும்பி மிகுந்த முனைப்புடன் இந்தக் கோயிலை உருவாக்கியிருக்க வேண்டும் என்பது சில வரலாற்று ஆசிரியர்களின் கருத்து. வார்த்தைகளில் விவரிக்க முடியாத நுண்ணிய வடிவமைப்பு, கற்பனா சக்தி, மேலாண்மை துல்லியம், பொறியியல் நுணுக்கங்கள், அப்பழுக்கற்ற ஒழுங்கு, துளியும் பிசகாத கணக்கீடுகள் போன்ற அறிவியல் பூர்வமான நுட்பங்கள் இந்த ஒட்டுமொத்த கோயிலின் உருவாக்கத்தில் நிரம்பியுள்ளன என்றால் அது மிகையில்லை.</div><div><br></div><div>7 தில்லை நடராஜர் கோயில், சிதம்பரம் </div><div><br></div><div>மனிதனின் உடம்பும் கோயில் என்பதனை விளக்கும் வகையில் சிதம்பரம் நடராஜர் கோயில் அமைந்துள்ளது. மனித உடலானது அன்னமயம், பிராணமயம், மனோமயம், விஞ்ஞானமயம், ஆனந்தமயம் என்னும் ஐந்து சுற்றுகளை கொண்டது. அதன் அடிப்படையில் நடராஜர் கோயிலில் ஐந்து திருச்சுற்றுகள் என்னும் பிரகாரங்கள் உள்ளன. </div><div><br></div><div>அதேவேளை மனிதனுக்கு இதயம் (ஆகாயம்) இடப்புறம் அமைந்திருப்பது போல் மூலவர் இருக்கும் கருவறை கோயிலின் இடதுபுறமாக சற்று நகர்ந்து இருக்கிறது. </div><div><br></div><div>அதோடு சராசரியாக ஒரு மனிதன் ஒரு நாளைக்கு 21,600 முறை இதயத்தின் உதவியால் மூச்சுவிடுகிறான் என்பதை குறிக்கும் விதமாக கருவறையின் மீதுள்ள கூரை 21600 ஓடுகளால் வேயப்பட்டு இருக்கிறது.</div><div><br></div><div>8 மருந்தீஸ்வரர் கோயில், சென்னை </div><div><br></div><div>சோழ நாட்டை பல்லவம் ஆந்திரம் போன்ற ராஜ்ஜியங்களுடன் இணைத்த வடப்பெருவழி எனும் முக்கிய சாலையில் இந்த கோயில் இருந்ததை வரலாற்றுச்சான்றுகள் சுட்டிக்காட்டுகின்றன. அந்த பாதைதான் இன்றைய ஈ.சி.ஆர் எனும் கிழக்குக்கடற்கரைச்சாலையாக உருமாறியுள்ளது. பரபரப்பான சென்னையின் நடுவே திருவான்மியூரில் அமைதி தவழும் ஆன்மீகச்சுழலை கொண்டுள்ள மருந்தீஸ்வரர் கோயில் சென்னைக்கு வரும் பயணிகள் அவசியம் விஜயம் செய்ய வேண்டிய புராதன ஆன்மீகத்தலமாகும்.</div><div><br></div><div>9 ஸ்ரீ இராமநாதசுவாமி கோவில்,</div><div>ராமேஸ்வரம்..</div><div><br></div><div>12 ஜோதிர்லிங்க கோயில்களில் தமிழ்நாட்டில் அமைந்துள்ள ஒரே ஜோதிர்லிங்க ஆலயமாக இராமேஸ்வரத்தில் உள்ள ஸ்ரீ இராமநாதசுவாமி கோவில் புகழ்பெற்றுள்ளது. மேலும் இராமேஸ்வரம் என்ற பெயர் வரக்காரணமாக ஸ்ரீ இராமநாதசுவாமி கோவிலை குறிப்பிடலாம். அதாவது இராவணனை கொன்ற பாவத்தினை நீங்க இராமன் மணல்களால் ஆன லிங்கத்தை இங்கு பிரதிஷ்டை செய்து வழிபட்டார் என்று நம்பப்படுகிறது. இதன் காரணமாக இராமன் ஈஸ்வரனை வணங்கிய இடம் என்ற பொருளில் 'இராம+ஈஸ்வரம்' இராமேஸ்வரம் ஆனது</div><div><br></div><div>10 அண்ணாமலையார் கோயில், திருவண்ணாமலை</div><div><br></div><div>எட்டு திக்கிலும் அஷ்டலிங்கங்களை கொண்ட எண்கோண அமைப்பில் அமைந்திருக்கும் திருவண்ணாமலை நகரில் பஞ்சபூத ஸ்தலங்களின் நெருப்புக்கான ஸ்தலமாக அண்ணாமலையார் கோயில் அறியப்படுகிறது. இக்கோவில் அக்னியை வெளிப்படுத்துவதாகவும், சிவபெருமான் இங்கு அக்னி லிங்கமாகவும் வணங்கப்படுகிறார். அதோடு உண்ணாமலையம்மனாக சிவபெருமானின் துணைவியாரான பார்வதி தேவியும் இங்கு வழிபடப்படுகின்றார்.</div><div><br></div><div>11 கபாலீசுவரர் கோயில், சென்னை</div><div><br></div><div>சென்னையின் பழமையான மைலாப்பூர் பகுதியில் இந்த கபாலீசுவரர் கோயில் வீற்றுள்ளது. இந்த கோயில் சிவபெருமான் மற்றும் அவரது துணைவியார் பார்வதி தேவிக்காக அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. இன்று சாந்தோம் சர்ச் உள்ள இடத்தில் வீற்றிருந்த கபாலீசுவரர் கோயிலின் ஆதி அமைப்பு போர்த்துகீசியர்களால் சிதைக்கப்பட்ட பிறகு தற்போது நாம் காணும் கோயில் விஜயநகர மன்னர்களால் 16ம் நூற்றாண்டில் கட்டப்பட்டிருக்கலாம் என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.</div><div><br></div><div>12 ஏகாம்பரநாதர் கோயில், காஞ்சிபுரம்</div><div><br></div><div>600 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட இக்கோயில், காஞ்சிபுரத்தின் வடக்குப் பகுதியில் அமைந்துள்ளது. இந்த கோயில் சிவபெருமானுக்கான பஞ்சபூத கோயில்களுள், நிலத்தை குறிக்கும் பஞ்ச பூத ஸ்தலமாகும். இக்கோயிலின் வட்டக் கோபுரம் 59 அடி உயரத்தில் அமைந்திருப்பதோடு இந்தியாவின் உயரமான கட்டுமானங்களுள் ஒன்றாக விளங்குகிறது.</div><div><br></div><div>13 வேதகிரீஸ்வரர் கோயில், திருக்கழுக்குன்றம் </div><div><br></div><div>சென்னையிலிருந்து 67 கி.மீ தொலைவில் உள்ள திருக்கழுக்குன்றத்தில் அமைந்துள்ள வேதகிரீஸ்வரர் கோயில் 1400 ஆண்டுகள் பழமையானது. இங்கு காணப்படும் ஒரு கல் மண்டபம் முதலாம் மகேந்திரவர்ம பல்லவன் (கி.பி. 610-640) காலத்தில் கட்டப்பட்ட சிவனுக்குரிய குடைக்கூளி என்று தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர். அதுமட்டுமல்லாமல் 7-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த பல்லவர், சோழர், பாண்டியர், ராஷ்டிரகூடர் காலத்திய கல்வெட்டுக்களும் இங்கே கிடைத்துள்ளன.</div><div><br></div><div>14 தியாகராஜஸ்வாமி திருக்கோயில், திருவாரூர்</div><div><br></div><div>சோழ மன்னர்களால் கட்டப்பட்டு தமிழ்நாட்டின் மிகப் பழமையான கோயில்களுள் ஒன்றாக திகழ்ந்து வரும் தியாகராஜஸ்வாமி திருக்கோயில் 1-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தது.இக்கோயிலின் மூலஸ்தானத்தை இரண்டாகப் பிரித்து, ஒரு பகுதியை "வன்மிகிநாதர்" என்ற பெயரில் வழங்கப்படும் சிவபெருமானுக்கும், மற்றொரு பகுதியை தியாகராஜருக்கும் அர்ப்பணித்துள்ளனர். வன்மிகிநாதருக்காக அர்ப்பணிக்கப்பட்டுள்ள பகுதியானது, தியாகராஜருக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ள பகுதியைக் காட்டிலும் பழமை வாய்ந்ததாகும். வன்மிகிநாதரின் சந்நிதியில், வழக்கமான லிங்கத்துக்கு பதிலாக, ஒரு புற்று நிறுவப்பட்டுள்ளது.</div><div><br></div><div>15 ஸ்ரீ கும்பேஸ்வரர் ஆலயம், கும்பகோணம்</div><div><br></div><div>கும்பகோணத்தில் அமைந்துள்ள ஸ்ரீ கும்பேஸ்வரர் ஆலயம் ஒரு சிவாலயமாகும். இக்கோவிலில் தான் ஆண்டுதோறும் மாசிமக விழாவும், 12 ஆண்டுகளுக்கொருமுறை மகாமகப் பெருவிழாவும் கொண்டாடப்படுகின்றன. இக்கோவில் 1300 ஆண்டுகள் பழமையானதென நம்பப்படுகிறது. இடைக்காலச் சோழர்கள் இந்நகரத்தை ஆண்டபொழுதிலிருந்து இக்கோவில் உள்ளது. இக்கோவிலில் சிவபெருமான் ஆதி கும்பேஸ்வரர் என்னும் பெயருடன் வழிபடப்படுகிறார்.</div><div><br></div><div>16 ஸ்வேதாரண்யேஸ்வரர் கோயில், திருவெண்காடு</div><div><br></div><div>தமிழ்நாட்டிலுள்ள ஒன்பது நவக்கிரக ஸ்தலங்களுள், இது நான்காவது ஸ்தலமாகும். இந்தக் கோயில் 1000 முதல் 2000 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டதாக நம்பப்படுகிறது. இக்கோயிலில், நவக்கிரகங்களுள் ஒருவரும், பக்தர்களுக்கு அறிவும், செல்வமும் வழங்கக்கூடியவருமான புதன் பகவானுக்கு தனி சந்நிதி அமைத்து வணங்கி வருகின்றனர். இங்கு சிவபெருமான், "ஸ்வேதாரண்யேஸ்வரர்" என்ற திருப்பெயருடன், மூலவராக இருந்து அருள் பாலிக்கிறார். பார்வதி தேவி, "பிரம்மவித்யாநாயகி" என்ற பெயரில் வழிபடப்படுகிறார்.</div><div><br></div><div>17 ஸ்ரீ கம்பஹரேஸ்வரர் ஆலயம், கும்பகோணம்</div><div><br></div><div>கும்பகோணத்திற்கு அருகில் உள்ள திருபுவனம் என்னும் கிராமத்தில் ஸ்ரீ கம்பஹரேஸ்வரர் ஆலயம் அமைந்துள்ளது. 13-ஆம் நூற்றாண்டில் ஆட்சிசெய்த மன்னன் குலோத்துங்கனால் இக்கோவிலின் கட்டுமானப் பணிகள் தொடங்கப்பட்டன. அவருக்குப் பிறகு வந்த சேர, சோழ, பாண்டிய வம்சத்தைச் சேர்ந்த மன்னர்கள் அப்பணியைத்தொடர்ந்து கட்டி முடித்தனர். சோழர்களால் புதுப்பிக்கப்பட்ட கடைசிக்கோவில் இதுவென வரலாற்றாசிரியர்கள் கருதுகின்றனர்.</div><div><br></div><div>18 பழமலைநாதர் கோயில், விருத்தாச்சலம்</div><div><br></div><div>கடலூர் மாவட்டத்திலுள்ள விருத்தாசலத்தில் அமைந்துள்ள பழமலைநாதர் கோயில் சைவத் திருத்தலங்களில் முக்கியமானதாகும். இந்தக் கோயிலில் 5 கோபுரம், 5 நந்தி, 5 தேர், 5 கொடிமரம் என எல்லாமே ஐந்து ஐந்தாக அமைந்துள்ளது. இத்தலம் காசியை விட வீசம் (தமிழ் அளவு : 1/16) புண்ணியம் அதிகம் கொண்டதென நம்பப்படுகிறது. இதனால் விருத்தகாசி என்கிற சிறப்புப்பெயரும் இவ்வூருக்கு உண்டு</div><div><br></div><div>19 சோமேஸ்வரர் ஆலயம், கும்பகோணம்</div><div><br></div><div>சோமேஸ்வரர் ஆலயம் கும்பகோணத்தில் அமைந்துள்ள ஒரு சிவாலயமாகும். இந்தக் கோயிலின் கட்டிட வடிவமைப்பை பார்க்கும் பொழுது 13-ஆம் நூற்றாண்டு திராவிடக் கட்டிடக் கலை உடனடியாக நினைவுக்கு வருகிறது. இக்காலத்தில்தான் பிற்காலச் சோழர்கள் கும்பகோணத்தை ஆண்டு வந்தனர். உண்மையில் இக்கோவில் சிவபெருமானையும் பார்வதிதேவியையும் வழிபட்டுவந்த சோழர்களால் அடிப்படையில் கட்டப்பட்டது. பிறகு வந்த மன்னர்கள் இக்கோவிலின் கட்டுமானத்தில் வெவ்வேறு வடிவமைப்பை சேர்த்துக் கொண்டனர். ஆயினும் அடிப்படை வடிவமைப்பு சோழர் கட்டிடக் கலையே ஆகும்.</div><div><br></div><div>20 திருவாலீஸ்வரர் கோயில்</div><div><br></div><div>சென்னையிலிருந்து 13 கி.மீ தூரத்தில் உள்ள பாடி என்ற பகுதியில் திருவாலீஸ்வரர் கோயில் அமைந்துள்ளது. இந்தக் கோயிலில் சிவபெருமான் திருவாலீஸ்வரர் வடிவத்தில் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். இங்கு சிவன் சன்னதியை தவிர விநாயகர், பாலசுப்பிரமணியர், சூரிய பகவான் சன்னதிகளும் உள்ளன. அதோடு இங்குள்ள விநாயகர் சன்னதியில் விநாயகர் தொந்தி இல்லாமல் காட்சியளிக்கிறார்.</div><div><br></div><div>21 ஐராவதீஸ்வரர் கோயில்</div><div><br></div><div>கும்பகோணத்திலிருந்து 5 கிலோமீட்டர் தொலைவில் உள்ள தாராசுரத்தில் ஐராவதீஸ்வரர் கோயில் அமைந்துள்ளது. கங்கைகொண்ட சோழபுரம் மற்றும் பிரகதீஸ்வரர் கோவில்களில் இருப்பதை விட சிறியதாக இருந்தாலும், மிகவும் நுணுக்கமான வேலைப்பாடுகள் கொண்டதாக திகழ்கிறது ஐராவதம் கோவில் சிற்பங்கள். ஒரு தேரை, குதிரைகள் இழுத்துச் செல்வது போல அமைந்திருக்கும் ஐராவதீஸ்வரர் கோயில், நிச்சயமாக நாம் அனைவரும் பார்க்க வேண்டிய அருமையான திருக்கோவில் ஆகும். துர்வாச முனிவரின் சாபத்தினால் தன்னுடைய நிறத்தை இழந்த இந்திரனின் யானை ஐராவதம், இங்கு வந்து சிவனை வழிபட்டு, சாப விமோச்சனம் பெற்றதாம். அதனால், இந்த கோவிலுக்கு ஐராவதீஸ்வரர் கோயில் என்ற பெயர் வந்ததாக கூறப்படுகிறது.</div><div><br></div><div>22 காசி விஸ்வநாதர் கோயில் </div><div><br></div><div>கும்பகோணம் மகாமகம் குளத்துக்கு அருகிலேயே சிவாலயமான காசி விஸ்வநாதர் கோயில் அமைந்துள்ளது. இந்தக் கோயிலில் சிவன் சன்னதியை தவிர நவகன்னியர்களான கங்கை, யமுனை, சரஸ்வதி, நர்மதை, ,காவேரி, கிருஷ்ணா, கோதாவரி, துங்கபத்ரா, சரயு ஆகிய புனித நதிகளுக்கும் சன்னதிகள் உள்ளன. இக்கோயில் குறித்து தேவாரத்தில் பாடல் இடம்பெற்றிருப்பதுடன், இராமாயண காலத்திலேயே இராமரும், லக்ஷ்மணனும் இங்கு சிவனை வழிபட்டதாக நம்பப்படுகிறது.</div><div><br></div><div>23 கல்யாண பசுபதீஸ்வரர் கோவில், கரூர்</div><div><br></div><div>சோழர்கள் ஆட்சிசெய்த காலத்தில் கல்யாண பசுபதீஸ்வரர் கோவில் கட்டப்பட்டது. ஐந்து அடி உயரம் உடைய பசுபதீஸ்வரர் லிங்கத்திற்கு இக்கோவில் பெயர்பெற்றது. மேலும் இங்கே ஐந்து சிலைகளின் கூடுகை இருக்கிறது. ஒரு பசுவின் காம்பில் இருந்து வடியும் பாலில் குளிப்பதைப் போன்று லிங்கம் கர்ப்பக்கிரகத்தில் காட்சியளிக்கிறது.</div><div><br></div><div>24 கைலாசநாதர் கோயில், காஞ்சிபுரம்</div><div><br></div><div>காஞ்சிபுரம் கைலாசநாதர் கோயில் 8-ஆம் நூற்றாண்டில் பல்லவ மன்னன் இராஜசிம்மனால் கட்டத் தொடங்கப்பட்டதெனினும், அவனுடைய மகனான 3-ஆம் மகேந்திரவர்மனே கட்டிடப் பணிகளை முடித்ததாக வரலாறு கூறுகிறது. அதன் பின்னர் 14-ஆம் நூற்றாண்டில் விஜயநகர பேரரசின் காலத்தில் சில பகுதிகள் சேர்க்கப்பட்டுள்ளன.</div><div><br></div><div>25 பாடலீஸ்வரர் கோவில், திருப்பாதிரிப்புலியூர்</div><div><br></div><div>கடலூர் நகரின் ஒரு பகுதியாக உள்ள திருப்பாதிரிப்புலியூரில் பாடலீஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. இங்கு சிவன் சுயம்பு மூர்த்தியாக தோன்றியதாக நம்பப்படுகிறது. இந்தக் கோயில் சோழர்களால் கட்டப்பட்டதோடு, பல்லவ மன்னர்கள் மற்றும் பாண்டியர்கள் காலத்தில் புதுப்பிக்கப்பட்டுள்ளது. சிவபெருமானுக்காக கட்டப்பட்டிருக்கும் பாடலீஸ்வரர் கோவில் மிகவும் புனிதமான சைவத் தலங்களில் ஒன்றாக கருதப்படுகிறது.</div><div><br></div><div>26 காசிவிஸ்வ நாதர் கோவில், தென்காசி </div><div><br></div><div>காசிவிஸ்வ நாதர் கோவில் குற்றாலத்திலிருந்து 8 கி. மீ தொலைவில் தென் காசியில் அமைந்துள்ளது. இந்தக் கோயில் கி.பி 1455-ஆம் ஆண்டு பராக்கிரம பாண்டியனால் கட்டப்பட்டது. புராணங்களின் படி இந்த மனனன் காசிக்கு செல்ல விரும்பியதாகவும், ஆனால் அந்நகரம் முஸ்லீம்களின் கட்டுப்பாட்டின் இருந்ததால் காசியில் உள்ள அதே அசல் கோவிலின் மாதிரியாக இந்தக் கோயிலை உருவாக்கியதாக சொல்லப்படுகிறது.</div><div><br></div><div>27 திருவாப்பனூர் ஆப்புடையார் கோயில், மதுரை </div><div><br></div><div>மதுரை நகரின் ஒரு பகுதியான செல்லூர் என்ற இடத்தில் திருவாப்பனூர் ஆப்புடையார் கோயில் அமைந்துள்ளது. சோழாந்தகன் என்ற பாண்டிய மன்னன் வேட்டையாடச் சென்றபோது திருவாப்புடையாரை (சுயம்புலிங்கத்தைக்) கண்டு முதன்முதலில் தரிசனம் செய்துள்ளான். அப்பாண்டியனது மகன் சுகுணன், திருவாப்புடையாருக்குக் கோயில் எடுப்பித்தான் என்று சொல்லப்படுகிறது.</div><div><br></div><div>28 மாசில்லாமணீஸ்வரர் கோயில், திருமுல்லைவாயில் </div><div><br></div><div>சென்னையின் அம்பத்தூர் பகுதியிலிருந்து 2 கி.மீ தொலைவில் உள்ள திருமுல்லைவாயிலில் மாசில்லாமணீஸ்வரர் கோயில் கோயில் அமைந்துள்ளது. இந்தக் கோயிலில் உள்ள நந்தி சிலை வழக்கத்துக்கு மாறாக சிவபெருமானை நேராக நோக்காமல், கிழக்கு நோக்கி அமைந்திருக்கிறது.</div><div><br></div><div>நிலப்பகுதிகளில் மட்டுமல்லாது கடற்கரைகள் பக்கத்திலும் பல சிறப்புக்கு வாய்ந்த கோவில்கள் உள்ளது அப்படி கடற்கரை அருகில் உள்ள 10 தமிழக கோவில்களை பற்றி தெரிந்து கொள்வோம்</div><div><br></div><div>29. அஷ்டலட்சுமி கோவில், சென்னை</div><div><br></div><div>இந்த கோவிலானது சென்னை பெசன்ட் நகரில் எலியட்ஸ் கடற்கரையின் இறுதியில் அமைந்துள்ளது. இக்கோவிலில் மொத்தம் நான்கு தளங்கள் உள்ளன.</div><div>முதல் தளத்தில் ஆதிலட்சுமி, தான்யலட்சுமி, வீரலட்சுமி ஆகிய தெய்வங்கள் அருள் புரிகின்றனர்.</div><div>இரண்டாவது தளத்தில் திருமால் திருமகளுடன் திருமணக் கோலத்தில் காட்சியளிக்கின்றனர். இவர்களை வழிபட்ட பின்பே ஏனைய தெய்வங்களை மக்கள் வழிபாடு செய்கின்றனர்.</div><div>மூன்றாவது தளத்தில் சந்தானலட்சுமி, விஜயலட்சுமி, வித்தியாலட்சுமி, கஜலட்சுமி ஆகிய தெய்வங்கள் அருள்புரிகின்றனர்.</div><div>நான்காவது தளத்தில் தனலட்சுமி அருள்பாலிக்கிறார். இக்கோவில் 1976-ல் சலவைக் கற்களால் கட்டப்பட்டது. இக்கோவிலின் கோபுரத்தின் நிழலானது தரையில் விழுவதில்லை.</div><div><br></div><div>30. மருந்தீஸ்வரர் கோவில், திருவான்மியூர்</div><div><br></div><div>இந்த கோவிலானது சென்னையில் திருவான்மியூரில் அமைந்துள்ளது. இங்கு இறைவன் மருந்தீஸ்வரர், ஒளசதநாதர், பால்வண்ணநாதர் என்ற திருப்பெயரிலும், அம்மை திரிபுரசுந்தரி, சொக்கநாயகி என்ற திருப்பெயர்களிலும் அருள்புரிகின்றனர். இத்தலம் 2000 வருடங்கள் பழமையானது ஆகும்.</div><div><br></div><div>31. காயாரோகனேஸ்வரர் கோவில், நாகபட்டினம்</div><div><br></div><div>பழங்காலத்தில் இந்த கோவில் ‘நாகை காரோணம்’ என்றழைக்கப்பட்டது. இங்கு இறைவன் காயாரோகணேஸ்வரர் என்ற பெயரிலும், அம்மை நீலதாயாட்சி என்ற பெயரிலும் அருள்புரிகின்றனர்.</div><div>புண்டரீக மகரிஷிக்கு இத்தல இறைவன் கட்டித் தழுவி முக்தி கொடுத்தால் காயாரோகணேஸ்வரர் என்றழைக்கப்படுகிறார்.</div><div><br></div><div>32. அமிர்தகடேஸ்வரர் கோவில் கோடியக்கரை</div><div><br></div><div>இந்த கோவிலானது நாகை மாவட்டத்தில் வேதாரண்யத்தின் அருகில் அமைந்துள்ளது. இங்கு இறைவன் அமிர்தக்கடேஸ்வரர், திருக்கோடி குழகர் என்ற திருப்பெயர்களிலும், அம்மை அஞ்சனாட்சி, மைதடங்கண்ணி என்ற திருப்பெயர்களிலும் அருள்புரிகின்றனர்.</div><div><br></div><div>33. திருமறைக்காடர் கோவில், வேதாரண்யம்</div><div><br></div><div>வேத நூல்கள் வழிபட்ட தலமாதலால் திருமறைக்காடு என்று அழைக்கப்பட்டு வேதாரண்யம் என ஆனது.</div><div>இங்கு இறைவன் திருமறைக்காடர் என்றும் அம்மை யாழைப்பழித்த மென்மொழியாள் என்றும் அழைக்கப்படுகின்றனர்.</div><div><br></div><div>34. இராமநாதர் கோவில், இராமேஸ்வரம்</div><div><br></div><div>இராமநாதர் ஆலயம் தமிழ்நாட்டில் இராமநாதபுரம் மாவட்டத்தில் இராமேஸ்வரம் என்னும் ஊரில் வங்காள விரிகுடா கடற்கரையோரம் அமைந்துள்ளது.</div><div><br></div><div>35. சுப்பிரமணியசுவாமி கோவில், திருச்செந்தூர்</div><div><br></div><div>இந்த கோவிலானது தூத்துக்குடி மாவட்டத்தில் வங்காள விரிகுடாக் கடலை ஒட்டி அமைந்துள்ளது. இவ்விடம் அறுபடைவீடுகளில் இரண்டாவது படைவீடாகும்.</div><div><br></div><div>36. சுயம்புலிங்க சுவாமி, உவரி</div><div><br></div><div>இந்த கோவிலானது திருநெல்வேலி மாவட்டத்தில் திருச்செந்தூர் கன்னியாகுமரி சாலையில் திருச்செந்தூரிலிருந்து 35கிமீ தூரத்தில் அமைந்துள்ளது. இங்கு இறைவன் சுயம்புவாகத் தோன்றியதால் சுயம்புலிங்கம் என்ற பெயரிலும், அம்மை பிரம்மசக்தியம்மன் என்ற பெயரிலும் அருள்புரிகின்றனர்.</div><div><br></div><div>37. குமரிஅம்மன் கோவில், கன்னியாகுமரி</div><div><br></div><div>இக்கோவில் முக்கடல்கள் சங்கமிக்கும் திரிவேணி சங்கமமான கன்னியாகுமரியில் அமைந்துள்ளது. இவ்விடம் தாட்சாயணியின் முதுகுப் பகுதி விழுந்த இடமாகக் கருதப்பட்டு சக்தி பீடங்களில் ஒன்றாகத் திகழ்கிறது. இங்கு அன்னை துர்க்காதேவி, பகவதி, பாலசவுந்தரி, தியாகசவுந்தரி என்றெல்லாம் போற்றப்படுகிறாள்.</div><div><br></div><div>38. மாமல்லபுரம் , காஞ்சிபுரம்</div><div><br></div><div>மாமல்லபுரம் என்றாலே கடற்கரை கோவிலே அடையாளப்படுத்தப்படுகிறது. இவ்விடம் காஞ்சிபுரம் மாவட்டத்தில் சென்னைக்கு அருகில் அமைந்துள்ளது.</div><div>இக்கோவில் இரண்டாம் நரசிம்ம பல்லவ மன்னனால் கட்டப்பட்டது.</div><div>இக்கோவிலின் விமானம் 60 அடி உயரம் உடையது. இக்கோவிலில் சிவபெருமான், உமையம்மை, குமரக்டவுள், விநாயகப் பெருமான் ஆகியோர் உள்ளனர்.</div><div><br></div><div>கோபுர அமைப்பு..</div><div>ஆலய நுழை வாயிலில் நம்மை வரவேற்பது இராஜ கோபுரம். இராஜ கோபுரத்தை ஸ்துல லிங்கம் என்று கூட கூறுவார்கள். ஆலயத்தின் உள் இருக்கும் கோபுரங்கள் எல்லாம் உயர்ந்திருக்கும். இப்படி உயர்ந்து இருப்பதால், நெடுந்தூரத்திற்கு அப்பால் இருந்தும் கோபுரத்தை காணலாம். கோபுரத்தையே தெய்வ சொரூபமாக எண்ணி வணங்குவார்கள். தூரத்தில் இருப்பவர்களுக்கும் இறைவனின் நினைவு கூறவே கோபுரம் அமைக்கப்பெற்றது. கோபுரத்தின் தளங்கள், கோபுர நிலைகள் என்று அழைக்கப்படும்.</div><div><br></div><div>கருவறை சிறியதாகவும், கோயில்களின் மையப்பகுதியிலும் அமையும். கருவறைக்கு முன்பாக அர்த்த மண்டபம், அதற்கு முன்பாக ஸ்தபன மண்டபம், அதற்கும் வெளியே மகா மண்டபம் ஆகியன காணப்படும். உள்ளிருக்கும் பிரதான தெய்வத்தைப் பொறுத்து வாகனம் இடம் பெறும்.ஒரே கோயில், ஒன்றுக்கு மேற்பட்ட சந்நிதிகள் இருக்கலாம். ஆனாலும் மூலஸ்தானம் என்பது பிரதான தெய்வத்தின கருவறைக்கு வழங்கப்படும். மூலஸ்தானக் கருவறையும், பிற சந்நிதிகளையும் தனித்தனியாக வலம் வரும் அமைப்பு இருக்கலாம்.</div><div><br></div><div>இராஜகோபுரத்தின் கோட்பாடுகள்:</div><div>எல்லா கோபுரஙகளிலும் உயரமானது இராஜ கோபுரம். கருவறையின் மீது அமைக்கப்படும் சிகரம், விமானம் எனப்படும். எண்கோண வடிவத்தைக் கொண்தாகவே இவை அமைக்கப்படுகின்றன. இராஜ கோபுரத்தின் அருகில் சென்று அதன் அமைப்பைக் கவனித்தால் சில அதியசங்களைக் காணலாம். கோபுரத்தில் கணக்கற்ற சிறிய, பெரிய சுதையிலான சிற்ப வடிவங்களைக் காணலாம். அவற்றுள் மானிட வடிவங்களையும் காணலாம். இறைவனின் திருவிளையாடல்கள், அற்புதம் நிகழ்த்திய காட்சிகள், தேவர்கள், விலங்குகள், பறவைகள், ஏனைய சிற்றுயிர்கள் அதில் இடம் பெற்று இருக்கும். பிரபஞ்ச அமைப்பில் இவைகளுக்கும் இடமுண்டு என்பது கோட்பாடுகள்.</div><div><br></div><div>சிற்றுயிர்கள், பேருயிர்கள், விலங்கினம், மக்கள் இனம், தேவர் கூட்டம் ஆகிய எல்லோரும் பிரபஞ்சத்தில் இருக்கிறார்கள், அண்டத்தினுள் இன்னது இருக்கிறது என்று எல்லாப் படித்தரங்களிலும் உள்ள அனைத்தும் அங்கு இடம் பெற்றிருக்கும். இக்கோட்பாட்டை இராஜகோபுரம் உருவகப்படுத்தி விளக்குகிறது. இயற்கையின் நடைமுறையின் புறச்சின்னமாகப் பெரிய கோபுரம் அமைந்திருக்கிறது என்றால் இயற்கையில் உள்ளவைகளை எல்லாம் அதன் மூலம் விளக்கம் பெற்றுள்ளன.</div><div><br></div><div>யோகியின் உடலமைப்புப் போலவே கோயில் அமைப்பு..</div><div><br></div><div>ஒரு யோகியின் உடலமைப்புப் போலவே கோயில் அமைப்பு காணப்படுகிறது. மனிதனுடைய உடலமைப்பை ஆதாரமாகக் கொண்டே திருக்கோவில்கள் கட்டப்பட்டு, வழிபாட்டுக்கு உரிய அமைப்பாக மதிக்கப்படுகின்றன.</div><div><br></div><div>கொடிக்கம்பம்..</div><div>கொடிக்கம்பம் உள்ளிருக்கும் தெய்வத்தையும், தெய்வத்தை வணங்குவதால், உண்டாகும் மகிழ்ச்சியையும் சுட்டுகிறது. கொடிமரத்துக்குக் கீழ் வாகனம் இருக்கும்; இது ஆன்மாவைச் சுட்டு; ஆன்மாவான வாகனம் தெய்வத்தைப் பார்த்தபடி காணப்படும்.</div><div>குண்டலினி சக்தி உறங்கிக் கிடக்கும் மூலாதாரமே கொடி மரமாகச் சித்திரிக்கப்பட்டு, ஸ்தாபிதம் செய்யப்பட்டுள்ளது. கொடி மரத்தில் காணப்படும் 32 வளையங்கள், மனித உடலின் முதுகுத் தண்டிலுள்ள 32 எலும்புகளைக் குறிப்பதாகும். மேலும் மனிதனுடைய முப்பத்து இரண்டாவது வயதில்தான் அறிவுப் பல் முளைக்கிறது.</div><div><br></div><div>கருவறை...</div><div><br></div><div>கோயிலின் மையப்பகுதியாக உள்ள கருவறையில், தெய்வ திருமேனி இருக்கும். கருவறை, மனித இதயத்தைக் குறிப்பதாகும். கருவறையில் இருப்பது போல், இறைவன் இதயத்தில் இருக்க வேண்டும். கோவில்களும், கோயில் கட்டுமானமும் வளர்ச்சி பெறப் பெற, கலை, பண்பாடு, வாழ்வியல் ஆகிய பல்வேறு துறைகளும் கோயில்களோடு இணைக்கப்பட்டுள்ளன.</div><div><br></div><div>எண்ணங்களின் பிறப்பிடமாக விளங்கும் கொப்புள் ஸ்தானத்தில் சிவனுடைய வாயிற் காப்போனாகிய நந்தியைப் பிரஷ்டை செய்வதன் மூலம் எண்ணங்களை அடக்கி, மனதினைத் தூய்மைப்படுத்த வேண்டும் என்பது உணர்த்தப்படுகிறது. கர்ப்பக்கிரகம் அல்லது மூலஸ்தானத்தைப் பிரம்ம கபால உருவில் அமைப்பது வழக்கம். புருவ மத்தியில் ஆக்ஞா சக்கரத்தில் ஆன்ம நேய ஒருமைப்பாடு ஏற்படும் பொழுது ஆன்ம ஒளி ஏற்படும் என்பதைக் குறிக்கவே லிங்கம் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது.</div><div><br></div><div>ஞானிகள், முனிவர்கள், சித்தர்கள் சிறந்த கோயில்களையும், அதில் தெய்வ திருவுருவச் சிலைகளையும் ஏற்படுத்தும் முறைகளை வகுத்துக் கொடுத்து, கோயில் திசை நான்கிலும் விண்ணை முட்டும் பெரிய கோபுரங்களை நிர்மாணித்து அவற்றின் சக்தியால் உயிர்கள் நல்ல முறையில் வாழும் அமைப்பை ஏற்படுத்தி கொடுத்தார்கள்.</div><div>கோயில் இல்லாத ஊரில் குடியிருக்க வேண்டாம். ஆலயம் தொழுவது சாலவும் நன்று என்ற முன்னோர்களின் பொன் மொழிகள் இதன் பயன் கருதி கூறியவை.</div><div><br></div><div>கோபுர தரிசனம் கோடி புண்ணியம்..</div><div><br></div><div>ஆகம விதிப்படி கோயில் நிர்மாணித்து, அபிஷேகிக்கப்பட்டு, காலம் தவறாது புணர் கும்பாபிஷேகம் செய்யப்பட்டு வழிபாடு நடந்து கொண்டிருக்கிற கோயில்களில் உள்ள கோபுரங்களின் மேல் தங்கத்தாலும், செம்பினாலும் செய்யப்பட்ட கலசங்கள் தனது கூரிய முனை வழியாக ஆகாயத்தில் உள்ள உயிர் சக்தி என்று அழைக்கப்படும் பிராண சக்தியைக் கிரகித்து வெளிவிடுகிறது. அந்த சக்தியை நம் உடல் பெறுவதால் புத்துணர்ச்சி, புது உணர்வு, உள்ளத் தூய்மை, ஆன்மீக ஈர்ப்பு, நோயின்மை, நோய் எதிர்ப்பு சக்தி அடைகிறோம். இதனால்தான் கோபுர தரிசனம் கோடி புண்ணியம் என்று நம் முன்னோர்கள் கூறினர்.</div><div><br></div><div>பிராண சக்தி..</div><div><br></div><div>கர்ப்பக்கிரக கோபுரத்தின் மேல் வைக்கப்பட்டுள்ள கலசங்கள் அதே போல் பிராண சக்தியை கிரகித்து கலசத்தின் நேர் கீழே உள்ள இறை பீடத்திற்கு இடையறாது அனுப்பி கொண்டிருக்கிறது. இந்த சக்தி பீடத்தின் அடியில் உள்ள தங்கத்தாலும், வெள்ளியினாலும் செய்யப்பட்ட மந்திர சக்கரங்கள், யந்திரங்கள் தன்பால் இழுத்து தான் அமையப் பெற்றிருக்கும் தன்மைக்கு ஏற்ப பீடத்தின் மேல் தன் சக்தியை வெளிப்படுக்கிறது.</div><div><br></div><div>இந்த பிராண சக்தியின் அளவை மேலை நாட்டு விஞ்ஞானி போவிஸ் கண்டு பிடித்துள்ளார். இதிலிருந்து வெளிப்படும் சக்தியை (14 ஆயிரம் உயிர் சக்தி) நம் உடலில் உள்ள உயிர் அணுக்களை தாக்க இயலாது. எனவே தான் பீடத்தின் மேல் அமைக்கப்பட்டுள்ள திருவுருவச் சிலை அந்த சக்தியை பிரித்து ஒன்பது முனைகள் வழியாக வெளியேற செய்கிறது. அந்த சக்தி கர்ப்பக்கிரத்தின் வாயில் வழியாக வெளியே வருகிறது. அப்போது அங்கு இறைவனை வணங்கி கொண்டுள்ள நம் மீது படுகிறது. இதனால் நமக்கு ஆன்மீக உணர்வு, புத்துணர்வு, புத்துணர்ச்சியை ஏற்படுத்தி நம்முள்ள கவலைகள், பிரச்சனைகள், உடல் நோய்களைப் போக்கி ஆனந்தத்தை கொடுக்கிறது.</div><div><br></div><div>கர்ப்பக்கிரத்தில் கிழக்கு அல்லது வடக்கு திசைகளில் நீர் செல்லும் பொருட்டு ஓர் துவாரம் அமைக்கப்பட்டு இருக்கும். இந்த துவாரத்தின் வழியே செல்லும் நீரிலும் பிராண சக்தி கலந்து வெளிப்படுகிறது. அங்கு அமைக்கப்பட்டுள்ள சதுர வடிவ தொட்டியில் விழும் நீரைக் கோயிலை வலம் வரும் நாம் எடுத்து கண்ணிலும், சிரசிலும் ஒற்றிக் கொள்கிறோம். அந்த சில நிமிடங்களில் நம் மீது பிராண சக்தி பரவுகிறது.</div><div><br></div><div>விஞ்ஞானத்தின் அடிப்படை..</div><div><br></div><div>இந்த பிராண சக்தி வெளிப்பட்டு கொண்டு இருப்பதால் தான் சிலையின் குறுக்கே செல்லக்கூடாது. சிலையின் பக்கவாட்டில்தான் செல்ல வேண்டும். சிலையை விட்டு விலகி நிற்பதுடன், அபிஷேகம் செய்யும் போது கைகள் சிலைக்கு மேல் செல்லக் கூடாது. ஒரு காலை வெளியிலும், மறுகாலை கர்ப்பக்கிரத்தின் வாயிலும் வைக்ககூடாது. கர்ப்பக்கிரகத்திற்குள் இரும்பாலான எந்த பொருளையும் பயன்படுத்த கூடாது என முன்னோர்கள் விஞ்ஞானத்தின் அடிப்படையில்தான் கூறியுள்ளனர்.</div><div><br></div><div>தமிழ்நாட்டு கோயில்களில் சித்தர்கள் சமாதி...</div><div>சித்தர்கள் சமாதி அடைந்த கோயில்களில் இந்த இறைவுணர்வும், ஈர்ப்பு சக்தியும் அதிகமிருப்பதை நாம் உணரமுடியும்......<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhgYdfFnTK4ALxSHhQcd_e_eCXpoCxGy2tf9zzSfdUOoXs-HfSZHMSTLSJN413_el8ra5MZzYM5R5U6XLvZiHxa0_ao1r38xsyXoOomxwuSqTMV0LtDP98DFqjjbRvyaDNqJr34NB_H4mcb/s1600/1589623103108217-0.png" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;">
<img border="0" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhgYdfFnTK4ALxSHhQcd_e_eCXpoCxGy2tf9zzSfdUOoXs-HfSZHMSTLSJN413_el8ra5MZzYM5R5U6XLvZiHxa0_ao1r38xsyXoOomxwuSqTMV0LtDP98DFqjjbRvyaDNqJr34NB_H4mcb/s1600/1589623103108217-0.png" width="400">
</a>
</div><div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiBjGx9wgAFjCDzK-Hf4znpyMtvAuUavBXy68gZ-u6HIZkiAeovuFKk0SmR4DuPYvGVPEFCiUAXxRSWNmx-HQX_LBVUaO6W7nPAzIfYb_1wv_fU6zb-DMobXf8f2fBXRjRVnflXt0p9jDO9/s1600/1589623092108483-1.png" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;">
<img border="0" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiBjGx9wgAFjCDzK-Hf4znpyMtvAuUavBXy68gZ-u6HIZkiAeovuFKk0SmR4DuPYvGVPEFCiUAXxRSWNmx-HQX_LBVUaO6W7nPAzIfYb_1wv_fU6zb-DMobXf8f2fBXRjRVnflXt0p9jDO9/s1600/1589623092108483-1.png" width="400">
</a>
</div><div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgBeuFHuP2TtnvAO8ZLevDDD0S0QdBXL4xMVjMXe2iSnmhYDd79qfff0UiDql3hafpW4tM9NBZA2CfbH7F1JlNHWx7XH_YY4v02GdXu8RHx-xNmDcN3OXvYVYeJ_WUyNoHLvy_UB8pMvT3h/s1600/1589623068383705-2.png" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;">
<img border="0" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgBeuFHuP2TtnvAO8ZLevDDD0S0QdBXL4xMVjMXe2iSnmhYDd79qfff0UiDql3hafpW4tM9NBZA2CfbH7F1JlNHWx7XH_YY4v02GdXu8RHx-xNmDcN3OXvYVYeJ_WUyNoHLvy_UB8pMvT3h/s1600/1589623068383705-2.png" width="400">
</a>
</div></div>SASIKALA DHANASEKARANhttp://www.blogger.com/profile/11716959431566964164noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-2850277381022175263.post-68719787762515932372020-05-16T15:24:00.001+05:302020-05-16T15:24:50.764+05:30உன் திருவிளையாடலை நான் அறியேனே<div>சந்தேகக் குறி</div><div><br></div><div>பாகவதமோ, பகவத் கீதையோ, கிருஷ்ணனை பற்றியவையே. பாகவதம் அவனை, அவன் லீலையை அடையாளம் காட்டுகிறது. பகவத் கீதை அவன் சொல்லை செவி வழியாக சிந்திக்க செய்கிறது. கீதை அவன் வாக்கை நம் வாழ்க்கையாக்குகிறது.</div><div><br></div><div>கீதையை ஏதேனும் அரை அத்தியாயம் ஒரு நாள் படித்தாலே போதும், துயரம், துன்பம், தீமைகள் விலகும். ஒரு சின்ன கதையோடு இன்றைய கட்டுரை முடியட்டும்.</div><div><br></div><div>ஒரு ஏழை பிராமணன் கங்கைக்கரையில் மனைவியோடு வசித்து வருபவன் தினமும் கீதை பாராயணம் செய்து விட்டு உஞ்சவிருத்தி செல்வான். கிடைத்ததை மனைவியிடம் கொடுத்து, அன்றைய உணவை கிருஷ்ணனுக்கு நைவேத்யம் பண்ணி விட்டு இருவரும் சாப்பிடுவது வழக்கம். </div><div><br></div><div>வழக்கம் போல் அன்று கீதையைப் பாராயணம் பண்ணும் போது ஒன்பதாம் அத்தியாயத்தில் ''யோக க்ஷேமம் வஹாம்யஹம்'' என்ற இடம் வந்தது. திடீரென்று இன்று அவனுக்கு ஒரு சந்தேகம்.</div><div><br></div><div>இந்த உலகத்தில் கோடானு கோடி பேர் இருக்கிறார்கள். அவ்வளவு பேரையும் கிருஷ்ணன் எப்படி நான் ரக்ஷிக்கிறேன் என்று சொல்கிறான். தானே ஒவ்வொருவரின் கஷ்டத்தையும் அறிந்து நேரில் சென்று போக்குவது என்பது முடிகிற காரியமா? </div><div><br></div><div>எல்லோரின் கஷ்டத்தையும் கிருஷ்ணன் தனி ஒருவனாக எப்படி சுமப்பான்?. அவர்களை சோகத்திலிருந்து, துன்பத்திலிருந்து எவ்விதம் விடுவிப்பான்? உலகில் எங்கும் அங்கங்கே அவன் நியமிக்கும் வேறு யார் மூலமாகவோ ஒரு வேளை நிவர்த்திப்பானோ? நான் பாதுகாக்கிறேன் என்றால் அது தான் அர்த்தமா? </div><div><br></div><div>திரும்பி திரும்பி படித்தும் அவனுக்கு இது விளங்கவில்லை. இதை விடக்கூடாது எப்படி என்று புரிந்து கொள்ளவேண்டும் என்று தீர்மானித்து சிகப்பு வர்ணத்தில் ஒரு x அந்த அந்த அத்தியாயத்தில் ஸ்லோகத்தின் மேல் குறி வைத்தான். புத்தகத்தை மூடினான். சொம்பை ஜால்ராவை எடுத்துக் கொண்டு வழக்கம் போல உஞ்ச விருத்திக்கு சென்றுவிட்டான்.</div><div><br></div><div>அந்த ஏழை பிராமணனின் போறாத காலமோ, துரதிர்ஷ்டமோ அன்றைக்கு பார்த்து ஒருவீட்டிலும் யாரும் அவனுக்கு தானியங்கள் பிக்ஷை அளிக்கவில்லை. ஏதோ ஒரு காரணம் ஒவ்வொருவரும் சொன்னார்கள்.</div><div><br></div><div>பிராமணன் வழக்கமான தெருக்களில் அலைந்துகொண்டிருந்த சமயம் யாரோ ஒரு சிறு பையன் பிராமணன் வீட்டு கதவைத் தட்டினான். பிராமணன் மனைவி வாசல் கதவை திறந்த போது. அழகான அந்த சிறுவன் தலையிலிருந்து ஒரு பெரிய மூட்டையை இறக்கி வீட்டில் வைத்தான்.</div><div><br></div><div>யார் அப்பா நீ ? என்ன இதெல்லாம்? அட்ரஸ் தப்பா இங்கே வந்து விட்டாய் போல இருக்கிறது?</div><div><br></div><div>''இல்லேம்மா, நான் இங்கே இருக்கிறவன் தான். இது என் குருநாதர் வீடு. அவர் எனக்கு கட்டளை இட்டதால் அவருக்கு தேவைப்பட்ட சாமான்கள் இதெல்லாம் கொண்டு வந்திருக்கிறேன்.''</div><div><br></div><div>மூட்டை நிறைய , பருப்பு, மாவுகள், அரிசி, சமையல் சாமான்கள், எண்ணெய்கள், நெய் எல்லாமே இருந்தது. தாராளமாக மூன்று மாதத்திற்கு அவர்கள் ரெண்டு பேருக்கு சமையலுக்கு தேவையானவை.</div><div><br></div><div>''நான் இங்கே உன்னை பார்த்ததில்லையே அப்பா. எங்களுக்கு இதெல்லாம் வேண்டாமப்பா. அவருக்கு தெரியாமல் இதை நான் ஏற்க மாட்டேன். என்னை கோபிப்பார்''</div><div><br></div><div>அம்மா ஒருவேளை உங்களுக்கு நான் இங்கே வருவதும் தெரியாது போவதும் தெரியாது. குருநாதருக்கு தெரியும். இதோ பாருங்கள் நான் மூட்டையை சுமந்து மெதுவாக நகர்கிறேன் என்று என் மேல் இடது பக்கமும் வலது பக்கமும் பலமாக முதுகில் அடித்திருக்கிறார். </div><div><br></div><div>என் முதுகில் பாருங்கள் தெரியும். குரு பத்னி அவன் அழகிய முதுகில் பார்த்தாள் . X என்று சிவப்பாக அவள் கணவன் அடித்ததின் அடையாளம். அவள் திகைத்தாள். ஏன் என் கணவர் இவ்வாறு இந்த சிறுவனிடம் அவ்வளவு கொடுமையாக நடந்து கொண்டார். இப்படிப்பட்டவரா என் கணவர்? பார்ப்பதற்கு சாது மாதிரி இருக்கிறாரே! . </div><div><br></div><div>''என் குழந்தை நீ இங்கே வாடா என்று அந்த சிறுவனை உள்ளே அழைத்து முதுகைத் தடவி, தேங்காய் எண்ணெய் தடவி, அவனுக்கு உணவளித்தாள். அவர் வரும் வரை ஓய்வெடு என்றதும் அவன் பூஜை அறையில் போய் படுப்பதாக சொல்லி உள்ளே சென்றான்.</div><div><br></div><div>ரொம்ப நேரம் கழித்து களைப்பாக எங்கும் அன்று உணவு பதார்த்தங்கள், தானியங்கள் பிக்ஷை எதுவும் கிடைக்காமல் பிராமணர் விசனத்தோடும் வெறும் கையோடும் வீடு திரும்பினார். </div><div><br></div><div>அவர் தலையைக் கண்டவுடன் முதல் கேள்வியாக அவரை எதுவும் பேச விடாமல் சரமாரியாக அவள் அந்த அழகிய சிறுவன், சிஷ்யனா, அவர் எப்போது அவனிடம் சாமான்கள் கேட்டு கொண்டு வர சொன்னார் . அவன் சாமான்களை தூக்க முடியாமல் தூக்கி வந்தது. அவன் மெதுவாக நடந்ததால் முதுகில் பிரம்பால் குறுக்கும் நெடுக்குமாக அவர் அடித்த சிவந்த அடையாளம் எல்லாம் சொல்லி ஏன் அவனை அடித்தீர்கள் என்று காரணம் கேட்டாள் .</div><div><br></div><div>பிராமணருக்கு தலை சுற்றியது.</div><div><br></div><div>''எனக்கு சிஷ்யனா? நான் சாமான் கேட்டேனா? அவன் மெதுவாக நடந்ததால் முதுகில் அடித்தேனா? என்னம்மா உளறுகிறாய். நீ சொல்வது எதுவுமே நடக்கவில்லையே. எனக்கு யாரும் சிஷ்யனே கிடையாதே. நான் சாமான் கேட்கவில்லையே, அடிக்கவில்லையே''.</div><div><br></div><div>''நீங்கள் அடித்தீர்கள் என்று முதுகை காட்டினானே X என்று சிவப்பாக அடையாளம் இருந்ததே. சின்ன குழந்தை அவன் பொய் சொல்லவில்லை. நான் முதுகில் தேங்காய் எண்ணெய் தடவினேன். என் கண்களில் நீர் பெருகியதே. ''</div><div><br></div><div> ''இல்லை என் கிருஷ்ணன் சாட்சியாக எனக்கு அவனைத் தெரியவே தெரியாது, நான் அடிக்கவில்லை'' என்கிறார்.</div><div><br></div><div>''இதோ பூஜை அறையில் தான் இருக்கிறான் போய் பாருங்கள் '. ஓடினார். வீடு முழுதும் தேடினார். அவனைக் காணோம்.</div><div><br></div><div>பிராமணருக்கு புரிந்துவிட்டது. வந்தது கிருஷ்ணன் தான். வீட்டில் நிறைய சாமான்கள் வசதியாக நிறைந்திருந்ததே. அவர் வறுமை நீங்கியதே. இது கிருஷ்ணன் லீலை. அவன் மீது நன்றியோடு கீதை புத்தகத்தை எடுத்து மறுபடியும் பாராயணம் செய்ய பக்கத்தை புரட்டினார். காலையில் அவர் சந்தேகத்தோடு போட்ட X குறியைக் காணோம். யார் அழித்தது? </div><div><br></div><div>''கிருஷ்ணா, கோடானு கோடி மக்களின் துயர், சோகம் தீர நான் அருகிலே இருப்பேன் என்று சொல்கிறாயே. உன்னால் அது எப்படி சாத்தியம் என்று சந்தேகப்பட்டேனே. என் வறுமைத் துயர் தீர்க்க நீ என் வீட்டிற்குள் வந்தாய், வறுமையை போக்க உணவளிக்க மளிகை சாமான்களை நிரப்பினாய். உன் காருண்யம் புரிந்தது. உன்னால் முடியும் என்று புரிய வைத்தாய். </div><div><br></div><div>அதற்கு அடையாளமாக நான் போட்ட சந்தேக குறியை முதுகில் தாங்கி என் மனைவிக்கு தரிசனம் தந்தாய். அவள் செய்த புண்யம், அதிர்ஷ்டம் கூட செய்யாத பாவி நான் உன்னை சந்தேகப்பட்டேன்''. </div><div><br></div><div>ஆம் கீதையும் கண்ணனும் ஒன்றே. கீதையை இது எப்படி என்று சந்தேகக்கப்பட்டு அழுத்தி X கோடு போட்டேன், கீதை நீ என்று அறியாத மூடன், அதை உன் மேல் சந்தேகப்பட்டதாக காட்டி முதுகில் வடுவோடு , காயத்தோடு என் மனைவிக்கு காட்டி எனக்கு கண் திறந்தாய். கிருஷ்ணா என்னை மன்னித்துவிடு''.</div><div><br></div><div>எவன் அவனவனுக்கு நியமிக்கப்பட்ட தர்மங்களை, சாஸ்திரங்களை பின்பற்றாமல் மிருக வாழ்க்கை நடத்துகிறானோ, அவன் எதிர்பார்த்தது எதுவும் நடக்காது. </div><div><br></div><div>இன்று முழுதும் உஞ்சவிருத்தியில் ஒரு மணி அரிசி கூட எனக்கு கிடைக்கவில்லையே. இது நிதர்சனமான உண்மை இல்லையா?</div><div><br></div><div>ஸ்ரீ க்ருஷ்ணா உன் திருவடிகளே சரணம் !<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgN41JTDg7Z_FSQcPzgCiB7iUJGEiluxpj4Loeg1MTDvl0g_zU4HxoFy0T3abKjBm6H6Rm3i4-fzIKBSHpbtzlolCxvmFvsw3kIfEpABw2yEKfx6vEZj52HY7EeXaDmTEA6cnlQ2LEx4NEE/s1600/1589622868786308-0.png" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;">
<img border="0" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgN41JTDg7Z_FSQcPzgCiB7iUJGEiluxpj4Loeg1MTDvl0g_zU4HxoFy0T3abKjBm6H6Rm3i4-fzIKBSHpbtzlolCxvmFvsw3kIfEpABw2yEKfx6vEZj52HY7EeXaDmTEA6cnlQ2LEx4NEE/s1600/1589622868786308-0.png" width="400">
</a>
</div></div>SASIKALA DHANASEKARANhttp://www.blogger.com/profile/11716959431566964164noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-2850277381022175263.post-71621314117001679252020-05-15T23:03:00.001+05:302020-05-15T23:03:24.163+05:30சாக்குபை லிங்கம்<div>#சாக்குப்பைக்குள்_சங்கரன்</div><div><br></div><div>#வியாபாரி ஒருவர், தினமும் சிவதரிசனம் செய்த பின்பே சாப்பிடுவார். ஒருமுறை, தன் மைத்துனருடன் வியாபார விஷயமாக வெளியூர் சென்றார். </div><div>பயணக் களைப்பால் ஒரு காட்டில் தங்கி கண்ணயர்ந்தனர். வியாபாரிக்கு முன்பாகவே எழுந்த மைத்துனர், ஓடையில் குளித்து விட்டு கட்டுசாதத்தை சாப்பிட்டார். </div><div><br></div><div>#தன்_மாமா, சிவதரிசனம் செய்யாமல் சாப்பிடமாட்டார். இந்த காட்டுக்குள் சிவன் கோவிலுக்கு எங்கே போவது என்று யோசித்த மைத்துனர், ஒரு சாக்கில் மண்ணை நிரப்பி, சிவலிங்கம் போல் வடிவமைத்து, காட்டுப்பூக்களால் அலங்கரித்து, ஓரிடத்தில் மண்ணைத் தோண்டி நட்டு வைத்தார். </div><div>பார்ப்பதற்கு அசல் சிவலிங்கம் போலவே இருந்தது.</div><div><br></div><div>#வியாபாரி எழுந்ததும், ''மாமா! நீங்கள் சிவதரிசனம் செய்யாமல் சாப்பிட மாட்டீர்கள். ஆனால், உங்கள் அதிர்ஷ்டம்... பக்கத்திலேயே ஒரு சிவலிங்கம் இருக்கிறது. அதை வணங்கியபின் சாப்பிடுங்கள்,'' என்றார். 'எங்கும் சிவமயம்' என்று மகிழ்ந்த வியாபாரியும், தன் மைத்துனர் காட்டிய இடத்திற்கு சென்றார். சிவலிங்கத்தை தரிசித்தார். பின் சாப்பிட்டார். </div><div><br></div><div>அப்போது தான் மைத்துனர், ''மாமா! சிவதரிசனம் செய்யாமல் சாப்பிடமாட்டீர்கள் என்பதற்காக, ஒரு சாக்குப்பையில் மண்நிரப்பி நிஜலிங்கமென உங்களை நம்ப வைத்து விட்டேன். உங்கள் உடல்நலம் கருதி செய்த இந்த தவறை மன்னிக்க வேண்டும்,'' என்றார்.</div><div><br></div><div>''என்ன சொல்கிறீர்கள் மைத்துனரே! நான் பார்த்தது நிஜமான லிங்கத்தை தான். என் சிவனையே லிங்க வடிவில் தரிசித்தேன்” என்றார் உறுதியாக. </div><div><br></div><div>“நம்ப மாட்டீர்களா... சாக்குப்பையை மண்ணில் நட்டு வைத்தது நான் தான்,” </div><div><br></div><div>என்ற மைத்துனர், அங்கே சென்று சாக்குப்பையை எடுக்க முயன்றார். ஆனால் அது அசையக்கூட இல்லை. அங்கே நிஜமான லிங்கம் எழுந்தருளி இருந்ததைக் கண்ட மைத்துனர் மூச்சடைத்துப் போனார். அவரது கண்களில் ஆனந்தக் கண்ணீர் பெருகியது. </div><div><br></div><div>இந்த சம்பவம் நிகழ்ந்த இடம் திருப்பூர் மாவட்டம் சேவூர் அருகிலுள்ள கூழைய கவுண்டன் புதூரில் ஆகும். இங்கு மொக்கணீஸ்வரர் கோவில் உள்ளது. மொக்கணி என்றால் 'சாக்குப்பை'. மாணிக்கவாசகர், இந்த லிங்கத்தின் பெருமையை, 'மொக்கணி அருளிய முழுத்தழல் மேனி' என்று போற்றுகிறார்.</div><div><br></div><div><div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgfXvasKLDQHRbhPcLeJQoBFq3cuQS4-9oDFjnsdPwKlfQ6pTq5DWbweF65IXtdoUJv1OgkiJkTFDBtHUAWoe-RA6ORpjOVTcFW8HJxHBpxICkukFJ72TYiyUJIA5IpO8YiZZCwugqO4VYK/s1600/1589563994905055-0.png" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;">
<img border="0" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgfXvasKLDQHRbhPcLeJQoBFq3cuQS4-9oDFjnsdPwKlfQ6pTq5DWbweF65IXtdoUJv1OgkiJkTFDBtHUAWoe-RA6ORpjOVTcFW8HJxHBpxICkukFJ72TYiyUJIA5IpO8YiZZCwugqO4VYK/s1600/1589563994905055-0.png" width="400">
</a>
</div><br></div>SASIKALA DHANASEKARANhttp://www.blogger.com/profile/11716959431566964164noreply@blogger.com5tag:blogger.com,1999:blog-2850277381022175263.post-49946747182121876382020-05-15T18:38:00.000+05:302020-05-15T18:38:44.272+05:30<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<table cellpadding="0" cellspacing="0" class="uiGrid _51mz conversationContainer" role="log" style="background-color: #edeff4; border-collapse: collapse; border-spacing: 0px; border: 0px; font-family: Helvetica, Arial, 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; height: 875px; table-layout: fixed; width: 241px;"><tbody>
<tr class="_51mx"><td class="_51m- vBot _51mw" style="font-size: 12px; padding: 0px; vertical-align: bottom;"><div aria-atomic="false" aria-live="polite" class="conversation" id="u_0_13" style="padding-top: 3px;">
<div class="mhs mbs pts fbChatConvItem _50dw clearfix" style="margin-bottom: 0px; margin-left: 4px; margin-right: 5px; padding-top: 0px; position: relative; zoom: 1;">
<div class="messages" style="margin-left: 40px;">
<div class="clearfix _542q" style="zoom: 1;">
<div class="_5pi7" style="clear: both;">
<div class="_kso fsm direction_ltr _55r0" data-jsid="message" style="-webkit-box-shadow: rgb(220, 224, 230) 0px 1px 0px; background-color: #dbedfe; background-image: -webkit-linear-gradient(bottom, rgb(199, 222, 254), rgb(231, 241, 254)); border-bottom-left-radius: 4px; border-bottom-right-radius: 4px; border-color: rgba(0, 0, 0, 0.180392) rgba(0, 0, 0, 0.180392) rgba(0, 0, 0, 0.290196); border-style: solid; border-top-left-radius: 4px; border-top-right-radius: 4px; border-width: 1px; clear: none; color: #999999; direction: ltr; float: right; line-height: 1.28; margin: 5px 5px 5px 0px; max-width: 171px; min-height: 14px; padding: 4px 5px 3px 6px; position: relative; text-shadow: rgba(255, 255, 255, 0.498039) 0px 1px 0px; white-space: pre-wrap; word-wrap: break-word;" title="10:45am">
<span data-measureme="1">என்னில் நீ தவழவும்
என்மடியில் இளைபாரவும்
உன் சந்ததி என்
பிள்ளைகளாகவும்
பாவிக்கிறேன்
நீ மட்டும்
எனக்கு வாழ
இடமில்லாமல்
என் உயிரை
மாய்க்கிறாயே...
மன்னோடு
புதைக்கிறேயே
எனக்கு உயிர்
தண்ணீர் கூட
தரமனமில்லா
மனிதா
உனக்கு வாழ
நீர் வேண்டுமோ...
என கண்ணீரோடு
இப்படிக்கு மரம்</span></div>
<div class="_kso fsm direction_ltr _55r0" data-jsid="message" style="-webkit-box-shadow: rgb(220, 224, 230) 0px 1px 0px; background-color: #dbedfe; background-image: -webkit-linear-gradient(bottom, rgb(199, 222, 254), rgb(231, 241, 254)); border-bottom-left-radius: 4px; border-bottom-right-radius: 4px; border-color: rgba(0, 0, 0, 0.180392) rgba(0, 0, 0, 0.180392) rgba(0, 0, 0, 0.290196); border-style: solid; border-top-left-radius: 4px; border-top-right-radius: 4px; border-width: 1px; clear: none; color: #999999; direction: ltr; float: right; line-height: 1.28; margin: 5px 5px 5px 0px; max-width: 171px; min-height: 14px; padding: 4px 5px 3px 6px; position: relative; text-shadow: rgba(255, 255, 255, 0.498039) 0px 1px 0px; white-space: pre-wrap; word-wrap: break-word;" title="10:45am">
<span data-measureme="1"> </span></div>
<div class="_kso fsm direction_ltr _55r0" data-jsid="message" style="-webkit-box-shadow: rgb(220, 224, 230) 0px 1px 0px; background-color: #dbedfe; background-image: -webkit-linear-gradient(bottom, rgb(199, 222, 254), rgb(231, 241, 254)); border-bottom-left-radius: 4px; border-bottom-right-radius: 4px; border-color: rgba(0, 0, 0, 0.180392) rgba(0, 0, 0, 0.180392) rgba(0, 0, 0, 0.290196); border-style: solid; border-top-left-radius: 4px; border-top-right-radius: 4px; border-width: 1px; clear: none; color: #999999; direction: ltr; float: right; line-height: 1.28; margin: 5px 5px 5px 0px; max-width: 171px; min-height: 14px; padding: 4px 5px 3px 6px; position: relative; text-shadow: rgba(255, 255, 255, 0.498039) 0px 1px 0px; white-space: pre-wrap; word-wrap: break-word;" title="10:45am">
<span data-measureme="1"><br /></span></div>
</div>
</div>
</div>
</div>
</div>
</td></tr>
</tbody></table>
</div>
SASIKALA DHANASEKARANhttp://www.blogger.com/profile/11716959431566964164noreply@blogger.com2tag:blogger.com,1999:blog-2850277381022175263.post-49555064923135524802020-05-14T16:35:00.001+05:302020-05-14T16:35:18.468+05:30ஆ.உராய்வுக் கல்<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhcn7ohZA1q6icelaq64HuLpADiPr3sG8ZPIIBrSIClBexHDNX-q5aA9Wyo0F0K0Dd2wLwLbtx4CIwOtHM7wOiojPQ9o8fzER1FVcLY7xaaCo5S7Dx9x52wOcOZOQHp7FrdMd-qazOVrvu_/s1600/1589454304392886-0.png" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;">
<img border="0" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhcn7ohZA1q6icelaq64HuLpADiPr3sG8ZPIIBrSIClBexHDNX-q5aA9Wyo0F0K0Dd2wLwLbtx4CIwOtHM7wOiojPQ9o8fzER1FVcLY7xaaCo5S7Dx9x52wOcOZOQHp7FrdMd-qazOVrvu_/s1600/1589454304392886-0.png" width="400">
</a>
</div><div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhuDAVQ2fH5gx2CDxC94c0W_4w5oK5b2B71czaDwmPlG3IWTVn3IN9iRhHMk3Kp4yv87qz0O4IrcuoG5WYKFiFCidAkCmGgNY_63MLmy_blBRLof2d8ptRdcYEMGbs8sOoP4IjBg-9QpIhq/s1600/1589454296087138-1.png" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;">
<img border="0" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhuDAVQ2fH5gx2CDxC94c0W_4w5oK5b2B71czaDwmPlG3IWTVn3IN9iRhHMk3Kp4yv87qz0O4IrcuoG5WYKFiFCidAkCmGgNY_63MLmy_blBRLof2d8ptRdcYEMGbs8sOoP4IjBg-9QpIhq/s1600/1589454296087138-1.png" width="400">
</a>
</div><div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgn2KSDmzKCaIm53SFNIxMIoi2PTVOCPPxoZqyjO94K0qP1DYi_YHms9wIeLyhiJZihXFDjHWCNaE1SlWEj4k0xdHsvoadkZw5IR8OStoirdH7Bxe8ZCAvnlMvC0cxfuzFjbDECqIzdvXHU/s1600/1589454278017547-2.png" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;">
<img border="0" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgn2KSDmzKCaIm53SFNIxMIoi2PTVOCPPxoZqyjO94K0qP1DYi_YHms9wIeLyhiJZihXFDjHWCNaE1SlWEj4k0xdHsvoadkZw5IR8OStoirdH7Bxe8ZCAvnlMvC0cxfuzFjbDECqIzdvXHU/s1600/1589454278017547-2.png" width="400">
</a>
</div><div>"ஆ உராய்வுக்கல்"</div><div><br></div><div>ஆவுரைச்சிக்கல்</div><div>ஆவுரஞ்சிக்கல்</div><div>ஆதீண்டுகுற்றி எனப் பல பெயர்களில், சங்ககாலம் முதல் பகுதிக்கேற்றுவாறு அழைக்கப்படுகிறது.</div><div><br></div><div>"ஆ" - எனும் செல், இலக்கியங்களில் பசுக்களை பொதுவாக கால்நடைகளைக் குறிக்கிறது. இவ்வாறு மாடு உராய்வும்கல்லே, ஆ ஓஞ்சிக்கல்லு, ஆ உறிஞ்சிக்கல்லு என அழைக்கப்படுகிறது.</div><div><br></div><div>உருளைவடிவிலான நீண்ட கற்கள், உயரமான கல்தூண், மரக்கட்டைகளை, கால்நடைகளின் மேய்ச்சல் நிலங்கள், மேய்ச்சல் முடிந்து திரும்பிவரும் பாதைகளில், நீர் அருந்தும் குளங்களில், தெருவோரங்களில் அமைக்கப்படும் நீா்த் தொட்டிகளுக்கு அருகில் அமைக்கப்பட்டு இருக்கும். மாடுகள் தண்ணீர் குடித்த பிறகு, அதன் உடலில் ஏற்படும் தினவை (அரிப்பை) தவிர்க்க ஆவுரைச்சிக்கல்லில் தமது உடம்பைத் தேய்த்துக்கொள்ளும்.</div><div><br></div><div>இவ்வாறு மாடுகள் உராய்ந்து உராய்ந்து நிழல் தரும் மரங்கள் அழிந்து போகாமல் இருக்கவும், கால்நடைகளின் தேவையை உணர்ந்தும் இவ்வகையான அமைப்பு ஏற்படுத்தப்பட்டது. சங்ககாலந்தொட்டு ஆடுமாடுகள் தினவு அடங்க உராய்வதற்கென்று பலகைக் கற்களையும், குத்துக் கற்களையும் நட்டுள்ளனர்.</div><div><br></div><div>இவை பெரும்பாலும் நீர் நிலைகளை ஒட்டியே அமைந்தன.</div>SASIKALA DHANASEKARANhttp://www.blogger.com/profile/11716959431566964164noreply@blogger.com4tag:blogger.com,1999:blog-2850277381022175263.post-65574827837585268322020-05-12T23:59:00.001+05:302020-05-12T23:59:14.123+05:30திருச்செந்துர் கொடிமரம்<div>உங்கள் வாழ்க்கையில் நல்ல திருப்பம் ஏற்பட வேண்டுமா?</div><div><br></div><div>அப்படியென்றால் நீங்கள் அவசியம் </div><div>திருசெந்தூர் ஆலயத்தில் தினமும் அதி காலையில் நடைபெறும் கொடிமர பூசையில் கலந்து கொள்ள வேண்டும்.</div><div><br></div><div>அப்படி என்ன திருசெந்தூர் ஆலய கொடிமர பூஜையில் விசேஷம் உள்ளது என யோசிக்கின்றீர்களா?</div><div><br></div><div>திருச்செந்தூர் ஆலயத்தில் தினமும்</div><div> மூலவர் நடை திறப்பதற்கு முன்பாக முதன்முதலில் ஆலயத்தின் கொடிமரத்துக்குத்தான் </div><div>பூஜை நடைபெறும் .</div><div><br></div><div>இந்த கொடி மரம் பொதிகை. மலையிலிருந்து வரப்பெற்ற </div><div>சந்தன மரமாகும்</div><div><br></div><div>இந்த கொடிமரம் சந்தன கொடிமரம் என்பது பல பேருக்கு தெரியாது.</div><div><br></div><div>இந்த கொடிமரம் திருச்செந்தூர் ஆலயத்திற்கு வந்த வரலாற்றை பற்றி தெரிந்து கொள்வோமா?</div><div><br></div><div>திருச்செந்தூருக்கு கொடிமரம் வந்த கதை!</div><div><br></div><div>முன்னொரு காலத்தில் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் மாசி திருவிழா நடைபெறவில்லை. </div><div><br></div><div>காரணம் அங்கு கொடிமரம் இல்லை. ஆகவே திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கு கொடிமரம் வைக்க வேண்டுமென்று ஊர் கூடி பேசி முடிவெடுத்தனர். </div><div><br></div><div>உடனே ஆறுமுகம் ஆசாரி என்பவர் தலைமையில் 21 பேர் கொண்ட குழு காக்காச்சி மலைக்கு (மேற்கு தொடர்ச்சி மலை) கொடி மரம் வெட்ட கிளம்பினர். </div><div><br></div><div>திருச்செந்தூர் மந்தை அருகே உள் அம்மன் கோயிலில் அந்தக் குழுவினர் வேண்டச்சென்றனர். </div><div><br></div><div>அம்மன் கோயில் முன்பு மற்றவர்கள் நின்று கொண்டனர். </div><div><br></div><div>அம்மனை வணங்க ஆறுமுகம் ஆசாரி மட்டும் கருவறைக்குள் நுழைந்து அம்மனை வணங்கினார்.</div><div><br></div><div>அப்போது அம்மன் கண்களில் இருந்து நீர் வழிந்தது.</div><div><br></div><div>பயந்து போய் படபடத்து போன ஆசாரி, அம்மனே! ஏன் இந்த நிலை. தங்கள் கண்களில் நீர் வழிய காரணம் தான் என்ன? என்று கேட்டார். </div><div><br></div><div>அம்மன் ‘மகனே நீங்கள் செய்யும் பணி நல்ல பணி தான். ஆனால் அந்த பணியில் ஈடுபடும் உன்னை தவிர வேறு யாரும் உயிரோடு திரும்ப மாட்டார்கள். </div><div><br></div><div>அதை நினைத்து தான் எனக்கு வருத்தமாக உள்ளது. இதை நீ அவர்களிடம் சொல்லிவிடாதே. </div><div><br></div><div>இது ஆண்டவன் கட்டளை. இந்த நிலை தெரிந்த காரணத்தினால் தான் என கண்களில் கண்ணீர் வந்தது’ என்று கூறினார்.</div><div><br></div><div>உடனே அதிர்ந்து போன ஆறுமுகம் ஆசாரி அடுத்து என்ன செய்வது என்று தெரியாமல் திகைத்தார். </div><div><br></div><div>இதை வெளியே உள்ளவர்களிடமும் சொல்லக்கூடாது. சொன்னால் தெய்வக்குத்தமாகி விடும். </div><div><br></div><div>அதே நேரம் நம்பி நம்மோடு வருபவர்களை காப்பாற்ற வேண்டும். என்ன செய்ய என்று குழம்பினார். </div><div><br></div><div>ஆயினும் கலங்காமல் முருகன் மீது பாரத்தை போட்டு விட்டு களக்காடு அருகே உள்ள ஏர்வாடிக்கு வந்தார். </div><div><br></div><div>அங்கு சின்னதம்பி மரக்காயர் என்ற மந்திரவாதி ஒருவரை சந்தித்தார். அவரிடம் முருகப் பெருமானுக்கு கொடிமரம் வெட்ட வந்த கதையை கூறி உதவிக்கு கூப்பிட்டனர்.</div><div><br></div><div>சின்னதம்பி மரக்காயரின் மனைவி பாத்திமாபீவி அவரை தடுத்தார். </div><div><br></div><div>"நான் நேற்று முன்தினம் இரவு பயங்கர கனவு கண்டேன். அதில் உமது உயிருக்கு ஆபத்து உள்ளதாக அறிகுறி காட்டுகிறது. </div><div><br></div><div>எனவே கொடிமரம் வெட்ட நீங்கள் செல்ல வேண்டாம”| என்று கூறினாள். </div><div><br></div><div>ஆனால் சின்னதம்பி மரக்காயர் கேட்கவில்லை. மனைவி உடனே அழுதாள், "நமது குடும்பம் உம்மை நம்பித்தான் உள்ளது. தயவு செய்து செல்ல வேண்டாம்” என்று தடுத்து கூறியும் சின்னதம்பி மரக்காயர் கேட்கவில்லை. </div><div><br></div><div>விதி யாரை விட்டது. </div><div><br></div><div>அவர் ஆறுமுகம் ஆசாரி குழுவினருடன் களக்காட்டு </div><div>மலைக்கு சென்றார்.</div><div><br></div><div>அவர்கள் திருச்செந்தூரில் இருந்தே 21 மாட்டு வண்டிகளில் வந்து இருந்தார்கள். </div><div><br></div><div>அந்த வண்டிகள் அணிவகுத்து களக்காடு மலையை நோக்கி சென்றது. </div><div><br></div><div>ஆனால் அவர்களுக்கு தேவையான கொடிமரம் கிடைக்கவில்லை.</div><div><br></div><div>அலைந்து திரிந்து பார்த்தார்கள் பக்கத்தில் எந்த இடத்திலும் சரியான மரம் கிடைக்கவில்லை. </div><div><br></div><div>எனவே காக்காச்சி மலை என்று அழைக்கப்படும் மேற்குத் தொடர்ச்சி மலையான பொதிகை மலை உச்சிக்கு சென்றனர். </div><div><br></div><div>அங்கு அற்புதமான நல்ல </div><div>உயரமான சந்தனமரம் </div><div>ஒன்று இருந்தது.</div><div><br></div><div>''ஆகா இந்த மரம் தான் திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கு ஏற்ற கொடிமரம'' என்றார்.ஆறுமுக ஆசாரி. </div><div><br></div><div>அவர், சின்னதம்பி மரக்காயரிடம் இம்மரத்தை பற்றி கேட்கிறார். ரம்மியமான வாசனையுடன் இருக்கும் அந்த அற்புத மரத்தை குறித்து மை போட்டு பார்க்கிறார் மாந்திரிகரான சின்ன தம்பி மரக்காயர். </div><div><br></div><div>அப்போது அந்த மரத்தில் அடி மரத்தில் சுடலைமாடனும், மேல் முனையில் சங்கடகாரனும் உள்பட 21 தேவதைகள் இருந்தது தெரிய வந்தது.</div><div><br></div><div>அந்த 21 தேவதைகளையும் விரட்டி விட்டு தான் மரத்தினை வெட்ட வேண்டும் என்பதால் அதற்கான ஏற்பாடுகளை செய்ய ஆரம்பித்தனர். </div><div><br></div><div>முதலில் மந்திரம் மூலம் தேவதைகளை விரட்ட மை போட்டார் மரக்காயர்.</div><div><br></div><div>மற்றவர்களை கோடாரி கொண்டு வெட்ட சொன்னார். </div><div><br></div><div>கோடாரி மூலம் வெட்டப்பட்ட மரம் கோடாரியை திருப்பி விட்டது. </div><div><br></div><div>உடனே அந்த கோடாரி மரத்தை வெட்டிய 20 பேர்களின் கழுத்தில் பட்டது. </div><div><br></div><div>அலறியபடி 20 பேரும் ரத்த வெள்ளத்தில் சரிந்தனர். அதை தொடர்ந்து அவர்கள் மரணம் அடைந்தனர். </div><div><br></div><div>இதனால் ஆறுமுக ஆசாரி அதிர்ச்சி அடைந்தார்.</div><div><br></div><div>ஐயோ நான் என்ன செய்வேன்? என்று மந்திரவாதி சின்னதம்பி மரக்காயரிடம் சென்ற போது அவரும் ரத்தம் கக்கி இறந்து இருந்தார். </div><div><br></div><div>அடுத்த வினாடி ஆறுமுக ஆசாரிக்கு என்ன செய்வது என்றே தெரியவில்லை. </div><div><br></div><div>இதற்கிடையில் அந்த மரத்தில் இருந்த 21 மாட தேவதைகளும் மரத்தை விட்டு கீழே இறங்கி ஆறுமுக ஆசாரியை விரட்டியது. </div><div><br></div><div>உயிருக்கு பயந்த அவர் காக்காச்சி மலையை விட்டு ஓடினார். அடுத்து பொதிகை மலைக்கு வந்தார். </div><div><br></div><div>அந்த இடத்தை விட்டு கீழே இறங்கி ஓட ஆரம்பித்தார்.</div><div><br></div><div>இறுதியில் தாமிரபரணி ஆற்றங்கரையில் சொரிமுத்து அய்யனார் கோவிலில் வந்து அய்யனார் காலை பற்றிக் கொண்டு காப்பாற்ற கூறி கத்தினார். </div><div><br></div><div>சொரிமுத்து அய்யனார் 21 மாடதேவதைகளையும் அழைத்து சமாதானம் செய்தார். </div><div><br></div><div>‘முருகன்.. எனது சகோதரன் தான்.. அவன் கோவிலுக்கு தானே கொடிமரம் செல்கிறது. பிறகு ஏன் தடுக்கிறீர்கள்’ என்று கூறினார். </div><div><br></div><div>அதற்கு சுடலைமாடன், சங்கடகாரன் உள்பட 21 மாட தேவதைகளும் நாங்கள் வசிப்பதற்கு இது போன்ற வேறு சந்தன கொடிமரம் இல்லை என்றும்,திருச்செந்தூர் ஆலயத்தில் இந்த கொடிமரம பிரதிஷ்டை செய்யபட்ட பின்பு தங்களை தொடந்து இந்த கொடி மரத்திலேயே வாசம் செய்ய அனுமதி வழங்க வேண்டும் என்றும்,தங்களுக்கு முதல் பூஜை நடத்திய பின்பே மூலவருக்கு பூஜைகள் நடத்த வேண்டும் என்று சொரி முத்தையனாரிடம் வேண்டினர்.</div><div><br></div><div>சொரி முத்தையனாரும் அவர்களது வேண்டுகோளை ஏற்றுக்கொண்டு சுடலைமாடன், சங்கடகாரன் உள்பட 21 மாட தேவதைகளும் </div><div>அந்த சந்தன மரத்தை அவர்களே வெட்டி அதை திருச்செந்தூரில் கொண்டு சேர்த்து ஆலயத்தில் பிரதிஷ்டை செய்ய வேண்டும் என்றும் அவர்களை அந்த கொடிமரத்திலேயே தொடந்து </div><div>வாசம் செய்து கொள்ளும்படியும் உத்தரவிட்டார்.</div><div><br></div><div>அதன்படி சுடலைமாடன், சங்கடகாரன் உள்பட 21 மாட தேவதைகளும் அந்த சந்தன மரத்தை வெட்டினார்கள். </div><div><br></div><div>பின் 21 மாட்டு வண்டியையும் ஒன்றாக கட்டினர். அந்த சந்தன மரத்தை அப்படியே தூக்கி வைத்து திருச்செந்தூர் நோக்கி கொண்டு சென்றார்கள். </div><div><br></div><div>அம்மரமே தற்போது திருச்செந்தூரில் கொடி மரமாக வைக்கப்பட்டுள்ளது. </div><div><br></div><div>சொரி முத்தையனார் உத்திரவின்படி சுடலைமாடன், சங்கடகாரன் உள்பட 21 மாட தேவதைகளும் இந்த கொடிமரத்தில. வாசம் செய்து வருகின்றனர்.</div><div><br></div><div>இப்போதும் திருச்செந்தூர் ஆலய்த்தில் மாசி திருவிழா நடைபெறும் போது ஆடு வெட்டி சுடலை மாடனுக்கும், சங்கடகரகாரனுக்கும் படைத்து விட்டுத்தான் தேர் ஒட வேண்டிய வேலைகளை செய்வார்கள். </div><div><br></div><div>மாசி திருவிழா தேர் ஓடும் போது அதிலேயும் சங்கடகரகாரன் தேர் மேல் ஏறி "சரி போகலாம்" என்று கூறியவுடனேதான் தேர் நகரும்.</div><div><br></div><div>மேற்கண்ட தகவலை "கொடி மரக்காவியம்" என்றும் வில்லுப்பாட்டு கதையில் இருந்து தூத்துக்குடி மாவட்டம் திருவைகுண்டம் அருகில் உள்ள கிளாக்குளம் கிராமத்து வில்லுப்பாட்டு கலைஞர் சண்முக சுந்தரம் கூறியுள்ளார்.</div><div><br></div><div>இந்த கதை நெஞ்சை பதற வைப்பது போல் உள்ளது அல்லவா? </div><div><br></div><div>திருச்செந்தூர் ஆலயத்தில் உள்ள கொடிமரம் பிரமாண்டமானது. </div><div><br></div><div>அதை 21 மனிதர்கள் கொண்டு வருவது என்பது இயலாதது. </div><div><br></div><div>ஆனால் சுடலைமாடன், சங்கடகாரன் உள்பட 21 மாட தேவதைகளும் சேர்ந்து அந்த மரத்தினை வெட்டி </div><div>21 மாட்டு வண்டியையும் ஒன்றாக கட்டி அதில் தூக்கி வைத்து வந்த சம்பவம் ஒரு மலைப்பான விசயமாக இருப்பதாலும் இதை நம்பியே தீர வேண்டும்.</div><div><br></div><div>ஏன் என்றால் இப்போது போல் முன்பு போக்குவரத்து வசதி எல்லாம் கிடையாது. </div><div><br></div><div>எனவே 21 மாட்டு வண்டி நேராக திருச்செந்தூர் நோக்கி வரும் போது சாலையில் தடை எதுவும் இருந்திருக்காது. </div><div><br></div><div>சொரிமுத்து அய்யனாரின் ஆசியுடன் சுடலைமாடன், சங்கடகாரன் உள்பட 21 மாட தேவதைகளும் இன்றளவும் வாசம் செய்து வரும் பொதிகை மலையில் இருந்து கொண்டு வரப்பட்ட சந்தனமரமே தற்போது திருச்செந்தூரில் கொடிமரமாக இருப்பதால் இந்த கொடி மரத்திற்கு முதலில் பூஜைகள் நடைபெற்ற பின்னரே மூலவருக்கான நடை திறக்கபட்டு நிர்மால்யம், அபிஷேகம் மற்ற பூஜை எல்லாம் நடைபெற்று வருகிறது..</div><div><br></div><div>தினமும் காலை ஐந்து மணிக்கு கொடிமரத்துக்கு பூஜைகள் நடைபெறும்போது, இரண்டு பேர் மந்திரத்தை பகிர்ந்து சொல்ல அவர்களுடன் சேர்ந்து மற்றவர்கள் ஒவ்வொரு மந்திரத்தின் முடிவிலும் நமஸ்காரம் செய்வார்கள். </div><div><br></div><div>இதற்கான அனுமதி இலவசம். </div><div><br></div><div>அதிகாலையில ் நடைபெறும் இந்த கொடிமர பூஜையில் கலந்து கொண்டால் சுடலைமாடன், சங்கடகாரன் உள்பட 21 மாட தேவதைகளின் ஆசிகள் கிடைக்கப்பெற்று உங்கள் வாழ்க்கையில் நல்ல திருப்பம் ஏற்படுவது என்பது உறுதி!</div><div><br></div><div>இந்த கொடிமர பூஜையில் நீங்கள் கலந்துகொண்டால் உங்கள் வாழ்க்கையில் நிச்சயமாக நல்ல திருப்பம் உண்டாகும்.</div><div><br></div><div>நம்பிக்கையுடன் இந்த கொடிமர பூஜைக்கு போய் தான் பாருங்களேன்..!<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjGFMF9FtoYQqHUtbYKk_OuO_0nUgdfysEIibbcFPQ910szpZluSFPwjbPHwu4warGDws9DVlIHUIKRNcVMpP9-J6BdkYw0qw7Ak-0hsm6e1OrRg2DSkHHpm_MODi92C0dkSvsMooJvVX-G/s1600/1589308130605038-0.png" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;">
<img border="0" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjGFMF9FtoYQqHUtbYKk_OuO_0nUgdfysEIibbcFPQ910szpZluSFPwjbPHwu4warGDws9DVlIHUIKRNcVMpP9-J6BdkYw0qw7Ak-0hsm6e1OrRg2DSkHHpm_MODi92C0dkSvsMooJvVX-G/s1600/1589308130605038-0.png" width="400">
</a>
</div><div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhJockoqgi2Z159RcQcwvxdhtlfhhb4c00DNXdWYnejsz8o4BkRbM4SQ5mRr1J1K7lV-CZLq8vtUD2TA2mXrsrEx_dtKfGwoY83KAGoeFZ8wjR-2XSHJApAsUl94MdR1Zmljrr8SukSAig_/s1600/1589308099864286-1.png" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;">
<img border="0" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhJockoqgi2Z159RcQcwvxdhtlfhhb4c00DNXdWYnejsz8o4BkRbM4SQ5mRr1J1K7lV-CZLq8vtUD2TA2mXrsrEx_dtKfGwoY83KAGoeFZ8wjR-2XSHJApAsUl94MdR1Zmljrr8SukSAig_/s1600/1589308099864286-1.png" width="400">
</a>
</div><div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhpC-P43G-sOzTvzO_CvSct7uYl4LTnsRShQwZf9_xe1ivQlE2MH4cyh5N5Mgj-bNxkyiN7rTvYKEdrKOEEeEPsKEgegZ4HWvUgRDK0tv9_XdVvsp2-upCzT3bHN-s5gqcWMOvuiCiAVnRK/s1600/1589308054918354-2.png" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;">
<img border="0" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhpC-P43G-sOzTvzO_CvSct7uYl4LTnsRShQwZf9_xe1ivQlE2MH4cyh5N5Mgj-bNxkyiN7rTvYKEdrKOEEeEPsKEgegZ4HWvUgRDK0tv9_XdVvsp2-upCzT3bHN-s5gqcWMOvuiCiAVnRK/s1600/1589308054918354-2.png" width="400">
</a>
</div></div>SASIKALA DHANASEKARANhttp://www.blogger.com/profile/11716959431566964164noreply@blogger.com4tag:blogger.com,1999:blog-2850277381022175263.post-14280713890373381192020-05-10T23:06:00.001+05:302020-05-10T23:06:48.858+05:30இரமணரும் அவர் தாயாரும்<div>பெற்ற அன்னைக்கு மோட்சம் அளித்த மகன்</div><div><br></div><div> அன்னை அழகம்மை தன் மகன் ரமணருடன் கடைசிக் காலத்தில் சுமார் ஆறு</div><div>வருடங்கள் தங்கியிருந்தார் . தன் மகன் மடியிலே</div><div>உயிர் விடவேண்டும் என்ற ஆசைப்பட்டாள் .</div><div>பகவானை விட்டு வெளியில் எங்காவது சென்று அங்கேயே உயிர் பிரிந்து விடுமோ</div><div>என்று அச்சம் அடைந்தாள் . அதனால் மகனை</div><div>விட்டு எங்கும் செல்வது இல்லை .</div><div><br></div><div> 1922 மே மாதம் அழகம்மையாரின் உடல்</div><div>நிலைமை கவலைக்கிடமானது . பகவான் தன்</div><div>தாயின் அருகிலேயே அமர்ந்திருந்தார். அப்போது</div><div>தனது வலது கரத்தை அன்னையின் வலது</div><div>புறத்தில் ஆன்மீக ஹ்ருதய ஸ்தானத்தின் மேலும் இடது கரத்தை உச்சந்தலையின் மீதும்</div><div>வைத்திருந்தார் . அதாவது அவள் மூச்சு வாங்க ஆரம்பித்த முதல் பிராணன் போய் சில வினாடிகள் ஆகும் வரை காலை எட்டு மணி</div><div>முதல் இரவு எட்டு மணி வரை தன் தாயை</div><div>விட்டு அகலாமல் கைகளையும் எடுக்காமல்</div><div>அமர்ந்திருந்தார் . அச்சமயம் பக்தர்கள்</div><div>அருணாசல அட்சரமணமாலை பாராயணம்</div><div>செய்தனர் .</div><div><br></div><div> திரண்டு எழும்பிய கடந்த பல ஜென்மங்களின் பூர்வ வாசனைகள் வெளியே செல்லாமல் ஆன்ம ஹிருதயத்தில் அடங்கி ஒடுங்குவதற்காகத்தான் இப்படி கையை வைத்திருந்தார் . எண்ணங்கள் உதித்த இடத்தில்</div><div>ஒடுங்கினால்தான் முக்தி . தாயின் ஜென்ம</div><div>வாசனைகள் மகனால் அழிக்கப்பட்டு விட்டது .</div><div>மஹா சாந்தத்தில் மஹாசமாதி பெற்றுவிட்டது .</div><div><br></div><div> அம்மாவின் மூச்சு அடங்கியபின் அவளுடைய</div><div>முகம் ஒரு தெய்வீக ஒளியுடன் பிரகாசித்தது .</div><div>உயிரற்ற பிணம் போலில்லாமல் தியானத்தில்</div><div>இருக்கும் யோகினியைப் போல் விளங்கியது .</div><div>அவள் மரணமடைந்த வினாடியில் உலோகத்தை</div><div>போன்ற ஒரு சப்தம் கேட்டது .</div><div><br></div><div> தீட்டு ஒன்றும் இல்லை , அனைவரும்</div><div>சாப்பிடலாம் என்றார் . பின் பக்தர்கள்</div><div>அனைவருடன் பகவானும் உணவருந்தினார் .</div><div><br></div><div> ஞானத்தில் ஆண் , பெண் பேதமில்லை .</div><div>பின்னர் அன்னைக்கு சமாதி வைப்பது</div><div>என்று முடிவு செய்யப்பட்டது .<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEivS5VrrEo1LyYv4rG-Pnk91wVinnQrsM2gyI1GwOpGgzCqIHbSsy_zpXlfBE3VEgAbdtGMqFAAVOTPMaCqGZhYh1F4UEtclKraISxcM352SP6dG7xqg-m5bFrqJekfNf3yoA9NMV1rpa8E/s1600/1589132194577592-0.png" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;">
<img border="0" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEivS5VrrEo1LyYv4rG-Pnk91wVinnQrsM2gyI1GwOpGgzCqIHbSsy_zpXlfBE3VEgAbdtGMqFAAVOTPMaCqGZhYh1F4UEtclKraISxcM352SP6dG7xqg-m5bFrqJekfNf3yoA9NMV1rpa8E/s1600/1589132194577592-0.png" width="400">
</a>
</div></div>SASIKALA DHANASEKARANhttp://www.blogger.com/profile/11716959431566964164noreply@blogger.com4tag:blogger.com,1999:blog-2850277381022175263.post-40814043483261944092020-05-07T00:01:00.001+05:302020-05-07T00:01:29.012+05:30சித்திரா பௌர்ணமி சித்தமெல்லாம் சிவமயமே அது பெரியவர்களுக்கு சிவனை வழிபடுபவர்களுக்கு ..<div>ஆனால் குழந்தை மனம் கொண்ட எங்களுக்கும் குழந்தைகளுக்கும் தி.மலை எப்போது திருவிழா வரும் வசந்த உற்சவம் என்று உற்சாகத்தோடு காத்திருப்போம். </div><div>ஆம் அத்தனை மகிழ்ச்சி ஆரவாரம் மனதில் "தில்" "தில்"தில்லானா பாடும்.. வசந்த உற்சவத்தில் பத்து நாட்கள் நடை பெறும். </div><div><br></div><div>சாமி அம்மன் வெட்டி வேர் மண்டபத்தில் ரத்தின அலங்காத்தோடு வளரும் நிலவொளியில் வர்ணிக்க வார்த்தைகளே இல்லா அளவிற்கு அழகாக மிளிரும் காண கண்கோடி வேண்டும். </div><div>மூன்றாம் நாளிலிருந்து பூ கொட்டும் பொம்மை ஒன்று அலங்கரித்து சிறு பெண்போலவே நகை அணிந்து உடை அணிந்து பூ மாரிப் பொழியும் தினமும். இதில் ஒரு நாளும் வாணவேடிக்கை யானை ஊர்வலம் பிடாரி ஆண் பெண் வலம் வரும் பத்து முறை சாமிக்கு பூ கொட்டும் பொம்மை .</div><div>ஒவ்வொரு தடவையும் மூன்று முறை ஏமாற்றி பிறகே பூ கொட்டும்.. குழந்தை முதல் பெரியோர் வரை கை தட்டி கொண்டாடுவோம் அந்த அழகை ரசிக்காதவர் யாருமில்லை எங்க ஊரில்.. பள்ளி விடுமுறை வேற இந்த நேரத்தில் ஆகா ஓஓ என்று கொண்டாடுவோம்..</div><div>இந்த நிலவு வந்தது இருந்தும் மகிழ்வில்லை லட்சகணக்கில் கிரிவல மக்களில்லாமல் ஊரே வெரிச்சோடி காண்பது வேதனையே ..</div><div>திருவிழா காணாத நாள் காலத்தால் கலங்கமாக கல்லில் பொறிக்கப்பட்டு விடும். </div><div>நோய் தொற்று தினம்தோறும் அதிகரித்து பீதியை கிளப்புகிறது. தனித்திரு. விழித்திரு. என்பது போக கூடிடு ..குடித்திரு.. என்று விடியுமோ என்று நினைத்தாலே பயமாக இருக்கிறது.. நோய் கொண்டு போகுமுன்னே மது கொண்டு போகுமோ மக்களை .. மக்களை ஆள மாக்கள் அரசால் கிறதோ என்றும் ஐயம் ஏற்படுகிறது.. </div><div>எதை புலம்பி ஆவதென்ன நம் திருவிழா நம்ம வீட்டு தோட்டத்து செடிகளின் இடையேமின்னும் தங்க நிலாவிடம் விளையாடுவோம். வாங்க</div><div><br></div><div><div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiAzJVs_8K6J3AvWXZzZdypbe6vWkGYcR5WSuZaFuIpcuiUd71PxN0Li8YTyMuWXz_WX1LKhilrY3CCxK-nTxoAmf6HlqgbbTt6QViQQQLXv2bDIbRJ0G9-V3S4xd6HN964mrTrvtspghOi/s1600/1588789877512982-0.png" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;">
<img border="0" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiAzJVs_8K6J3AvWXZzZdypbe6vWkGYcR5WSuZaFuIpcuiUd71PxN0Li8YTyMuWXz_WX1LKhilrY3CCxK-nTxoAmf6HlqgbbTt6QViQQQLXv2bDIbRJ0G9-V3S4xd6HN964mrTrvtspghOi/s1600/1588789877512982-0.png" width="400">
</a>
</div><div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhplAiNSVpOy9I_t7u5IiPKCba_GcokwFEqFndILnMap-TplN-IvLAknX7HpZLiQKrleu2sV0gTp5vDy2PBGyIA1np6PYW4r8GKR1hb284yq9lC25VR2nwvjab9ttMZ7gw9xY73SC4BQJpM/s1600/1588789870218156-1.png" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;">
<img border="0" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhplAiNSVpOy9I_t7u5IiPKCba_GcokwFEqFndILnMap-TplN-IvLAknX7HpZLiQKrleu2sV0gTp5vDy2PBGyIA1np6PYW4r8GKR1hb284yq9lC25VR2nwvjab9ttMZ7gw9xY73SC4BQJpM/s1600/1588789870218156-1.png" width="400">
</a>
</div>சோணாச்சலகிரிக்கு நிலவு கிரீடம் சூடிய போது</div><div><br></div><div>நிலவு எனக்கு நெற்றி திலமாகிறது ..காணீரோ..<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgIcBnpncRRuVWunM3xnS5fGL5_t2ul_BpDnTi_Y_9YB-Mvl97V3qG7Mtc1klu1KHsRn-w5Kf9iN3HjQ6OJ34U6p77yhy8jfjyHpkpoFXyHZvIGPpz6hB8Qq57WEub12Ft_X7eEbEscJHZ_/s1600/1588789865349400-2.png" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;">
<img border="0" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgIcBnpncRRuVWunM3xnS5fGL5_t2ul_BpDnTi_Y_9YB-Mvl97V3qG7Mtc1klu1KHsRn-w5Kf9iN3HjQ6OJ34U6p77yhy8jfjyHpkpoFXyHZvIGPpz6hB8Qq57WEub12Ft_X7eEbEscJHZ_/s1600/1588789865349400-2.png" width="400">
</a>
</div>அழகெல்லாம் நிலவேே அள்ளிக் கொண்டதோ என்று தோனுகிறது..<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEi1OxRMIGzze_pVUdY85g8bWMj4Zb0p4xeEq5ilayt7pBJKBVc7eyYSohp4bDMutfxhMnyHwKvOgO5c-yHpdJaJ9M5qAF5ByLtXYXJnhFSuoMcMcjYB1noI-LAzIuV0sHU75KwM7qIt_u7p/s1600/1588789859262981-3.png" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;">
<img border="0" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEi1OxRMIGzze_pVUdY85g8bWMj4Zb0p4xeEq5ilayt7pBJKBVc7eyYSohp4bDMutfxhMnyHwKvOgO5c-yHpdJaJ9M5qAF5ByLtXYXJnhFSuoMcMcjYB1noI-LAzIuV0sHU75KwM7qIt_u7p/s1600/1588789859262981-3.png" width="400">
</a>
</div><div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiAtn344xACbaNpx4DSdtiCgwoBBbJmgq260TnB2vSQ-Hm4E_ryT5F3zurjtbGMGN0myb6Da1fRg4TN-TOG_5ZFhaJ-yqkmp7fTgDmONJmpk7yYDiR88Qv7sQJxjhqFpAzsiQYawZbt0W8v/s1600/1588789843019346-4.png" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;">
<img border="0" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiAtn344xACbaNpx4DSdtiCgwoBBbJmgq260TnB2vSQ-Hm4E_ryT5F3zurjtbGMGN0myb6Da1fRg4TN-TOG_5ZFhaJ-yqkmp7fTgDmONJmpk7yYDiR88Qv7sQJxjhqFpAzsiQYawZbt0W8v/s1600/1588789843019346-4.png" width="400">
</a>
</div>நானும் நிலவும் நடுநிசியிலும் காயா பழமாா விளையாடிய போது..</div><div><br></div>SASIKALA DHANASEKARANhttp://www.blogger.com/profile/11716959431566964164noreply@blogger.com2tag:blogger.com,1999:blog-2850277381022175263.post-78747057600441285222020-05-06T00:44:00.001+05:302020-05-06T00:44:34.833+05:30கிணற்று நிலாதினம் தினம் விடிய விடிய பேசும் நிலா அதுவும் இப்போதைய சித்திரா பௌர்ணமி நிலா என்னோடு மழையில் விளையாடி கூட்டாஞ்சோறு சாப்பிட்டநிலா.. விளையாட மறுப்பதேனோ.. கேட்டுச்சொல்லடி மஞ்சகாட்டு மைனாவே..<div><br></div><div><div>பௌர்ணமி நாளில் </div><div>கிணற்று நிலாவை</div><div>வாலியில் இரவெல்லாம் </div><div>நீரோடு வாரி இறைத்த</div><div>நிலவு இப்போதெல்லாம் </div><div>கையிலும் வருவதில்லை..</div><div>அந்த நாட்கள் பசுமையானதே..</div></div><div><br></div><div>சித்திராபௌர்ணமியில் கலவை சாதம் செய்து வீட்டு முற்றத்தில் வெளிர்நில வெளிச்சத்தில் வகைவகையான சாதங்கள் வாசனை அள்ள அள்ள குறையாத உணவும் பொறியலும் வடைகளும் அம்மம்மா என்ன சுவையான நினைவுகள். </div><div><br></div><div>புளி சாதம் தோட்டத்தில் விளைந்த தக்காளி சாதம் எலுமிச்சை சாதம் கொத்தமல்லி சாதம் ..வானவில்லின் கலவையாக மாறும் அம்மா பரிமாறும் விதத்தில் வாழையிலையில் அழகில் உணவுவகைகள்..</div><div>அம்மம்மா சொல்லும் போதே நாவில் எச்சில் ஊறுது.. வீட்டில் அத்தனைபேருக்கும் ஒவ்வொருவரும் கவளம் அப்பா ஊட்டி விடுவார். குடும்பமே கவிதையாக மாறும். அந்த சமையத்தில் ..</div><div>தாத்தா பாட்டி அக்கா தங்கை தம்பி அப்பா அம்மா. பக்கத்து வீட்டு மாமா மாமி எல்லாருமே ஒன்றாக சாப்பிடுவோம்..அந்த சித்திரை பௌர்ணமி இதோ சில மணி நேரத்தில் நம்மை வந்து விடும். </div><div>ஆனால் இத்தனை சொந்தங்களை எங்கே தேடுவேன்.. மறந்தவர் மறைந்தவர்.. பணத்தால் உறவை விலக்கியவர் இப்படி பட்டியலில் விலகிய உறவுகளே நவீனத்தில் விஸ்வருபமாகிறது.. </div><div><br></div><div>நம் பிள்ளைகளுடன் மட்டுமே பௌர்ணமி கொண்டாடுவோம்.. நீங்களும் வாங்க அன்பு உள்ளங்களே.. அதே அம்மா வீட்டு கிணற்றில் நிலவை ரசிக்கலாம்.. ஆழ்துளைகிணறு அதிகம் பெருகி அதில் இடர்களும் நிலத்தடீ நீர்மட்டமும் குறைந்ததே மிச்சம் ..</div><div><div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEh1ttXaDvED-eOhgtymwNEXvoPz1gNU2Hm9JNs47jMVOiBPq58SM98RHy5QIk_n15xjdWVusTBi8g9QNUJD3vO5MxXe7fik8eCJHW2wFWZEOX371rLhPX_MpYvosiWspaiYfzO4vrCGYwpr/s1600/1588705999391142-0.png" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;">
<img border="0" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEh1ttXaDvED-eOhgtymwNEXvoPz1gNU2Hm9JNs47jMVOiBPq58SM98RHy5QIk_n15xjdWVusTBi8g9QNUJD3vO5MxXe7fik8eCJHW2wFWZEOX371rLhPX_MpYvosiWspaiYfzO4vrCGYwpr/s1600/1588705999391142-0.png" width="400">
</a>
</div><div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjcJi2NYqzY9Ama45Q0ExxrfMH-aF-IkqaJaZ3L59QLEVYhRTHt-G2r-pwbSmuYn4h4J2uUBoSQfq0wfsOLb3ftQlbjkxBJ0TByVj-OpEexugCGQ1EFspa6uMlJnSbsRMJ-80c0wrsEWG0B/s1600/1588705980076414-1.png" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;">
<img border="0" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjcJi2NYqzY9Ama45Q0ExxrfMH-aF-IkqaJaZ3L59QLEVYhRTHt-G2r-pwbSmuYn4h4J2uUBoSQfq0wfsOLb3ftQlbjkxBJ0TByVj-OpEexugCGQ1EFspa6uMlJnSbsRMJ-80c0wrsEWG0B/s1600/1588705980076414-1.png" width="400">
</a>
</div></div><div>நிலா வந்து விரலுக்கு மோதிரமாக மின்னிய போதும் <br><div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgDd3LdQC7Sld-Uwac4CDqgbi5itNbuzP12ifKpVtqBZyid9F82cg4zsUFx82hPvmKcAoox6muR68l5QLy_roSQociHMAcd1Kkh_EhwOF0DbY1glA5vYoqUtaF5UsYZhZJx-CURnr8oqtC5/s1600/1588705954172805-2.png" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;">
<img border="0" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgDd3LdQC7Sld-Uwac4CDqgbi5itNbuzP12ifKpVtqBZyid9F82cg4zsUFx82hPvmKcAoox6muR68l5QLy_roSQociHMAcd1Kkh_EhwOF0DbY1glA5vYoqUtaF5UsYZhZJx-CURnr8oqtC5/s1600/1588705954172805-2.png" width="400">
</a>
</div>இந்த நிலா மலைக்கும் தென்னைக்கும் குளுமையை பரிசளித்த போது. </div>SASIKALA DHANASEKARANhttp://www.blogger.com/profile/11716959431566964164noreply@blogger.com8tag:blogger.com,1999:blog-2850277381022175263.post-70564768695983745482020-05-05T01:02:00.001+05:302020-05-05T01:02:04.772+05:30தொலைந்த இன்பம் நிறைந்த வரமாகும் எப்படி எதை தேடுகிறேன் எதை தொலைத்தேன்.. எங்கே தேடுகிறேன். <div><br></div><div>என்ற என் ஆயிரம் கேள்வி தங்க தகடாக தகதகட்டும் வளர்ந்த முழு பௌர்ணமி நிலவில் நிலவோடு அளவளாவி நீண்ட நேரம் அகமகிழ்ந்தும் அன்பு பொழிந்தும் வம்பிட்டும் வாதிட்டும் கேட்கிறேன்..</div><div>படிக்கும் நீங்க நீ என்ன லூசா என்ற மைன்ட் வாய்ஸ் கேட்கிறது..</div><div><br></div><div>நிலவில் கால் வைத்தவரின் பெருமையை பறைசாற்றும் யாவரும் என் நீண்ட உரையாடலை கிண்டல் செய்ய மாட்டீர்கள்.</div><div><br></div><div>பிறந்த சில மாதம் முதலே அம்மா இரவில் பால் சோறு ஊட்டும் போது நிலவை பற்றி சொன்ன கதையிலிருந்து நிலாவும் எனக்கு நல்ல தோழியே நான் வளர்ந்தாலும் அந்த நிலா மட்டும் அப்படியே தேய்ந்து தேய்ந்து மீண்டும் வளர்கிறது..</div><div><br></div><div> தன் இளமையில் கலங்கமில்லாமல் பல காதலருக்கு தூது செல்கிறது.. கவிதைக்கு பொருளாக துணைபுரிகிறது..</div><div><br></div><div>உன்னிடம் மட்டுமே சாதி மதமற்று அனைவரும் நேசிக்கின்றனர். நீ ஏழைகளின் கூரைவீட்டு கீரிடம் நீ..</div><div>ஆம் என் வீட்டு தங்க தட்டு நீதான்..</div><div>எதை தேடினேன் உன்னிடம் கேட்டகேள்வியை மறந்து போகுமளவில் கருத்தில் புகுந்து சிந்தனையை களவாடும் கள்ளி நீ..</div><div><br></div><div>என் இளமை களவு போனதை தேடவா மழலையை தொலைத்தேன் அதை தேடவா பௌர்ணமி நிலவொளியில் அப்பா கரம் பிடித்து கிரிவலம் வரும் அந்த அற்புத நாட்கள் நிலையான நிஜங்கள் கானல்நீராக இப்போது. காலனிடம் கைப்பற்றி கடந்து பிரிந்து சென்றார். உலகை வென்று விட்டார். அப்பாவும்.. </div><div><br></div><div>இப்போதைய இந்த இக்கட்டான சூழலில் நிலவும் சுடுமோ நோய் தொற்று கிருமியை பொசிக்கிட உன் தகதகக்கும் பிரகாசிக்கும் அழகால் வெல்ல வழி சொல்லேன்.. தங்க நிலவே.. மீண்டும் பேசுவோம்.. புதிய ஆரோக்கிய உலகை வெல்வோம்.<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgP0Wf5OrJMoTrIjqGqFOAdsl4c8kvlduMUrmLKPhxEKK9bd7FRy7gAvp_Rpm5aeA0W6L8CSWQecxgrkL9g5igFp6SWeub3NuB7vNCaxxZV4z6PKbFaSZMBwRWBLZeWZA8Zia5B9eHKA4oP/s1600/1588620715465841-0.png" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;">
<img border="0" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgP0Wf5OrJMoTrIjqGqFOAdsl4c8kvlduMUrmLKPhxEKK9bd7FRy7gAvp_Rpm5aeA0W6L8CSWQecxgrkL9g5igFp6SWeub3NuB7vNCaxxZV4z6PKbFaSZMBwRWBLZeWZA8Zia5B9eHKA4oP/s1600/1588620715465841-0.png" width="400">
</a>
</div><div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgdpt-sk5A3q89w_9fvZWsk4CrSLaJNCEBNgV7V7ZCnPN2fBKS1002kDbc-mPk4-I8eHBVvUslMVD4EGdnBxrYHcL2pB1VHxF5NJkIU7U7LhFDi7cP-ZDLO4u1cNV7lkPTx0BAl9oeVSEXT/s1600/1588620701467349-1.png" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;">
<img border="0" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgdpt-sk5A3q89w_9fvZWsk4CrSLaJNCEBNgV7V7ZCnPN2fBKS1002kDbc-mPk4-I8eHBVvUslMVD4EGdnBxrYHcL2pB1VHxF5NJkIU7U7LhFDi7cP-ZDLO4u1cNV7lkPTx0BAl9oeVSEXT/s1600/1588620701467349-1.png" width="400">
</a>
</div></div><div>என் விரல் மோதிரத்தில் மின்னும் கல்லாக வெண்ணிலவே நீ<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEg8S8xQMUrqQObDB-DSC51Y21KklS4db48v1O5IrMNqgPQzpZQ9iCWNuUY5cBYZQfQyFuxGa7e2S5fyJ_bvdlorSeT_P0rcJVVXyztBqfEA7erv7ZEzciZOsxJe9JIswx6nlDuv6rAOmj3-/s1600/1588620645625637-2.png" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;">
<img border="0" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEg8S8xQMUrqQObDB-DSC51Y21KklS4db48v1O5IrMNqgPQzpZQ9iCWNuUY5cBYZQfQyFuxGa7e2S5fyJ_bvdlorSeT_P0rcJVVXyztBqfEA7erv7ZEzciZOsxJe9JIswx6nlDuv6rAOmj3-/s1600/1588620645625637-2.png" width="400">
</a>
</div>என் கை பிடீயில் வந்து விளையாட அழைைத்தாயே அப்போோது <div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjsE833phiGGKOCmSJSgRA87xcz1sIJSqJhBkJNpt_fpPwVOoLDNOGrTV2Naz9xOYFSL9XNF28a_C8XaJkoXqfq0jaZUtJxvx3Jdzu0J4DlzOFwyN8c8EV5my7lmAX4egx_YWvpKJgtEViB/s1600/1588620551635119-3.png" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;">
<img border="0" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjsE833phiGGKOCmSJSgRA87xcz1sIJSqJhBkJNpt_fpPwVOoLDNOGrTV2Naz9xOYFSL9XNF28a_C8XaJkoXqfq0jaZUtJxvx3Jdzu0J4DlzOFwyN8c8EV5my7lmAX4egx_YWvpKJgtEViB/s1600/1588620551635119-3.png" width="400">
</a>
</div>என் விரலில் வந்து வெற்றி சின்னத்திற்கு வாகை சூடியபோது..</div>SASIKALA DHANASEKARANhttp://www.blogger.com/profile/11716959431566964164noreply@blogger.com4tag:blogger.com,1999:blog-2850277381022175263.post-7687785623566812412020-04-26T08:18:00.001+05:302020-04-26T08:18:11.643+05:30அட்சயதிருதியை <div>"பணத்தை எப்போதும் மரப்பெட்டியில்தான் வைத்து எடுக்க வேண்டும். எதையும் தேக்கி வைத்துக்கொள்ளும் என்பதால்தான் 'தேக்கு மரம்' என்று பெயர் வந்தது. அதன் உறுதியான நிலைத்தத் தன்மை நம்மிடம் பணத்தைத் தங்கிடச் செய்யும்."</div><div><br></div><div>வாஸ்துபடி நம் வீட்டில் பணப்பெட்டியை எந்த இடத்தில் வைத்து பணத்தை எடுத்து </div><div>செலவு வரவு செய்ய வேண்டும்..?</div><div>''பணம் இன்றைக்குப் பல பிரச்னைகளைத் தீர்க்கும் சாவியாக இருந்து வருகிறது. அத்தியாவசியப் பொருள்களிலிருந்து ஆடம்பரமான பொருள்கள் வரை எதை வாங்க வேண்டுமென்றாலும், அதற்குப் பணம் தேவையாயிருக்கிறது. வாழ்க்கையில் எல்லோருக்கும் விருப்பமிருந்தாலும் இல்லாவிட்டாலும் பணத்தை நோக்கி ஓட வேண்டியிருக்கிறது. வாஸ்துவும் பணமும் ஒன்றோடு ஒன்றாகப் பின்னிப் பிணைந்திருக்கின்றன.</div><div><br></div><div>வாஸ்துபடி பணம் எப்போதும் ஒருவரின் கையில் தவழ்ந்து கொண்டிருக்க வேண்டுமென்றால் வீட்டின் #வடக்குச்_சுவர் ஜன்னலுடன் சேர்ந்து இருக்க வேண்டும். கதவு சிறிது மூடப்பட்டிருக்க வேண்டும். ஜன்னல் எப்போதும் திறந்தே இருக்க வேண்டும். காற்றோட்டமும் சூரியவெளிச்சமும் வாஸ்து சாஸ்திரத்தில் முக்கிய பங்கு வகிக்கின்றன. அதனால், ஜன்னல்கள் திறந்திருப்பது நல்லது.</div><div><br></div><div>பூச்சித்தொல்லை கொசுக்கள் உள்ளே வருமென்றால், நைலான் வலை போட்டுக்கொள்ளலாம். எந்தத் தவறும் இல்லை. வீட்டில் பணம் சேருவதற்கு வடக்கு திசையும் ஜன்னலும் எந்த அளவு முக்கியமோ அந்த அளவு தென் மேற்கு திசை முக்கியம். இங்குதான் நாம் பணத்தை வைக்க வேண்டும். வடமேற்கு மூலையில் பணத்தை வைக்கக் கூடாது.</div><div><br></div><div>பீரோ வடக்கு பார்த்து இருக்க வேண்டும். பீரோவைத் திறக்கும்போது நம் முதுகு வடக்கு நோக்கி இருக்க வேண்டும். பணத்தை எப்போதும் மரப்பெட்டியில்தான் வைத்து எடுக்க வேண்டும். எதையும் தேக்கி வைத்துக்கொள்ளும் என்பதால்தான் 'தேக்கு மரம்' என்று பெயர் வந்தது. அதன் உறுதியான நிலைத்தத் தன்மை நம்மிடம் பணத்தைத் தங்கிடச் செய்யும்.</div><div><br></div><div>காரைக்குடியைச் சேர்ந்தவர்களின் வீடுகள் தேக்கு மரக்கதவு ஜன்னல்களால் இழைக்கப்பட்டிருக்கும். அவர்கள் பணப்பெட்டியை மரத்தாலான பெட்டியில்தான் வைத்து எடுப்பார்கள். பணத்தின் அருமையை அவர்கள் உணர்ந்ததால்தான் அப்படிச் செய்தார்கள்.</div><div><br></div><div>பணம் எப்போது வந்தாலும் அதை எந்தக்காரணத்தைக் கொண்டும் பூஜையறையில் வைக்காதீர்கள். பணம் நூறு, ஆயிரம், லட்சம் எனப் பல பேர்களின் கைகளுக்குச் சென்று மாறி வந்திருக்கலாம். பூஜையறையை நாம் தெய்வத் தன்மையுடன் வைத்திருப்பதால் அதைப் பூஜையறையில் வைக்க வேண்டாம்.</div><div><br></div><div>பணம் நம் கைக்கு வருகிறதென்றால் அது நம் வீட்டுக்குள் வந்து பறந்துபோகும் சிட்டுக்குருவியைப் போன்றது. அதைச் சுதந்திரமாகப் பறக்கவிடுங்கள். நல்ல விஷயங்களுக்குத் தாராளமாகச் செலவு செய்யுங்கள். உங்களை எப்போதும் செல்வந்தராகவே எண்ணிச் செலவு செய்யுங்கள். அப்போதுதான் பணம் உங்களைத் தேடி மீண்டும் மீண்டும் வரும்.</div><div><br></div><div>அளவுக்கு மீறி பணம் வந்தாலும் 'சிக்கனமாக இருக்கிறேன் பேர்வழி' என்று பணத்தை இறுக்கிப்பிடித்து வைத்திருந்தால், அதை அவர்கள் ஒருநாளும் அனுபவிக்க மாட்டார்கள். அவர்களுடைய மகன்,மகள்,பேரன்மார்கள் தான் அந்தப் பணத்தைச் செலவு செய்து வாழ்வார். அதனால்தான் 'ஈயா பண்டம் தீயாய்க் கெடும்' என்ற முதுமொழியே வந்தது.</div><div><br></div><div>உங்களுக்கு வருகிற பணத்தை சிவப்பு நிறத் துணியில் சுற்றி மரப்பெட்டியில் வைக்கும்போது, அந்தப் பணம் பல மடங்காகப் பெருகும்.</div><div><br></div><div>பணத்தை வைக்கும்போது சில்லறையாக வைக்காதீர்கள். நிறை நிறையோடு சேரும் குறை குறையோடு சேரும் என்பதால், 2000 ரூபாய் நோட்டாக வையுங்கள்.</div><div><br></div><div>பணத்தை ஒருவரிடம் கொடுக்கும்போது பணத்தை மடித்துக் கொடுக்க வேண்டும். மடிப்பு அவர்களின் பக்கமும் திறப்பு நம்முடைய பக்கமும் இருக்கும்படி கொடுங்கள்.</div><div><br></div><div>பணப்பெட்டியில் எப்போதும் ஒரு நறுமணம் இருக்கும்படி பார்த்துக்கொள்ளுங்கள்.(பீரோவில் பச்சை கற்பூரம் போட்டு வைக்கலாம்) பணத்துக்கு நாம் அடிமை ஆகாமலும் நமக்குப் பணத்தை அடிமையாக்காமலும் ஒரு நண்பனைப்போல் பணத்தை பாவித்தோமென்றால், பணம் எப்போதும் நம்மைவிட்டுப் போகாமல் தங்கியிருக்கும்"<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEglURqOfa0E7aSnIawoF6LXHuwmmGdyvnTdvkUIP9irKdYCmLvvX2xjY7HVoqsh4ygMjAGZ7iz3qmxT8PRzkbcCxjfaMaTD17agPqOfQY_7W69i3ry1cWfnG9GPuFXXVwJCyKEZSCHh636q/s1600/1587869277562570-0.png" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;">
<img border="0" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEglURqOfa0E7aSnIawoF6LXHuwmmGdyvnTdvkUIP9irKdYCmLvvX2xjY7HVoqsh4ygMjAGZ7iz3qmxT8PRzkbcCxjfaMaTD17agPqOfQY_7W69i3ry1cWfnG9GPuFXXVwJCyKEZSCHh636q/s1600/1587869277562570-0.png" width="400">
</a>
</div></div>SASIKALA DHANASEKARANhttp://www.blogger.com/profile/11716959431566964164noreply@blogger.com4