Saturday, 5 July 2014

வெற்றி

வெற்றி தோல்வி இரண்டும்
இரு இரயில் தண்டவாளங்கள் போல
நாம் துவண்டால் தோல்வி தழுவிக்கொள்ளும்
முயன்றால் வெற்றி தழுவிக்கொள்ளும்.....

அனாதை

''அனாதை ''என்ற வார்த்தையை 
கூட ஆதரிக்க வேண்டாம் 
அவர்களுக்கு உறவு என்ற ஆடைகளை பரிசளிப்போம்

அன்பு

ஏதாவது கேள் என்றால் 
என்ன கேட்க 
தேவை என ஏதும்
இல்லா மனநிலையில்
உன் அன்பே போதுமானது
அனைத்திற்கும் 
தீர்வாகிறது

கேள்வி

கேட்காத கேள்விக்கு 
பதிலாக எதைத் தருவேன்
எழுத்தாய் கோருகிறாய்
வார்த்தையாய் கோர்தா?
வாக்கியமாய் வடித்தா?
பாடலாய் புனைந்தா?
என முற்று பெறாமலே 
கவிதை குழந்தையாக

அம்மா

அம்மாவின் அன்புகலந்த 
உருண்டை சோறு 
உப்பில்லாமல் இருந்தாலும் 
உணர்வு கலந்து இருக்கும் 
சுவை இல்லாமல் இருந்தாலும் 
நினைவு நீங்காமல் இருக்கும் அம்மாவின் 
உருட்டி தரும் சோறு ....