Saturday 27 June 2020

கண்திருஷ்டி

கண்திருஷ்டி விலக ரகசிய அபூர்வ பரிகாரங்கள் !!!

share

நன்றாக படிக்கும் குழந்தைகள் திடீர் என்று படிப்பில் ஆர்வம் குறையும். அதேபோல பெரியோர்களுக்குகடன் தொல்லை போன்றவை இருந்தால், விநாயகரின் ஆலயத்தில் அவர்களின் பெயரில் அர்ச்சனை செய்து, தேங்காய் எண்ணையையும், தன் குலத்தை காக்கும் குலதெய்வத்திற்கு பிடித்தமான விளக்கெண்னையும்ஒன்றாக கலந்து, அர்ச்சனை செய்த தேங்காயில் ஊற்றி தீபம் ஏற்றினால் பிரச்சனைகள் விலகும்.

நம்முடைய முன்னேற்றம் தேங்காமல் விருத்தியாகும்.காத்து கருப்பைவிரட்டும் கருப்புநிறம் வீட்டில் கருப்பு மீன், கருப்பு நாய், கருப்ப மாடு போன்றவற்றில் ஒன்றை தங்கள் வசதிக்கேற்ப வளர்த்து, தங்கள் கையாலேயே உணவு கொடுத்து வளர்த்து வந்தால், காத்து கருப்புஎனும் துஷ்ட சக்திகள் நம்முடைய உடலில் தோஷங்களாக நுழைவதை தடுத்திடும். பரிகாரமாக கருப்பு ஜீவ ராசிகளை சில நாட்களோ அல்லது சில மாதங்களோ வளர்த்து, அந்த ஜீவராசிகளை யாருக்காவது தானமாக கொடுத்தால் நம்முடை தோஷம் போகும் என்கிறது சாஸ்திரம்.அதனால்தான் சில கிராமத்தில் கருப்பு ஆடு, கருப்பு கோழியை வளர்த்து கோவிலுக்கு கொடுக்கும் வழக்கம் இன்றும் இருக்கிறது.

கண்திருஷ்டியை விரட்டும் கண்ணாடி

சாப்பிடும் போது எங்கோ யாரோ நினைத்தால் புரை ஏறும். அதேபோல் யாரே நம்மை திட்டினாலும் நாக்கை கடித்து கொள்வொம். அதுபோல்தான் நமக்கு தெரியாமலே கண் திருஷ்டி நமக்கு பாதிப்பை உண்டாக்கும். வீட்டுக்குள் வாசலுக்கு நேராக முகம் பார்க்கும் கண்ணாடி வைத்தால் பாதிப்பு வராது. அமாவாசை, தீபாவளி நோம்பு போன்ற நாட்களில் முகம் பார்க்கும் கண்ணாடியை ஒரு தெய்வமாக மதித்து வழிப்படுவோம். காரணம் நம்முடைய முன்னோர்களின் புகைப்படம், குலதெய்வத்தின் புகைப்படம் நம்மிடத்தில் இருக்காது. அச்சமயங்களில் அவர்களை வழிப்படும்போது அவர்களின் ஆத்மா முகம் பார்க்கும் கண்ணாடியில் மறைமுகமாக தோன்றி, தங்கள் முகத்தை கண்ணாடியில் பார்த்ததும் வணங்குகிறார்கள்என்று மகிழ்வார்கள். இதனால் அவர்களின் ஆசி நமக்கு பரிபூரணமாக கிடைக்கும். கண்ணாடி வைக்காமல் வணங்கினால் என்னத்தான் அவர்களுக்கு பிடித்த திண்பண்டங்களை வைத்து வணங்கினாலும் அவர்களை மகிழ்விக்க முடியாது என்கிறது சாஸ்திரம். அதுபோல,வெளியில்இருந்த வீட்டுக்குள் வருபவர்களின் முகம் நேரடியாக தெரியும்படி முகம் பார்க்கும் கண்ணாடி வைத்தால், அவர்களால் உண்டாகும் கண்திருஷ்டி அந்த இல்லத்தை பாதிக்காது.

உப்பு தண்ணீரின் மகிமை

சிறு வேலை செய்தாலும் உடல் சோர்வு ஏற்படும். அதற்கு இரண்டு காரணங்கள்தான் உள்ளது. முதல் காரணம் உடல் பலவீனம், இரண்டாவது கண்திருஷ்டி . நம் உடலில் ஏழு சக்கரங்கள் உள்ளது. அந்த சக்கரங்கள்நல்ல விதத்தில் இயங்கி கொண்டு இருந்தால் உடல்நிலை பாதிப்பு வர வாய்ப்பு இருக்காது. குழாயில் அடைப்பு இல்லை என்றால் தண்ணீர் தடைஇல்லாமல் வருவது போல, நம் உடலில் இருக்கும் சக்கரங்கள் பலமாக இருந்தால் உடலுக்கு நம்மை ஏற்படும். மூங்கில் மரத்தின் வேரில் நெல்லை போட்டால் அந்த மரமே பட்டுபோகும். அதுபோல அதிக திருஷ்டிபட்டால்உடலில் இருக்கும் சக்கரங்கள் சரியாக இயங்காமல் வழுவிழந்து பலவீனமாக இருக்கும்.இதற்கு பரிகாரம் கடல் தண்ணீர். கடல் தண்ணிரில் குளித்தால் உடலில்இருக்கும் அந்த ஏழு சக்கரங்களும் பலம் பெறும். எப்படி தணணீர் வானத்தி்ற்கு சென்று மழையாக திரும்பி வருகிறதோ அதுபோல, கடல் தண்ணீர் உடலை நனைத்து நம்முடைய உடலில் உள்ள சப்த சக்கரங்களை பலப்படுத்தும்..

அதேபோல, ஒரு வீட்டிற்கு அதிக தோஷம் இருந்தால், அந்த வீட்டில் துர்வாடை வீசும். என்னதான் சென்டு போன்ற நறுமண பொருட்களை உபயோகித்தாலும் அந்த வாடை போகாது. தோஷம் நீங்கினால்தான் துர்வாடை போகும்.

அதனால் கடல் தண்ணீரை சிறிது எடுத்து, ஒரு பக்கெட் தண்ணீரில் ஊற்றி வீட்டை கழுவி விட்டாலோ அல்லது துடைத்து விட்டாலோ தோஷங்கள் போகும். கடலில் குளிக்க தெரியாதவர்கள், கடல் நீரை கொஞ்சம் வீட்டிற்கு கொண்டு வந்தும் குளிக்கலாம். அப்படி இல்லையென்றால் குளிக்கும் போது ஒரு பக்கெட்டில் கைபிடி அளவு கல் உப்பை எடுத்து தண்ணீரில் கரைத்து குளித்தாலும் உடலில் இருக்கும் ஏழு சக்கரங்களும் பலப்படும். ஸ்ரீராமர் பார்த்திப லிங்கத்தை, தானே உருவாக்கி, அந்த லிங்கத்திற்கு கடல் நீரால் அபிஷேகம் செய்தார். “ஏன் கடல் நீரில் அபிஷேகம் செய்கிறீர்கள்.?என்று வானர வீரர்கள் கேட்டதற்கு, கடல் நீரே விசேஷமானது“ என்றார் ஸ்ரீராம பிரபு.

செப்பு காசின் மகிமை

குழந்தைகளின் உடல் மெலிந்து கொண்டே இருந்தாலும் அல்லது பயத்தில்அவ்வப்போது அழுது கொண்டு இருந்தாலும், செப்பு காசை கையில் கட்டினால் துஷ்ட சக்திகளும், பொறாமைக்காரர்களின் கண்திருஷ்டியும்அண்டாது. சில குழந்தைக்கு கையில் செப்பு காசு கட்டினால் அலர்ஜி ஏற்படலாம். அதற்கு குழந்தைகளின் கையில் காசை கட்டும் முன், வெள்ளை துணியை மஞ்சள் கரைத்த தண்ணீரில் நனைத்து அந்த மஞ்சள் துணியில் செம்பு காசை சுற்றி பிறகு குழந்தையின் கையில் கட்டினால் அலர்ஜி ஆகாது. இப்படி செய்வதினால் சக்திதேவியின் ஆசியால் இன்னும் அந்த செம்பு காசுக்கு சக்தி கூடுமே தவிர குறையாது.

செங்கல்லின் மகிமை

குழந்தைகள் அடிகடி கீழே விழுந்துக் கொண்டே இருந்தால், செங்கலால் திருஷ்டி சுற்றி, பிறகு அந்த திருஷ்டி கழித்த செங்கல்லை போட்டு உடைத்து அந்த மண்ணை பூமிதாயை மனதில் நினைத்து கொண்டு, செங்கல் மண்ணை குழந்தையின் நெற்றியில் வைத்தால் அந்த குந்தைகளுக்கு திருஷ்டியால் உண்டாகும் பாதிப்பு குறையும்.

தண்ணீருக்கும் சக்தி யாராவது உங்கள் இல்லத்திற்கு வந்தால் காபி கொடுக்கும் முன் தண்ணீரை குடிக்க கொடுக்க வேண்டும். அவர்கள் காபிஅருந்தவில்லை என்றாலும் தண்ணீராவது குடிக்க கொடுத்த பிறகே அவர்களை வழியனுப்ப வேண்டும். இப்படி செய்வதால் அவர்களின் மனநிலை எதுவாக இருந்தாலும் சரி, அவர்களின் எண்ணங்கள் எதுவாக இருந்தாலும் சரி, அதன் தாக்கம் அந்த இல்லத்தை பாதிக்காது.

பன்னீருக்கு இருக்கும் சக்தி வெறும் தண்ணீருக்கும் இருக்கிறது“ என்றார் சூதவா முனிவர். மரணத்திற்கு பின்னர் மேல் லோகத்திற்கு செல்லும் போது நாம் பூமியில் வாழ்ந்த காலங்களில் சில பாவங்கள் செய்து இருப்போம். அந்த பாவங்களுக்கு தண்டனை நிச்சயம் உண்டு. ஆகவே இறைவனுக்கு வெறும் தண்ணீரில் அபிசேகம் செய்தாலே ஆடி தள்ளுபடி போல, செய்த பாவங்களுக்கு தண்டனை குறையும் என்கிறது சிவபுராணம். நாம் செய்த பாவங்களை இறைவன் பார்த்து கொண்டே இருக்கிறாரா? என்றால் நிச்சயமாக பார்க்கிறார். கோவில் திருவிழாவில் தீ மிதிப்பார்கள். அந்த தீ மிதிக்கும் முன் ஒரு நிமிடமாவது மழை தூறல் வரும். இதை பலர் அனுபவத்தில் பார்த்து இருப்பார்கள். இதில் இருந்து என்ன தெரிகிறது என்றால் நாம் செய்கின்ற ஒவ்வொரு செயலும் இறைவன் பார்த்து கொண்டேதான் இருக்கிறார்.

திருஷ்டியை போக்கும் “மை”

சில பெண்களின் முகத்தை பார்த்து யாராவது, “எவ்வளவு அழகாக இருக்கிறாள்” என்று கூறினாலே அது கண்திருஷ்டியாக மாறும். முகத்திற்குதான்அதிக கண்ணடிப்படும். அதனாலேயே சிலருக்கு முகப்பரு, கரும்புள்ளி போன்றவை அதிகம் முகத்தில் உருவாகும். அதற்கு பல கிரிமை முகத்தில் தடவியும், மருந்து மாத்திரைகளை சாப்பிட்டாலும் நீங்கவில்லை என்றால் அதற்கு எளிய வழி, வேப்பமரத்திற்குஅவர்கள் கையால் தண்ணீர் ஊற்றினால் அதை அபிஷேகமாக கருதி செய்து, அந்த மரத்திற்கு மஞ்சல் குங்குமத்தை செவ்வாய். வெள்ளி தோறும் வைத்து பூஜித்தால், அவர்களுக்குள் இருக்கும் கண்திருஷ்டியை அந்த வேப்பமரம் போக்கும். ஏன் என்றால் வேப்பமரம் முத்துமாரியம்மனாகவும், ரேணுகாதேவியாகவும் போற்றபடுகிறது. அத்துடன். உங்கள் கண்களுக்கு தினமும் மை வைத்து வந்தாலும் கண்திருஷ்டி அண்டாது.

தோஷங்களை நீக்கும் பரிகாரம்

பச்சரிசி-தேங்காய் துருவல் – வாழைப்பழம் இந்த மூன்றையும் ஒன்றாக சேர்த்து பிசைந்து புற்றுபோல செய்து, கோவிலில் நாகத்தம்மன் சிலை முன்போ அல்லது புற்றின் முன்பாகவோ வைத்து பச்சரிசி, தேங்காய் துருவல் மற்றும் வாழைப்பழத்தால் செய்த புற்றுக்கு சந்தனம், மஞ்சள், குங்குமத்தால் பொட்டுவைத்து வணங்கினால் கிரக தோஷங்கள், கண்திருஷ்டியால்தடைப்படும் காரியங்கள் எல்லாம் தடையில்லாமல் நடக்கும். தோஷங்கள் விலகினால்தான் சந்தோஷம் தேடிவரும்.

எண்ணை தானம்

உடல் மெலிந்தோ,சுறுசுறுப்பு குறைந்தோ, அல்லது ஏதாவது வியாதி மாறிமாறி வந்துக் கொண்டுடே இருந்தால் அது ஒருவகை தோஷத்தால்தான் என்று சொல்லாம். மணி – மந்திர ஔஷதம். அதாவது மருந்தும் சாப்பிடவேண்டும், பூஜை பரிகாரங்களும் செய்ய வேண்டும் என்கிறது சாஸ்திரம். உடல் பாதிப்புகள் நீங்கவும், தோஷங்களும் திருஷ்டியும் போக்க நல்லெண்ணையை உங்கள் சக்திக்கேற்ப சிறு பாத்திரத்திலோ அல்லது பெரிய பாத்திரத்திலோ ஊற்றி, பாதிப்புக்கு உண்டானவர்கள் தங்கள் முகத்தை அந்த எண்ணை பாத்திரத்தில் நன்றாக பார்த்து, மூன்று முறை தங்களின் பெயரை உச்சரித்து பிறகு யாருக்காவது அந்த பாத்திரத்தோடு எண்ணையை தானம் செய்துவிடுங்கள். பாத்திரத்தோடு தானமா? என்று பணத்தை கணக்கு பார்த்தால், அந்த பணத்தை விட மருத்துவ செலவை கணக்கு போடும்போது இந்த தானசெலவே குறைவாகத்தான் இருக்கும். மாத்திரைகளை எப்படி நம்பிக்கையோடு சாப்பிடுகிறீர்களோ, அதுபோல் பரிகாரத்தையும் நம்பிக்கையோடு செய்தால்தான் பலன் கிடைக்கும்.

குழந்தைகளை தாக்கும் தோஷம் ஒருவயது கூட நிறைவடையாத குழந்தையை வெளியாட்களிடம் கொடுக்க கூடாது. ஜலதோஷம் இருப்பவர்களுடன்இருந்தால் எப்படி நமக்கும் ஜலதோஷம் பிடித்து கொள்கிறதோ அதுபோல, கண்திருஷ்டி சட்டேன்று குழந்தைகளுக்கு பாதிப்பை கொடுத்துவிடுகிறது. பெற்ற தாயாக இருந்தாலும் அவர்களின் கண் திருஷ்டியும் குழந்தையை பாதிக்கும். அதற்காக குழந்தையை கண்ணே மணியே என்று கொஞ்சாமல் இருக்க முடியுமா? அல்லது ஆசையாக சுற்றத்தார்கள் கேட்கும் போது கொடுக்காமல்தான்இருக்க முடியுமா? ஆகவே குழந்தையின் நெற்றியிலும், இடது கன்னத்திலும் கருப்பு மையால் பொட்டு வைத்தால் திருஷ்டி அந்த குழந்தைக்கு அண்டாது.

அதனால்தான் இன்றுவரை வீதி உலா வரும் இறைவனுக்கும் – இறைவிக்கும்கன்னத்தில் திருஷ்ட போக

Friday 5 June 2020

ஒரு துளி..

நாம் அதிகம் கேட்டிராத மகாபாரத நிகழ்வு!!!!

மகாபாரதத்தில் நடந்த ஒரு நிகழ்வு இதுவரை நாம் அதிகம் கேட்டிராதது.!
பாண்டவர்களும் திரௌபதியும் எல்லோரையும் பந்தியில் உபசரித்து உணவு பரிமாறினார்கள். துரியோதனன், துச்சாதனன், கர்ணன், சகுனி முதலானோர் வரிசையாக அமர்ந்திருந்தனர்.
திரௌபதி பரிமாறிக் கொண்டே துரியோதனன் இலைக்கு அருகில் வந்தாள். அவளை அவமானப்படுத்த எண்ணிய துரியோதனன், ஐவரின் பத்தினியே... இன்று யாருடைய முறை?'' என்று கேட்டான்.
திரௌபதிக்குத் தூக்கி வாரிப்போட்டது. நாடி நரம்புகளெல்லாம் தளர்ந்தன. அவளால் அந்தக் கேள்வியை ஏற்க முடியவில்லை. செய்வதறியாது, பரிமாறுவதை நிறுத்திவிட்டு உள்ளே ஓடினாள். கண் கலங்கினாள் அதேநேரம் அங்கு தோன்றினார் பகவான் ஸ்ரீகிருஷ்ணர்.

கலங்காதே திரௌபதி! நடந்ததை நானும் கவனித்தேன்,எல்லோர் முன்னிலையிலும் உன்னை அவமானப்படுத்தி அழவைக்க நினைத்திருக்கிறான் துரியோதனன், அவனுக்கு பாடம் கற்பிக்கலாம். நான் சொல்வது போல் செய்.
நீ மீண்டும் உணவு பரிமாறப் போ! துரியோதனன் மீண்டும் உன்னிடம் அதே கேள்வியைக் கேட்டு, 'ஏன் பதில் கூறவில்லை?’ என்பான்.
உடனே நீ, 'தக்ஷகன் முறை’ என்று சொல், அதன் பிறகு துரியோதனன் அந்த இடத்திலேயே இருக்கமாட்டான்'' என்றார் பகவான் ஸ்ரீ கிருஷ்ணர்.
கிருஷ்ணனின் வார்த்தையைத் தட்டமுடியாமல் விருந்து மண்டபத்துக்குச் சென்றாள் திரௌபதி, துரியோதனன் இலை அருகில் அவள் வந்ததும், விஷமத்துடன் அதே கேள்வியை மீண்டும் கேட்டான். 'எனக்குப் பதில் கூறவில்லையே... இன்று யாருடைய முறை?'
ஸ்ரீகிருஷ்ணன் சொல்லியனுப்பியது போலவே,  இன்று "தக்ஷகன் முறை" என்று பளிச்சென பதில் தந்தாள் திரௌபதி. அதைக் கேட்டு விஷ நாகம் தீண்டியது போன்று அதிர்ந்தான் துரியோதனன். சட்டென எழுந்து அங்கிருந்து வெளியேறினான்.

திரௌபதிக்கு ஆச்சரியம். கண்ணனிடம் ஓடோடி வந்தாள். ''கண்ணா! இதென்ன மாயம்? யாரந்த தக்ஷகன்? அவன் பெயரைக் கேட்டதும் துரியோதனன் ஏன் இப்படிப் பேயறைந்தாற்போல் பதறி, பயந்து ஓடுகிறான்?'' என்று கேட்டாள்.
கண்ணன் அதற்கான காரணத்தையும் கதையையும் சொன்னான்.
துரியோதனனின் மனைவி பானுமதி மகா பதிவிரதை. கணவனையே தெய்வமாகக் கருதும் உத்தமி. ஆனால், துரியோதனனோ பாண்டவர்களின் ராஜ்ஜியத்தை அடைவதில் குறியாக இருந்தான். மனைவியிடம் அன்புடன் பேசக்கூட அவனுக்கு நேரம் இல்லை.
திருமணமாகி மாதங்கள் பல கடந்தும், மண வாழ்க்கையின் பயனை அடையும் பாக்கியம் பானுமதிக்குக் கிட்டவில்லை. அவனது அன்புக்காக ஏங்கினாள். தெய்வங்களை வேண்டினாள். அவள் தவம் பலிக்கும் வேளை வந்தது.
ஒருமுறை, முனிவர் ஒருவர் பானுமதியின் துயர் நீக்கும் வழி ஒன்றைக் கூறினார். மகிமை மிக்க மூலிகை வேர் ஒன்றை மந்திரித்து அவளிடம் கொடுத்து, அதைப் பாலில் இட்டு கணவனுக்குக் கொடுக்கும்படி கூறினார் முனிவர்.

பானுமதியும் அதன்படியே பால் காய்ச்சி, அதில் இனிப்பும் இன்சுவையும் சேர்த்து, முனிவர் தந்த வேரையும் அதில் இட்டு, கணவனின் வருகைக்காகக் காத்திருந்தாள்.
அன்று பௌர்ணமி. இரவின் இரண்டாம் யாமத்தில் அந்தப்புரம் வந்தான் துரியோதனன்,
அப்போது அவன் மது அருந்தியிருந்தான் பால் அருந்தும் மனோநிலையில் அவன் இல்லை. ஆசையுடன் மனைவி நீட்டிய
கை தவறிய கிண்ணத்தில் இருந்த பால் தரையில் சிந்தியது. அப்போது அங்கே சென்றுகொண்டிருந்த  'தக்ஷகன்’ எனும் நாகம் அந்தப் பாலைச் சுவைத்தது.
தக்ஷகன் சர்ப்பங்களின் ராஜன். பாலைப் பருகியதும் அதிலிருந்த வேரின் வசிய சக்தியால், அவனுக்குப் பானுமதி மீது ஆசையும் நேசமும் பிறந்தது.
உடனே அவன் மனித உருவில் அவள் முன் தோன்றித் தன் ஆவலை வெளியிட்டான். தன்னை வருந்தி அழைத்தது அவள்தான் என்றும் வாதாடினான். பதிவிரதையான பானுமதி பதறினாள் துடிதுடித்தாள்.

துரியோதனனுக்குத் தன் மனைவியின் உயர்ந்த கற்பு நெறி பற்றி நன்கு தெரியும். தான் அவளது அன்பையும் பிரேமையையும் புரிந்து நடக்காததால் விளைந்த விபரீதத்தை எண்ணித் தவித்தான்.
தக்ஷகன் கால்களில் விழுந்து தன் மனைவியின் கற்பைக் காக்க வேண்டினான். தக்ஷகன் பாம்பு எனினும் பண்பு மிக்கவன். பாலில் கலந்திருந்த வேரின் சக்தியால் உந்தப் பெற்றதால்தான், அவன் உள்ளம் பானுமதியை விரும்பியது. எனினும், அவளுக்குக் களங்கம் விளைவிக்க அவன் விரும்பவில்லை.
அதே நேரம், அவளின் வசியம் செய்த பாலை குடித்ததனால் பானுமதியின் அன்பை இழக்கவும் தயாராக இல்லை. எனவே ஒரு நிபந்தனை விதித்தான். 'அந்தப்புரத்தில் அமைந்துள்ள அரச விருட்சத்தின் அடியில் உள்ள புற்றுக்கு, பௌர்ணமிதோறும் பானுமதியைக் காண வருவேன். பானுமதி புற்றில் பால் ஊற்றி என்னை உபசரித்து, வணங்கி அனுப்ப வேண்டும். அப்போது அவள் கற்புக்குக் களங்கம் இல்லை என்பதற்குச் சாட்சியாக அவளின் கணவனான துரியோதனனும் என்னை வணங்க வேண்டும்’ என்று கூறிவிட்டு மறைந்தான் தக்ஷகன்.

அன்று முதல் இன்றுவரை பௌர்ணமி தோறும் பாம்புக்குப் பாலூற்றி வருகிறாள் பானுமதி. துரியோதனனும் பயபக்தி யோடு பங்குகொள்கிறான்.
இந்தச் சம்பவம் துரியோதனனுக்கும் பானுமதிக்கும் தக்ஷகனுக்கும் மட்டுமே தெரியும். 'இதனை வெளியே யாரிடமும் சொல்வதில்லை’ என்பது அவர்களுக்குள் செய்து கொண்ட ஒப்பந்தம். இதை நீ கூறியதுதான் துரியோதனனின் அதிர்ச்சிக்குக் காரணம்'' என்றார் ஸ்ரீகிருஷ்ணர்.
துரியோதனனால் தனக்கு நேர்ந்த அவமானத்தைத் துடைத்து ஆறுதல் கூறிய கண்ணனுக்கு நன்றி கூறினாள் திரௌபதி.

Sunday 31 May 2020

காசி யாத்திரை 3




#காசியாத்திரை3 காசியின் பெருமைகள்:

முதலில் காசியில் மூன்று கண் கொண்ட சாட்சி விநாயகர் இருக்கிறார்.  அவரே நம் பாவ புண்ணியத்தை பற்றி சாட்சி சொல்லும் மூன்றாம் கண் திறந்து சொர்க்கம் கிடைக்க.  வழி வகுப்பாராம். அவரை வணங்கும் போது  நல்லது நடக்குமாம்.

காசி இந்துக்களின் புனிதத் தலம். மிகப் புராதனமான நகரம். ஆதிசங்கரர், ராமானுஜர், குமரகுருபரர், மகாகவி சுப்ரமண்ய பாரதியார் என பலரது வருகையால் பொலிவுற்ற புண்ணிய பூமி. கிறித்துவர்களின் ஜெருசலேம் யாத்திரை, இஸ்லாமியர்களின் மெக்கா யாத்திரை போன்று இந்துக்களுக்கு மிக முக்கியமான யாத்திரையாகக் கருதப்படுவது காசி யாத்திரை. காசி நகரத்தின் வடக்கிலிருந்து வாரண் நதியும், தெற்கில் அஸ்ஸி நதியும் க்ங்கை நதியில் கலக்கின்ற காரணத்தால் வாரணாசி என்ற பெயரும் இந்த நகருக்கு உண்டு.
காசி விஸ்வநாதர் ஆலயம்

முத்தித் தரும் தலங்கள் ஏழனுள் காசியும் ஒன்று. இந்தியாவின் முதன்மையான ஜோதிர்லிங்கத் தலம். இங்குள்ள விஸ்வநாதர் ஆலயத்தின் கோபுரம் 51 அடி உயரமுள்ளது. முஸ்லிம் மன்னர்களின் படையெடுப்பால் தொன்மையாக கோயில் அழிக்கப்பட்டது. தற்போது உள்ள ஆலயத்தை 1785ல் மகாராணி அகல்யா பாய் கட்டினார். கோவிலின் உள்ளே நேபாள அரசரால் வழங்கப்பட்ட ஒரு பெரிய மணி உள்ளது. இந்த மணியின் நாதம் வெகு தொலைவிற்கு ஒலிக்கும் என்பது இதன் சிறப்பம்சம். ஆலயத்தின் உள்ளே உள்ள கிணற்றில் பழமையான லிங்கம் வைக்கப்பட்டிருப்பதாய் ஐதீகம். காலை 3.00 மணி முதல் இரவு 11.00 மணி வரை திறந்திருக்கும் இவ்வாலயத்தின் வழிபாடு சிறப்புமிக்கது. குறிப்பாக இரவில் நடக்கும் சப்தரிஷி பூஜை மிகமுக்கியமானது. வழிபாட்டிற்கான பூசை பொருட்கள் காசி நகரத்தார் சத்திரத்திலிருந்து எடுத்துச் செல்லப்படுகின்றன. இவ்வாலயத்தில் தனிச்சன்னதியில் அகில உலகத்தும் உணவளிக்கும் அன்னை அன்னை ஸ்ரீ அன்னபூரணி எழுந்தருளியுள்ளாள். காசி விஸ்வநாதரை நம் கையால் தொட்டு வணங்கலாம் என்பதும், அபிஷேகம் செய்யலாம் என்பது மற்றொரு சிறப்பு.
அன்னபூரணி ஆலயம்

காசியில் அவசியம் தரிசக்க வேண்டிய முக்கியமான ஆலயம் இது. இவ்வாலயம் வட இந்தியச் சிற்பக் கலை பாணியில் கட்டப்பட்டது. பேஷ்வாக்களின் ஆட்சிக் காலத்தில் சர்தார் சந்திரசூட் அவர்களால் இவ்வாலயம் நிர்மாணிக்கப்பட்டது.

நித்யானந்தகரீ வரஅபயகரீ ஸௌந்தர்ய ரத்னாகரீ|

நிர்தூதாகிலகோர பாபநிகரீ ப்ரத்யக்ஷ மாஹேஸ்வரீ|

ப்ராலேய அசலவம்ச பாவனகரீ காசீ புராதீச்வரீ|

பிக்ஷாம்தேஹி க்ருபாவலம்பநகரீ மாதா அன்னபூர்ணேச்வரீ

என்று ஸ்ரீ ஆதி சங்கரர் அன்னபூரணியைத் துதித்துள்ளார். உலக உயிர்களுக்கு வற்றாத உணவளிப்பவள் ஸ்ரீ அன்னபூரணி. ஈசனுக்கே உணவளிக்கும் அன்னை. உலகின் பசி போக்குபவள். வெறும் வயிற்றுப் பசியை அல்ல; ஒவ்வொரு மனிதரின் ஞானப் பசியையும் போக்க இங்கே எழுந்தருளியிருக்கிறாள். கொள்ளை அழகு மிக்க அன்னையின் கருணை உருவத்தைப் பார்த்துக் கொண்டே இருக்கலாம்.

காசி விசாலாட்சி ஆலயம்

காசி விசாலாட்சி ஆலயம், காசி விஸ்வநாதர் ஆலயத்திற்குப் பின்புறம் வேறு பகுதியில் உள்ளது. தனிச் சன்னதியில் அன்னை விசாலாட்சி நின்ற திருக்கோலத்தில் எழுந்தருளியிருக்கிறாள். காசி நகர் முழுதும் இந்த அன்னையின் ஆட்சிதான். இக்கோயில் நகரத்தாரின் பொறுப்பில் உள்ளது. அர்த்தஜாம வழிபாடும் அவர்களாலேயே நடத்தப்பெறுகின்றது. இது அன்னையின் 52 சக்தி பீடங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது.

கால பைரவர் ஆலயம்

காசியின் மிக முக்கியமான தெய்வம் கால பைரவர். இவர் காசி திருத்தலத்தின் முக்கியமான தெய்வம் மட்டுமல்ல; க்ஷேத்திர பாலகரும், நகரத்தின் காவலரும் இவரே. இவரை தரிசனம் செய்யாமல் காசி யாத்திரை பூர்த்தி ஆகாது. விரிந்த கண்களுடனும், கரிய பெரிய மீசையுடனும் ஆஜானுபாகுவாகக் காட்சி அளிக்கிறார் கால பைரவர். இவரைப் புகழ்ந்து ’கால பைரவாஷ்டகம்’ என்னும் பாடலை இயற்றியுள்ளார் ஆதிசங்கரர். அதில்

தேவராஜஸேவ்யமானபாவனாம்க்ரிபங்கஜம்

வ்யாலயக்யஸுஉத்ரமின்துஷேகரம் க்ருபாகரம் .

நாரதாதியோகிவ்ரு‍ந்தவந்திதம் திகம்பரம்

காஷிகாபுராதினாதகாலபைரவம் பஜே

என்றெல்லாம் பலவாறாகப் புகழ்ந்துரைத்துள்ளார்.

கங்கை

கங்கை நதி இமயத்தில் துவங்கி ரிஷிகேஷ், ஹரித்துவார் வழியாகப் பயணித்து காசி வந்து பிறகு கல்கத்தாவில் கடலில் கலக்குகிறது. கங்கை பயணிக்கும் வழியில் பல புனிதத் தலங்கள் இருந்தாலும் காசியில் மட்டும் கங்கை பல்வேறு அருள்சக்திகளுடன் பயணிக்கிறது. அதனாலேயே கங்கையில் குளிப்பதும், கர்ம காரியங்கள் செய்வதும், இறந்தோரின் சாம்பல்கள் கரைப்பதும் மிகப் புனிதமாகக் கருதப்படுகிறது. இங்கு சிந்தா காட், தசாஸ்வமேத காட், பஞ்சகங்கா காட், ஹனுமான் காட், சிவாலா காட், அஸ்ஸீ கார், வர்ணா காட், அனுசூயா காட் என 80க்கும் மேற்பட்ட படித்துறைகள் உள்ளன. இவற்றில் குளிப்பது புனிதமானதாகக் கருதப்படுகிறது. இவற்றின் கரையில் ஒவ்வொரு நாள் மாலையிலும் நடக்கும் ”கங்கா ஆரத்தி” மிகச் சிறப்பானது. இந்தியாவில் ஓடும் நதிகளிலேயே மிகப் புனிதமான நதி கங்கை.

”காசம்” என்றால் ஒளி. பிரகாசம் என்றால் மங்காத ஒளி என்பது பொருள். அதுபோல ”காசி” என்பதற்கு ஒளி, மங்காத ஞானம் என்பது பொருள். காசிக்கு வந்து செல்வது வாழ்வில் ஏதேனும் ஒருவிதத்தில் திருப்புமுனையைத் தரும் என்பதற்கு குமரகுருபரர், சுப்ரமண்ய பாரதியார் தொடங்கி எத்தனை எத்தனையோ உதாரணங்கள் உள்ளன. 

ஆத்திகரோ, நாத்திகரோ அவசியம் வந்து செல்ல வேண்டிய இடம் காசி

கங்கை மிக புனிதமானது 
எவ்ளோ பேர் அதில் இறந்து மிதந்தாலும்
அந்த தண்ணீரை நாசாவில் ஆராய்சி செய்த பொழுது சுத்தமாக இருந்ததாக சொல்வார்கள் 

தற்கொலை செய்யவேண்டும் என்று கங்கைக்கு சென்று அதில் விழுந்தால் கூட அவர்களை அப்படியே தூக்கி வெளியே வீசிவிடுவாள் கங்கை தாய்

64 காட் எனும் கோயில்கள் கங்கை கரையில் உள்ளது

அதில் இன்னும் ஒரு சிறப்பு என்னவென்றால் 
இன்றும்கூட  நாரதர் காட் என்னும் கோவிலில் இரண்டு பேர் ஒன்றாக குளிக்க சென்றால் அவர்களை அறியாமல் சண்டை போட்டு கொள்ளுவார்கள்

அதன் பிறகு அருகில் இருக்கும் விநாயகர் காட்டில் போய் குளித்தால் சண்டை சரியாகும் என்பார்கள் 

ஒரு முறை அனுமன் சிவன் சிலையை எடுத்துவர  காசிக்கு சென்றார் 
அனுமன் காசியின் காவல் தெய்வமாம் பைரவரிடம் அனுமதி பெறாமல் லிங்கத்தை எடுத்து வந்ததால் அனுமனை சொதித்து லிங்கத்தை  சிறுவன் வடிவில் வந்து பிடிங்கி கொண்டார் அந்த கோவில் தான் பிச்சாட்டூர் சிவன் கோயில்
அந்த லிங்கத்தை அனுமனுக்கு காட்டி கொடுத்தது ஒரு கருடன்
அதனால் கருடனுக்கு சாபமிட்டார் பைரவர்
அன்று முதல் இன்று வரை காசியில் எந்த இடத்தில் கருடன் பறக்காது 
ஊரை சுற்றி நாய்கள் இருந்தாலும் அவைகள் குறைக்காது.

அப்படி போவது என்றால் 
முதலில்  இராமஸ்வரம் சென்று  அங்கிருந்து மண் எடுத்து கங்கையில் கரைத்து மீண்டும் கங்கையில் இருந்து மண் எடுத்து வந்து இராமஸ்வரத்தில் கலக்க வேண்டும்
இது தான் காசி யாத்திரை என்பார்கள் 

முக்தி தரும் காசி:

இந்தியாவில் பழமையான நகரங்களில் ஒன்று காசி நகரம். ராமாயணம், மகாபாரதம் காலங்களுக்கு முன்பிருந்தே காசி நகரம், புகழ்பெற்று விளங்கியதாக கூறப்படுகிறது. இதன் புராதனப் பெயர் ‘ஆனந்த வனம்’ என்பதாகும். சிவபெருமான் மகிழ்ச்சியுடன் தங்கியிருக்கும் இடம் என்பதால் இப்பெயர் பெற்றது.

இங்கு இறப்பவர்களுக்கு சிவபெருமானே, ராம நாமம் ஓதி முக்தியை வழங்குவதாக ஐதீகம். முக்தியை தரவல்ல தலம் என்பதால் இந்த நகரத்தை ‘அவிமுக்தம்’ என்றும் அழைக்கிறார்கள். வாராண், அஸ்ஸி என்ற இரண்டு நதிகள், இந்தப் பகுதியில் கங்கையுடன் கலப்பதால் இத்தலத்திற்கு ‘வாரணாசி’ என்ற பெயரும் உண்டு. காசியின் சிறப்புகள்.

அன்னபூரணி ஆட்சி :

காசி நகரத்தின் முக்கியமான சக்தி, அன்னபூரணி. காசி முழுவதும் இந்த அன்னையின் அருளாட்சிதான். விஸ்வநாதர் ஆலயத்தில் தனிச்சன்னிதியில் அன்னபூரணி அருள்பாலிக்கிறார். இந்த அம்பாளை சிறிய சாளரத்தின் வழியாக மட்டுமே தரிசனம் செய்ய இயலும். இடது கரத்தில் தங்கக் கிண்ணமும், வலது கரத்தில் தங்கக் கரண்டியும் ஏந்தி பிட்சாண்டவருக்கு அன்னம் அளிக்கும் கோலத்தில் இந்த அன்னை காட்சி தருகிறார். அன்னையின் இருபுறமும் ஸ்ரீ தேவியும், பூதேவியும் வீற்றிருக்கின்றனர். இந்த அன்னபூரணியை தீபாவளியன்று தரிசிப்பது வெகு விசேஷமானதாகக் கருதப்படுகிறது.

கங்கா ஆரத்தி :

காசிக்குச் செல்பவர்கள் தவற விடக்கூடாத ஒன்று ‘கங்கா ஆரத்தி.’ தசாஸ்வமேத காட்டில் தினசரி நடக்கும் நிகழ்வு இது. மாலை 6.30 மணிக்கு தொடங்கி இரவு 7.30 மணிக்கு இந்த வழிபாடு முடிவடையும். இளம் வயதுள்ள ஏழு ஆண்கள் கங்கை நதிக்குச் செய்யும் பூஜையே ‘கங்கா ஆரத்தி’ என்று அழைக்கப்படுகிறது. முதலில் புனிதமான சங்கை ஊதி, மணியை அடித்து பூஜையை தொடங்குகின்றனர். அடுத்தடுத்து ஊதுபத்தி, சாம்பிராணி, மலர்கள் என ஒவ்வொன்றின் மூலமும் ஆரத்தி காட்டப்படுகிறது.

விஸ்வநாதர் ஆலயம் :

காசி நகரத்தின் சிறப்புக்குரியது விஸ்வநாதர் ஆலயம். இந்தக் கோவில் ‘விஸ்வேசம்’ என்று குறிப்பிடப்படுகிறது. ஜோதிர்லிங்கத் தலங்களில் முதன்மையானது இது. தொடர் படையெடுப்பால் தொன்மையான ஆலயம் அழிக்கப்பட்டது. தற்போது உள்ள ஆலயத்தை 1785-ல் மகாராணி அகல்யா பாய் என்பவர் கட்டியதாக கூறப்படுகிறது. ஆலயத்தின் உள்ளே நேபாள அரசரால் வழங்கப்பட்ட பெரிய மணி ஒன்று உள்ளது. இந்த மணியின் நாதம் வெகு தொலைவிற்கு ஒலிக்கும் என்பது இதன் சிறப்பம்சம். ஆலயத்தின் உள்ளே உள்ள கிணற்றில் பழமையான லிங்கம் வைக்கப்பட்டிருப்பதாக சொல்லப்படுகிறது.

அதிகாலை 3 மணி முதல் இரவு 11 மணி வரை திறந்திருக்கும் இந்த ஆலயத்தில், பக்தர்களே தங்கள் கையால் லிங்கத்திற்கு அபிஷேகம் செய்யலாம். தொட்டு வணங்கலாம். முன்பு..
இப்போது கம்பி போட்டதால் அபிஷேகம் மட்டுமே செய்யலாம் தொட்டு வணங்க. கை எட்டாது. இங்கு இரவில் நடக்கும் சப்தரிஷி பூஜை முக்கியமானது.

புண்ணிய தீர்த்தம் :

காசி நகரத்தில் உள்ள மணிகர்ணிகா தீர்த்தம், மிகப் புனிதமானது. இங்குள்ள மயானம் மிகப் புனிதமானதாகப் போற்றப்படுகிறது. இங்கு தகனம் செய்வது மோட்சத்தைத் தரும் என்பது நம்பிக்கை. இங்கு நீராடி மணிகர்ணிகேஸ்வரரை தரிசித்த பின்தான், காசியின் பிற தெய்வங்களை வணங்கச் செல்ல வேண்டும் என்ற நியதியும் உள்ளது.

காசியில் மரிப்போரின் காதுகளில் ஈசன் குனிந்து ராம நாமத்தை ஓதும் போது, அவர் காதுகளில் அணிந்துள்ள குண்டலங்கள் தரையில் படுவதால் இறைவனுக்கு இப்பெயர் (மணி - குண்டலம்; கர்ணிகா -காது).

‘மணிகர்ணிகையில் குளித்து மணிகர்ணிகேஸ்வரரைத் தியானிப்பவர்களுக்கு, மீண்டும் பிறவி இல்லை. இந்தத் தீர்த்தத்தில் ஒருமுறை மூழ்கி எழுந்தால் அது அனைத்துப் புண்ணிய நதிகளிலும் நீராடிய பலனைத் தரும். மணிகர்ணிகைக்குச் சமமான தீர்த்தம் எந்த லோகத்திலும் இல்லை’ என்கிறது கந்த புராணம்.

காசியின் காவல்தெய்வம் :

காசி நகரத்தை தன் கட்டுப்பாட்டில் வைத்து, காவல் காத்து வருபவர் அங்குள்ள கால பைரவர். இவர் கண்ணசைவின்றி காசியில் எதுவும் நடக்காது என்பது ஐதீகம். இவரைத் தரிசிக்காமல் காசி யாத்திரை பூர்த்தி ஆவதில்லை. உருண்டையான முகம், பெரிய கண்கள், அடர்ந்த மீசை என கம்பீரமாக காட்சி தருபவர் கால பைரவர். உள்ளே நுழைந்து பைரவரை வணங்கியதும், ஆலயத்தில் உள்ள மயிற்பீலியால் நம் முதுகில் தட்டுவார்கள். அதனைத் தொடர்ந்து தண்டம் என்ற நீண்ட கோல் கொண்டு, பக்தர்களின் தலையில் ஆசீர்வதிப்பார்கள். கால பைரவரின் ஆலய வாசலில் தான் ‘காசிக்கயிறு’ என்னும் கறுப்புக் கயிறு விற்பனை செய்யப்படும்.


Friday 29 May 2020

காசி யாத்திரை 2

ஒரு டூரில் நம்ம சொந்தபந்தம் அண்ணன் அண்ணி சம்மந்தி நட்பு என்று உறவினரோடு அளவளாவிய 20 நபர் பயணத்தில் மற்ற சில முகம் தெரியாதவர் பயணத்தில்  பயம் தரும் சில பயணமும் உள்ளது. 

 என்னுடைய இந்தகாசி யாத்திரை வயதான பெரியவர்களை தொலைதூர பயணத்தில் பணம் மட்டுமே போதாது. குடும்ப உறுப்பினரோடு பயணிக்க முயற்சி செய்வது நல்லது. பிறர் பயணத்ததிற்கு தொந்தரவு தரக் கூடாது.

முதல் நாள் காலை ஏழுமணிக்கு எக்மோரில் இரயில் ஏறி இனிதே சென்றது. 

ஆனால்.....

வருத்தமான இரண்டாவது நாள் காசி பயணமே மறந்தாலும் என் ஆயுள் உள்ள வரை மறக்க முடியாத சில நிமிடம்..

ஆம் ஒரு வயதான பாட்டி மூன்று முறை காசிக்கு வந்தேன் இப்போது என் தோழி மூன்றாவது வீட்டில் இருக்கிறார் என்று அழைத்து வந்தார்.. 

நான் என் அம்மாவிற்கு போன் பேச பக்கத்து இருக்கையில் வந்து போனில் பேசிய போது அந்த பாட்டி பற்றிதோழி பாட்டி சொன்னது.. அவருக்கு காலை முதல் மிகவும் மயக்கமாக படுத்தே இருந்தார். மிகவும் சோர்ந்த நிலையில் பாதி இட்லி சாப்பிட்டதாகவும் லோ சுகர் மாத்திரை போட்டார். சிறுநீர் பத்துமுறைக்கு மேல போனார் பதினோறாவது முறை போகும் போது எழுந்து நடக்க முடியல நானே கைதாங்கலாக அழைத்து வந்து படுக்க வைத்தேன் என்று சொன்ன போதே முடியாத படுத்திருந்த அந்த பாட்டியின் தீர்க்கமான பார்வை என்னை ஏதோ செய்தது.  (அப்போது தெரியவில்லை நானே அவருக்கு .. )டூர் ஏஜன்ட் அழைத்து சொல்லி மருத்துவரை அழைக்க சொல்லிருந்தோம் இரயிலில் எந்த மருத்துவரும் இல்லை மொல்ஸ்ராய் போனாலே மருத்துவர் வருவார் ஆம்லன்ஸ்ல அழைத்து போகலாம் என்றனர்..

அருகே ஒரு நர்ஸ் சற்று சக்கரை தண்ணி தாங்க என்றனர். நானும் என் கணவரும் இரண்டூ மூன்று பெட்டி தேடி ஐம்பது மில்லி தண்ணில 2ஸ்பூண் சக்கரை கலந்து இரண்டு முனறு நானே தந்தேன் எல்லாருமே அருகே செல்ல பயந்தனர்.. என் தோழி அக்குபஞ்சர் பிராணிக் ஈலர் அவரிடம் போனில் கேட்டேன் என்ன செய்ய என்று அவரும் லோ சுகர் என்றால் மாம்பழ ஜீஸ் தரலாம் என்றார் அவசர பாய்ன்ட் அக்குபிரஷைர் தர போட்டோ தந்தார் இவைகளை பேசிட்டு வரும் முன்னே அந்த பாட்டி ஒரே ஒரு மிடர் சக்கரை தண்ணி நான் ஊற்றும் போதே தலை திரும்பியது.. என்னையும் அந்த பக்கம் போங்க மருத்துவர் வரட்டும் என்று அனுப்பிட்டார் தோழியின் பாட்டி .. பிறகு நான்கு மணிநேரம் கழித்து மொகல்ஸ்ராய் வந்ததும் மருத்துவர் வந்து அந்த பாட்டி இறந்து பல மணிநேரம் ஆகிடுச்சி என்றதும் தூக்கி வாரிப்போட்டது நெஞ்சடைத்து போனது.. 

அந்த பாட்டி மகனுக்கு சொல்லி அந்த இரயில் நிலையத்திலே அவரை காவல்நிலையத்தில் ஒப்படைத்து போஸ்மாடம் செய்யாமல் எல்லா உதவியும் ஒரு பீகார் இந்திகார தம்பி ஏற்பாடு செய்துஇப்போது வரை போனில்  தொடர்ப்பு கொண்டார் நலமாகா என்று அந்த பாட்டியின் மகனோ தாயின் உடலை வீடியோ எடுக்க சொல்லி இதை வீடீயோ எடுப்பது எத்தனை மன வலியோடு என் கணவர் எடுத்து அனுப்பி இறைவா நம்ம எதிரிக்கும் இது போல வர வேண்டாம்... இன்னும் தொடரும்..#காசியாத்திரை2

மன உளச்சல்

உடல்நலனை பாதிக்கும் மனஉளைச்சல்

 
உடல் நலத்தினை வெகுவாய் பாதிக்கும் கவலை, மனஉளைச்சல் போன்றவற்றிலிருந்து எப்படி வெளியில் வருவது என்பதை பற்றி விரிவாக அறிந்து கொள்ளலாம்.

அடிக்கடி மருத்துவத்தில் கூறப்படுவது கவலை, மனஉளைச்சல் போன்றவை உடல் நலத்தினை வெகுவாய் பாதிக்கும் என்பதுதான்.

அநேகர் கூறும் சில வார்த்தைகள் என்ன தெரியுமா?

 குறைந்தது 10 வருடம் முன்னாடி இதெல்லாம் நான் செய்திருந்தால் எனக்கு இன்று மனநலம், உடல் நலம் இரண்டும் நன்றாக இருந்திருக்கும் என்பதாகும். நாமும் அவ்வாறு சொல்லாதிருக்க கீழ்கண்ட வழி முறைகளை இன்றிலிருந்தே கடைபிடிப்போம்.

* வாழ்வின் இளமை காலத்தில் ‘என்னால் இவ்வளவு உழைக்க முடியாது. போராட முடியாது’ என்று சொல்லி மெத்தனமாக இருந்து விட்டால் அதுவே பிற்காலத்தில் மிகுந்த மனஉளைச்சலை ஒருவருக்குத் தந்துவிடும். எனவே தன்னால் முடிந்தவரை ‘சவாலை ஏற்று செயலாற்றுவது’ நிறைந்த மனநிறைவினை ஒருவருக்கு அளிக்கும்.

* சிலருக்கு மற்றவர்களைப் பற்றிய குறை, குற்றங்களை கூறிக் கொண்டே இருக்க வேண்டும். இது அவர்களின் குணம். ஆனால் இந்த குணம் பிற்காலத்தில் அவர்களை மனஉளைச்சல் உடையவராக மாற்றி விடும். எனவே இந்த தரக்குறைவான குணத்தினை இன்றே மாற்றிக் கொள்ள வேண்டும்.

* தனக்கு மட்டுமே வேலை அதிகம் என்று சொல்லிக் கொண்டு சிலர் வீட்டில் உள்ளவர்களுடன் நேரம் செலவழிக்க மாட்டார்கள். மனைவி, குழந்தைகள் எல்லாம் இவர் வீட்டில் இவருக்கு சம்பந்தம் இல்லாதவர்களாக இருப்பார்கள். வீட்டிற்கு வரும் விருந்தினர்களிடம் ஒரு வார்த்தை கூட சிரித்து பேச மாட்டார்கள். இத்தகையோர் விரைவிலேயே மனஉளைச்சலுக்கு ஆளாவதால் பல நோய் தாக்குதல்கள் இவர்களுக்கு ஏற்படுவதாக ஆய்வுகள் கூறுகின்றன. பூமி நம் தலைமீது சுற்றுவதில்லை. சூரியனும், சந்திரனும் நம்மை கேட்டு உதிப்பதில்லை. அப்படியிருக்க ஏன் நாமே தான் எல்லாம் செய்கின்றோம் என்ற நினைப்பு இருக்க வேண்டும். குடும்பம், ஓய்வு இவற்றுக்கு கண்டிப்பாய் சிறிது நேரம் ஒதுக்குங்கள். இது நம் ஆரோக்கியத்தினைக் கூட்டும்.

* உடற்பயிற்சிக்கு நேரமே இல்லை என்று கூறுபவர்களை அவர்களது உடலே நோயை கொடுத்து தண்டித்து விடுகின்றது. 30 நிமிட துரித நடைபயிற்சி அநேக நன்மைகளை அள்ளித் தரும்.

* நன்றி சொல்ல பழகுங்கள். காலை வெயிலுக்கு, மலரும் பூவுக்கு, மற்றவர்களின் சிறிய உதவிக்கும் நன்றி சொல்ல பழகுங்கள்.

* எதிலும் ‘பயம்’ என முடங்காதீர்கள். தவறுகளுக்கு மட்டுமே அஞ்ச வேண்டும். முயற்சிகளுக்கு அஞ்சுவது ஒருவரை வெகுவாய் பலவீனப்படுத்தி விடும்.

* பிறருக்கு உதவாவிட்டாலும் பரவாயில்லை. பிறரை வேதனைப்படுத்தாது இருங்கள். காரணம் கோபப்படுபவர்களே அதிக அசிடிடி, உயர் ரத்த அழுத்தம் போன்ற நோய்களுக்கு ஆளாகின்றனர்.

* மிகவும் சோர்ந்த பிறகு ஓய்வு எடுப்பது தவறு. குறிப்பிட்ட நேரம் வேலை செய்தபின் நாமே சிறிது நேரம் ஓய்வு எடுத்துக் கொள்ள வேண்டும்.

* தன்னைப் பற்றி மட்டுமே நினைத்துக் கொண்டிருப்பவர்கள் எப்பொழுதும் படபடப்புடனேயே இருப்பார்கள். ஆகவே பிறரைப் பற்றியும் சிந்தியுங்கள். இதனால் உங்கள் சிந்தனை, பேச்சு இரண்டும் தெளிவாகும்.

* சிறு நன்மைகள், நற்செயல்களை கண்டு மனதில் மகிழ்ச்சி அடையுங்கள். புன் முறுவல் செய்யுங்கள். சிரியுங்கள். இது இறைவன் தந்த உடல் நல, மனநல மருந்து.

* உங்களை மிகவும் பலவீனமானவராகவும், பரிதாபத்திற்குரியவராகவும் நினைக்காதீர்கள். சுய பரிதாபம் வேண்டாம். இது ஒருவரை நிரந்தர நோயாளி ஆக்கி விடும்.

மேற் கூறப்பட்டவைகள் பொதுவில் கூறப்படும் அறிவுரைகள் அல்ல. உடல் நலனுக்காக செய்யப்பட்ட சில ஆய்வுகளின் முடிவுகள் ஆகும். இனியாவது இவைகளை கடை பிடிப்போமாக.