அத்தை மகளுக்கும்
மாமன் மகளுக்கும்
இயற்கையிலேயே ஒர்
ஈர்ப்பு பிறப்பிலேயே
உறவில் மணம் முடித்தால்
ஊனம் நேறுமோ
என எண்ணி
ஏக்கங்களை எளிதில்
மறக்க முடியாத
இளைய உள்ளங்களின்
விரக தபாங்கள்
மனமே நீ ஜனித்த காரணம் மறந்தாயோ இடறிவிழும் போதையில் விழிந்தாயோ காலங்கள் கடந்தன.கடமைகள் சுட்டன கண்ணிமைக்கும் நேரத்தில் வருடங்கள் உருண்டோடின.. வந்த வேலை முடியாமல் பிறவி பயனடையாமல் பதராய் போவாயோ மனமே.. சிவனை நினைத்து ஜீவனை தூண்டிவிட்டாயோ மனமே விழித்து விடு.. விடியா விடியலில் புதைந்து போகாதே.. உன்னில் விடியலை தேடு ஜீவனில் சிவனை நிறுத்தி சிந்தையை மெறுகேற்று மனமே.
உறவுகள் இல்லாத போது ஊஞ்சலோடு உறவாடினால் குழந்தை போன்ற மனம் ஆடும் தொட்டில் குழந்தையாக தாயின் நினைவுகளோடு தென்றலின் வருடலோடு நிலவின் குளிரோடு உன் நினைவின் பிரசவமானது
ஏதேதோ எண்ணங்கள் எண்ணங்கள் எல்லாம் வண்ணங்கள் வண்ணங்கள் எல்லாம் வசந்தங்கள் வசந்தங்கள் எல்லாம் தினம் பூமாரி பொழியாதா என்னில் புன்னகை பூவாக விடியும் ஓர் நாள் பூ மழையாக.... என் பாதையில்
அவனுக்குத் தெரியாது அவன் அருந்திகொண்டு இருப்பது அவன் உயிரை மட்டுமல்ல..... அவனுக்கு தெரியாது குறைந்து கொண்டிருப்பது மதுபுட்டியின் மதுமட்டுமல்ல அவனது ஆயுளும் என்று .. அவனுக்குத் தெரியாது அவன் அழித்து கொண்டிருப்பது அவனது செல்வத்தைமட்டுமல்ல அவனது குடும்பத்தின் எதிர்காலத்தையும் என்று ... அவனுக்குத் தெரியாது எரிந்து கொண்டிருப்பது அவனது வயிறு மட்டுமல்ல அவனது மனைவியின் மனமும் என்று
ஆடவர்கள் செலவாளிகளே தன் கவலைகளையும் ஆடைகளை களைவது போல கவலைகளை களைவர்ஆண்கள் அதனால நிம்மதியான உறக்கம் பெண்கள் சேமிப்பவர் கவலைகளையும் மனதில் புகுத்தி போர்வைக்குள் ஒளிவது போல மனதில் புகுத்தியதால் விழிகள் அவர்களை தழுவதில்லை விடியலும் அவர்களுக்கு விடிவது இல்லை நிம்மதியா
துயிலும் போது உன் விரல் பிடித்த நினைவு மறக்க முடியாமல் தவிக்கிறதே அம்மா..
கடைவீதி சென்றால் தேன் மிட்டாய் பிடிக்கும் என வாங்கி தந்த சுவை இன்னும் நாவில் இனிக்கிறதே அம்மா..
நீ கற்று தந்த பாடங்களை பிழை இன்றி பயிலும் போது நீ தந்த பாராட்டு உச்சி முகர்ந்து தந்த முத்தம் இன்னும் சிலிர்க்க வைக்கிறதே அம்மா..
அழகான ஓவியங்கள் சுவற்றில் கிறுக்கிய பின் அவையே வண்ண கோலங்களால நான் வரைந்து பரிசு பெற்ற போது மண் வலையல் பரிசு தந்தாயே அதன் ஓசை மனதில் ரீங்காரமாய் ஒலிக்கிறதே அம்மா...
சுவையாக சமையல் கற்க எளிமையாக குறிப்பு தந்து மனதின் ஆழமாக பதிந்த்தே அம்மா..
அன் அன்பால் என்னை வென்றாய் அம்மா ...
ஒருநாளும் உன் கரம் என்னை அடித்ததே இல்லை.. அனைத்தே என்னை அன்பால் உயர்த்தினாயே அம்மா...
கனவு தேசம் என் கனவு தேசத்தில் கலகம் இல்லை கற்பழிப்பு இல்லை குறையான குழந்தைகள் பிறப்பு இல்லை ஆண்பெண் பேதம் இல்லை வலிகள் இல்லை வம்பு சண்டைகள் இல்லை குறைகள் இல்லை குற்றம் இல்லை சாதிமதம் இல்லை சமத்துவே எல்லை சங்கீதமே என் கனவுதேசத்தின் பூபாளம்
எங்கோ பிறந்து எப்படியோ வளர்ந்து இங்கே முகநூல் மூலமாக கிடைத்த முத்தான பல ''நட்பு'' முகம் காணாமல் உதவும் உள்ளம் இறைவன் தந்த அன்பு பரிசில் நினைகிறேன் இன்று .......
சில பெண்ணுக்கு.. திருமணம் ..ஒரு முட்டு சந்து. சில பெண்ணுக்கு .. பொட்டல் காடு சில பெண்ணுக்கு...இரயில் தண்டவாளம் சில பெண்களுக்கு...நரகம் சில பெண்களுக்கு...வழுக்குப் பாறை சில பெண்களுக்கு ..மட்டுமே அமைதியான சொர்க்கம்
மனமே நீ எதை தேடி அலைந்தாயோ அதுவாக நீ மாறிவிடு அவற்றில் கலந்துவிடு நித்தம் நிர்மலமான உன் ஜோதியில் அடைக்கலம் பெற அனுமதி தா அம்பலத்தானே பற்று அற்றிருக்க பராபரனே உனை பற்றுகிறேன் பாரா முகம் ஏனோ சிவமே...
மணிக் கணக்கில் பேசுகிறேன் நான் உன் மௌனமே பதிலா நீ என்னை மதிக்கிறாயா அவமதிக்கிறாயா அல்லது நேசிக்கிறாயா ''அன்பே'' இது வரமா சாபமா உன் அன்பில் இதையும் நேசிக்கிறேன்...
சில பெண்ணுக்கு.. திருமணம் ..ஒரு முட்டு சந்து. சில பெண்ணுக்கு .. பொட்டல் காடு சில பெண்ணுக்கு...இரயில் தண்டவாளம் சில பெண்களுக்கு...நரகம் சில பெண்களுக்கு...வழுக்குப் பாறை சில பெண்களுக்கு ..மட்டுமே அமைதியான சொர்க்கம்