Saturday 22 November 2014

கழைகூத்தாட்டி

கழைக்கூத்தாட்டி வாழ்வும்,
அந்த கயிற்றின் பயணம்
போல தடுமாற்றத்தோடு
நடக்கிறது. தினம் 
ஒருவீதியாக நிறையா
வயிறோடு கல்வியில்ல 
கறைபடிந்த உடையோடும்....

வெற்றி

கவலைகளை காலில் 
போட்டு மிதித்து...
வெற்றிகளை தோளில்
சுமந்து புன்னகையோடு
வீறு நடை போடுங்க .. 
எதிர் காலம் நோக்கி.

மனம்

புற இருளில் 
தயக்கமின்றி 
நடந்து விடுகிறேன் .........
அக இருளில்தான்
தடுமாறி .

காவலார்கள்

காவலர்கள்...
============ 
கன்னியமானவர்கள் 
கடமைதவறாதவர்கள் 
காழ்புணர்ச்சி இல்லாதவர்கள்
நல்ல நண்பர்களாகவும்
இடர்வரும் போது கரம்
தரும் உறவு போலவும்,
உற்ற நண்பராகவும் ,
காலநேரம் பாராமல்
கடமை தவறாமல்
உன்னதமானவர்கள்.
ஒரு சில (நேர்மயில்லா)
காவலர்களால் நல்ல
மனிதருக்கும்
இழுக்காகி போகிறது
அவர்களும் மாறனும் என்ற ஆசையில்
காவல்களுக்கு ஒரு வீர வணக்கம்

சிவமே

வார்த்தையே வராமல் 
பக்தியில் தொழுகிறேன்.

பற்றை அகற்றவே
அழுகிறேன்.

அன்பே படையளாக்கி..
என்னையே உருகி உருகி
தருகிறேன்.

நான் யார் என
அறியவே நின் பதம் 
பணிகிறேன் சிவமே..

முயற்சி

யுத்தங்களும் வீழ்வதில்லை...
வெற்றிகளும் நிலையில்லை ...
ஆனால் முயற்சி மட்டுமே தொடர்ச்சியாக..

ஆதவன்

உனக்கும் எனக்குமான 
கவிதை வரிகள் 
ஏட்டில் இல்லாமல்
எண்ணத்தில் மட்டுமே 
தினம் உதிக்கும்
ஆதவனாக ஒளிரும்
தினம் தினம்!!!..

தினம்

விடியல் புதுமையாகவும் 
மனம் நிறைவாகவும்
 துயர்களை வெல்லும்
 தைரியமும் மனதிடமும்
 தினம் நிலையாக இருக்கட்டும்

மீனும் மனமும்

வட்டத்திலும்
விட்டத்திலும்
அடைபடாத குளத்து
மீன்களே....

என் மனதையும் 
உன்னோடு 
நீந்தவைத்தாயே...
துள்ளலோடு....

தனிமையற்ற 
கூடோ குளங்கள்....

மௌனம்

உன் நினைவுகள் 
என் எண்ணத்தில்
மௌனகீதம் பாடுகிறதே ...நித்தமும்

நட்பு

பல வண்ணங்கள்
வானவில்லிற்கு அழகு
நல் எண்ணங்கள்
வாழ்விற்கு அழகு......
பொறுமை
எல்லாவற்றிற்கும் அழகு....
கடும் சொல்
நட்பிற்கு அழகல்ல......
காலம் எல்லாவற்றிலும்
சுவாசிக்கிறது
அழகாக ..
''நட்புக்காகவே''!!!.....

நதி

புறப்பட்ட இடம் 
தெரியாமல் ஓர் 
அருவியென மலை 
மீதிருந்து வீழ்ந்து 
கொண்டிருக்கிறேன் ..
இருந்தபோதும்
சேருமிடம் தெரிந்து
தொடர்கிறதென் பயணம்

ஆசை

நிறைவேறா .....ஆசை
நிராசை ஆகிறது .
நிறைவேறிய ஆசை...
வெற்றிக்கு வித்தாகிறது.

மனம்

துடிப்புடன் உலாவரும்
என் இதயம் ..
உன் நிழலை காண
ஏங்கி தவிக்கிறது ...
''மனது''

Wednesday 29 October 2014

விடியல்

விடியல் வரை விழித்திருந்தேன் 
உனைக் காண விடிந்து வராமல் 
ஏமாற்றினாயே.. என் இளங்கதிர் சூரியனே..

திருஷ்டி

 கருமேகமே உன் நிறம்
 கொஞ்சம் கடனாகத் தாயேன் 
 என் கண்மணிக்கு
 திருஷ்டி பொட்டு வைக்க...

தென்றல்

அசைந்தாடும் தென்றலும் அமைதி எனும் போர்வைக்குள் ஆள் அரவமற்ற அறையில் இருளின் நர்த்தனத்தில் நடுநிசையில் இந்த மணிகூண்டு மட்டும் காலம் எனும் தன் காதலன் வரவுக்கா நொடிப் பொழுதும் அயராமல் விழித்துக்கொண்டே..,

கீற்று

மழைகீற்றுக்குள் நீந்துகிறது.
காதல் என்னும் அன்பு பிரவாகம்
யாரையோ நோக்கி மௌனமாக....

இயற்கை

மலரும் முன் மொட்டுகுள் வாசத்தை வைத்தவன் எவனோ.
மழைவரும் முன் மயிலுக்கு ஒருவாசம் எப்படி வருதோ..
நிலத்தில் மலரும் முன் செடிகளும் ஒரு வாசத்தோட..
உன் அன்பின் வாசமும் சுவாசமாகவே என்னில் ..
அட டா இயற்கை அழகை ரசிக்க இந்த ஆயுள் போதுமோ..

Wednesday 24 September 2014

வெற்றி

தோல்விகள் எல்லாம்
 உதிர்ந்த மலர்கள் ஆனாலும்.
 அவைகளை மாலைகளாகத்
 தொடுப்பதே .. வெற்றிதானே.!!

விடை

வெறுப்புகளுக்கு இடம் தரும் 
தருணம் விருப்பங்கள்
 விடை பெரும் சொல்லாமலே

நொடி

கோபத்தின் கடைசி 
நொடியும் இன்பத்தின் 
முதல் நொடியும் ஒரு 
இழை இடைவெளிதான்.,

சுகம்

உறுத்தலும் சுகமானதே ..
நம்மை சிந்திக்க
வைக்கும் வரிகளான போது....

வெற்றி

தோற்றுக் கொண்டே 
இருப்பதும் மன நிறைவே...
 வெற்றிக்கு அருகில் நான்..

மௌனம்

உன் மௌனத்தில் 
ஆயிரம் உண்மை 
தன்னகத்தே
தவம் கிடக்கிறதோ..

வண்ணத்துப்பூச்சி

மின்னலாக வருகிறாய்
எதையோ தருவது போல..
பாவனை செய்து ஏதும் 
தராமல் தவிக்க விட்டு 
போகிறாயே ...
வண்ணத்துப்பூச்சியே..
சசிகலா

விதி

நிழலாக வருகிறாய்
நான் நினைக்கும் முன்
அணைக்கிறாய் ..
அன்பாக இருக்கிறாய் ..
அமுதமாக இனிக்கிறாய் ..
எல்லாமாக மாறி
ஏக்கங்களுக்கும்
தாக்கங்ளுக்கும் தானே
பொறுப்பாக மாறி
புது தெம்பளிக்கிறாய்
என் (விதியே...)
சசிகலா

அனாதை

வானவில்லை வலைத்து
ஊஞ்சல் விளையாடலாமா.!
மழையைக் கயிராக திரித்து
புன்னகை பட்டம் விடலாமா.!
மலர்களைக் கோர்த்து
மாளிகை கட்டலாமா.!
கடல் அலையில்
கோலம் வரையலாமா..!
விண்மீன்களில் அழகாக
வளையல் செய்யலாமா.!
நீலவானில் நீந்தலாமா
தோணி கொண்டு.!
நீங்கா துயர்கொண்டு
வளம் வரும் "அனாதை" எனும்
மழலைகளோட கரம் கோர்த்து

Friday 12 September 2014

எழில்

தொட்டு விடும்
தூரத்தை எட்டி
பிடிக்க எத்தனிக்கும் 
எழிலான இயற்கை 
மங்கை நானே

புன்னகை

உன் புன்னகை
என் இதயத்தில் 
ஏதோ செய்கிறது 
இனம் புரியாத மகிழ்வு
நீர் குமிழாக 
பறக்கிறது தினமும் 
நீ பால்வாடி போகும்
போது எனை கண்டு கண் சிமிட்டுவது....

வசம்

வானமும் வசப்படும்.
துன்பங்களை
தவிடுபொடியாக்கும் 
மனம் இருந்தால்!

நிறைகள்

குறைகள் இருக்கத்தான் 
செய்கின்றன..
எண்ணிலடங்காமல்,
அதற்கு உயிர் தராமல் 
நிறைகளை நேசிப்போம் நிதமும்

நீர் ஊற்று

மகிழ்ச்சி மனதின் நீர் ஊற்றுப் 
போல சுரந்துக் கொண்டே இருக்கும் 
அதை நாம் கவனிப்பதே இல்லை.

சூழ்நிலை

சுற்றித் திரியும் சாகசப் பறவைகளும் 
சிலநேரம் சூழ்நிலை கைதியாகுமோ....

மனம்

தேடலின் முழுமை வெற்றி.
வெற்றிப் பெற்றாலும் தேடலிலே மனம்

தோப்பு

ஒற்றை பனைமரமாக 
ஓங்கி வளர்வதைக் 
காட்டிலும் கூட்டாக கூடி 
தோப்பாக வளரும் சிறு
 மரங்களே சிறப்போ....

சிவனே

காத்திருந்துக் காந்திருந்து 
கருணைக் கடலே...
கற்பூர ஜோதியில் உனை
கண்டதில் கவலையெல்லாம்
காற்றினிலே கலந்திட்டதோ 
சிவசக்தி நாதனே....
மனம் நிர்மலமானதே ...
நின் ஜோதியில்..

மனம்

மனதின் மகிழ்வான தருணம் 
குழந்தைகள் கூடி விளையாடும் இடமே..

நெருடல்

பட்டென போட்டு ஒடைக்க 
கவலை ஒன்றும் காண்ணாடி அல்லவே ..
மனதை நெருடும் முள் போன்ற மோசமானது....

பட்டாம் பூச்சி

தித்திக்கும் தென்றலாக ..
மென்மையான மாலையில் 
மல்லிகை மணத்தில் மனம் 
வருட தினம் தினம் வரும் பட்டாம்பூச்சியே....

தடைகள்

நினைவுகளும், கனவுகளுமே ..
வான் உயர்ந்து உலா வருகிறது 
தடையின்றி..

அன்பு

அன்பை அள்ளித் தாங்க..
பண்பை பறைச் சாற்றுங்க..
கோபத்தை தீயிலிடுங்க....
வன்மத்தை விட்டுவிடுங்க....
இன்பத்தை பகிருங்க..
கருணையை வளருங்க...
பசுமையை விதையுங்க...
துன்பத்தைத் தள்ளிவிடுங்க.. 
மனதில் குழந்தையாக 
வளம் வாங்க இன்பமாக வாழ

மனம்

அழகால என்ன இருக்கு. 
மன அழகே சிறப்பானது 
வலிமையானதும் கூட...யாருக்கோ

காத்தாடி

நூலும் வாலும் அற்ற 
காத்தாடியாக மனம்
 சில நேரம் எதை நோக்கியோ பயணிக்க

தலைமுறை

தலைமுறை இடைவெளி 
இல்லாமல் தாத்தா பாட்டி 
மழலைகளோடு மனம்
 விட்டு விளையாடுங்க

தொல்கப்பியம்

தொல்காப்பியம் பொருளடக்கம்
=================================
1.சிறப்புப்பாயிரம் 
=================
வட வேங்கடம் தென் குமரி
ஆயிடைத் தமிழ் கூறும் நல் உலகத்து
வழக்கும் செய்யுளும் ஆயிரு முதலின்
எழுத்தும் சொல்லும் பொருளும் நாடிச் 5

செந்தமிழ் இயற்கை சிவணிய நிலத்தொடு
முந்து நூல் கண்டு முறைப்பட எண்ணிப்
புலம் தொகுத்தோனே போக்கு அறு பனுவல்
நிலம் தரு திருவின் பாண்டியன் அவையத்து
அறம் கரை நாவின் நான்மறை முற்றிய 10

அதங்கோட்டு ஆசாற்கு அரில் தபத் தெரிந்து
மயங்கா மரபின் எழுத்து முறை காட்டி
மல்கு நீர் வரைப்பின் ஐந்திரம் நிறைந்த
தொல்காப்பியன் எனத் தன் பெயர் தோற்றிப்
பல் புகழ் நிறுத்த படிமையோனே.

2.எழுத்ததிகாரம்
==================
1.நூல் மரபு
2.மொழி மரபு
3.பிறப்பியல்
4.புணரியல்
5.தொகை மரபு
6.உருபியல்
7.உயிர் மயங்கியல்
8.புள்ளி மயங்கியல்
9.குற்றியலுகரப் புணரியல்

3.சொல்லதிகாரம்
=================
1.வேற்றுமையியல்
2.வேற்றுமை மயங்கியல்
3.விளி மரபு
4.பெயரியல்
5.வினையியல்
6.இடையியல்
7.உரியியல்
8.எச்சவியல்

4.பொருளதிகாரம்
=================
1.அகத்திணையியல்
2.புறத்திணையியல்
3.களவியல்
4.கற்பியல்
5.பொருளியல்
6.மெய்ப்பாட்டியல்
7.உவமயியல்
8.செய்யுளியல்
9.மரபியல்

கனம்

கானத்தில் கலந்திடு மனமே...
நிதானத்தில் நிலைத்திடு மனமே ..
மௌனத்தில் மறைந்திடு மனமே..
தியானத்தில் தொலைந்து போ தினமே...
சுகங்களும் துக்கங்களும் தொடரும் முன் .

சிறிய அன்னை

தோள் சாய நினைத்தேன் 
தேளா கொட்டினாய் நீ
சிற்றன்னை என்பதாலோ......

வசந்த முல்லை

வறுமையில் வாடும் வசந்த முல்லைகள்... 
பள்ளியில் மாத கட்டணம் கட்டாமல்,
இரவு வயிறாற உணவு இல்லாமல் ,
பிறந்த நாளுக்கு புதிய ஆடை 
அணியாமல் வறுமையின்
''தத்து'' பிள்ளைகளாக ..வளரும் மொட்டுகள்
சாலையோர சங்கீதங்கள் இவை..

மழலை

மழலைகள் தவழும் வீடும்
தோட்டத்தில் மலர்கள் வாசமும் ஒன்றே...

தவறு

தவறு வராதா ஏதும்?
என மனதில் கேள்வி
விக்கி நிற்கவே....தயக்கதில் 
தடுமாறினேன்.... மனதளவில்

மனம்

மௌனத்தில் விளையாடும் மனமே!
கொஞ்சம் மழலையிடம் விளையாடேன் ....தினமே

தினம்

தித்திக்கும் தினமாக நித்தம் வருமோ
தோல்விகள் அதில் மறையுமோ...
வெற்றிகள் விளையாடுமோ ..

Tuesday 5 August 2014

முகநூல்

எங்கோ பிறந்து
எப்படியோ வளர்ந்து
இங்கே முகநூல்
மூலமாக கிடைத்த
முத்தான பல ''நட்பு''
முகம் காணாமல் 
உதவும் உள்ளம் 
இறைவன் தந்த
அன்பு பரிசில் 
நினைகிறேன் 
இன்று .......

தேடமறந்தேன் ....

எதை தொலைத்தேன்
எங்கே தொலைத்தேன்
என்பதையே மறந்து தேடுகிறேன்
எப்படி தொலைத்தேன்
யாரிடம் தொலைத்தேன்
எங்கேயும் கிடைக்கவில்லை
என்தேடலும் நிறுத்த வில்லை
தொடரும் தேடல்..
அகத்துக்குள் தேடமறந்தேன் ....

பட்டம்

இரு(திரு)மணங்களின் பரிசு 
''குழந்தை''
இயற்கையின் சாபமோ 
''மலடு'' 
பல்கலைகழத்தில் கிட்டாத பட்டம்

''ம்''

''ம்'' என்ற வார்த்தைக்குள்
ஆயிரம் கவிதைகள் 
புதைந்து கிடக்கின்றன.

மகளே

உன் விழியில் 
துள்ளி விளையாடும் 
விண்மீன்கள் ..
உன் புன் சிரிப்பில் 
ஒளிந்திருக்கும் 
வசந்தங்கள் ..
மொத்தத்தில் பேசாத 
கவிதை என நீ

நிம்மதி

வலிகளை கடந்தால்
வரிகள் பிறக்கின்றன
வாழ்க்கையை கடந்தால் 
நிறைவு பிறக்கின்றன
நிறைவு பிறந்தால் 
நிம்மதி மிளிர்கின்றன

அமைதி

இருப்பதை விட்டு இல்லாதவைகளை 
தேடி அலைந்து மன உளச்சலை 
அடைவதை விட கிடைத்ததில் 
பூரண மன அமைதி
வெற்றி நாடுவது சிறப்பானதே

ஈகோ

இரண்டு உள்ளங்களுக்கும் உண்டான
இடைவெளி .....(ஈகோ)

மண் வரண்டு

கவிதை கலங்கி நிற்கிறது.
வாட்டத்தில்..
என் வீட்டு தோட்டத்தில் 
மலராமலும் மழைவராமலும்
வெயிலில் வதங்கி 
கவிதை கலங்கி நிற்கிறது.
வாட்டத்தில்..
என் வீட்டு தோட்டத்தில் 
மலராமலும் மழைவராமலும்
வெயிலில் வதங்கி 
கவிதை கலங்கி நிற்கிறது.
வாட்டத்தில்..
என் வீட்டு தோட்டத்தில் 
மலராமலும் மழைவராமலும்
வெயிலில் வதங்கி 
மண் வரண்டு ..... ..... .....