Friday 11 September 2015

லவ் பேட்ஸ்




பறவைகள் வளர்ப்பது என்னதை சுகம் மகளுக்கு பிடிக்குமே என்று இரண்டு ஜோடி வாங்கி வந்தேன் அழகான இரண்டு கலர் வண்ணபறவை மஞ்சள் நிறமொன்று, பச்சை நிறமொன்று, நீல நிற மொன்று ,வெள்ளை நிறமொன்று என இரண்டு ஜோடி.

 அதற்கு பெயரிட்டேன் .  ஒயிட்டி.பீயுட்டி .ஸ்வீட்டி 
ஆர்ட்டி என்றும் சில மாதத்தில் அவை வெள்ளைநிற பறவை 5முட்டையும் மஞ்சள் நிறபறவை ஏழு முட்டையும் இட்டது ..மிக மகிழ்ச்சி வீட்டில் எல்லாருக்கும் நாம சரியாக பறவைகளை பராமறிக்கிறோம் என்று ..ஆனந்த கூத்தாடுவது போன்ற உணர்வு. 

பறவை முட்டை இட்டு 17நாள் கழித்து  ஒவ்வொன்றாக முட்டை குஞ்சுபொறித்தது. இரண்டுநாளுக்கு ஒரு முறை என்று பத்து முட்டையே பொறித்தது . மஞ்சள் குருவி இட்ட முட்டை ஆறும் வெள்ளை குருவி இட்டமுட்டை நான்கும் மீதி சல்லையாக போனது அவை ஒரு மாத்ததில் மிக அழகாக நிறம் மாறிய வண்ணத்தில் வளர்ந்து விட்டது அதன் தாயை ப்போல நான்கு பெண் பறவை ஆறு ஆண் பறவைகள் அழகாக கத்தும் .பாடும் . கொஞ்சும் சண்டையும் போடும் கையில் எடுத்து கொஞ்சலாம் விரலை கடிக்க வரும் .

அதற்கு உணவாக திணை . கம்பும் மட்டுமே இரணெடுநாளுக்கு ஒரு முறை கொத்தமல்லி தினம் தண்ணீர் மாற்றி மகிவும் பாசமாக பார்த்து வளர்த்தோம் ... 
மீண்டும் மூன்று மாதம் பொறுத்து மஞ்சள் குருவி ஐந்து முட்டை வைத்திருக்கு ....


அவை எப்படி பொறிந்தது .. அத்தனையும் காப்ப முடிந்தனவா எப்படி எல்லா குருவிகளும் வளர்த்தோமோ என்ற தொடர் அடுத்த பதிவில்...

Wednesday 22 July 2015

இலக்கணம் புத்தகம் தேமதுர தமிழ்

நான் எழுதிய இலக்கண புத்தகம் 

சுவாசம்



என் சுவாசக் காற்றின் நாதமே கீதமே காற்றுள்ளபோதே தூற்றிக்கொள்வது போல நீ அருகிலுள்ள போதே நேசித்தும் வாசித்தும் கொள்கிறேன்..

நிலவொலியில் நிழலாடும் கனவுகள் விடியலைதேடி காத்திருக்கிறது நிஜமாக

மகிழ்வு

மகிழ்வான தருணம் ஒவ்வொரு நொடிகளையும் நினைவு பெட்டகத்தில் பொக்கிஷமாக சேமிக்கிறேன் ..

வரம்

வாழ்க்கையெனும் வானத்திலிருந்து இன்பமெனும் மழைதுளியை என்றென்றும் என் கைகளில்

 ஏந்துகிறேன் 

தூரம்

வெற்றியின் விளிம்பில்
ஆனந்த களிப்பில் 
ஏதும் அறியா 
பேதையாக 
திரும்ப பார்க்கிறேன். 
கடந்த தூரத்தை விட 
இழந்த மகிழ்வுகள் 
எண்ணிலடங்காதவை..

காதல்

காதலால் 
காலத்தையும் 
கடக்கலாம்....
 
காதலில்லாமல்
கன நேரத்தையும்
 கடந்து போக முடியல ...

ஏக்கம்

சோதித்துக் கொண்டே
 இருக்கிறாய் என் 
சந்தோஷங்களை..

தோஷம் கழித்த கன்னிப்
பெண்ணின் ஏக்கம்..

மெய்

உண்மை 
ஊமையாகவும் 
பொய் தேனாகவும்
 இனிக்கும் சில நேரம்...

மழை

மெல்ல மெல்ல ஆதவனின்
கதிர்களை முத்தமிட்ட 
மேகங்கள் தன்நிலை 
மறந்ததோ 
மழையாக மண்ணையும்
 முத்தமிட துடிக்கிறது
 இதோ இதோ முத்தமிட்டு 
கொண்டே என்னைப் 
பார்த்து புன்னகைக்கிறதே
 நீயும் வா விளையாட
 என்றே கரம் தந்தது

Monday 30 March 2015

கடமை

தென்றலாக வந்து புன்னகை 
மலர்களை பரிசாக தந்து 
புயலாக செல்கிறாய் வெற்றியின் பாதையில்...
கடமையே கண்ணாக கருதி...
smile emoticon

கடமை

தென்றலாக வந்து புன்னகை
 மலர்களை பரிசாக தந்து
 புயலாக செல்கிறாய் வெற்றியின் பாதையில்...
கடமையே கண்ணாக கருதி...
smile emoticon

துணிவு

எப்போதும் எதுக்காகவும்
சோக போர்வைக்குள்
 நாம போகக்கூடாது
நம்மை அந்த சோகமோ
 துக்கமோ கவலையோ
 மீண்டுவரா துயரில் புகுத்திவுடும்

நீர் குமிழ்

தோல்விகள் நீர்க் குமிழாக
வெற்றிகள் கையில் கடிகாரமாக .....
சுழன்றுகொண்டே .

வெற்றாக நான்

வரிகளற்று 
வெற்றுத் தாளாகி
காற்றில் கரைகிறேன்
சுவாசமும் அற்று போகுமோ
உன் நேசம் இல்லாமல் போனால்

மடல்

வரையா மடலில்
ஏங்கி நிற்கிறது...
உனக்கான அன்பு 
வரிகளும் அதன் சுவாசமும்

சிவனே

நான் (அகந்தை )இதை 
வெல்வதா கொன்றுப்
புதைப்பதா என...
ஏதூம் அறியாது 
பேதையாகி நின்
 பாத கமலங்களை 
பற்றி சரணாகதி 
அடைகிறேன் தில்லை நாதனே.

தென்றல்

மயிலிறகான
மனதை வருட 
தென்றல் வருவதில்லை ..
துன்பமே துன்புறுத்துகின்றன.

கனவுகள்

இந்த வாரம் பாக்யா புக்ல வெளிவந்த என் கவிதை

Monday 2 March 2015

இயற்கை மருத்துவம்

 இயற்கை மருத்துவம்
=========================
1) என்றும் 16 வயது இளமை துடிப்புடன் வாழ ஓர்
""நெல்லிக்கனி.""
2) இதயத்தை வலுப்படுத்த
""செம்பருத்திப் பூ"".
3) மூட்டு வலியை போக்கும்
""முடக்கத்தான் கீரை.""
4) இருமல், மூக்கடைப்பு குணமாக்கும்
""கற்பூரவல்லி"" (ஓமவல்லி).
5) நீரழிவு நோய் குணமாக்கும்
""அரைக்கீரை.""
6) வாய்ப்புண், குடல்புண்களை குணமாக்கும்
""மணத்தக்காளிகீரை"".
7) உடலை பொன்னிறமாக மாற்றும்
""பொன்னாங்கண்ணி கீரை.""
8) மாரடைப்பு நீங்கும்
""மாதுளம் பழம்.""
9) ரத்தத்தை சுத்தமாகும்
""அருகம்புல்.""
10) கான்சர் நோயை குணமாக்கும்
"" சீதா பழம்.""
11) மூளை வலிமைக்கு ஓர்
""பப்பாளி பழம்.""
12) நீரிழிவு நோயை குணமாக்கும்
"" முள்ளங்கி.""
13) வாயு தொல்லையிலிருந்து விடுபட
""வெந்தயக் கீரை.""
14) நீரிழிவு நோயை குணமாக்க
"" வில்வம்.""
15) ரத்த அழுத்தத்தை குணமாக்கும்
""துளசி.""
16) மார்பு சளி நீங்கும்
""சுண்டைக்காய்.""
17) சளி, ஆஸ்துமாவுக்கு
""ஆடாதொடை.""
18) ஞாபகசக்தியை கொடுக்கும்
""வல்லாரை கீரை.""
19) ரத்த அழுத்தத்தை குணமாக்கும்
""பசலைக்கீரை.""
20) ரத்த சோகையை நீக்கும்""
'' பீட்ரூட்.""
21) ஜீரண சக்தியை அதிகப்படுத்தும்
"" அன்னாசி பழம்.""
22) முடி நரைக்காமல் இருக்க கல்யாண முருங்கை (முள் முருங்கை)
23) கேரட் + மல்லிகீரை + தேங்காய் ஜூஸ் கண்பார்வை அதிகரிக்கும் கேட்ராக்ட் வராது.
24) மார்புசளி, இருமலை குணமாக்கும்
""தூதுவளை""
25) முகம் அழகுபெற
""திராட்சை பழம்.""
26) அஜீரணத்தை போக்கும்
"" புதினா.""
27) மஞ்சள் காமாலை விரட்டும்
“கீழாநெல்லி”
28) சிறுநீரக கற்களை தூள்தூளாக ஆக்கும்
“வாழைத்தண்டு”.

Saturday 28 February 2015

அன்னை

கண்ணே!
 மணியே!
கட்டி கரும்பே!
மானே !தேனே!
மரகதமே !
மரிக்கொழுந்தே !
மலர்செண்டே!
வையகம் போன்ற
வந்த என் குல விளக்கே
இன்னல் போக்க வந்த
இன்னிசையே
என வர்னித்து பாடுகிறாள்
ஒரு அன்னை
தன் மகன் இறந்ததை
அறியாமல் தூளியை
ஆட்டிக்கொண்டே



சிவமே

எண்ணிலடங்கா
ஆலயம் தொழுதாலும்
அத்தனையிலும் நீயடா
என் சித்தம் உன்னைச் சுமந்தே
பித்தாகி போனதடா
பிறைசூடனே

அன்பு

தோற்குமோ
உன்மீதான
 அன்பு
அழிவில்லாத
 கடல் அலைப்போல
உன்னை
வந்து வந்து
காண்கிறது......

புன்னகை

உறவுகளில் விரிசல்கள் தேவைதானா .....
அவர்கள் ஆயிரம் கேள்விகளை 
தொடுத்தாலும் புன்னகையை
பரிசாக  பதிலில்அளித்து இனிமை
 தந்தால் விரிசலை தவிர்க்கலாமே....

சுவாசம்

உன் சுவாசத்தையே நான் நேசிக்கிறேன்
உன் சுவடுகளிலேயே பயணிக்கிறேன்
உன் நேசத்தையே யாசிக்கிறேன்......

அனுபவம்

அனுபவம் பலவிதம் 
ஒவ்வொன்றும் ஒரு விதம்
மனிதரின் மனம் பொறுத்தே 
அவை ஏற்கப் படுகின்றன ......

சிவனே

பட்டமாக பறக்கிறேன்... 
இருளும் விடியலும் பாராமல் 
இறைவா நீ!
நூலாக ஆட்டிவைக்கிறாய்
விதியின் பிடியிருந்து 
விலக்கிவிடேன்
நாதனே...
என் ஈசனே.....

அனுபவம்

தோல்விகள் அனுபவ 
பெட்டகமாக
வெற்றியின் ஆணி
வேராராக வளர்கிறதே
மனதில் வைராக்கிய விழுதுகளாக...

சிவனே

எங்கெங்குமே நின்னையே
 காண்கிறேனடா சர்வேசா...
 வெற்றிலும் நீ
தோல்விலும் நீ.
காதலும் நீ
காவியமும் நீ
கவிதையும் நீ 
காற்றும் நீ
அருவி ஊற்றும் நீ
அனலும் நீஅதன் தனலும் நீ
அன்பும் நீ
வம்பும் நீ
மண்ணும் நீ
மழையும் நீ
மலரும் நீ
இன்பமும் நீ
துன்பமும் நீ
அகமும் நீ
புறமும் நீ
வேதமும் நீ
அனேகனும் நீ
அண்டங்களும் உன்னுள்ளே 

அடங்கிவிடும் பாழாய்
 போகும் இந்த பிறவப்
 பயனாக நின்பொற்பாதம்
 தொழுகிறேன் 
திஅருணாசலனே 
அடைக்கலம் தாராயோ.!!!

உன்னை அறிந்தால்

தேடிக் கொண்டே இருக்கிறேன் ....நீ 
அருகில் இருப்பதை உணராமலே..

சிவனே

நினைத்தவைகளையும் 
நினைக்காதவைகளையும்
போது மென்ற அளவு 
தரும் வள்ளல்... அவன்
தேவைகளே இல்லாத 
ஒரு நிலை தருபவன்.
அவனே நமை ஆளும் சிவன்