புன்னகை பூக்கும் செல்ல மகளே.. அன்பை பொழியும் அன்பு மகளே.. அதிக கோபத்திலும் அழகு மகளே .. செல்லமாய் சிதறும் சினங்களும் கூட மென்மையாய் என்னில் பூக்கிறதே . தாய் பாசமே அன்றி வேறும் தோனல மகளே.
கேட்காத கேள்விக்கு பதிலாக எதைத் தருவேன் எழுத்தாய் கோருகிறாய் வார்த்தையாய் கோர்தா? வாக்கியமாய் வடித்தா? பாடலாய் புனைந்தா? என முற்று பெறாமலே கவிதை குழந்தையாக
அம்மாவின் அன்புகலந்த உருண்டை சோறு உப்பில்லாமல் இருந்தாலும் உணர்வு கலந்து இருக்கும் சுவை இல்லாமல் இருந்தாலும் நினைவு நீங்காமல் இருக்கும் அம்மாவின் உருட்டி தரும் சோறு ....