Sunday 26 April 2020

அட்சயதிருதியை

"பணத்தை எப்போதும் மரப்பெட்டியில்தான் வைத்து எடுக்க வேண்டும். எதையும் தேக்கி வைத்துக்கொள்ளும் என்பதால்தான் 'தேக்கு மரம்' என்று பெயர் வந்தது. அதன் உறுதியான நிலைத்தத் தன்மை நம்மிடம் பணத்தைத் தங்கிடச் செய்யும்."

வாஸ்துபடி நம் வீட்டில் பணப்பெட்டியை எந்த இடத்தில் வைத்து பணத்தை எடுத்து 
செலவு வரவு செய்ய வேண்டும்..?
''பணம் இன்றைக்குப் பல பிரச்னைகளைத் தீர்க்கும் சாவியாக இருந்து வருகிறது. அத்தியாவசியப் பொருள்களிலிருந்து ஆடம்பரமான பொருள்கள் வரை எதை வாங்க வேண்டுமென்றாலும், அதற்குப் பணம் தேவையாயிருக்கிறது. வாழ்க்கையில் எல்லோருக்கும் விருப்பமிருந்தாலும் இல்லாவிட்டாலும் பணத்தை நோக்கி ஓட வேண்டியிருக்கிறது. வாஸ்துவும் பணமும் ஒன்றோடு ஒன்றாகப் பின்னிப் பிணைந்திருக்கின்றன.

வாஸ்துபடி பணம் எப்போதும் ஒருவரின் கையில் தவழ்ந்து கொண்டிருக்க வேண்டுமென்றால் வீட்டின் #வடக்குச்_சுவர் ஜன்னலுடன் சேர்ந்து இருக்க வேண்டும். கதவு சிறிது மூடப்பட்டிருக்க வேண்டும். ஜன்னல் எப்போதும் திறந்தே இருக்க வேண்டும். காற்றோட்டமும் சூரியவெளிச்சமும் வாஸ்து சாஸ்திரத்தில் முக்கிய பங்கு வகிக்கின்றன. அதனால், ஜன்னல்கள் திறந்திருப்பது நல்லது.

பூச்சித்தொல்லை கொசுக்கள் உள்ளே வருமென்றால், நைலான் வலை போட்டுக்கொள்ளலாம். எந்தத் தவறும் இல்லை. வீட்டில் பணம் சேருவதற்கு வடக்கு திசையும் ஜன்னலும் எந்த அளவு முக்கியமோ அந்த அளவு தென் மேற்கு திசை முக்கியம். இங்குதான் நாம் பணத்தை வைக்க வேண்டும். வடமேற்கு மூலையில் பணத்தை வைக்கக் கூடாது.

பீரோ வடக்கு பார்த்து இருக்க வேண்டும். பீரோவைத் திறக்கும்போது நம் முதுகு வடக்கு நோக்கி இருக்க வேண்டும். பணத்தை எப்போதும் மரப்பெட்டியில்தான் வைத்து எடுக்க வேண்டும். எதையும் தேக்கி வைத்துக்கொள்ளும் என்பதால்தான் 'தேக்கு மரம்' என்று பெயர் வந்தது. அதன் உறுதியான நிலைத்தத் தன்மை நம்மிடம் பணத்தைத் தங்கிடச் செய்யும்.

காரைக்குடியைச் சேர்ந்தவர்களின் வீடுகள் தேக்கு மரக்கதவு ஜன்னல்களால் இழைக்கப்பட்டிருக்கும். அவர்கள் பணப்பெட்டியை மரத்தாலான பெட்டியில்தான் வைத்து எடுப்பார்கள். பணத்தின் அருமையை அவர்கள் உணர்ந்ததால்தான் அப்படிச் செய்தார்கள்.

பணம் எப்போது வந்தாலும் அதை எந்தக்காரணத்தைக் கொண்டும் பூஜையறையில் வைக்காதீர்கள். பணம் நூறு, ஆயிரம், லட்சம் எனப் பல பேர்களின் கைகளுக்குச் சென்று மாறி வந்திருக்கலாம். பூஜையறையை நாம் தெய்வத் தன்மையுடன் வைத்திருப்பதால் அதைப் பூஜையறையில் வைக்க வேண்டாம்.

பணம் நம் கைக்கு வருகிறதென்றால் அது நம் வீட்டுக்குள் வந்து பறந்துபோகும் சிட்டுக்குருவியைப் போன்றது. அதைச் சுதந்திரமாகப் பறக்கவிடுங்கள். நல்ல விஷயங்களுக்குத் தாராளமாகச் செலவு செய்யுங்கள். உங்களை எப்போதும் செல்வந்தராகவே எண்ணிச் செலவு செய்யுங்கள். அப்போதுதான் பணம் உங்களைத் தேடி மீண்டும் மீண்டும் வரும்.

அளவுக்கு மீறி பணம் வந்தாலும் 'சிக்கனமாக இருக்கிறேன் பேர்வழி' என்று பணத்தை இறுக்கிப்பிடித்து வைத்திருந்தால், அதை அவர்கள் ஒருநாளும் அனுபவிக்க மாட்டார்கள். அவர்களுடைய மகன்,மகள்,பேரன்மார்கள் தான் அந்தப் பணத்தைச் செலவு செய்து வாழ்வார். அதனால்தான் 'ஈயா பண்டம் தீயாய்க் கெடும்' என்ற முதுமொழியே வந்தது.

உங்களுக்கு வருகிற பணத்தை சிவப்பு நிறத் துணியில் சுற்றி மரப்பெட்டியில் வைக்கும்போது, அந்தப் பணம் பல மடங்காகப் பெருகும்.

பணத்தை வைக்கும்போது சில்லறையாக வைக்காதீர்கள். நிறை நிறையோடு சேரும் குறை குறையோடு சேரும் என்பதால், 2000 ரூபாய் நோட்டாக வையுங்கள்.

பணத்தை ஒருவரிடம் கொடுக்கும்போது பணத்தை மடித்துக் கொடுக்க வேண்டும். மடிப்பு அவர்களின் பக்கமும் திறப்பு நம்முடைய பக்கமும் இருக்கும்படி கொடுங்கள்.

பணப்பெட்டியில் எப்போதும் ஒரு நறுமணம் இருக்கும்படி பார்த்துக்கொள்ளுங்கள்.(பீரோவில் பச்சை கற்பூரம் போட்டு வைக்கலாம்) பணத்துக்கு நாம் அடிமை ஆகாமலும் நமக்குப் பணத்தை அடிமையாக்காமலும் ஒரு நண்பனைப்போல் பணத்தை பாவித்தோமென்றால், பணம் எப்போதும் நம்மைவிட்டுப் போகாமல் தங்கியிருக்கும்"

Friday 24 April 2020

கோபத்தை வெல்வோமா

கோபத்தை அடக்க சுலபமான வழிகள்...*
எதையும் திகட்ட திகட்ட ரசியுங்கள்
1. பொருட்படுத்தாதீர்கள்..

உங்களைப் பற்றி அவதூறாகவோ, மிக மட்டமாகவோ யார் பேசினாலும் அதைக் காதில் வாங்கிக் கொள்ளாதீர்கள்.

அதைக் கண்டு கொள்ளாமல் விட்டுவிடுங்கள். எதிரிகள் ஏமாந்து விடுவார்கள்.

2. எதையும் யாரிடமும் எதிர்பார்க்காதீர்கள்.

ஒருவரிடம் நாம் ஒன்றை எதிர்பார்த்து அது கிடைக்கவில்லையென்றால், அவர் மீது கோபம் நமக்கு வருவது இயற்கைதான்.

எனவே , யாரிடமும் எதையும் எதிர்பார்க்காதீர்கள்.

3. எதிரிகளை அலட்சியம் செய்யுங்கள்

தனக்குப் பிடிக்காத மனிதர்களைப் பற்றி நினைத்துக்கூடப் பார்க்கக்கூடாது.

அதனால் நமக்கு ஆத்திரமும், கோபமும் அடிக்கடி ஏற்படுவதை தவிர்க்கலாம்.

தன்னம்பிக்கை உள்ளவனை ஒரு போதும் அவதூறுகளும், ஏச்சு பேச்சுகளும் பாதிப்பதில்லை.

4. தேவையற்ற எண்ணங்களை நிறுத்தி விடுங்கள்.

பிடிக்காத நபர்கள் மற்றும் செயல்களைப் பற்றி எண்ணம் வரும்போது, அந்த எண்ணங்களுக்கு பெரிய பூட்டு போட்டுவிடுங்கள்.

நமது புராணங்களும் கோபத்தின் தீமைகளைப் பற்றி விபரமாக விளக்குகின்றன.

பாருங்கள் இங்கொரு முனிவரின் கோபத்தை..

துர்வாசர் என்றொரு முனிவர் இருந்தார். நீங்கள் கேள்விப்பட்டிருப்பீர்கள். இவர் அடிக்கடி கோபப்படகூடியவர்.

கோபத்தின் மறு உருவமாகவே அவரை புராணங்கள் சித்தரிக்கின்றன.

அவர் அடிக்கடி சாதாரண விசயங்களுக்கெல்லாம் கோபப்பட்டு, தனது தவவலிமைகளை இழந்தவர்.

மகாமுனிவரையே ஆட்டுவித்த கோபம், சராசரியான மனிதனை பாடாய்படுத்துவதில் என்ன அதிசயம்?

எனவே நாம் வாழ்க்கையில் வெற்றி பெற , முதலில் நம்முடைய கோபத்தை ஆட்சி செய்ய வேண்டும்.


நம் வீடுகளில் அன்றாட சமையலுக்கு பயன்படுகிற ஒரு பொருள் தக்காளி.மூன்று வேலை உணவிலும் ஏதோ ஒரு வகையில் தக்காளி இடம்பெற்றுவிடும்.விலையில் நம்மை அவ்வப்போது பயமுறுத்தினாலும் எக்கச்சக்கமான பலன்களை தன்னகத்தே கொண்டிருக்கிறது தக்காளி.

Thursday 23 April 2020

எங்கள் ஊர் திருவண்ணாமலை

எங்கள் ஊர் #திருவண்ணாமலை #அண்ணாமலையார் கோவிலை பற்றி சில தகவல்கள்.. 

வானுயர 9 கோபுரங்கள், 2 குளங்களுடன் 25 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள அண்ணாமலையார் கோயில் உலகின் #8வது மிகப்பெரிய இந்து ஆலயம் ஆகும்.

1987 வரை திருவண்ணாமலை ராஜ கோபுரம் உலகின் மிக உயரமான கோபுரமாக திகழ்ந்தது. ( தற்போது முதல் மூன்று இடத்தில் உள்ள உலகின் மிகச் உயரமான கோபுரங்கள் முறையே
1. #திருவரங்கம் ராஜ கோபுரம் - 239 அடி (கட்டப்பட்ட ஆண்டு 1987)
2. #முருடேஸ்வர், கர்நாடகம் - 237 அடி (கட்டப்பட்ட ஆண்டு 2008)
3. #திருவண்ணாமலை ராஜ கோபுரம் - 217 அடி  (கட்டப்பட்ட ஆண்டு 9 ஆம் நூற்றாண்டு)

உலகின் முதல் 15 உயரமான கோபுரங்கள் பட்டியலில் திருவண்ணாமலை கோவிலில் உள்ள 4 கோபுரங்களும் அடங்கும். உலகில் வேறு எந்த கோவிலிக்கும் இச்சிறப்பு இல்லை

1. #ராஜ_கோபுரம் (கிழக்கு - 217 அடி) உலகின் 3வது பெரிய கோபுரம்
2. #அம்மணி_அம்மன்_கோபுரம் (தெற்கு - 171 அடி) உலகின் 8வது பெரிய கோபுரம்
3. #திருமஞ்சன_கோபுரம் (வடக்கு - 157 அடி) உலகின் 12வது பெரிய கோபுரம்
4.  #பே_கோபுரம் (மேற்கு - 144 அடி)
உலகின் 14 வது பெரிய கோபுரம்

உலகிலேயே சில கோவில்களில் மட்டுமே ஆயிரக்கால் மண்டபம் (1000 தூண்கள்) உள்ளது. ஆயிரங்கால் மண்டபம் திருவண்ணாமலையிலும் உள்ளது..

https://www.facebook.com/groups/693443571156232/permalink/853086031858651/

சர்க்கரை நோய் வராமல் தடுப்போமே ...

சக்கரை நோய்  பற்றி பேசுவோம் இன்று வீட்டுக்கு இருவர் நாற்பது வயதில் நரை வரும் முன்னே முரணாக இந்த சக்கரை நோய் வருகிறது.. 

என்ன மருந்து மாத்திரை சாப்பிட்டாலும் இது பலருக்கு கட்டுக்குள் நிற்காமல் காலத்தைவிட வேகமாய் காலனிடம் அழைத்து செல்ல ஜட் வேகத்தில் உடலின் பாகங்களில் ஊடுருவி ஆட்கொள்ளியாக மாறி அவையங்களை செயலிழக்க செய்து சிலருக்கு விரல்களோ  ஏன் கால்களையே விழுங்கி விடுகிறது.. 

இந்த கொடிய மிருக நோய்க்கு இனிப்பான சக்கரை என்று பெயர்வேற ..
இதிலிருந்து நம்மை தற்காத்து கொள்ளவும் வராமல் தடுக்கவும் சில டிப்ஸ் பகிரலாமா..

அவசர உலகத்தில் பொறுமை இழந்து பணம் தேடி ஓடலாம்.  ஆனால் உட்கொள்ளும் உணவிலுமா அவசரம்   ..

"நொறுங்க தின்றால் நூறு வயது" என்ற சொற்களை யாருமே நினைவில் கொள்வதில்லை..
அதனால் வரும்  தொல்லையே காலபோக்கில் சக்கரை வியாதியாக விஸ்வரூப மெடுக்கிறது..

ஆம் தினமும் மூன்று வேலை உணவு காலையில் அரசனைப்போலவும் மதியம் உழைப்பாளி போலவும் இரவில் பிச்சைகாரனைப் போல குறைந்த எளிமையான  உணவே உண்டு .. அதுவும் அரைவயிறு உணவு கால் வயிறு தண்ணீரும் கால் வயிறு காற்றுமாக வழக்கபடுத்தி கொண்டால் ஆரோக்கியம் நமக்கு அரனாக அமையுமே..
நவநாகரீக துரித உணவுகளை தவிர்த்து வயதிற்கேற்ப காரம் புளிப்பு குறைத்து சாப்பிட எளிதில் செரிமானம் ஆகும். 

அறுசுவை உணவில் தினமும்  நாம் இரண்டும் சுவையை பயன்படுத்துவதே இல்லை துவர்ப்பும் கசப்பும். அவைகளே எதிர்காலத்தில் சுகர் வராமல் நம்மை காக்கும்.  புளிப்பு அதிக ஊறுகாய் சாப்பிடுபவர்களுக்கு முட்டி வலியும் சுகர் அதிகமாக வர வாய்பிருக்கிறது.. 

 அவரவர் வாழும் மண்ணில் விளையும் தானியங்களையும் அங்கே கிடைக்கும் நிலத்தடி நீரும் பருகினாலே போதுமானது..  ஆரோக்கியம் பெறுகும்..
 
மன நிம்மதி தேவை எச்செயல் செய்தாலும் மனநிறைவுடன் இருக்க பழகுதல் அவசியமானது. முடிந்த போது எல்லாம் எச்சில் கூட்டி விழுங்கனும் அதுதான் சுகருக்கான மருந்தே உமிழ் கலந்து உண்ணும் உணவே தேவாமிர்தம். வாயை அசைக்கும் போது காற்று உள் புகாமலும் பேசாமலும் நடுநடுவே நீர் பருகாமலும் உணவு உட்கொள்ளல் வேண்டும்.. இனியாவது இதனை படி செய்யலாமே அடுத்த பகுதி தொடரும்..

Monday 20 April 2020

தியானம் பழகு

1..தியானம் முதல்பகுதி...வெற்றி உன்னை தேடுகிறது. ஆம் நாம் செய்யும் செயலினால் ஏன் எந்த செயலும் செய்யாத தவம் மட்டுமே செய்யும் சித்தர்களுக்கும் வெற்றி கிட்டுகிறது.. தவம் மனஅலைகளை நேர் கோட்டில் சீர் அமைத்து  அவைகளை எண்ணங்களுடனும் எதார்த்ததுடனும் ஒற்று போகிறதா முரனாகிறதா... என்று உற்று நோக்கி ஊடுருவி கவனித்தலே தவம். முதலில் ஓரிடத்தில் ஒரு நிமிடம் ஒன்றாத போக்கு மட்டும் சரி செய்து விட்டால் மற்றவை எல்லாமே தானே நடக்கும். ஒரு இருக்கையை தேடி அமர்ந்து கொள்ளுதல். தினமும் காலை மாலை ஒரே நேரத்தில் செய்வது குறிப்பிட்ட நாள் தொடர்வது. பின் நாம் விட்டாலும் அது நம்மை விடாது தொடரும் கருப்பாய்.. கருவிலே திருவுடைய மகனாக திகழ்வோம்.. ஆம் நமக்கான எண்ண அலைகள் ஓர் நேர்கோட்டில் வர துவங்கும். எதிர்மறை முதலில் விலகத் துவங்கும். வான் காந்த பேராற்றல் நம்மோடு பேச துவங்கும். நேர்மையான செயல் எல்லாமே தானே நடக்கும்.. இன்னும் இன்னும் பெரும் அழகியல் நடக்கும்
தவம் எப்படி செய்ய வேண்டும்?
தவம் ஏன் செய்ய வேண்டும்?

இங்கு பெரும்பாலும் தவம் (Thavam/Meditation) கண் மூடி செய்வது என்றே தெரிந்திருக்கிறது. ஆனால் தவம் என்பது கண்மூடி செய்வதல்ல. கண் திறந்து செய்வதே ஆகும்.

கண்ணை மூடி செய்தால் மாயைதான் விளையாடி கொண்டிருக்கும். அதனால் தான் வள்ளலார் விழித்திரு என்று சொன்னார். ஒவ்வொரு கணமும் விழித்திருக்க வேண்டும் விழிப்புணர்வோடு இருக்க வேண்டும். இதைத்தான் Awareness என்று சொன்னார்கள்.

மேலும் பொதுவாக நம்மிடம் ஒரு கருத்து வேறூன்றியிருக்கிறது. அதாவது இமைகளை திறந்து இருக்கும் போது புற உலகை பார்த்து கொண்டிருப்பதாகவும் மேலும் கண்ணை மூடி தவம்(Meditation) செய்யும் போது அகத்தில் உள்ளே போய் இறைவனை காண முடியும் என்று நினைத்து கொண்டிருக்கிறோம். ஆம், கண் திறந்து இருக்கும் போது புறக்கண் என்றும் கண்ணை மூடி இருக்கும் போது அகக்கண் என்றும் நாமாகவே நினைத்து கொண்டிருப்பதுதான் அப்பட்டமான அறியாமை!

ஆம், கண்ணை மூடி கொண்டு இருந்தால் அமைதியாக இருக்கிறது இதுவே நம்மை உள்ளே கொண்டு போய் சேர்த்து விடும் என்று நம்புவதே ஒரு மாயைதான். கண்ணை மூடி இருந்தால் அது இருட்டு, கண் திறந்து இருந்தால்தான் வெளிச்சம் (ஒளி). வேறொரு விதமாக சொல்வதானால் கண்மூடி இருப்பது என்பது அமாவாசை கண் திறந்து இருப்பது என்பது பெளர்னமி. பெளர்னமி அன்று கிரிவலம் சுற்றுவதுதான் சால சிறந்தது என்பதை நினைவில் நிறுத்தி கொள்ளுங்கள். இப்படி ஞானமடைய எப்படி தவம் செய்ய வேண்டும் என்பதைத்தான் பக்தியில் சொல்லி வைத்தார்கள்.

கண்ணை திறந்து செய்ய வேண்டும் என்று சொல்லியாயிற்று. எப்படி என்பதை திருமூலர் திருமந்திரத்தில் சொல்கிறார்.

“விளக்கைப் பிளந்து விளக்கினை ஏற்றி
விளக்கினுக் குள்ளே விளக்கினைத் தூண்டி
விளக்கில் விளக்கை விளக்கவல் லார்க்கு
விளக்குடை யான்கழல் மேவலும் மாம”

திருமந்திர பாடல் – 2816

இவர்கள் ஏற்றி கொண்ட விளக்கு ஒரு ஞான குருவால் தூண்டி விடப்பட்ட விளக்கு தான். சிலர் குரு இல்லாமல் அடைந்து விடலாம் என்று பொதுவில் பேசி வருகிறாகள் ஆனால் இது சாத்தியமில்லாத ஒன்று. குரு சுட்டி காட்டாத வித்தை பாழ் என்பதை கேள்விபடாதவ்ர்களே இப்படி பேசுபவர்கள். கண்ணப்ப நாயனார் போன்று இருப்பவர்களுக்குதான் குரு தேவையில்லை என்று சொல்லலாமே தவிர மற்றவர்களுக்கு இல்லை. நாம் கண்ணப்ப நாயனாரா இல்லையா என்பதை அவரவர் மனசாட்சி தான் பதில் சொல்ல வேண்டும்.

ஒரு சற்குரு நம் மெய்பொருளில் (அ) திருவடியில் சுட்டி காட்டினால்தான் இந்த ஞான தவம் செய்ய முடியும். மேலும் அப்பொழுதுதான் நமது புறக்கண் அகக்கண்ணாக மாறுவதற்க்கான முதல் படி மேலும் தொடர்ந்து சீடன் தவம் செய்ய செய்யவே அது அகக்கண்ணாக மாறும். இதுதான் அகக்ண்ணே தவிர மற்றது அல்ல. ஆம், கண்ணை மூடி கொண்டு இஷ்ட தெய்வத்தை நினைத்து கொள்வது எல்லாம் அகக்கண் இல்லை. கண்ணை மூடிட்டான் என்று சொன்னாலே தமிழில் அது செத்தவனைத்தான் குறிக்கும் என்பதை சிந்தித்து தெளிக!விழித்திரு என்பது இதுவே!

கண்ணை திறந்து செய்ய வேண்டும் என்று பொத்தாம் பொதுவாக இங்கு சொல்லவில்லை. ஏன் திறக்க வேண்டும்? எப்படி திறக்க வேண்டும்? மேலும் நமது மெய்பொருளில் (அ) திருவடியில் ஒளிந்திருக்கும் ஞான இரகசியங்கள் எல்லாம் எங்கள் தளத்தில் வெட்ட வெளிச்சமாக போட்டிருக்கிறோம். மேலும் வெளிச்சம் ஆக்குவோம்.

நமது திருவடியான மெய்பொருளின் தன்மை அதனுள் ஒளிந்திருக்கும் சூட்சுமங்கள் அனைத்தும் தெரிய வேண்டும். தெரிந்தால்தான் கண்ணை திறந்து எப்படி சும்மா இருக்க முடியும் என்பது தெரியும்! ஞான தவம் என்பது ஒன்றும் அல்ல! சும்மா இருப்பதுதான். ஆம், எல்லா ஞானிகளும் சும்மா இருந்தே சுகம் பெற்றார்கள். சும்மா இருப்பது எப்படி என்றால் முதலில் திருவடி (மெய்பொருள்) பற்றி தெரிந்திருக்க வேண்டும்.
 மகரிஷி கண் திறந்து செய்யும் தியானம் பற்றி சொல்லிருக்கிறார். அது தீபஒளிதியானம்  கண்ணாடி பயிற்சி ஆகும்.
1) காலை மாலை இருவேளையும் சுமார் இருபது நிமிட நேரம் தவம் செய்ய வேண்டும்.

2) இடைப்பட்ட நேரத்திலும் அவ்வப்போது சிறிது நேரம் தவம் செய்ய வேண்டும்.

3) உண்ணும் போதும் பிற புலன் அனுபோகத்தின் போதும் ஆக்கினை

மற்றும் துரியத்தில் உயிரின் அசைவை கவனிக்க வேண்டும்.இது அறிவை அயராத விழிப்புநிலையில் வைத்திருக்க உதவும்.

4) பரபரப்பாக செயல்படுவதையும், உரக்கப் பேசுவதையும் தவிர்க்க வேண்டும்.

5) மௌனவிரத காலங்களில் அதிகமாக தவம் செய்யலாம்.

6) மனதில் பேராசை, சினம், வஞ்சம், பொறாமை, வெறுப்பு தற்பெருமை,அவமதிப்பு, முறையற்ற பால்கவர்ச்சி, அவசியமற்ற பயம், அதிகாரபோதை, ஆகிய தீய உணர்வுகளும் எழாமல் மனதின் தூய்மையை காத்துக்கொள்ள வேண்டும்.

7) அறிவை இயற்கைத் தத்துவ ஆராய்ச்சியிலும், உடல் மன நலத்திற்கான அறநெறி ஆராய்ச்சியிலும் வைத்திருக்க வேண்டும்.

8) ஒருநாள் நொடிப்பொழுதில் விண்(உயிர்) துகள்கள் அகக்காட்சியாக தெரியும்.உள்ளுணர்வாக(Intuition)  தத்துவங்கள் யாவும் விளங்கும்.

9) மனம் நிறைவு பெற்று அமைதி நிலை அடையும் இன்னும் தொடரும் 

Friday 17 April 2020

பார்வை திறனை பாதுகாப்போம்

இன்று ஒருபுகைபடம் போட்டுஇதில் உள்ள எழுத்துகளை கண்டுபிடிக்க சொன்னேன்.  வாட்ஸ்ஆப் பதிவாக பலரும் தவறாகவே கூறினர்.  அதான் கண்களை பற்றி விழிப்புணர்வு பதிவாக நடுநிசையிலும்

பார்வைத் திறனை பாதுகாக்க சில எளிய வழிகள்...!

கணினி, தொலைபேசி, தொலைகாட்சி ஆகிய மின்சாதனப் பொருட்களை அளவுடன் பயன்படுத்த வேண்டும். அதனால் வரும் வெளிச்சத்தைக் குறைத்துக்கொள்வது நல்லது. அடிக்கடி கண்களைச் சிமிட்டுவதால், கண்ணின் ஈரப்பதம் தக்கவைக்கப்படும். பார்வைத் திறனை பாதுகாக்கலாம்.
7 முதல் 8 மணி நேரம் தூங்குவது நல்லது. அதாவது 4 மணி வரை ஆழ்ந்த தூக்கம் அவசியம். அதாவது, அந்த நேரத்தில் மெலோடனின் சுரக்கும். இது உடலுக்கு நல்லது. சீரான தூக்கம் இருந்தால், உடல் மற்றும் கண்களுக்கு ஓய்வு கிடைக்கும். ஐ ஸ்ட்ரெஸ், எரிச்சல் போன்றவை மறையும்.

தினமும் இரண்டு முதல் இரண்டரை லிட்டர் தண்ணீர் அருந்த வேண்டும். இது உடல் மற்றும் கண்களை வறட்சித் தன்மையில் இருந்து பாதுகாக்கும். 

உள்ளங்கையில் சுத்தமான தண்ணீரை ஏந்தி, அதில் கண்களை வைத்து 10 முறை கண் சிமிட்டுங்கள். அதிலுள்ள தூசு, அழுக்கு, அழுத்த உணர்வு நீங்கி கண் புத்துணர்வு பெறும். இதை தினமும் செய்துவருவது நல்லது.

பார்வைத்திறனை அதிகரிக்க, வெள்ளையான சுவரைப் பார்த்து, தலையை அசைக்காமல், திருப்பாமல் கண்களால் 8 போட வேண்டும். இதுபோல, 5 முறை பயிற்சி செய்தாலே கிட்டப் பார்வை, தூரப் பார்வை பிரச்னை சிறிது சிறிதாகக் குறையும்.

தினமும் இருவேளையாவது உள்ளங்கைகளைவைத்து, கண்களைப் பொத்திக்கொண்டு, கண்கள் மூடியபடி இருக்க வேண்டும். கருவிழியை மட்டும், எந்தளவுக்கு முடியுமோ அந்தளவுக்கு பக்கவாட்டில் பார்க்க வேண்டும். இதுவும் ஒரு கண் பயிற்சிதான். இதனால், கண்களின் தசைப் பகுதியில் ஏற்பட்ட அழுத்தம் குறையும்.

*வைட்டமின் ‘ஏ’ குறைபாட்டால் ஏற்படும் பிரச்சனைகள்*

பள்ளிப்பருவத்து குழந்தைகள் அதிக அளவில் பார்வைக்குறைபாட்டால் கண் கண்ணாடி அணிவதை பார்க்க முடிகிறது. குழந்தைகள் எந்தக் குறையும் இல்லாமல் வலுவாக வளரட்டும் என்று கண்ட கண்ட சத்தூட்ட பானங்களை பெற்றோர்கள் வாங்கித் தருகிறார்கள். ஆனால், எதுவும் அளவுக்கு மிஞ்சினால் ஆபத்து தான்.

பொதுவாக, வைட்டமின் ‘ஏ‘ குறைந்தால் கண் தொடர்பான பாதிப்புகள் உருவாகும். இதன் குறைபாட்டால் கண் எரிச்சல், மாலைக்கண், மங்கலான வெளிச்சத்தில் கண் பார்வைக்குறைவு, வெளிச்சத்திற்கு தகுந்தாற் போல் கண்பார்வை ஒத்துப் போகும் நிலை குறைந்து போவது போன்றவை ஏற்படும். 

வைட்டமின் பற்றாக்குறை தொடர்ந்து காணப்பட்டால் கண்ணீர் சுரப்பியின் வெளிப்பகுதி திசுவறைகள் தடித்து விடும். கண்ணீர் சுரப்பது நின்று விடும். விழிக்கோளத்தில் வெள்ளை நிறம் காணப்படும். வெள்ளை விழியில் சில புள்ளிகள் உண்டாகும். தொடர்ந்து வைட்டமின் ஏ பற்றாக்குறை நீடித்தால் முழுப்பார்வையும் இழந்து விடும். 

கருவிழியில் துளைகள் உண்டாகும். கண்கள் அடிக்கடி வறண்டு காணப்பட்டால் வைட்டமின் ‘ஏ‘ பற்றாக்குறை ஏற்பட்டிருக்கிறது என்று புரிந்து கொள்ளலாம். மருத்துவரின் பரிந்துரைப்படி சரியான அளவில் இந்த வைட்டமின் சத்து குழந்தைகளுக்கு தரப்படலாம். கேரட், கறிவேப்பிலை போன்றவற்றில் வைட்டமின் ஏ சத்து நிறைய உள்ளது.

அதேநேரம், அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு என்ற பழமொழி வைட்டமினுக்கும் பொருந்தும். இந்த வைட்டமின் அதிகமாகி விட்டால் உடலில் நச்சுத்தன்மை உண்டாகும். பசியிருக்காது. உடலில் நமைச்சலுடன் கூடிய தோல் சிவப்பு, வலியுடன் கூடிய தசை வீக்கம், கை-கால்களின் எலும்புகளில் வலியுடன் கூடிய வீக்கங்கள் உண்டாகி விடும். 

மேலும், மூளையில் உள் அழுத்தம் அதிகரித்து தலைவலியும் ஏற்படும். தேவையற்ற அளவுக்கு வைட்டமின் ‘ஏ‘ யை உள்ளுக்குள் கொடுத்து விட்டு பின்னர் வேறு பிரச்சினைகளை உருவாக்கி விட்டு இது எதனால் ஏற்படுகிறது என்று தெரியாமல், அந்த நோய்க்கு மருத்துவம் பார்க்க வேண்டிய நிலையை ஏற்படுத்தி விடும்.

வைட்டமின் ‘ஏ‘ என்பது குழந்தைகளுக்கு 1500 முதல் 6000 இன்டர்நேஷனல் யூனிட்டுகளும், பெரியோர்களுக்கு 5000 யூனிட்டுகளும், கர்ப்பிணிகளுக்கு 6000 யூனிட்டுகளும், பாலூட்டும் தாய்மார்களுக்கு 5000 யூனிட்டுகளும் தான் தேவை. இதனை கவனத்தில் கொண்டு இந்த அளவில் கிடைக்கும் சத்தூட்ட பானங்களை சரியான அளவில் அவரவர் பயன்படுத்துவதே உடலின் ஆரோக்கியத்தை பாதுகாக்கும்.

தினமும் 40 நிமிடங்கள் தொடர்ந்து மூன்று மாதங்களுக்குப் பிராண முத்திரை செய்தால், பார்வைத் திறன் மேம்படும். இப்போது இந்த முத்திரை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

இரவில் தாமதமாக உறங்குவது. இதன் காரணமாக கண்களுக்கு தேவையான அளவு ஓய்வு கிடைப்பதில்லை.

அதிகம் கைப்பேசி உபயோகித்து படம் பார்ப்பது. அதில் பல்வேறு விதமான விளையாட்டுக்களைப் பதிவு இறக்கம் செய்து சதா விளையாடிக் கொண்டே இருப்பது.

மரபு ரீதியாகவும் இந்த பிரச்சனை குழந்தைகளுக்கு ஏற்படலாம்.

இவை அனைத்தையும் விட முக்கிய காரணமாக, வளரும் குழந்தைகள் தினமும் சத்துக்கள் நிறைந்த உணவுகளை எடுத்து கொள்ளாததும், அதன் காரணமாக குழந்தைகளுக்கு தேவையான ஊட்டச்சத்துக்கள் கண்களுக்கு கிடைப்பதில்லை.
கண்பார்வைக்கான முத்திரை

கண்களை பாதுகாக்க தினமும் சூரிய விடியலின் போது பார்க்கலாம்.  காயத்திரி மந்திரம் சொல்லலாம்.

மலர்களின் மகத்துவம்

பெண்கள் தலையில் பூ வைப்பதால் இவ்வளவு நன்மைகளா...???
.
இனிமே தினமும் வைத்து கொள்ளுங்கள்...!!!
.
உலகம் முழுவதும் 38 ஆயிரம் கோடிக்கு மேல் பூ வகைகள் உள்ளன.

ஆனால் ஆயிரம் கோடிப் பூக்கள் மட்டுமே தற்போதைய நடைமுறையில் உள்ளன.

அதிலும் 500 கோடி பூக்களே மருத்துவத்துக்குப் பயன்படுத்தப்படுகின்றன.
.
பெரும்பாலான பூக்கள் மணமூட்டிகள் தயாரிக்கப் பயன்படுத்தப்படுகின்றன.
.
பூக்களைச் சூடும் கால அளவு
.
முல்லைப்பூ - 18 மணி நேரம்
அல்லிப்பூ - 3 நாள்கள் வரை
தாழம்பூ - 5 நாள்கள் வரை
ரோஜாப்பூ - 2 நாள்கள் வரை
மல்லிகைப்பூ - அரை நாள்கள் வரை
செண்பகப்பூ - 15 நாள்கள் வரை
சந்தனப்பூ - 1 நாள்கள் மட்டும்
மகிழம்பூ மற்றும் குருக்கத்திப் பூ - சாப்பிடும்போது மட்டும் சூடிக்கொள்ளலாம்.

மந்தாரைப்பூ, பாதிரிப்பூ, மாசிப்பூ - இந்தப் பூக்களின் வாசம் இருக்கும் வரை மட்டும் சூடிக்கொள்ளலாம்.
.
பூக்களின் பயன்கள்:
.
ரோஜாப்பூ - தலைச்சுற்றல், கண் நோய் போன்றவற்றைக் குணப்படுத்தும்.
.
மல்லிகைப்பூ - மனஅமைதிக்கு உதவும். கண்களுக்குக் குளிர்ச்சி தரும்.
.
செண்பகப்பூ - வாதத்தைக் குணப்படுத்தும். பார்வைத் திறனை மேம்படுத்தும்.
.
பாதிரிப்பூ - காது கோளாறுகளைக் குணப்படுத்தும். செரிமானச் சக்தியை மேம்படுத்தும். காய்ச்சல், கண் எரிச்சல் போன்றவற்றைச் சரிசெய்யும்.
.
செம்பருத்திப் பூ - தலைமுடி தொடர்பான பிரச்னைகளை சரிசெய்யும். உடல் உஷ்ணத்தைக் குறைக்கும்.
.
மகிழம்பூ - தலை சம்பந்தப்பட்ட பிரச்னைகளைத் தீர்க்கும். பல் வலி, பல் சொத்தை உள்ளிட்ட பல் குறைபாடுகளை நீக்கும்.
.
வில்வப்பூ - சுவாசத்தைச் சீராக்கும். காச நோயைக் குணப்படுத்தும்.
.
சித்தகத்திப்பூ - தலை வலியைக் குறைக்கும். மூளை சுறுசுறுப்பாக இயங்க உதவும்.
.
தாழம்பூ - நறுமணம் வீசுவதோடு சீரான தூக்கத்துக்கு உதவும். உடல் சோர்வை நீக்கும்.
.
தாமரைப்பூ - தலை எரிச்சல், தலை சுற்றல் போன்றவற்றைச் சரிசெய்யும். மனஉளைச்சலை நீக்கி மனஅமைதிக்கு வழிவகுக்கும். தூக்கமின்மையை நீக்கி, சீரான தூக்கத்தை ஊக்குவிக்கும்.
.
கனகாம்பரம்பூ - தலை வலி மற்றும் தலை பாரத்தைச் சரிசெய்யும்.
.
தாழம்பூ, மகிழம்பூ, சந்தனப்பூ, ரோஜாப்பூ செண்பகப்பூ போன்றவை வாதம், கபத்தைக் குறைக்கக் கூடியவை.
.
பூக்களைச் சூடும் முறை:
.
பூக்களைக் காதின் மேல் மற்றும் கீழ் நுனியின் இடைவெளியில் சூடவேண்டும்.
.
உச்சந்தலையிலோ, கழுத்துப் பகுதியிலோ பூக்கள் தொங்கும்படி சூடக் கூடாது.
.
மணமுள்ள பூக்களை வாசனையில்லாதப் பூக்களுடன் சேர்த்துச் சூடக்கூடாது.
அது கூந்தல் வளர்ச்சியைக் குறைக்கும்.
.
ஜாதி மல்லிகைப்பூ, செவ்வந்திப்பூ, குடசப்பாலைப்பூ, பாதிரிப்பூ, மகிழம்பூ, செண்பகப்பூ, சந்தனப்பூ, ரோஜாப்பூ போன்றவற்றைக் கனகாம்பரத்துடன் சேர்த்துச் சூடினால் மிகவும் நல்லது.
.
மந்தாரை, தாமரை, செவ்வரளி, கருங்குவளைப்பூ போன்றவற்றுடன் கற்பூரத்துடன் சேர்த்துச் சூடினால்
மனம் அமைதி பெற உதவும்.
.
மல்லிகைப்பூவை குளிப்பதற்கு முன் சூட வேண்டும்.
.
முல்லைப்பூ, வில்வப்பூவை
குளித்த பின்பு சூடலாம்.
.
உடலில் எண்ணெய் தேய்க்கும்போது தாழம்பூ சூடலாம்.
.
பூக்களைச் சூடுவதால் ஏற்படும் நன்மைகள்:
.
பூக்களில் உள்ள பிராண ஆற்றல், மூளைச் செல்களால் ஈர்க்கப்பட்டு, நாளமுள்ள மற்றும் நாளமில்லாச் சுரப்பிகளின் சீரான இயக்கத்துக்கு உதவுகிறது.
.
இந்தப் பிராண ஆற்றலானது மனஅழுத்தத்தைக் குறைத்து, மனஅமைதிக்கு உதவுகிறது.
.
தலையில் பூ வைப்பது,
மனமாற்றத்துக்கு உதவும்.
.
ஒரு விஷயத்தைப் பல கோணங்களில் பார்க்கும் தன்மையைக் கொடுக்கும்.
.
மனஅழுத்தத்தால் ஏற்படும் செல் இழப்பைத் தடுக்கிறது.

.
பூவின் மணமானது உடல் செல்களுக்குப் புத்துணர்வை அளிக்கிறது.

மனமாற்றத்துக்கு உதவுகிறது.
.
மனஅழுத்தத்தைக் குறைக்க உதவுகிறது.
மகிழ்ச்சியை உண்டாக்குகிறது

பிள்ளைபேறு பெற்றதும் வைக்கும் மருந்து (செலவு )குழம்பு

தாய் வீட்டிலும் செய்வாய்கள். சம்பிரதாயம் பொறுத்து.. ஆனாலும் முக்கியமான உணவு பிரசவத்திற்குபின், கணவர் வீட்டிலிருந்து, அரிசி,  ஒரு கூடை நிறைய மருந்து செலவுப் பொருட்கள், பூண்டு, கத்தரிக்காய், அரைஞாண் கயிறு திரிக்க எருக்கம் நார், வேப்பம் வளையல் போன்றவற்றை எடுத்துக் கொண்டு வந்து, தாய்க்கும் சேய்க்கும் குளியல் செய்த பின், கொண்டு வந்த பொருட்களை வைத்து, சாதம், குழம்பு செய்து உறவினர்கள், தெருவில் உள்ளவர்கள் என்று அனைவருக்கும் கொடுத்து மகிழ்ந்த காலம் ஒரு காலம்.

ஏதோ ஒரு வீட்டில் குழந்தை பிறந்துள்ளது என்று அனைவருக்கும் தெரியும் அளவிற்கு அந்த குழம்பின் வாசம் நான்கு தெருவிற்கு மணக்கும்.
எனக்கு மகள் பிறந்த போது நான் என்பாட்டிவீட்டில் இருந்தேன்.   இந்த குழம்பு என் பாட்டி வீட்டில் வந்து அம்மா வைத்து தருவார்கள். ஆனா அந்த குழம்பு எனக்கு கிடைப்பதே மிக கடினம் வீட்டீல் மூன்று மாமா மாமி அவர்குழந்தைகள் பத்துபேர் எல்லாருக்கும் சென்று பிறகே வரும்..
 அதனாலேயே அப்பா எனக்கு தலைக்கு ஊற்றியதும் மருந்து பொடி வெல்லம் சேர்த்து இடித்து உருண்டையாக தந்துவிடுவார். 
இந்த மருந்து சாப்பிட்டால் பிள்ளை பிறந்த வயிறு சதை சுறுங்கும். இடுப்பு எலும்பு வலு பெறும்.  என்பார்கள் பாட்டி.. 

அதன் பிறகு, அந்த பழக்கம் மறைந்து, தாய் வீட்டிலேயே, சிறிதளவு அந்தக் குழம்பை தயார் செய்து, பிரசவித்த பெண்ணுக்கு மட்டும் கொடுத்தார்கள். 

இப்போது, என்  மகள் பிரசவித்த போது  அக்குழம்பு வைத்து தந்தால்  சாப்பிட பிடிக்கவில்லை.. அவளுக்கு தெரிந்த மாதிரி இருந்தாலும், அவள் வீட்டில் செய்வதில்லை.

மஞ்சள், சுக்கு,  அரிசி, வால் மிளகு, வெள்ளை மிளகு, அரிசி திப்பிலி, கொடி திப்பிலி, அதிமதுரம், ஓமம், ஜாதி பத்திரி, கருஞ்சீரகம், பரங்கி சக்கை, சித்தரத்தை, நிலாவரை....என்று பட்டியல் நீளும். 

பிரசவத்திற்குபின், கர்பப்பை யிலுள்ள அங்கங்கே தங்கி இருக்கும் நச்சுக்கள், வாயு வெளியேறவும், உடல் சோர்வும் வலியும் நீங்கவும், குழந்தைகளுக்குத் தேவையான பால் சுரப்பு ஏற்படுவதற்கும், தாய்க்கும் சேய்க்கும் சளி, காய்ச்சல், இருமல், தொற்று போன்றவை வராமல் இருப்பதற்கும் இந்தக் குழம்பு உதவி செய்கிறது.

பிரசவித்த பெண்கள் என்று மட்டும் இல்லாமல், அனைத்துப் பெண்களும்...ஏன் ஆண்களும் உண்ணலாம். ஆனால், மாதவிடாய் காலத்திலும், கர்ப்பிணிக ளும், எதிர்பார்த்து இருப்பவர்களும் தவிர்க்க வேண்டும்.

குழந்தைக்கு பால் கிடைக்க வில்லை என்று பிரசவித்த பெண்கள் கூறுவதற்கும், மாதவிடாய் போக்கு முறையாக இல்லை என்று கூறுவதற்கும்,  இருவருக்கும் சிறு சிறு ஆரோக்கிய குறைபாடுகள் வருவதற்கும், இந்த பொருட்களை மறந்ததும் மிகப் பெரிய காரணம் என்பதில் சிறிதளவும் ஐயமில்லை. 

எனக்கு மிகவும் பிடித்த குழம்பு. உறவினர்கள் யார் வீட்டில் இந்தப் பொடி அரைத்தாலும் எனக்கு வந்துவிடும். நினைக்கும் போது நானே அரைத்து குழம்பு வைத்து அனைவருக்கும் கொடுப்பேன்.

குழந்தைக்கு நன்றாக தாய் பால் கிடைக்க பூண்டு நிறைய சேர்த்து குழம்பு வைக்கவும் . இரவில் பாலில் வேக வைத்த பூண்டும் சாப்பிடலாம்.

Tuesday 14 April 2020

சமயோசிதம் தேவை...

சமயோசிதம் தேவை...

ஒரு பொற்கொல்லன். வசதியாக வாழ்ந்து வந்தான். அவனுக்குத் திருமண வயதில் அழகான மகள்.

அதே ஊரில் வட்டிக்குக் கடன் கொடுக்கும் சேட்டு ஒருவன் இருந்தான். இளைஞன். அவனுக்கு பொற்கொல்லன் மகளை மணம் முடிக்க ஆசை. கேட்ட போதெல்லாம் பொற்கொல்லனும் அவன் மகளும் தொடர்ந்து மறுத்து வந்தனர். பொற்கொல்லன் மகளுக்கு சேட்டு இளைஞனை அறவே பிடிக்காது.

ஒரு முறை நாட்டின் பொருளாதாரம் தீவிரமாகத் தேய ஆரம்பித்தது. பொற்கொல்லனின் வியாபாரம் நொடித்துப் போகும் நிலைக்கு வந்தது. ஏகப் பட்ட பொருள் இழப்பு. வியாபாரத்தை தொடரவும், வாழ்க்கைச் செலவுகளுக்கும் கடன் வாங்க வேண்டிய அவசியம் வந்தது.

பொற்கொல்லன் வேறு வழியில்லாமல் சேட்டு இளைஞனிடம் கடன் வாங்கப் போனான். சேட்டும் கேள்வி கேட்காமல் கடன் கொடுத்தான். அவனைப் பொறுத்த வரை வருங்கால மாமனாரல்லவா !

பொற்கொல்லனால் கடனைக் குறித்த நேரத்தில் திருப்பிக் கொடுக்க இயலவில்லை. சேட்டு இளைஞன் கடனைத் திரும்பக் கேட்காமல் பொற்கொல்லனிடம் அவன் மகளை மணம் முடித்துத் தருமாறு கேட்டான்.

பொற்கொல்லனும் அவன் மகளும் தீவிரமாக மறுத்தார்கள்.

சேட்டு ஊர் பெரியவர்களிடம் நியாயம் கேட்டான். அவர்களும், வசதியாக வாழும் சேட்டுக்கு மகளை மணம் முடித்துக் கொடுத்து விடும் படிதான் பொற்கொல்லனுக்கு அறிவுறுத்தினார்கள். பொற்கொல்லன் மறுத்து விட்டான்.

பணத்தை எப்படியாவது திருப்பித் தந்து விடுவதாகச் சொன்னான். எப்படி, எப்போது என்றுதான் அவனால் சொல்ல முடியவில்லை.

பிரச்சனையைத் தீர்க்க சேட்டு அனைவருக்கும் ஒரு யோசனை சொன்னான். அதன்படி, ஊரின் மத்தியில் உள்ள திடலில் சம்பந்தப்பட்ட அனைவரும் வாரக் கடைசியில் கூட வேண்டும். அந்தத் திடலில் கருங் கூழாங்கற்களும், வெண் கூழாங்கற்களும் நிறைந்திருக்கும். அந்தச் சமயம் சேட்டு திடலிலிருக்கும் கற்களிலிருந்து ஒரு கருங் கூழாங்கல்லையும், ஒரு வெண் கூழாங்கல்லையும் ஒரு சிறிய பைக்குள் போட்டுக் கொண்டு வருவான். பொற்கொல்லன் மகள் அவன் கொண்டுவரும் பைக்குள் கையை விட்டு, ஊரார் மத்தியில், ஒரு கல்லை எடுக்க வேண்டும். அவள் கையில் வெள்ளைக் கல் வந்தால் அவள் விருப்பம் போல் மணம் செய்து கொள்ளலாம். கருப்புக் கல் வந்தால் தன்னைத்தான் அவள் மணம் செய்து கொள்ளவேண்டும்.

இந்த யோசனையை பொற்கொல்லனும் அவன் மகளும் ஒத்துக் கொண்டால், கடனை ரத்து செய்து விடுவதாக சேட்டு ஊர் பெரியவர்களிடம் கூறினான்.
ஊரார் கட்டாயப் படுத்தியதன் காரணத்தால் வேண்டா வெறுப்பாக பொற்கொல்லனும் அவன் மகளும் இந்தத் திட்டத்திற்கு ஒத்துக் கொண்டார்கள்.

சேட்டு தந்திரமாக ஒரு காரியம் செய்தான். அவன் திடலுக்குக் கொண்டு செல்லும் பைக்குள், ரகசியமாகச் செய்வதாக நினைத்துக் கொண்டு, இரண்டு கருப்பு கூழாங்கற்களை வைத்துக் கட்டி விட்டான்.

ஆனால், உண்மையில், பொற்கொல்லன் மகளுக்கு வேண்டிய ஒரு சிறுவன் இந்தக் காரியத்தை சேட்டுக்குத் தெரியாமல் பார்த்து விட்டான். உடனே ஓடிப் போய் அவளிடம் போட்டுக் கொடுத்து விட்டான்.

பொற்கொல்லன் மகள் தீவிரமாக சிந்தித்துப் பார்த்தாள். அப்பாவும் அவளும் எடுத்திருந்த முந்தைய நிலைகளால் சேட்டின் மேல் இப்போது சந்தேகத்தைக் கிளப்பினால், வேண்டுமென்றே திருமணத்தைத் தவிர்ப்பதற்காக செய்வதாகத்தான் ஊரார் நினைக்கப் போகிறார்கள் என்று அவளுக்குத் துல்லியமாகப் புரிந்தது. முதலில் அப்படிச் செய்யத் தோன்றிய எண்ணத்தைக் கை விட்டு விட்டாள். அவள் சிறுவனை இந்த விபரம் மற்றவருக்குத் தெரியாமல் பார்த்துக் கொள்ளும்படி அறிவுறுத்தி அனுப்பினாள்.

அடுத்த நாள் ஊரார் மத்தியில் அவள் தலைவிதி நிச்சயிக்கப்படப் போகிறது. என்ன செய்வதென்றே அவளுக்குத் தெரியவில்லை. இரவு முழுவதும் தூங்காமல் யோசித்து யோசித்து விடை எதுவும் கிடைக்காமல் அவதிப் பட்டுக்கொண்டிருந்தாள்.

அடுத்த நாள் திடலுக்குப் போகும் நேரம் வந்தது. அமைதியாக திடலுக்குப் போனாள். அங்கே அவளுக்கு தரையில் கிடந்த கறுப்பு வெள்ளைக் கூழாங்கற்களைப் பார்த்தவுடன் உற்சாகம் வந்து விட்டது.

சேட்டு கண்டிப்பாக தனக்குக்குத்தான் வெற்றி என்று நமட்டுச் சிரிப்புடன் பையைக் கொண்டு வந்து பொற்கொல்லன் மகளிடம் கொடுத்தான். அவள் அதை வாங்கித் திறந்து அதனுள் இருந்த ஒரு கல்லை எடுத்து அதன் வண்ணத்தை எவரும் கவனிக்கும் முன் கை தவறுவது போல திடலில் கிடக்கும் மற்ற கறுப்பு வெள்ளை கூழாங்கற்களுக்கு மத்தியில் நழுவ விட்டு விட்டாள். எதிர்பாராமல் நடந்ததாலும், அவள் நழுவ விட்ட கல் மற்ற கூழாங்கற்களுக்கு மத்தியில் சேர்ந்து விட்டதாலும், அந்தக் கல்லை சேட்டு உட்பட யாராலும் அடையாளம் கண்டுபிடிக்க முடியல்லை.

திடுக்கிட்டுப் போன ஊர் பெரியவர்களிடம் அவள் அமைதியாகப் பேசினாள். பைக்குள் ஒரு வெள்ளைக் கல்லும் ஒரு கருப்புக் கல்லும் இருந்ததால், பைக்குள் மிச்சமிருக்கும் கல்லை ஊரார் பார்த்தால் அவள் எடுத்து நழுவ விட்ட கல்லின் வண்ணம் எதுவென்று தானாகத் தெரிந்துவிடும் என்று சொல்லி பையை அவர்களிடம் கொடுத்து விட்டாள்.

பைக்குள் இரண்டு கருப்புக் கற்களை வைத்த சேட்டுக்குத் "திருடனுக்குத் தேள் கொட்டியது போல" ஆகி விட்டது. சொல்லவும் முடியவில்லை, விழுங்கவும் முடியவில்லை. கடனை ரத்து செய்வதாக எழுதிக் கொடுத்து விட்டு தலையைத் தொங்க விட்டுக் கொண்டு போய் விட்டான்.
சசிகலா தனசேகரன்.

உறவுகள் என்பார்வையில் "அக்கா தம்பி"

#tccontest2020
நானும் தம்பியும் 
கவிதை தலைப்பு 
இனிய புத்தாண்டு வாழ்த்துகள்

"நீயின்றி நான் வளர்ந்தேனோ நிலவுக்கு பின் விடியலாக
நம் உறவு" ..

நம் கூட பிறந்த உறவுகள் 
என்றுமே இறைவன் நமக்கு துணையாக அனுப்பியிருக்கும் வரமே தவிர பாரங்கள் அல்ல.
அதற்கான சான்றாக 
நானும் என்  தம்பியும்..

நீ மண்ணில் வந்து 
விழுந்த போதே நான் கன்னிதாயாகிப் போனேன்.
என்பதை உணரவில்லை.
ஆனாலும்.. 

பிறந்த குழந்தையை 
கையில் வாங்க அடம் 
பிடித்து வாங்கிய நான் ..

குண்டு கண்கள் நீண்ட 
விரல்கள் செக்க 
செவேரென நிறம் சுருள்
சுருளாக நீண்ட கருகருவென
 முடிகள் என்னைப்போலவே 
என்று செவிலியர் 
சொன்னதும் ..
புல்லரித்து போனேன்..

 அம்மாவிற்கு உதவியாக 
பல வேலைகள் செய்த 
போது உணர்ந்தேன்..
நானும் ஒரு கன்னிதாய்ப் 
போலவே!!

உன் அசைவும் அழுகையும் உறக்கத்தில் புன்முறுவலும் 
என்னில் எண்ணிலடங்கா
ஏகாந்தம் பிறக்கும்.

மெல்ல மெல்ல நாளொரு பொழுதுமாய் வளர
துவங்கினாய்.. விரல் பிடித்து 
மடி தவழ்ந்து வளர்ந்தது 
நம் சகோதர பாசமும்..

ஏட்டில் அடங்கிடுமோ
இக்கவிதை வானத்து நட்சத்திரங்களாக மின்னிக் கொண்டே வளர்பிறையாக வளரத்துவங்கியது
நம் பாசமும்..

உன்னை தூக்க 
முடியாமல் தூக்கி 
கீழ போட்டதும் 
அம்மாவிடம் திட்டு 
வாங்கியதும் உரம் 
விழுந்து அம்புஜம் 
பாட்டி நெல்லெண்ணைய் 
தடவி உரம் எடுத்து 
மசூதிக்கு சென்று
இனி உரம் விழாம
இருக்க கயிறு போட்ட 
பிறகு நானே தூளியில் 
ஆட்டி உறங்க வைத்ததும் 
அந்த களிப்பிலே நானும் உறங்கிடுவேன்..

நடைவண்டி பயிற்சி 
தரும் ஆசானாக 
கை பிடித்து 
கற்பலகையில் அனா 
ஆவன்னா பழகியது 
நானாகவே
கற்று தருவேன். என் வீட்டு பாடங்களையும் கணக்கு
பெருக்கல் வாய்பாடும் 
உன்னிடமே ஒப்பித்து
 காட்டுவேன்.. 

நான் வளர எனக்கு 
தாத்தா பாட்டியோ மாமன் அத்தையோ ஏன் அப்பா 
அம்மாகூட ஒரு மரபாச்சி பொம்மையும் வாங்கி 
தந்ததல்ல. 

நானும் கருத்தறிந்து 
கேட்டதல்ல..
நீயே எனக்கு 
பொம்மையாகி 
போனாய் பல 
நேரத்தில் மாலை 
நேரவிளையாட்டு 
தருணங்களில் ..

நாட்கள் கடந்து 
வருடங்களாகி பின் 
நீயும் பள்ளியில் சேர்த்து
பாடம் படிக்க என்னுடன்
 நடை பயின்று காத 
தூரம் தினமும் போவேமே..

கூட்டாஞ்சோறு சமைத்ததும் 
மண்வீடு கட்டி விளையாடுவதும் மண்ணில் இட்லி வார்த்து சாப்பிட்டதும்.. அருமையான தருணங்கள் அவை..மாலை நேரத்தில் வீடு வர 
நடந்தே வருவோம். அப்போ
தெல்லாம் ஓட்ட பந்தயமும் 
பல நேரம் வக்கீல்
ஏற்றி போகும் மாட்டு 
வண்டியுமே நம் பயணமாகும்..

இப்போதேல்லாம் நடக்கவே மனமில்லை.  இருசக்கரமும் 
மகிழ் ஊர்ந்துமாய் நாட்களை நகர்த்துகிறோம்..

ஒரு தாய் வயிற்று   
பிள்ளையாக வளர்ந்து 
கஞ்சோ கூழோ 
உருண்டை சோறு 
பகிர்ந்து உண்டது உண்டு ..

பாசம் என்ற ஒன்று 
இருந்தால் கல்லான மனதும் கரையும் மனிதன் மட்டும் இதற்கு விதிவிலக்கா என்ன? 
இத்தகைய நம் உடன் 
பிறப்புகளாக என்றுமே நாம்..

விட்டு கொடுத்து வளர்ந்து 
உப்பு மூட்டை தூக்கி 
விளையாடிய பாச மலரே 
அக்கா தம்பியாக நாம்..

அடியும் உதையும் குத்து கும்மி 
கோலாட்டம் சண்டை காய் விட்டு பலமணி நேரம் பேசாதிருந்தாலும்..

எதையும் விட்டு கொடுக்காத 
குறும்பு, சண்டையிலும் சமாதானம், பாசத்திலும் சின்ன சின்ன 
கோபம் என அனைத்தும் 
கடந்து அன்போடு பேசுவாய்..

பள்ளியில் பக்கத்தில் அமர்ந்த
பெண் திட்டினாள் என்றால் 
உடனே பரிவுடன். தட்டி கேட்க வருவதுமாக இணைபிரியாது வளர்ந்தோம்.

கடவுளிடம் என்றுமே என்னை விட்டு நீங்காத வரம் ஒன்றை கேட்டதால் தான் என்னவோ எனக்கு தம்பி அளித்திருக்கிறான் போலும்.

பாசம் என்ற ஒன்றை அறியாதவரும் அறிவார் அக்கா, தம்பியுடன் கூட பிறக்கும்போது. அதன் அன்பை பார்ப்பவர்கள் பொறைமையே படுவர்போலும்..

அம்மா வீட்டு வேலை முடிக்க நேரமானாலும் நீ வந்து பள்ளிக்கு போக நேரமாகுதே என்று இரட்டை சடை பின்னி அதை கதவில் தாழ்பாளில் கட்டி விட்டதும்..

எத்தனை முறை உணவுகளை 
விட்டு கொடுத்து தன் தட்டில் இருப்பதை எனக்கு வைத்து ஊட்டியது இன்னும் ஏராளமாக
பல துன்பம் கடந்தோம்.

வறுமையை காலை முதல் மாலை வரை அரசு பள்ளி படிப்பும் மாலை  தோட்ட வேலைக்கு போவதும்
வரும் கூலியால் பேனா 
பென்சில் வாங்கியும் ..

சனி ஞாயிறுகளில் கழுத்து மணிகளை அழகழாய் கோர்த்து விற்று சாப்பிட்டு வளர்ந்தோம்..
கைவேலைப்பாடு பொருள்களும் செய்வோம். அவைகளை சந்தையிலே விற்போம்.

மிதி வண்டி பயின்ற அழகான சுவையான தருணங்களை  நினைத்து நினைத்து
வியக்கிறேன்.

நீயே கற்று தந்தது அப்பா 
ஊருக்கு சென்ற நேரங்களில். 
குரங்கு பெடல் அடிக்கும் போது 
நான் கீழே விழுந்தாலும் நீதாங்கி பிடித்து தினமும் பயிற்சி அளித்து அப்பாவிற்கு முன் மிதிவண்டி ஓட்டி பாராட்டு வாங்கியது பசுமையான நினைவல்லவோ..

நான் பெரியவளாகியதும் வீட்டில் தொட்டு விளையாடக் கூடாது என்று தள்ளி வைத்ததும் பாட்டி  திட்டியதும் நீ அழுது என்னோடு தான் தூங்கனும் என்று அடம்பிடித்து இரவு முழுக்க தேம்பி அழுதே கடந்தது.
மறக்க முடியுமா..

தையல் வகுப்பு செல்லும் போது வயது பையன் கிண்டல் செய்வதையும் நான் சொல்லும் முன்னே முக வாட்டத்தை உணர்ந்து அடுத்த முறை துணைக்கு வருவாயே. தனியே போக தைரியம் சொல்லி தருவாயே..
சட்டை தைத்து தரேன் என்று அளவெடுத்து தலையணை 
உறைப் போல சோளக் 
கொள்ளை பொம்மை போல எதையை தைத்து தருவேன். நீயும் அப்பாவிடம் சொல்லி அழுவாய். 

ஒன்றா இரண்டா குறும்புகள் பெண்ணாக இருந்தாலும் நானும் கோலி கிட்டு புள்ளி விளையாட வருவேன் உன் நண்பர்களோடு. 
நீயும் கோக்கோ நொண்டி 
ஒரு குடம் தண்ணி ஊற்றி 
எல்லா விளையாட்டுமே 
ஒன்றாக விளையாடுவோம்..
  
ஒரு முறை உன் வகுப்பில் 
சுற்றுலா அழைத்து போன
போது நானும் உன்னோடு
 வந்து மகாபல்லிபுரம் 
கோவளம் கோல்டன் பீச் 
பார்த்து கடல் அலையில் 
விழுந்தது நீ அழுதது..பிறகு ஆபத்தின்றி வீடு வந்தோம்..

அப்பா புரோகிதர் என்பதால் 
வேதம் கற்க சொன்ன போது அக்காவுக்கும் கற்றுதாங்க
 என்று பெண்மையை முன் நிறுத்தியது மறக்க முடியுமா..

நானும் நீயுமே குருவிடம்
வேதம் கற்றோம். ஆனால்
வேதம் படித்தாலும் பெண்
வேதம் ஓதவேண்டா மென்ற 
கட்டுபாட்டில் இருந்ததால் நீயும் வேதத்தை துறந்தாய்.  அக்கா எனக்காக...

திருமண வயதில் வரன் 
பார்த்ததும் இந்த மாப்பிள்ளை பிடிக்கல என்று வேண்டாம் 
என்று பொறுப்பாய் தந்தை
போல நடந்து கொள்ளுவதும் அன்பில் உனக்கு நிகர் 
யாருமிலரே..

திருமணம் முடித்து நான்
வந்தாலும் சிறுவயதில் 
இருந்த பாசமும் பரிவும் 
நாம் வளர வளர ஆலம் 
விழுதாக தொடர்கிறதே 
டா தம்பி..

தந்தை மறைந்த துக்கம் 
இருந்தாலும் அவரிடத்தில் நீ 
இருந்து என் மகளுக்கு அனுசரனையாக தாய் 
மாமன் சீரும் சிறப்பாக 
அன்பாய் பகிர்கிறாயே ..

பின் நீ வேலைக்கு சென்று 
எனக்காக ஒவ்வொரு பரிசு பொருளும் ஆசையாய் வாங்கி ஊருக்கு வந்து  தருவதும் 
நெகிழ வைக்குமே..

நீயும் திருமண வயதினை
நெருங்கிய போது உனக்காக
அம்மா இடத்தில் நானும் 
மாமாவும் பெண் பார்த்து 
தேடி அலைந்து  சன்டிவி கல்யாணமாலை வரை 
போனோமே ..
நல்ல வரன் அமைத்தோம்..

உனது வாழ்வில் முதல் 
குழந்தை  தங்க சிலையாக 
எனக்கு மருமகளாக வந்து பிறந்தாள்..

அந்த தங்க மணி ஏதோ 
சுவாச பிரச்சனை என்றதும் 
அவசர பிரிவில் நம்மை அனுமதிக்காமல் நானும் 
நீயும் ஏன் பெற்ற தாயுமே பிள்ளையை பார்க்கவில்லை..

நான் செவிலியரிடம்  கெஞ்சி 
பேசி அந்த சிசுவை பார்க்க 
சென்ற போது குழந்தையை 
நீங்களே அடையாளம் காண சொன்னாரே..

அந்த தருணம் படபடத்தது 
நாம் இருவருக்கும்.. என் 
மருமகளை நானே கண்டு பிடித்தேன்..

அவள் என்னையே உரித்தாற்
போல பிறந்திருந்தாள்.. நான் 
அருகே சென்றதுமே ..
அந்த சிசு விரல் பிடித்து 
உறுதி படுத்தியது..

அவளின் அத்தை நான் 
என்பதை அந்த பரவசம்
இன்னும் அடிவயிற்றில் 
தேனாய் இனிக்கிறது..

இன்னுமின்னும் பாச 
பகிர்வுகளை எழுதி கொண்டே செல்லவோ..எண்ணிக்கை இல்லாமலே..

கை கோர்த்து வளையலை  
பிடித்து சிறுவயது நடை 
பயின்றது முதல்  
இதுவரையும் அப்படியே 
வாழ்கிறாய் ..

ஆண்டாண்டு தோறும் பிறந்த நாளுக்கு அழகிய புடவை பரிசளிப்பாய்.

நான் ஊருக்கு வரும்
போதெல்லாம் வீட்டுக்கு 
போகு முன்னே எனக்கு 
பிடித்த பண்ணீர் சோடா 
லசி பாபுபாஜி அத்தனையும் 
வயிறுமுட்ட சாப்பிட்டு 
வீட்டுக்கு போனால் 
அம்மா ஆசையா 
சமைத்ததை சாப்பிடாம
 திட்டு 
வாங்குவோமே..

அந்த உணவுகளை மாலை
நேரத்தில் உருண்டை சோறாக அப்பாவுடன் சாப்பிட்ட 
சுவைகளை மறக்க 
முடியுமா..

அம்மாவிற்கு கால் வலிக்கிற
தென என் மடிமீது தலை 
சாய்த்து உறங்குவாயே..
என் தலசம் பிள்ளையென வளர்ந்ததும் நீயே

தாயும் நல்ல தோழியாக 
நம்மோடு அறிவுரை 
சொல்லியும் பயணிக்கிறார். 
என்பது வயது 
இயலாமையிலும் 
மகளுக்காக 
ஓடி ஓடி கவனிக்க 
எத்தனிக்கும் பாசத்திற்கு
ஈடு இணையேது 
உலகத்திலே..

உடன்பிறவா 
உன்னத உறவு நீ .
அன்னை தந்தை 
தந்த பரிசு நீ
தோள் கொடுக்கும் 
தோழனாகவும் 
தைரியம்  தந்தவன் நீ.

உடன் பிறப்பென்று பெண்
இரண்டு உண்டு . ஆனால் 
உன் போல் பாச உறவாய் 
அவர்கள் இல்லை.

கள்ளமில்லா அன்பு 
என்றால் 
என்னவென்று நான் 
அறிந்தேன் . 
தம்பி அவன்  அன்பினிலே 
கற்கண்டாய் நான் 
கரைந்தேன் !

அக்கா என நீ அழைக்க 
ஏங்கி மகிழ்ந்திடுவேன்
போடி என்றோ 
சொல்லிவிட்டால் 
கொஞ்சும் கோபத்தில் சினந்திடுவேன்.

தவறுகள் நீ செய்தாலும் 
தண்டனைகள் தரமாட்டேன். , 
தரமான போதனையால் 
உன் தவறினையும் 
திருத்திடுவேன் ... 
வாழ்வில் உயர உயர 
நீ செல்ல 
உளமார வாழ்திடுவேன்., 

நிலவொளியின் நிறம்கூட 
நிமிடத்தில் மாறிடலாம் , 
நிஜமான நின் அன்பு 
நீளும் என்றும் குறையாதே ..

தன்னம்பிக்கை தந்திடுவேன் 
தங்கமான அக்காவாகவே 
உனை ஒப்பிட்டு கவிதை சொல்ல 
இப்பூவுலகில் எவரும் இல்லை , 
என் வரிகளும்  அன்பு 
பாராட்டுமே உன்னை...

மறுஜென்மம் ஒன்றிருந்தால் 
உன் உடன்பிறப்பாய் 
வரவேண்டும் இல்லை 
உந்தன் மடிதவழும் 
மகளாகும் வரம் வேண்டும்..

சிறுவயது முதல் இன்று 
வரை எத்தனை சண்டை
சச்சரவு வந்தாலும் நீ 
என்னை பெயரிட்டோ 
மரியாதைக் குறைவாகவோ பேசியதே இல்லை. 
அக்கா என்றும் 
அழைத்தறியேன்..
எப்போதுமே வாம்மா 
போம்மா என்றும் 
அம்மாவைப் போல 
பாசமாகவே அழைப்பாய்..

என்னை ஈன்ற 
அம்மாவிற்கு நானும் 
வலது கரமாக 
ஆயுள் முழுக்க 
வலம் வருவேனே..

உன்னைப்போல 
ஒருவன் இன்னொரு 
பிறவியில் 
கிடைத்திட வேணுமடா.. 
செல்ல தம்பியே..

Sunday 12 April 2020

வைத்தியம்

சிக்கன் குனியாவுக்கு - 
நிலவேம்பு 
டெங்கு காய்ச்சலுக்கு - 
பப்பாளி...அந்த வரிசையில்
கொரோனாவிற்கு - 
கபசுர குடிநீர்  
நவீன அறிவியலும்
ஒவ்வொரு முறையும் 
இறுதியில்
தமிழ்நாட்டு மருத்துவத்திடம் தான்
தஞ்சம் கேட்டு நிற்கிறது.

மனிதநோயை 4448 என தரம் பிரித்து அதனை வாதம் ,பித்தம் கபம் என வகைப்படுத்தினர்  நம் முன்னோர்கள்..... 
தீர்க்கப்படாத, தீர்க்கமுடியாத எந்தவொரு நோய்க்கும்  உணவையே மருந்தாக்கி நோய்தீர்க்கும் நம்நாட்டு வழிமுறையைப்போல் வேறு எங்கிலும் காணக்கிடைக்காது.

ஏதோ மருத்துவம் என்றில்லை,
உலகாயதம் எனும் பூதவாதம், சாங்கியம் எனும் எண்ணியம், வைசேடிகம் எனும் சிறப்பியம், யோகம் எனும் தன்னை உணரும் மெய்யறிவியல், வர்மம் எனும் மருத்துவம் சார்ந்த தற்காப்பியல்,அளவியல் எனும் நியாயவியல், விதவிதமான தத்துவார்த்த மெய்யியல் சிந்தனைகள்,ஆசிவகம்.....இன்னும் எத்தனை எத்தனையோ!!!!!!
 
ஏதோ ஆய்வகத்தில்  கிளியையும், எலியையும் வைத்து ஆராய்ச்சி செய்யப்பட்டதல்ல இந்த மெய்ஞானம்....தன்னையே , தனது உடலையே ஆராய்ச்சி களமாக்கி  சமுகத்திற்கு தவறாக சொல்லிவிடக்கூடாதே எனும் நல்ல நோக்கத்துடன் வருடத்திற்கு ஒரு பாடலாக மொத்தம் மூவாயிரம் பாடல்களால் கொடுக்கப்பட்ட நன்னெறி சாத்திரமே திருமந்திரம் .    இன்னும் மனித இனத்திற்கு தேவையான  அனைத்தையும் உள்ளடக்கியதே சித்தர் பாடல்கள்....

தமிழ் சமூகத்தின் மரபென்பது மாபெரும் ஞானமுடையது.....அந்த வழியில் வந்த நாம் இதனைப் பயன்படுத்தாவிடினும் பரவாயில்லை....