சக்கரை நோய் பற்றி பேசுவோம் இன்று வீட்டுக்கு இருவர் நாற்பது வயதில் நரை வரும் முன்னே முரணாக இந்த சக்கரை நோய் வருகிறது..
என்ன மருந்து மாத்திரை சாப்பிட்டாலும் இது பலருக்கு கட்டுக்குள் நிற்காமல் காலத்தைவிட வேகமாய் காலனிடம் அழைத்து செல்ல ஜட் வேகத்தில் உடலின் பாகங்களில் ஊடுருவி ஆட்கொள்ளியாக மாறி அவையங்களை செயலிழக்க செய்து சிலருக்கு விரல்களோ ஏன் கால்களையே விழுங்கி விடுகிறது..
இதிலிருந்து நம்மை தற்காத்து கொள்ளவும் வராமல் தடுக்கவும் சில டிப்ஸ் பகிரலாமா..
அவசர உலகத்தில் பொறுமை இழந்து பணம் தேடி ஓடலாம். ஆனால் உட்கொள்ளும் உணவிலுமா அவசரம் ..
"நொறுங்க தின்றால் நூறு வயது" என்ற சொற்களை யாருமே நினைவில் கொள்வதில்லை..
அதனால் வரும் தொல்லையே காலபோக்கில் சக்கரை வியாதியாக விஸ்வரூப மெடுக்கிறது..
ஆம் தினமும் மூன்று வேலை உணவு காலையில் அரசனைப்போலவும் மதியம் உழைப்பாளி போலவும் இரவில் பிச்சைகாரனைப் போல குறைந்த எளிமையான உணவே உண்டு .. அதுவும் அரைவயிறு உணவு கால் வயிறு தண்ணீரும் கால் வயிறு காற்றுமாக வழக்கபடுத்தி கொண்டால் ஆரோக்கியம் நமக்கு அரனாக அமையுமே..
நவநாகரீக துரித உணவுகளை தவிர்த்து வயதிற்கேற்ப காரம் புளிப்பு குறைத்து சாப்பிட எளிதில் செரிமானம் ஆகும்.
அறுசுவை உணவில் தினமும் நாம் இரண்டும் சுவையை பயன்படுத்துவதே இல்லை துவர்ப்பும் கசப்பும். அவைகளே எதிர்காலத்தில் சுகர் வராமல் நம்மை காக்கும். புளிப்பு அதிக ஊறுகாய் சாப்பிடுபவர்களுக்கு முட்டி வலியும் சுகர் அதிகமாக வர வாய்பிருக்கிறது..
அவரவர் வாழும் மண்ணில் விளையும் தானியங்களையும் அங்கே கிடைக்கும் நிலத்தடி நீரும் பருகினாலே போதுமானது.. ஆரோக்கியம் பெறுகும்..
மன நிம்மதி தேவை எச்செயல் செய்தாலும் மனநிறைவுடன் இருக்க பழகுதல் அவசியமானது. முடிந்த போது எல்லாம் எச்சில் கூட்டி விழுங்கனும் அதுதான் சுகருக்கான மருந்தே உமிழ் கலந்து உண்ணும் உணவே தேவாமிர்தம். வாயை அசைக்கும் போது காற்று உள் புகாமலும் பேசாமலும் நடுநடுவே நீர் பருகாமலும் உணவு உட்கொள்ளல் வேண்டும்.. இனியாவது இதனை படி செய்யலாமே அடுத்த பகுதி தொடரும்..
|
|
Tweet |
25 ஆண்டுகளுக்கு மேல் அடியேன் இனிப்பானவன்...
ReplyDeleteவழிமுறை சிறுவயதிலிருந்தே பின் தொடர்ந்தால் தப்பிக்கலாம் அண்ணா எந்த மருந்து மாத்திரை உண்ணாமல் வாழ்க்கை 15, ஓட்டுகிறேன்..
Delete