சிக்கன் குனியாவுக்கு -
நிலவேம்பு
டெங்கு காய்ச்சலுக்கு -
பப்பாளி...அந்த வரிசையில்
கொரோனாவிற்கு -
கபசுர குடிநீர்
நவீன அறிவியலும்
ஒவ்வொரு முறையும்
இறுதியில்
தமிழ்நாட்டு மருத்துவத்திடம் தான்
தஞ்சம் கேட்டு நிற்கிறது.
மனிதநோயை 4448 என தரம் பிரித்து அதனை வாதம் ,பித்தம் கபம் என வகைப்படுத்தினர் நம் முன்னோர்கள்.....
தீர்க்கப்படாத, தீர்க்கமுடியாத எந்தவொரு நோய்க்கும் உணவையே மருந்தாக்கி நோய்தீர்க்கும் நம்நாட்டு வழிமுறையைப்போல் வேறு எங்கிலும் காணக்கிடைக்காது.
ஏதோ மருத்துவம் என்றில்லை,
உலகாயதம் எனும் பூதவாதம், சாங்கியம் எனும் எண்ணியம், வைசேடிகம் எனும் சிறப்பியம், யோகம் எனும் தன்னை உணரும் மெய்யறிவியல், வர்மம் எனும் மருத்துவம் சார்ந்த தற்காப்பியல்,அளவியல் எனும் நியாயவியல், விதவிதமான தத்துவார்த்த மெய்யியல் சிந்தனைகள்,ஆசிவகம்.....இன்னும் எத்தனை எத்தனையோ!!!!!!
ஏதோ ஆய்வகத்தில் கிளியையும், எலியையும் வைத்து ஆராய்ச்சி செய்யப்பட்டதல்ல இந்த மெய்ஞானம்....தன்னையே , தனது உடலையே ஆராய்ச்சி களமாக்கி சமுகத்திற்கு தவறாக சொல்லிவிடக்கூடாதே எனும் நல்ல நோக்கத்துடன் வருடத்திற்கு ஒரு பாடலாக மொத்தம் மூவாயிரம் பாடல்களால் கொடுக்கப்பட்ட நன்னெறி சாத்திரமே திருமந்திரம் . இன்னும் மனித இனத்திற்கு தேவையான அனைத்தையும் உள்ளடக்கியதே சித்தர் பாடல்கள்....
தமிழ் சமூகத்தின் மரபென்பது மாபெரும் ஞானமுடையது.....அந்த வழியில் வந்த நாம் இதனைப் பயன்படுத்தாவிடினும் பரவாயில்லை....
|
|
Tweet |
0 comments:
Post a Comment