Friday 17 April 2020

பார்வை திறனை பாதுகாப்போம்

இன்று ஒருபுகைபடம் போட்டுஇதில் உள்ள எழுத்துகளை கண்டுபிடிக்க சொன்னேன்.  வாட்ஸ்ஆப் பதிவாக பலரும் தவறாகவே கூறினர்.  அதான் கண்களை பற்றி விழிப்புணர்வு பதிவாக நடுநிசையிலும்


பார்வைத் திறனை பாதுகாக்க சில எளிய வழிகள்...!

கணினி, தொலைபேசி, தொலைகாட்சி ஆகிய மின்சாதனப் பொருட்களை அளவுடன் பயன்படுத்த வேண்டும். அதனால் வரும் வெளிச்சத்தைக் குறைத்துக்கொள்வது நல்லது. அடிக்கடி கண்களைச் சிமிட்டுவதால், கண்ணின் ஈரப்பதம் தக்கவைக்கப்படும். பார்வைத் திறனை பாதுகாக்கலாம்.
7 முதல் 8 மணி நேரம் தூங்குவது நல்லது. அதாவது 4 மணி வரை ஆழ்ந்த தூக்கம் அவசியம். அதாவது, அந்த நேரத்தில் மெலோடனின் சுரக்கும். இது உடலுக்கு நல்லது. சீரான தூக்கம் இருந்தால், உடல் மற்றும் கண்களுக்கு ஓய்வு கிடைக்கும். ஐ ஸ்ட்ரெஸ், எரிச்சல் போன்றவை மறையும்.

தினமும் இரண்டு முதல் இரண்டரை லிட்டர் தண்ணீர் அருந்த வேண்டும். இது உடல் மற்றும் கண்களை வறட்சித் தன்மையில் இருந்து பாதுகாக்கும். 

உள்ளங்கையில் சுத்தமான தண்ணீரை ஏந்தி, அதில் கண்களை வைத்து 10 முறை கண் சிமிட்டுங்கள். அதிலுள்ள தூசு, அழுக்கு, அழுத்த உணர்வு நீங்கி கண் புத்துணர்வு பெறும். இதை தினமும் செய்துவருவது நல்லது.

பார்வைத்திறனை அதிகரிக்க, வெள்ளையான சுவரைப் பார்த்து, தலையை அசைக்காமல், திருப்பாமல் கண்களால் 8 போட வேண்டும். இதுபோல, 5 முறை பயிற்சி செய்தாலே கிட்டப் பார்வை, தூரப் பார்வை பிரச்னை சிறிது சிறிதாகக் குறையும்.

தினமும் இருவேளையாவது உள்ளங்கைகளைவைத்து, கண்களைப் பொத்திக்கொண்டு, கண்கள் மூடியபடி இருக்க வேண்டும். கருவிழியை மட்டும், எந்தளவுக்கு முடியுமோ அந்தளவுக்கு பக்கவாட்டில் பார்க்க வேண்டும். இதுவும் ஒரு கண் பயிற்சிதான். இதனால், கண்களின் தசைப் பகுதியில் ஏற்பட்ட அழுத்தம் குறையும்.

*வைட்டமின் ‘ஏ’ குறைபாட்டால் ஏற்படும் பிரச்சனைகள்*

பள்ளிப்பருவத்து குழந்தைகள் அதிக அளவில் பார்வைக்குறைபாட்டால் கண் கண்ணாடி அணிவதை பார்க்க முடிகிறது. குழந்தைகள் எந்தக் குறையும் இல்லாமல் வலுவாக வளரட்டும் என்று கண்ட கண்ட சத்தூட்ட பானங்களை பெற்றோர்கள் வாங்கித் தருகிறார்கள். ஆனால், எதுவும் அளவுக்கு மிஞ்சினால் ஆபத்து தான்.

பொதுவாக, வைட்டமின் ‘ஏ‘ குறைந்தால் கண் தொடர்பான பாதிப்புகள் உருவாகும். இதன் குறைபாட்டால் கண் எரிச்சல், மாலைக்கண், மங்கலான வெளிச்சத்தில் கண் பார்வைக்குறைவு, வெளிச்சத்திற்கு தகுந்தாற் போல் கண்பார்வை ஒத்துப் போகும் நிலை குறைந்து போவது போன்றவை ஏற்படும். 

வைட்டமின் பற்றாக்குறை தொடர்ந்து காணப்பட்டால் கண்ணீர் சுரப்பியின் வெளிப்பகுதி திசுவறைகள் தடித்து விடும். கண்ணீர் சுரப்பது நின்று விடும். விழிக்கோளத்தில் வெள்ளை நிறம் காணப்படும். வெள்ளை விழியில் சில புள்ளிகள் உண்டாகும். தொடர்ந்து வைட்டமின் ஏ பற்றாக்குறை நீடித்தால் முழுப்பார்வையும் இழந்து விடும். 

கருவிழியில் துளைகள் உண்டாகும். கண்கள் அடிக்கடி வறண்டு காணப்பட்டால் வைட்டமின் ‘ஏ‘ பற்றாக்குறை ஏற்பட்டிருக்கிறது என்று புரிந்து கொள்ளலாம். மருத்துவரின் பரிந்துரைப்படி சரியான அளவில் இந்த வைட்டமின் சத்து குழந்தைகளுக்கு தரப்படலாம். கேரட், கறிவேப்பிலை போன்றவற்றில் வைட்டமின் ஏ சத்து நிறைய உள்ளது.

அதேநேரம், அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு என்ற பழமொழி வைட்டமினுக்கும் பொருந்தும். இந்த வைட்டமின் அதிகமாகி விட்டால் உடலில் நச்சுத்தன்மை உண்டாகும். பசியிருக்காது. உடலில் நமைச்சலுடன் கூடிய தோல் சிவப்பு, வலியுடன் கூடிய தசை வீக்கம், கை-கால்களின் எலும்புகளில் வலியுடன் கூடிய வீக்கங்கள் உண்டாகி விடும். 

மேலும், மூளையில் உள் அழுத்தம் அதிகரித்து தலைவலியும் ஏற்படும். தேவையற்ற அளவுக்கு வைட்டமின் ‘ஏ‘ யை உள்ளுக்குள் கொடுத்து விட்டு பின்னர் வேறு பிரச்சினைகளை உருவாக்கி விட்டு இது எதனால் ஏற்படுகிறது என்று தெரியாமல், அந்த நோய்க்கு மருத்துவம் பார்க்க வேண்டிய நிலையை ஏற்படுத்தி விடும்.

வைட்டமின் ‘ஏ‘ என்பது குழந்தைகளுக்கு 1500 முதல் 6000 இன்டர்நேஷனல் யூனிட்டுகளும், பெரியோர்களுக்கு 5000 யூனிட்டுகளும், கர்ப்பிணிகளுக்கு 6000 யூனிட்டுகளும், பாலூட்டும் தாய்மார்களுக்கு 5000 யூனிட்டுகளும் தான் தேவை. இதனை கவனத்தில் கொண்டு இந்த அளவில் கிடைக்கும் சத்தூட்ட பானங்களை சரியான அளவில் அவரவர் பயன்படுத்துவதே உடலின் ஆரோக்கியத்தை பாதுகாக்கும்.

தினமும் 40 நிமிடங்கள் தொடர்ந்து மூன்று மாதங்களுக்குப் பிராண முத்திரை செய்தால், பார்வைத் திறன் மேம்படும். இப்போது இந்த முத்திரை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

இரவில் தாமதமாக உறங்குவது. இதன் காரணமாக கண்களுக்கு தேவையான அளவு ஓய்வு கிடைப்பதில்லை.

அதிகம் கைப்பேசி உபயோகித்து படம் பார்ப்பது. அதில் பல்வேறு விதமான விளையாட்டுக்களைப் பதிவு இறக்கம் செய்து சதா விளையாடிக் கொண்டே இருப்பது.

மரபு ரீதியாகவும் இந்த பிரச்சனை குழந்தைகளுக்கு ஏற்படலாம்.

இவை அனைத்தையும் விட முக்கிய காரணமாக, வளரும் குழந்தைகள் தினமும் சத்துக்கள் நிறைந்த உணவுகளை எடுத்து கொள்ளாததும், அதன் காரணமாக குழந்தைகளுக்கு தேவையான ஊட்டச்சத்துக்கள் கண்களுக்கு கிடைப்பதில்லை.
கண்பார்வைக்கான முத்திரை

கண்களை பாதுகாக்க தினமும் சூரிய விடியலின் போது பார்க்கலாம்.  காயத்திரி மந்திரம் சொல்லலாம்.

4 comments:

  1. வணக்கம் பயனுள்ள தகவல் களஞ்சியம் தந்தமைக்கு நன்றி.

    புகைப்படத்தில் இருப்பது 1240 சரியா ?
    -கில்லர்ஜி

    ReplyDelete