பெற்ற அன்னைக்கு மோட்சம் அளித்த மகன்
அன்னை அழகம்மை தன் மகன் ரமணருடன் கடைசிக் காலத்தில் சுமார் ஆறு
வருடங்கள் தங்கியிருந்தார் . தன் மகன் மடியிலே
உயிர் விடவேண்டும் என்ற ஆசைப்பட்டாள் .
பகவானை விட்டு வெளியில் எங்காவது சென்று அங்கேயே உயிர் பிரிந்து விடுமோ
என்று அச்சம் அடைந்தாள் . அதனால் மகனை
விட்டு எங்கும் செல்வது இல்லை .
1922 மே மாதம் அழகம்மையாரின் உடல்
நிலைமை கவலைக்கிடமானது . பகவான் தன்
தாயின் அருகிலேயே அமர்ந்திருந்தார். அப்போது
தனது வலது கரத்தை அன்னையின் வலது
புறத்தில் ஆன்மீக ஹ்ருதய ஸ்தானத்தின் மேலும் இடது கரத்தை உச்சந்தலையின் மீதும்
வைத்திருந்தார் . அதாவது அவள் மூச்சு வாங்க ஆரம்பித்த முதல் பிராணன் போய் சில வினாடிகள் ஆகும் வரை காலை எட்டு மணி
முதல் இரவு எட்டு மணி வரை தன் தாயை
விட்டு அகலாமல் கைகளையும் எடுக்காமல்
அமர்ந்திருந்தார் . அச்சமயம் பக்தர்கள்
அருணாசல அட்சரமணமாலை பாராயணம்
செய்தனர் .
திரண்டு எழும்பிய கடந்த பல ஜென்மங்களின் பூர்வ வாசனைகள் வெளியே செல்லாமல் ஆன்ம ஹிருதயத்தில் அடங்கி ஒடுங்குவதற்காகத்தான் இப்படி கையை வைத்திருந்தார் . எண்ணங்கள் உதித்த இடத்தில்
ஒடுங்கினால்தான் முக்தி . தாயின் ஜென்ம
வாசனைகள் மகனால் அழிக்கப்பட்டு விட்டது .
மஹா சாந்தத்தில் மஹாசமாதி பெற்றுவிட்டது .
அம்மாவின் மூச்சு அடங்கியபின் அவளுடைய
முகம் ஒரு தெய்வீக ஒளியுடன் பிரகாசித்தது .
உயிரற்ற பிணம் போலில்லாமல் தியானத்தில்
இருக்கும் யோகினியைப் போல் விளங்கியது .
அவள் மரணமடைந்த வினாடியில் உலோகத்தை
போன்ற ஒரு சப்தம் கேட்டது .
தீட்டு ஒன்றும் இல்லை , அனைவரும்
சாப்பிடலாம் என்றார் . பின் பக்தர்கள்
அனைவருடன் பகவானும் உணவருந்தினார் .
ஞானத்தில் ஆண் , பெண் பேதமில்லை .
பின்னர் அன்னைக்கு சமாதி வைப்பது
|
|
Tweet |
அறியாத அரிய புராணக்கதை அறிந்தேன் நன்றி.
ReplyDeleteநன்றிகள்
Deleteமோட்சம் எல்லாம் குறள்களில் இல்லை...
ReplyDeleteஆமாம்
ReplyDelete