Saturday 24 May 2014

கடல்

விரல்களே இல்லாமல்
என் மேனி தீண்டினாய்...

இதழ்கள் இல்லாமல்
என் பாதங்களை முத்தமிட்டாய்...

கைகள் இல்லாமல்
எனை ஆரதழுவினாய்...

பார்வை இல்லாமல்
என்னுள் பல்லாங்குழி
விளையாடுகிறாய்...

உறவே இல்லாமல்
உரசி பார்க்கிறாய்..

எனக்கும் அவனுக்கும்
இடையில் துள்ளி குதிக்கிறாய்..

உன் அழகில் நான்
என்னை தொலைத்தேன்..

நான் உன்னில்
கரைந்தே போனேன்..

கவித்துவமாக
என்னவன் சம்மதமின்றி..

உன்னை காணவந்த
என்னை களவாடி விட்டாயே
அழகிய கடல் அலையே..

வயிரே இல்லாமல்
சுனாமி என்ற பெயரில்
மக்களை முழுவதுமாக
புசிக்கிறாய் ..
என்பதையே
மறுக்கிறது மனம் ...

ஆனாலும்......

என்னில் நீங்கா
நினைவே...
நீ கடல் அலையே...

0 comments:

Post a Comment