Sunday 11 May 2014

கடல்

கடல் அலையே
காத தூரம்
உன் நீல நிறமே
நிலையானதே..

நீலவானமும் 
உனக்கு 
சேலையானதோ
எண்ண அலைக்கு 
அடங்காத வண்ண 
அலையே

உன் உடன் பிறப்போடு
விளையாட வந்தாயோ
என் பாதவிரல்
தீண்ட வந்தாயோ..

உன்னில் கரைந்தேன்
காகிதமாக...
கவிதையாக மிதந்தேன்

0 comments:

Post a Comment