Sunday 8 June 2014

விடியல்

விடிந்தால் உறவினர் வருகை
அடுக்களையில் அரிசியில்ல 
என்ற ஏக்கத்தில் மனைவி

இரண்டு நாளாக காய்ச்சல் தின கூலி
கூட இல்லையே என தவிப்பு கணவனுக்கு

நல்ல மதிப்பெண் வாங்கி பிடித்த கல்லூரி 
கிட்டும் என்ற கனவில் குழந்தைகள்

மகள் வந்தாள் விதவிதமாக சமைத்து
பரிமாறனும் என்ற பாச உள்ளம் அம்மாவிடம்

இவைகளை ஈடு தர இயலுமா என்ற
சிந்தையோட அம்மாவின் கேழ்வரகு களி சூடாக

0 comments:

Post a Comment